என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரம்ஜான்"

    • பா.ஜ.க. செய்கிற தவறுகளை என்றைக்கும் சுட்டிக்காட்டுகிற தலைவராக இருப்பேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
    • அ.ம.மு.க. மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக செயல்படுகின்ற கட்சி

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் சி.டி.சி. கார்னரில் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அ.ம.மு.க. தேர்தல் பிரிவு துணை செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி 500-க்கும் மேற்பட்டோருக்கு குக்கர், அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் ரம்ஜானை கொண்டாட முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கஞ்சிக்கு அரிசி கொடுத்தது மட்டுமின்றி உலமாக்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் நிதியை அதிகப்படுத்தினார். ஹஜ் பயணிகளுக்கு தனியாக நிதி ஒதுக்கினார். பலருக்கு கனவாக இருக்கும் ஹஜ் பயணத்தை அனைவரும் செல்ல வேண்டும் என்பதற்காக முழு முதல் முயற்சியை எடுத்தவர் அவர். ஜாதி, மதம் பாராத அவரின் வழியில்தான் மக்கள் செல்வர் டி.டி.வி.தினகரன் செல்கிறார்.

    பா.ஜ.க. செய்கிற தவறுகளை என்றைக்கும் சுட்டிக்காட்டுகிற தலைவராக இருப்பேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் என்று எந்த விழா வந்தாலும் அந்த விழாவில் மக்களை சந்தித்து மக்களோடு கொண்டாடுகிற இயக்கம் அ.ம.மு.க.மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக செயல்படுகின்ற கட்சி அ.ம.மு.க. டி.டி.வி. தினகரன் பெயரால் இங்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மக்களோடு மக்களாக இந்த சமுதாயத்தில் ஒரு குடும்பமாக இருக்கும் எங்களுக்கு என்றும் நீங்கள் ஆதரவை தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட அவை தலைவர் பாலுசாமி, மாவட்ட துணை செயலாளர் புல்லட் ரவி, மாவட்ட பொருளாளர் முத்துக்குட்டி, பகுதி செயலாளர்கள் நெருப்பெரிச்சல் சுகம் வீரகந்தசாமி, ஜெகதீஷ், சிவக்குமார், ராஜாங்கம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம் சீமாட்டி குணசேகர், ஜெயலலிதா பேரவை ஆர்.வெங்கடேஷ், ஜெயலலிதா தொழிற்சங்க பேரவை பாலகிருஷ்ணன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞரணி கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.700 என்கிற வகையில் வழக்கமான நாட்களில் விற்பனை செய்யப்படும்.
    • பெரிய ஓட்டல்களில் ரம்ஜான் ஆர்டரை எடுப்பதற்காக தனி கவுண்டர்களும் திறக்கப்பட உள்ளன.

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடு விற்பனை களைகட்டி உள்ளது.

    ரம்ஜானையொட்டி சென்னையில் 40 ஆயிரத்தில் இருந்து 45 ஆயிரம் ஆடுகள் வரையில் இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டிறைச்சி வியாபாரிகள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராயபுரம் அலி கூறும்போது, புளியந்தோப்பு ஆட்டு தொட்டியில் 30 ஆயிரம் ஆடுகள் வரையிலும் சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆட்டு தொட்டிகளில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும் என்றும் தெரிவித்து உள்ளார்.

    ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.700 என்கிற வகையில் வழக்கமான நாட்களில் விற்பனை செய்யப்படும் என்றும் இது ரம்ஜானையொட்டி 50 ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் சில்லரை விற்பனை கடைகளில் பொதுமக்களுக்கு விற்பனை விலை ரூ.850 முதல் ரூ.900 வரையில் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே அசைவ ஓட்டல்களில் பிரியாணி ஆர்டரும் குவிந்து வருகிறது. பக்கெட் பிரியாணிக்கு பலர் ஆர்டர் கொடுத்து உள்ளனர். இதன் காரணமாக பெரிய ஓட்டல்களில் ரம்ஜான் ஆர்டரை எடுப்பதற்காக தனி கவுண்டர்களும் திறக்கப்பட உள்ளன. ரம்ஜான் பண்டிகை நாளான வருகிற 22-ந்தேதி சனிக்கிழமை 'கிருத்திகை' யாகும். இந்த நாளில் முருக பக்தர்களில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்க்க நினைப்பார்கள்.

