என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடுக்குமாடி குடியிருப்பு"

    • குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
    • கட்டிடத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறியபடி இருந்தது.

    குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    ராஜ்கோட் 150 ரிங் ரோட்டில் அமைந்துள்ள அட்லான்டிஸ் என்ற 12 மாடி குடியிருப்பு கட்டடத்தின் 6 ஆவது மாடியில் இன்று காலை தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து அங்கு வசித்த 50 பேரை பத்திரமாக மீட்க்கப்பட்டனர்.

    ஆனால் துரதிஷ்டவசமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருவரை இன்னும் காணவில்லை என்று காவல் கண்காணிப்பாளர் சௌத்ரி தெரிவித்தார். மேலும் குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    சார்ட் சர்கியூட் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கட்டிடத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறியபடி இருந்தது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.  

    • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 224 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சர் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நக ராட்சிக்குட்பட்ட பூண்டிநகர் பகுதியில் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.18 கோடியே 80 லட்சத்தில் 224 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட் டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதே நேரம் இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கலந்து கொண்டு, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், கவுன்சிலர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    இதில் துணைத்தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள் காயத்ரி, ராஜன், யுவராஜ், முருகசாமி, செல்வராஜ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அடுக்குமாடி குடியிருப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.

    • அடுக்குமாடி குடியிருப்பை சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய், சாலை, குடிநீர் ,மின்சாரம் ,மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.12. 78 கோடி மதிப்பீட்டில் 156 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. படுக்கையறை, சமையலறை, வரவேற்பறை, குளியலறை, கழிவறை ஆகிய வசதியுடன் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

    இந்த குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய், சாலை, குடிநீர் ,மின்சாரம் ,மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பை சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சர்க்கார் கண்ணாடிப்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் ,திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல. பத்மநாபன், மாவட்ட தி.மு.க. பொருளாளர் முபாரக் அலி ,ஒன்றிய குழு தலைவர் காவியா ,பேரூராட்சி தலைவர் கலைவாணி ,துணைத் தலைவர் ரங்கநாதன் ,மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சாகுல் ஹமீது, மேற்கு ஒன்றிய செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம் ,பேரூர் செயலாளர்கள் பாலமுருகன், சாதிக் அலி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • 5 ஆண்டுகள் பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம்-குனியமுத்துார் இடையே சுகுணாபுரம் அருகே, குறிச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது அரசு அடுக்குமாடி குடியிருப்பு.

    மலையின் உச்சியில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு பார்ப்பதற்கு பிரம்மாணடமாக காட்சியளிக்கிறது. சுமார் 3.45 ஏக்கர் நிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.15 கோடி மதிப்பில் இந்த குடியிருப்பு கட்டப்பட்டது.

    புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்காக தமிழக அரசு கட்டிய இந்த குடியிருப்பில் மொத்தம் 224 வீடுகள் உள்ளன. மொத்தம் 14 பிளாக்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வீடும் வரவேற்பறை, படுக்கை அறை, சமையல்அறை, பால்கனி, கழிப்பிடம் என 400 சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் மின் இணைப்பும் இந்த குடியிருப்புக்கு வழங்கப்பட்டுவிட்டது.

    ஆனால், இந்த குடியிருப்பில் தற்போது வரை ஒரு குடும்பம் கூட குடியேறவில்லை. இந்த 224 வீடுகளும் திருநங்கைகளுக்கும், நலிந்த மக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இங்கு பாதுகாப்பு குறைபாடுகள் அதிகமாக இருப்பதால் இதுவரை யாரும் இங்கு குடியேறாமல் உள்ளனர்.

    5 ஆண்டுகள் ஆகியும் பயன்பாடில்லாமல் இருக்கும் இந்த குடியிருப்பில் மர்ம நபர்கள் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 224 குடியிருப்புகளிலும் மது பாட்டிகள், சுவர்களில் அருவருக்கத்தக்க படங்கள் வரையப்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் இங்கு விபசாரமும் நடைபெறுவதாக சுற்றுவட்டார பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு வயர்கள், தண்ணீர் குழாய்கள், இரும்பு ஜன்னல்கள் என அனைத்தும் சூறையாடபட்டுள்ளது.

    புதர் மண்டி கிடக்கும் இந்த குடியிருப்பை புனரமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • நீதிமன்றம் உத்தரவின்படி அந்த வீடுகளை காலி செய்யுமாறு ஏற்கனவே 3 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • நெருப்பெரிச்சல் மற்றும் செட்டிபாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 10 மற்றும் 9-வது வார்டுக்குட்பட்ட நல்லாறு, செட்டிபாளையம் பகுதிகளில் 187 வீடுகள் நீர்வழி ஆக்கிரமிப்பாக இருப்பதாக கண்டறியப்பட்டது. மேலும் சென்னை நீதிமன்றம் உத்தரவின்படி அந்த வீடுகளை காலி செய்யுமாறு ஏற்கனவே 3 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இதன்படி அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். ஆனால் அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படாததால் இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடம் ஆத்துப்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய நாராயணன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ் முன்னிலை வகித்தார். நீர்ப்பாசனத்துறை உதவி பொறியாளர் நல்லதம்பி வரவேற்றார்.

    இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:- நீதிமன்ற உத்தரவின்படி இந்த பகுதியில் உள்ள வீடுகள் அகற்றப்பட்டாலும், இங்கு வசிக்கும் அனைவருக்கும் நெருப்பெரிச்சல் மற்றும் செட்டிபாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்படும்.

    திருப்பூர் 9 மற்றும் 10-வது வார்டுகளில் நீர்வழி ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகள் அகற்றப்பட்டாலும் அங்கு வசிப்பவர்களுக்கு அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.அந்த வீடுகளுக்கு வழங்க வேண்டிய தொகைக்கான வங்கிக் கடன் வசதியையும் அதிகாரிகளே சுயஉதவிக்குழுக்கள் மூலமாக ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் திருப்பூர் வடக்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • குறைதீர்க்கும் நாளில் ஆதிதிராவிட மக்கள் மனு
    • கல்லறைகளை அகற்றி விட்டு அங்கு அரசு அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கான வேலைகள் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து மனு அளித்தனர். குமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் வந்து ஒரு மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்புதூர் கிராமத்தில் சுமார் 400 ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மரணம் அடைந்தால் அடக்கம் செய்வதற்காக காற்றாடி விளை பகுதியில் அமைந்து உள்ள சுடுகாட்டை 200 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

    அங்கு சுடுகாடு மற்றும் இடுகாடு அமைந்துள்ளது. இந்த இடுகாட்டில் பல கல்லறைகளும் அமைந்து உள்ளன. இந்த நிலையில் கல்லறைகளை அகற்றி விட்டு அங்கு அரசு அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கான வேலைகள் நடக்கிறது.

    இதனால் ஆதிதிராவிடர் மக்கள் பாதிக்கப்படுவார் கள். எனவே அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். 200 ஆண்டு களாக பயன்படுத்தி வரும் சுடுகாடு நிலத்தை ஆதி திராவிட மக்களுக்காக கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெல்ஸ்பன் குழுமம் அடுக்குமாடி குடியிருப்பை ரூ.240 கோடிக்கு வாங்கி உள்ளதாக தெரிகிறது.
    • இந்தியாவிலேயே இன்று வரை விற்பனையான குடியிருப்புகளில் மும்பை 360 வெஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பு தான் அதிக விலைக்கு விற்பனை ஆன குடியிருப்பு என்று கூறப்படுகிறது.

    மும்பை:

    மும்பையின் ஓர்லி பகுதியில் தொழில் அதிபர்கள் வசிக்கும் சொகுசு பங்களாக்கள் உள்ளன.

    இங்குள்ள மும்பை 360 வெஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் பிரபலமானது. சமீபத்தில் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி விற்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது.

    இதனை வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவர் பி.கே.கோயங்கா விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    வெல்ஸ்பன் குழுமம் இந்த குடியிருப்பை ரூ.240 கோடிக்கு வாங்கி உள்ளதாக தெரிகிறது. அதன்படி இந்தியாவிலேயே இன்று வரை விற்பனையான குடியிருப்புகளில் இந்த குடியிருப்பு தான் அதிக விலைக்கு விற்பனை ஆன குடியிருப்பு என்று கூறப்படுகிறது.

    அடுக்குமாடி குடியிருப்பின் கோபுரத்தில் 3 தளங்களில் பென்ட் ஹவுஸ் அமைந்துள்ளது. சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இக்குடியிருப்பினை ரூ.240 கோடிக்கு வெல்ஸ்பன் குழுமம் வாங்கி உள்ளது. இனி இந்த தளத்தில்தான் இக்குழுமம் தங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டி எராளமான பொதுமக்கள் மனு செய்து வீடுகள் பெற்றுள்ளனர்.
    • வீடு கிடைக்கப்பெறாத மக்களின் மனுக்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., க.செல்வராஜ் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகர பகுதிகளில் அமைந்துள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டி எராளமான பொதுமக்கள்மனு செய்து வீடுகள் பெற்றுள்ளனர். அரசுக்கும் பொது மக்களிடையே நல்லவரவேற்பு கிடைத்துள்ளது.

    வீடு கிடைக்கப்பெறாத மக்களின் மனுக்கள்காத்திருப்போர் பட்டியலில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில்என்னிடம் வரப்பெற்ற மனுக்களை தங்களுக்கு பரிந்துரைத்தேன். அதற்குதாங்களும் ஒப்புதல் அளித்து குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். அதில்ஒரு சிலர் உள்வாடகை மற்றும் போக்கியத்துக்கு விட்டு தகுதியானவர்களுக்குவீடு கிடைக்காத நிலையை ஏற்படுத்தி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர் என்று தெரிய வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்களை கண்டறிந்து அப்புறப்படுத்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கு அந்த குடியிருப்பு கிடைத்திட தாங்கள் நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

