search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலை"

    • பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
    • 11 பேருக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

    ஆமதாபாத் :

    குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் 11 பேருக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

    அவர்கள் 15 ஆண்டுகாலம் சிறையில் கழித்த பிறகு, தங்களை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர்.

    அவர்களுக்கான தண்டனைக்குறைப்பு குறித்து பரிசீலிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. அதையடுத்து, இவ்விஷயம் தொடர்பாக பரிசீலிக்க பஞ்ச்மகால் மாவட்ட கலெக்டர் சுஜால் மாயாத்ரா தலைமையில் ஒரு குழுவை குஜராத் அரசு அமைத்தது.

    அந்த குழு, குறிப்பிட்ட கைதிகளின் ஆயுள் தண்டனையைக் குறைப்பதற்கு பரிந்துரைத்து மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பியது.

    அதன் அடிப்படையில் 11 ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்வதற்கு குஜராத் அரசு உத்தரவிட்டது.

    அதைத் தொடர்ந்து 11 பேரும் கோத்ரா கிளைச் சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இவ்விவகாராம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடுதலை’.
    • இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் மேனன் நடிக்கிறார்கள்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் மேனன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

    சூர்யா - விஜய் சேதுபதி

    சூர்யா - விஜய் சேதுபதி

    கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், விஜய் சேதுபதியின் கால்ஷீட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    சூர்யா - விஜய் சேதுபதி

    சூர்யா - விஜய் சேதுபதி

    இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பழங்குடியின இளைஞர் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இதற்குமுன்பு தனது தந்தை விஜய்சேதுபதியுடன் இணைந்து நானும் ரௌடிதான் மற்றும் சிந்துபாத் ஆகிய இரு படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கைதிகளை விடுதலை செய்யக்கோரி தலைமை செயலகம் நோக்கி நடை பயணம் நடைபெற்றது.
    • சிறையில் வாடுபவர்களை விடுதலை செய்ய வேண்டும்

    திருச்சி:

    தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் மாவட்ட பொருளாளர் ரியாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம்.சரீப் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 75-வது சுதந்திர தினத்தையொட்டி திருச்சியில் இருந்து சென்னை நோக்கி 500-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களுடன் 15 நாட்கள் பெருந்திரள் நடைபயணமாக சென்று முதலமைச்சரிடம் மனு கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆலோசனைக் கூட்டத்தில் ந மாவட்ட துணைச் செயலாளர் காஜா, மேற்கு தொகுதி செயலாளர் ரபீக் ராஜா,மாவட்ட இளைஞரணி சேக், ஆழ்வார்தோப்பு துணைச் செயலாளர் முபாரக்,சமயபுரம் பகுதி செயலாளர் பாருக் மற்றும் பாண்டியன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

    • இளையராஜா மூன்று தலைமுறைகளுடன் இணைந்து இசையமைத்துள்ளார்.
    • வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார்.

    இவர் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளதை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கி படத்திற்கும் இசையமைக்கிறார். இதையடுத்து இளையராஜா சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், ரசிகர் ஒருவர் ராக் வித் ராஜா நிகழ்ச்சியில் தனுஷ் பாடிய பாடல்களை தனியாக வெளியிட வேண்டும் என கேள்வி எழுப்பினார்.


    இளையராஜா

    அதற்கு இளையராஜா " ஒருவர் இசையமைத்து அது உங்கள் மனதில் நிற்பதற்கு காரணம், அதை உருவாக்கியவரின் ஆழமும், திறமையும்தான். இதுதான் உயர்ந்த கலைப்படைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். அந்த பாடல் உங்கள் இதயத்தை தொட்டதற்காக தனுஷை பாராட்டுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

    ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், அவர்களின் தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது. #RajivMurderCase
    புதுடெல்லி:

    முன்னாள் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் சிறையில் இருந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.

    இந்நிலையில், சிறையில் உள்ள 7 பேரின் உடல் மற்றும் மனநிலை, அவர்களது சிறைத்தண்டனை, குடும்ப சூழல், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு இன்று கடிதம் அனுப்பியுள்ளது. 
    ×