    இதனால் தங்களது இந்து நண்பர்கள் பலருக்கு முஸ்லிம்கள் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பிரியாணி தயார் செய்து கொடுக்கவும் முடிவு செய்து உள்ளனர்.

    • வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலை ஆடு உள்ளிட்ட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
    • செஞ்சி வாரசந்தை வெள்ளாடுகளுக்கு பெயர் பெற்றதால் வியாபாரிகள் அதிகம் ஆடுகளை வாங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் காய்கறி, ஆடு, மாடு சந்தை கூடுவது வழக்கம்.

    இதில் ஆட்டுச் சந்தை பிரபலமானது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று வார சந்தையில் ஆட்டு சந்தை கூடியது. அதிகாலை 2 மணிக்கே விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விட்டனர். அதேபோல் செங்கம், திருவண்ணாமலை, வேலூர், சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் ஆடுகளை கொண்டு வந்தனர்.

    மேலும் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சேலம், வேலூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மினி லாரிகளில் நேற்று முன்தினமே வந்து விட்டனர். ஆட்டு சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கினர்.

    வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலை ஆடு உள்ளிட்ட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. செஞ்சி வாரசந்தை வெள்ளாடுகளுக்கு பெயர் பெற்றதால் இங்கு வியாபாரிகள் அதிகம் ஆடுகளை வாங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    ஒரு செம்மறி ஆடு (15 கிலோ எடை) கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 9 ஆயிரம் முதல் 11 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. மற்ற வகை ஆடுகள் ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்டன. வாரச்சந்தையில் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் ஆடுகளை வாங்கிச்சென்றனர். விலை சற்று கூடுதலாக கிடைத்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    மேலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வியாபாரிகள் அதிகமாக வருவார்கள் என சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். அளவுக்கு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் விலையும் சிறிது அதிகமாக இருந்ததாகவும் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    • நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர்.
    • ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வியாபாரிகள் ஆடு, கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் ஆட்டுச் சந்தையில் வியாபாரிகளும், ஆடு, கோழிகளை வாங்குவோர்கள் அதிகளவில் திரளுவார்கள். இதனால் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் காணப்படும்.

    இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். இன்று ஒரே நாளில் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்கப்பட்டது.

    நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக ஆட்டின் விலை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இன்று மட்டும் திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ரூ.7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடந்தது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ''ரம்ஜான் பண்டிகை காரணமாக இன்று நடந்த சந்தையில் ஆடுகள், கோழிகள் அதிகளவில் விற்பனை ஆகியுள்ளது. பண்டிகை காரணமாக விலை அதிகமாகியுள்ளது. கடந்த 2 வார காலமாக இதே நிலை நீடிக்கிறது. ரம்ஜான் முடிந்த பின் விலை குறைய வாய்ப்புள்ளது.

    தற்போது ஆடுகளுக்கு அதிக தேவை இருந்தாலும் திருமங்கலம் சந்தையில் ஆடுகள் வரத்து குறைவாக உள்ளது. ஒவ்வொரு முறையும் தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட விசேஷ நாட்களில் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் அதிகளவில் வியாபாரிகளும், பொதுமக்களும் கூடுகிறார்கள். தற்போதுள்ள ஆட்டுச்சந்தையில் இட நெருக்கடி அதிகமாக இருப்பதால் அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளோம்'' என்றார்.

    • சந்தையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
    • சந்தையில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் எடைக்கேற்ப ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையம் அருகே சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் நகராட்சி வார சந்தை மற்றும் கால்நடை சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த கால்நடை சந்தை தமிழகத்தின் 2-வது பெரிய சந்தையாக திகழ்ந்து வருகிறது. புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கும் இந்த சந்தைக்கு சத்தியமங்கலம், புளியம்பட்டி, கோபிசெட்டிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விசாயிகள் ஆடுகள் அதிகளவு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    இங்கு கால்நடைகள் குறைந்த விலையில் கிடைப்பதால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நாமக்கல், கரூர், திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து ஆடு, மாடு, கோழி, கன்று குட்டிகள் போன்ற கால்நடைகள் வாங்கி செல்கிறார்கள். மேலும் கர்நாடகா, கேரளா உள்பட வெளிமாநில வியாபாரிகளும் இந்த சந்தைக்கு வந்து கால்நடைகளை அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். இதனால் இந்த சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்நிலையில் நேற்று கால்நடை சந்தை வழக்கம் போல் கூடியது. நாளை (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் சந்தைக்கு விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    மேலும் தமிழகத்தின் 2-வது பெரிய கால்நடை சந்தை என்பதால் நேற்று வழக்கத்தை விட அதிகளவில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் சந்தையில் வழகத்தை விட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமுடன் கால்நடைகளை வாங்கி சென்றனர். ராம்ஜான் வருவதால் ஆடுகள் அதிகளவில் விற்பனையானது.