    • 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் 35 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது.
    • குடியிருப்பு ஒன்றுக்கு தற்போது 1.66 லட்சம் ரூபாய் என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    பல்லடத்தை அடுத்த பெரும்பாளியில் 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் 35 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது.கடந்த 2019ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு க்கான கட்டுமான பணிகள் துவங்கின. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவடையவுள்ள சூழலில் பயனாளிகள் யார், எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

    வீட்டு வசதி வாரிய அதிகாரிஒருவர் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் 60 சதவீதம்வரை நிறைவடைந்துள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்க ப்படும். மொத்தமுள்ள 432 குடியிருப்புகளுக்கு, நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் ஏற்க னவே பெறப்பட்டுள்ளன. குடியிருப்பு ஒன்றுக்கு தற்போது 1.66 லட்சம் ரூபாய் என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வரும் சூழலில் கலெக்டர் உத்தர வின்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

    • திருக்குமரன்நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • விஜயகுமார் எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட திருக்குமரன்நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது பஸ், பள்ளி, தெருவிளக்குகள், ரேஷன்கடை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரு–மாறு பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு வழங்கினர்.

    மனுக்களை பெற்றுக்கொண்ட விஜயகுமார் எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இதில் 5-வது வார்டு கவுன்சிலர் இந்திராணி ஆனந்தன், அ.தி.மு.க. வட்ட செயலாளர் நாச்சிமுத்து, பகுதி துணை செயலாளர் மூர்த்தி, நிர்வாகிகள் ஜீவானந்தம், சிவராமன், பிரபாகர், சத்தியராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • தாம்பரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    • மக்கும் குப்பையை அந்தந்த குடியிருப்பில் வசிப்பவர்களே உரமாக்கி கொள்ளவேண்டும்.

    தாம்பரம்:

    சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. புறநகர் பகுதிகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதனால் தாம்பரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சுமார் 2 லட்சத்து 52 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள். தங்கள் வீட்டு குப்பைகளை தூய்மைப் பணியாளர்களிடம் மொத்தமாக கொடுக்காமல் மக்கும் குப்பை, மக்காத குப்பை 'என்று பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், 50 வீடுகளுக்கு மேல் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பையை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் குடியிருப்பில் அமைக்கப்பட்டு உள்ள மறுசுழற்சி சாதனங்களை பயன்படுத்தி திடக்கழிவை சுத்திகரித்து கொள்ளவேண்டும். மேலும் மக்கும் குப்பையை அந்தந்த குடியிருப்பில் வசிப்பவர்களே உரமாக்கி கொள்ளவேண்டும்.

    காகிதம் மற்றும் மக்காத பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் மட்டும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்கு ஒப்புக்கொள்ளாத குடியிருப்புகளில் குப்பை அள்ள மாநகராட்சி ஊழியர்கள் வரமாட்டார்கள். அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் தனியார் குப்பை அகற்றும் ஏஜென்சி மூலம் அகற்றி கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய உத்தரவு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறும்போம், அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடு வாங்கிய பலருக்கு தாம்பரம் மாநகராட்சி விதித்துள்ள புதிய கட்டுப்பாடு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே திடக்கழிவு மேலாண்மைக்கு வரி வசூலித்து வரும் நிலையில், குப்பையை அந்தந்த குடியிருப்புகளே அகற்ற வேண்டும் என்ற உத்தரவை தாம்பரம் மாநகராட்சி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

    • 2019-ம் ஆண்டு தமிழக வீட்டுவசதி வாரிய திட்டத்தின் கீழ் இந்த குடியிருப்பு வழங்கப்பட்டது
    • வழங்கப்பட்ட இரண்டு மாதங்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு

    சென்னை கொரட்டூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென அதிர்வு ஏற்பட்டுள்ளது. சுமார் 20 வினாடிகள் இந்த அதிர்வு உணரப்பட்டதால், அங்கு வசித்தவர்கள் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

    கொரட்டூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான கோல்டன் பிளாக் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. 9 தளங்களை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை திடீரென கட்டிடம் குலுங்குவதுபோல் உணரப்பட்டதால் அங்கு வசித்தவர்கள், காவல்கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட ஆய்வில் எந்தவித நிலஅதிர்வும் அதிகாரப்பூர்வமாக பதிவாகவில்லை எனத் தெரிவித்தனர்.

    2019-ம் ஆண்டு தமிழக வீட்டுவசதி வாரிய திட்டத்தின் கீழ் இந்த குடியிருப்பு வழங்கப்பட்டதாகவும், சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், கட்டிடம் வழங்கப்பட்ட இரண்டு மாதங்களிலேயே விரிசல் ஏற்பட்டதாகவும்,

    இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு விரிசல்கள் சரி செய்யப்பட்ட நிலையில், அதில் திருப்தியில்லை என்பதால் போராட்டம் நடத்தியதாகவும், அரசு பல்கலைக்கழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சரி செய்யப்பட்டதாகவும்,

    உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த குடியிருப்பில் வசிப்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும், அரசு தலையிட்டு இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் குடியிருப்புவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    ×