என் மலர்
நீங்கள் தேடியது "அதிகாரிகள்"
- கோவிலுக்கு செல்லக்கூடிய சாலையை அதிகாரிகள் அகற்றி மீட்டனர்.
- தவறான முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அப்போது ஒரத்தநாடு தாலுகா வடக்கூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
வடக்கூர் வடக்கு தெற்கு தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்த வைத்திருந்த 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்தமான கோவிலுக்கு செல்லக்கூடிய சாலையை அதிகாரிகள் அகற்றி மீட்டனர்.
ஆனால் தற்போது அந்த சாலை வழியாக செல்ல ஆக்கிரமித்தவர் தடுக்கிறார்.
எனவே மீட்டு தரப்பட்ட சாலையை எங்களது பயன்பாட்டுக்கு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பூதலூர் ஒன்றியம் புதுக்கரி யாபட்டி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;-
சானூரப்பட்டி ஊரா ட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக தவறான முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.
எனவே அரசுக்கு இழப்பீடு செய்த பணியாளர்கள், ஒப்பந்தகாரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சம்பந்தபட்ட தனியார்களிடம் இருந்து மேற்படி தொகையை திரும்ப பெற்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- சங்ககிரி செல்லும் வழித்தடம் ஆகிய பகுதியில் விரைவில் சென்னை கன்னியாகுமரி தொழில் வழி தடம் திட்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் சேலம் கோட்ட பொறியாளர் சசிகுமார் தலைமையில், உதவி பொறியாளர் கபில், மற்றும் சேலம், ஈரோடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்கள், குமாரபாளையம் வட்டார போக்குவரத்து ஆர்.டி.ஒ. தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், போலீசார் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
பள்ளிப்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் பஸ் நிலையம் அருகே நான்கு சாலை பிரிவு, மற்றும் சங்ககிரி செல்லும் வழித்தடம் ஆகிய பகுதியில் விரைவில் சென்னை கன்னியாகுமரி தொழில் வழி தடம் திட்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது.
சேலம், சங்ககிரி, குமார பாளையம், வெப்படை உள்ளிட்ட பகுதியில் இருந்து ஈரோடு செல்லும் அனைத்து வாகனங்களும், பள்ளிப்பாளையம் நான்கு சாலை பிரிவு வழியாக செல்ல முடியும். மேம்பாலம் பணி கள் தொடங்கப்பட்டால், இந்த வழித்தடத்தில் எந்த வாகனமும் செல்ல முடியாது.
இதனால் வாகனங்கள் மாற்று வழியில் செல்லும் வகையில், இத்திட்டத்தின் சேலம் கோட்ட பொறியாளர் சசிகுமார் தலைமையில், உதவி பொறியாளர் கபில், மற்றும் சேலம், ஈரோடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்கள்,
குமாரபாளையம் வட்டார போக்குவரத்து ஆர்.டி.ஒ. தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், போலீசார் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில், பள்ளிப்பா ளையம் நகராட்சி அலுவ லகம் எதிரில் செல்லும் சாலை வழியாக பத்திர அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், காந்திபுரம் முதல் வீதி வழியாக சென்று பாலம் வழியாக ஈரோடு செல்லும் வகையிலும், அதே போல ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்களும் இந்த மாற்று சாலை வழியாக செல்லும் வகையில் ஆய்வு செய்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த மாற்று வழித்தடம் குறித்த அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட உள்ளது. அவர் அனுமதி அளித்தவுடன் இந்த மாற்று வழி நடைமுறைக்கு வந்துவிடும்.
- 2022-2023 ஆண்டு நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டிய திட்டபணிகள் குறித்து நடைப்பெற்றது.
- தொகுதி மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தல்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2021-2022 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட திட்டப் பணிகளின் நிலை குறித்தும், 2022-2023 ஆம் ஆண்டு நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்தும், ஆய்வு செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில், நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கூடுதல் ஆட்சியர், நாகை மற்றும் திருமருகல் ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி செயற்பொறியாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டப்பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூட்டத்தில் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
- மதுரை மாவட்டத்தில் 70 ஆயிரம் பேர் ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்கவில்லை.
- உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை- எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அரசின் பணப்பலன்கள் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமும் சென்ற டைவதற்கான ஏற்பாடு களை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி மாநில உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதிலும் ரேஷன் அட்டைதாரர்களிடம் வங்கி கணக்குகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவை உடனுக்குடன் மாநில உணவு பொருள் வழங்கல் இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கார்டு தாரர்களின் வங்கி கணக்கு தொடர்பாக ஆய்வு நடத்தினார்கள். இதில் தமிழகம் முழுவதிலும் 14,86,000 பேரிடம் வங்கி கணக்கு இல்லை என்பது தெரிய வந்தது.
அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி-1029, மதுரை வடக்கு தாலுகா- 11,004, மதுரை வடக்கு- 7744, மதுரை மேற்கு- 11742, மதுரை மத்தி-7144, மதுரை கிழக்கு-7909, மதுரை மேலூர்- 6139 பேரையூர்- 4188, திருமங்கலம்- 3188, உசிலம்பட்டி-4763, வாடிப்பட்டி- 5618 ஆகிய பகுதிகளில் வசிக்கும் மேற்கண்ட ரேஷன் கார்டுதாரர்கள் வங்கி கணக்கை சமர்ப்பிக்க வில்லை என்பது தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 70 ஆயிரத்து 468 பேர் வங்கி கணக்கு ஒப்படைக்க வில்லை. எனவே ரேஷன் கார்டு அலுவலகத்தில் வங்கி கணக்கு சமர்ப்பிக்காத வாடிக்கையாளரிடம் கேட்டு பெறுவது, இல்லாத வர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மூலம் 'ஜீரோ பேலன்ஸ்' அடிப்படையில் புதிய கணக்கு தொடங்கி அதன் விவரங்களை சென்னை சேப்பாக்கம் அலுவ லகத்திற்கு சமர்ப்பிக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசின் பணப் பலன்கள் ரேசன் கார்டு மூலம் வாடிக்கையாளரை சென்றடைய வேண்டும் என்பதற்காக, வங்கி கணக்கு விவரங்கள் இணைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
- நிலுவையில் உள்ள அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
- வங்கிகளின் பங்களிப்பு குறித்து வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் அனைத்து அரசு துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடர் முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் நமக்கு நாமே திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், சமத்துவ மயானம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிமராமத்து பணிகள், எண்ணும் எழுத்தும் இயக்கம், தூய்மை பாரத இயக்கம், திடக் கழிவு மேலாண்மை திட்டம், நீர்நிலை புறும்போக்கு, பொதுப்பணித்துறை போன்ற இடங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் இ-சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரது தலைமையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பலவேறு துறைகள் சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் வங்கிகளின் பங்களிப்பு குறித்து வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஒருங்கி ணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் தார் சாலைகள் அமைக்கப்பட்டது. இந்த பணிகளை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- மேலும் பசுமை நாமக்கல் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக கண்காணிப்பு பொறியாளர் மரக்கன்றுகள் நட்டார்.
ராசிபுரம்:
நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் உட்கோட்டத்தில் ஒருங்கி ணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் தார் சாலைகள் அமைக்கப்பட்டது.
இந்த பணிகளை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்ட சாலைகளின் தரம் மற்றும் கனத்தினை ஆய்வு செய்தார்.
மேலும் பசுமை நாமக்கல் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக கண்காணிப்பு பொறியாளர் மரக்கன்றுகள் நட்டார். நிகழ்ச்சியில் ராசிபுரம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ்குமார், உதவி பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- தற்காலிகமாக இயங்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென்று பார்வையிட்டர்.
- அலுவலகத்தில் இருந்த தன்பதிவேடு, வருகை பதிவேடு, ரொக்கப் பதிவேடு, வைப்புத் தொகை, இருப்பு பதிவேடு, உள்ளிட்ட பார்வையிட்டர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் தற்காலிகமாக இயங்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அலுவலகத்தில் இருந்த தன்பதிவேடு, வருகை பதிவேடு, ரொக்கப் பதிவேடு, வைப்புத் தொகை, இருப்பு பதிவேடு, உள்ளிட்ட கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அங்கிருந்த அதிகாரிகள் மத்தியில் ஆலோசனை கூறினார்.
இந்த ஆய்வில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கமலராஜன், சாந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
- பெற்றோரிடம் பேசி 10-ந் தேதி நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கம்பந்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் பங்காரு அவரது மகன் லட்சுமி நாராயணன்(வயது27). இவருக்கும் மயிலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும்,வருகிற 10 -ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
இதுகுறித்து சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சமூக நலத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சமூக நல ஆலோசகர் ஸ்ரீதேவி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயா , வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் பிருந்தாதேவி உள்ளிட்டோர் சிறுமியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது பெற்றோரிடம் பேசி 10-ந் தேதி நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினார். மேலும் பெண்ணின் பெற்றோருக்கு அறிவுரைகள் வழங்கி, சிறுமியை மீட்டு விழுப்புரம் குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர்.
- திட்டமிட்டு புறக்கணிப்பதாக மீனவர்கள் குற்றச்சாட்டு
- மீனவர்கள் கூட்டத்திற்கு அனைத்து அதிகாரிகளும் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, சப்- கலெக்டர் குணால் யாதவ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீனவர்கள் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகிறார்கள். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஆயிரக்க ணக்கான மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வரு கிறார்கள். இயற்கை சீற்றம் காரணமாக மீனவர்கள் திசை மாறி செல்லும் சம்பவங்கள், மேலும் கடலில் தத்தளிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.