    இந்த சந்தையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் எடைக்கேற்ப ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. இதன் மூலம் நேற்று கூடிய சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த ரமலான் வாழ்த்து.
    • இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரமலான் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மனிதநேயம் போற்றும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.

    அன்பை, அடக்க உணர்வை, எளிமையை போதித்த அண்ணல் நபிகள் பெருமான், "அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ மட்டும் சாப்பிடாதே; உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடு" என போதித்து, மானுடம் அனைத்தும் பேரன்பால் பிணைக்கப்பட வேண்டியது என்பதை எடுத்துக் காட்டியவர். சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னத லட்சியங்களை உலகத்திற்கு தனது ஈகையாக வழங்கிச் சென்றவர்.

    திராவிட முன்னேற்றக் கழகமும், நமது திராவிட மாடல் அரசும் நபிகள் பெருமானார் காட்டிய சமத்துவ சமுதாயம் அமைக்கும் பணியில் சமரசமின்றித் தனது பயணத்தை தொடருகிறது; என்றென்றும் தொடரும்!

    நபிகள் பெருமகனார் போதித்த நெறி வழி நின்று, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் எனது உள்ளம் நிறைந்த ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • த.மு.மு.க- ம ம.க. சார்பில் ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • கிளை தலைவர் ஹாஜா நஜ்முதீன் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க- ம ம.க. சார்பில் ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லா கான் அறிவுரையின் பேரில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 840 மதிப்பபுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் நிதி உதவியை ஏழைகளுக்கு வழங்கினர். 170 குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி, உணவு பொருட்கள் ரூ. 1லட்சத்து 23 ஆயிரத்து 700 ரூபாய், 12 பேருக்கு ரூ.500 வீதம் ரூ.6 ஆயிரம், கல்வி உதவியாக ரூ.22 ஆயிரம், மருத்துவ உதவி 2 பேருக்கு ரூ.20 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 840 மதிப்பில் உதவிகளை மாவட்ட பொருளாளர் பனைக்குளம் பரக்கத்துல்லா தலைமையில் கிளை தலைவர் ஹாஜா நஜ்முதீன் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    இதில் ம.ம.க. செயலாளர் பாலகிருஷ்ணன், த.மு.மு.க., ம.ம.க. பொருளாளர் நவீன் பாதுஷா, மூத்த நிர்வாகி செய்யது முகமது, கிளை நிர்வாகிகள் மதார், அர்ஜுணை குமார், கரீம் கனி,ஹபீப் ராஜா,பாருக் உசேன், ராஜா சலீம்,ரியாஸ், நாகூர் கனி, சேக், அஜாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதினா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நோன்பு திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகம் மாலுமியார்பேட்டை மதினா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நோன்பு திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாநகர அவைத்தலைவர் பழனிவேல், பொருளாளர் ராஜேந்திரன், மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மண்டல குழு தலைவர்கள் இளையராஜா, பிரசன்னா, மாநகராட்சி கவுன்சிலர்கள் பாலசுந்தர் மற்றும், விஜயலட்சுமி செந்தில், வட்ட செயலாளர்கள் நவ்ஷத் அலி, வெங்கடேஷ், ராஜேஷ், பகுதி அவைத் தலைவர் சண்முகம், மனோகர், தகவல் தொழில்நுட்ப அணி பிரவின், கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஐ.ஐ.எம். அமைப்பின் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • பள்ளியின் இமாம் நெய்னா முகமது தொழுகையை நடத்தினார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையில் அல்ஜாமிஉல் அஸ்கர் பெரிய பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் என்கிற ஐ.ஐ.எம். அமைப்பின் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பள்ளியின் இமாம் நெய்னா முகமது தொழுகையை நடத்தினார்.

    கதீபு அப்துல் மஜீத் மஹ்லரி குத்பா பிரசங்கம் செய்தார். பள்ளிவாசல் தலைவர் அபுல் ஹசன் கலாமி, துணைத் தலைவர்கள் நவாஸ் அகமது, லெப்பை தம்பி, செயலாளர் துணி உமர், துணைச் செயலாளர் கரூர் செய்யது முகமது மற்றும் பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது தொழுகையில் பங்கேற்றவர்கள் பொது நலனுக்காக நிதி வழங்கினர். இதன் மூலம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்து 157 மற்றும் 1 கிராம் தங்க நாணயம் ஆகியவை கிடைத்துள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

    • அமைதி, ஆரோக்கியம், சமாதானம் போன்றவற்றை வலியுறுத்தி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

    சென்னை:

    இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான பண்டிகை ரம்ஜான் ஆகும். ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும்.

    ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்ற பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது.

    அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோவை, ஈரோடு, திருச்சி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் அமைதி, ஆரோக்கியம், சமாதானம் போன்றவற்றை வலியுறுத்தி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    "ஈத் புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. இந்த பண்டிகை அன்பு, இரக்கம் மற்றும் பாசம் போன்ற உணர்வுகளை பரப்புகிறது. ஈத் ஒற்றுமை மற்றும் பரஸ்பர நல்லிணக்கத்தின் செய்தியை வழங்குகிறது. சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த இந்த நாளில் உறுதிமொழி எடுப்போம். ஈத்-உல்-பித்ரின் புனிதமான சந்தர்ப்பத்தில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

    • ஏழைகளுக்கு ரம்ஜான் தொகுப்பு வழங்கப்பட்டது.
    • பாம்பே டையிங் உரிமையாளர் ஜாபர் வரவேற்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் ஏழைகளுக்கு நோன்புப் பெருநாள் இலவச தொகுப்பு பொருட்கள் அருப்புக்கார தெரு ஜும்மா பள்ளிவாசலில் வழங்கப்படுவது வழக்கம்.

    இந்தாண்டும் இந்த தொகுப்பில் புத்தாடை, மளிகை பொருட்கள், இறைச்சி,அரிசி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. பள்ளிவாசலின் தலைவர் லியாகத்அலி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஆர்.டி.ஓ. சேக் முகமது,தொழிலதிபர் தீன் சேம்பர் அப்துல் முனாப், சமூக ஆர்வலர் பல் மருத்துவர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தொகுப்பு பொருட்களை வழங்கினர்.

    பாம்பே டையிங் உரிமையாளர் ஜாபர் வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் நிறுவனர் பாதுஷா நூருல் ஷமது, பொருளாளர் ஸ்டார் சீனி முகமது ஆகியோர் செய்திருந்தனர்.

    • மதுரையில் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி திடல்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடந்தது.
    • ஒருவரை ஒருவர் ஆரத்தழு வியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    மதுரை

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று- ரமலான் மாத நோன்பு. நோன்பின்போது அவர்கள் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள்.

    ரமலான் மாதம் முதல் நாள் தொடங்கி 30 நாட்க ளும் கடுமையாக நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம்கள், மற்றொரு கடமையான ஏழை-எளியோருக்கு ஜகாத் உதவிகளை வழங்கி வரு வார்கள்.

    ரமலான் 30 நாள் நோன்பு முடிவடைந்த பிறகு, ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டா டப்படும். அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் அதிகாலை முதலே மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்தி னர். இதனைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து 'ஈதுல் பித்ர்' என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    மதுரையில் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி திடல்களில் நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடந்தது. அதன்படி மாப்பாளையம், நெல்பேட்டை, ஹாஜிமார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழு வியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள். ரம்ஜான் சிறப்பு தொழுகை முடிவில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், கொரோனா தொற்று போன்ற பேரிடர்கள் நீங்க வேண்டியும் இஸ்லாமியர்கள் சிறப்பு துஆ செய்தனர்.

    ×