மீனவர்களை உடனடி யாக மீட்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.மீனவர்களை உடனடியாக மீட்க ஆம்புலன்ஸ் வசதி யுடன் கூடிய மீட்பு படகை துறைமுகங்களில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவளத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். பெரிய காடு பகுதி யில் தூண்டில் வளைவு 100 மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்க வேண்டும்.கன்னியா குமரியில் உள்ள உணவு விடுதிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் தான் ஏராளமான மீன வர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். மீனவர்களுக்கு கூடுத லாக மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழமணக்குடி பள்ளம் பகுதியில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்டு வருகி றார்கள்.
எனவே அந்த நாட்டுப் படகுகளை சின்ன முட்டம் துறைமுகத்தின் கரை ஓரத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன வர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும். குழித்துறை ெரயில் நிலையத்தில் ஏர்நாடு எக்ஸ்பிரஸ் ெரயில் ஏற்கனவே நின்று சென்றது. கொரோனாவுக்கு பிறகு அந்த ெரயில் அங்கு நிறுத்தப்படுவதில்லை. அந்த ெரயிலை மீண்டும் குழித்துறை நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில், சின்னமுட்டம் துறைமுக பகுதியில் நாட்டு படகுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பொதுப்பணி துறை மூலமாக அந்த பகுதியில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.
கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஓட்டல்களில் விலை பட்டியல் வைப்பது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வசதியுடன் மீட்பு படகு தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றனர்.
மேலும் மீனவர்கள் கேள்விக்கு பதில் அளிக்க பல்வேறு துறை அதிகாரிகளும் கூட்டத்தி ற்கு வரவில்லை. இதைய டுத்து மீனவர்கள் தங்களது கூட்டத்தை அதிகாரிகள் வேண்டும் என்றே புறக்கணிப்ப தாகவும் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரி வித்தனர்.
மீனவர்கள் கூட்டத்திற்கு அனைத்து அதிகாரிகளும் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்த னர்.
- வீரபாண்டி (வயது (26)). இவருக்கும் எம்.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும்திருமணம் நடைபெற இருந்தது,
விழுப்புரம்:
மதுராந்தகம் அருகே உள்ள தென்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் வீரபாண்டி (வயது (26)). இவருக்கும் மரக்காணம் அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு இன்று மதுராந்தகம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்ட பத்தில் திருமணம் நடை பெற உள்ளதாக சைல்ட் லைனுக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி மரக்காணம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், கோட்டக் குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் தலைமை காவலர், சமூக நலத்துறை அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று இரவு எம். புதுப்பாக்கம் கிராமத்திற்கு சென்று சிறுமியின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடை பெற இருப்பது உண்மை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த திருமணத்சதை தடுத்து நிறுத்தினர அதன் பின்னர் சிறுமியை மீட்டு விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.
- கீரம்பூர் அருகே ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை கடத்தப்படுகிறதா என வாகன சோதனை மேற்கொண்டனர்.
- கீரம்பூர், டோல்கேட் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் லாரி மற்றும் கனரக வாக–னங்களை ஆய்வு செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் கீரம்பூர் அருகே ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை கடத்தப்படுகிறதா என வாகன சோதனை மேற்கொண்டனர்.
கீரம்பூர், டோல்கேட் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் லாரி மற்றும் கனரக வாக–னங்களை ஆய்வு செய்தனர்.
தமிழக அரசு சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்–படும் ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவை கடத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்ப–டையில் அவ்வழியாக வந்த லாரி, சரக்கு ஆட்டோ மற்றும் கனரக வாகனங்–களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் ரேஷன் அரிசி மற்றும் மண் எண்ணை எதுவும் பிடிபட–வில்லை எனவும் தொடர்ந்து வாகன சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறையினர் தெரிவித்தனர்.
வழியாக வந்தால் அனைத்து வாகனங்க–ளையும் நிறுத்தி சோதனை செய்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- விவசாய நிலங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தார்.
- வட்டார உதவி இயக்குநர் சிவராணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி ராமர் (வயது52). இவர் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் வாழை, மிளகாய், தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட பணப்பயிறுகளை இயற்கை விவசாயம் முறையில் சாகுபடி செய்து வருகிறார். மேலும் அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் மிளகாய் ஏற்றுமதி செய்து வருகிறார்.
இந்த நிலையில் கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து சண்முகப்பிரியா, மேலாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) விஜயலட்சுமி ஆகியோர் ராமரின் மிளகாய் விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து பாக்குவெட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் விவசாய நிலங்கள், ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்து வேளாண்மை திட்டங்களை குறித்து ஆலோசனை வழங்கினர். கமுதி வேளாண்மை வட்டார உதவி இயக்குநர் சிவராணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.