என் மலர்
நீங்கள் தேடியது "ஆன்லைன்"
- அனிதா தனது நலம் விரும்பி என்றும், அவர் சரியான ஆலோசனையை வழங்குகிறார் என்றும் சிங் நம்பத் தொடங்கினார்.
- அனிதாவின் டேட்டிங் செயலியின் சுயவிவரம் போலியானது என்று தெரியவந்துள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் மறுவாழ்க்கைக்கு உதவுவதாக பல ஆன்லைன் நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றன. இதனால் சிலருக்கு நன்மை நடந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு தோல்வி தான் கிடைக்கிறது.
அதே போல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வரும் டேட்டிங் செயலில் விவாகரத்து பெற்று தனிமையில் இருந்த வாலிபர் காதலை தேடும் முயற்சியில் தனது வாழ்நாளுக்காக சேமித்து வைத்த பணத்தை இழந்தள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டேட்டிங் செயலில் சுயவிவரத்தை பதிவு செய்த நெய்டாவைச் சேர்ந்த தல்ஜித் சிங் என்பவருக்கு அனிதா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். ஆரம்பத்தில் சாதாரணமாக பேச ஆரம்பித்த இவர்கள் நாளடைவில் இருவருக்கும் இடையேயான பேச்சும், நெருக்கமும் அதிகரித்தது.
ஒரு கட்டத்தில் தல்ஜித் சிங்கின் நம்பிக்கையை பெற்ற அனிதா, பங்குச்சந்ததை மூலம் பெரும் லாபம் ஈட்டுவது குறித்து தகவல்களை பகிர்ந்து 3 நிறுவனங்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து முதலில் ரூ.3.2 லட்சம் முதலீடு செய்து சில மணி நேரங்களுக்குள் ரூ.24,000-ஐ சிங் சம்பாதித்தார். இதனால் அனிதா மீதான நம்பிக்கை சிங்கிற்கு வலுவடைந்து அனிதா தனது நலம் விரும்பி என்றும், அவர் சரியான ஆலோசனையை வழங்குகிறார் என்றும் சிங் நம்பத் தொடங்கினார்.
இதனை தொடர்ந்து தனது வாழ்நாள் சேமிப்பான சுமார் ரூ.4.5 கோடியை முதலீட்டில் மாற்றினார். மேலும் அனிதாவின் ஆலோசனையின் பேரில், சிங் ரூ.2 கோடி கடனை எடுத்து அதையும் முதலீடு செய்தார். மொத்தம் ரூ.6.5 கோடியை 30 வெவ்வேறு பரிவர்த்தனைகள் மூலம் 25 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார்.
இதையடுத்து முதலீடு செய்யப்பட்ட தொகையில் 30 சதவீதத்தை திருப்பி தரும்படி அனிதாவிடம் சிங் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சிங்குடனான தொடர்பை அனிதா துண்டித்துள்ளார். மேலும் அனிதா தெரிவித்ததாகக் கூறப்படும் 3 நிறுவனங்களில் 2 துண்டிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த சிங் இச்சம்பவம் தொடர்பாக நொய்டா செக்டர் 36-ல் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அனிதாவின் டேட்டிங் செயலியின் சுயவிவரம் போலியானது என்று தெரியவந்துள்ளது. மேலும் பணம் மாற்றப்பட்ட கணக்குகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 எண்ணுக்கு அழைத்து இந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம்.
- ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுண்ட்டரில் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
புதுடெல்லி:
மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் என தெரிவித்தார்.
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 எண்ணுக்கு அழைத்து இந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம் எனக்கூறிய அஸ்வினி வைஷ்ணவ், ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுண்ட்டரில் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
- புதிய நடைமுறைப்படி வரும் 19ம் தேதி முதல், 2,000 ரூபாய் வரையிலான கட்டணத்தை, வசூல் மையத்தில் செலுத்தலாம்.
- மின்நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.
திருப்பூர் :
மின் கட்டண உயர்வு அமலான நிலையில், இரண்டாயிரம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனையை, 'ஆன்லைன...வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டுமென, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
புதிய நடைமுறைப்படி வரும் 19ம் தேதி முதல், 2,000 ரூபாய் வரையிலான கட்டணத்தை, வசூல் மையத்தில் செலுத்தலாம். அதற்கு அதிகமான தொகையை, ரொக்கமாக செலுத்த முடியாது.ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.
- பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்தில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஆன்லைனில் கவர்ச்சியாக பேசும் நபர்களை கண்டு ஏமாந்து விடாமல் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆன்லைன் மோசடி தொடர்பாக கொடுக் கப்பட்ட புகாரின் அடிப்ப டையில் போலீசார் விசாரித்து 41 பேருக்கு ரூ.31 லட்சத்து 69 ஆயிரத்து 843 பணத்தை மீட்டு இன்று அவர்களிடம் ஒப்ப டைத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதை உரியவர்களிடம் வழங்கி னார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
குமரி மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி ஜிபே, போன் பே மூலமாக மோசடி என பல மோசடிகள் தொடர்பாக புகார்கள் வருகிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்தில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
சைபர் கிரைம் போலீசார் இந்த ஆண்டு 27 வழக்குகளில் 21 குற்ற வாளிகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஆன்லைனில் பணம் கொடுத்து ஏமாந்த 41 பேருக்கு ரூ.31 லட்சத்து 69 ஆயிரத்து 843 ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. இன்டர் நெட் மற்றும் ஆன் லைனில் கவர்ச்சியாக பேசும் நபர்களை கண்டு ஏமாந்து விடக்கூடாது. பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், நான் ஜி பே மூலமாக உறவினர் ஒருவருக்கு பணம் அனுப்பி னேன். ஆனால் ஜி பேயில் ஒரு எண்ணை தவறுதலாக மாற்றி அனுப்பியதால் பணம் வேறு நபருக்கு சென்று விட்டது. இது தொடர்பாக நான் பலமுறை அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் அந்த பணத்தை தருவதற்கு காலதாமதப்படுத்தினார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தேன். புகார் அளித்த ஒரு வாரத்தில் போலீசார் எனது பணத்தை மீட்டுத் தந்து விட்டனர் என்றார் .
மேலும் ஒருவர் கூறுகை யில், எனது மகளின் வேலைக்காக பணத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பி வைத்தோம். பணம் அனுப்பிய பிறகு அந்த நபர் எங்களுடனான தொடர்பை துண்டித்தார். வேலையும் தரவில்லை. பணத்தையும் தரவில்லை. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தோம்.
போலீசார் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தந்துள்ளனர். துரித நடவ டிக்கை எடுத்த அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
- 2 செல்போன்கள், ரூ.13ஆயிரம் பறிமுதல்
- கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் ஆன்லைன் மூலம் கேரளா மற்றும் பூட்டான் மாநில லாட்டரிகள் விற்பனை செய்து பணம் வசூலித்து வருவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் முகமது அசாருதீன் (வயது 23) என்பதும், தூத்துக்குடி பிரைன் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஆன்லைன் லாட்டரிகளை விற்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீ சார் அவரை கைது செய்தனர். அவர் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்காக பயன்படுத்திய 2 செல்போன்கள் மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரெயில்வே சேவைகள் மற்றும் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பல்வேறு தளங்களில் மொபைல் செயலிகள் உள்ளன.
புதுடெல்லி:
ரெயில் டிக்கெட்டுகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில், "ரெயில்வே சேவைகள் மற்றும் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிஜிட்டல் முன்னெடுப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு ஊடகங்கள் மூலம் ஊரக மற்றும் கிராமப்புறங்களில் வழக்கமான முகாம்கள் நடத்தப்படுகிறது.
ரெயில் பயணச்சீட்டுகளில் சுமார் 80 சதவீதம் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பல்வேறு தளங்களில் மொபைல் செயலிகள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்
- வாகனங்களை மெதுவாக ஓட்டிச் செல்ல அறிவுறுத்த வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தார்
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் நில புரோக்கர் சேவியர் பாபு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளி சுபின் என்பவரை கைது செய்தனர். அவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும், உணவு கொண்டு செல்லும் பையில் கத்தி வைத்திருந்த தும் தெரிய வந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது தொடர்பாக அவர்களை வரவழைத்து அறிவுரையும் வழங்கினார்.
உணவு விநியோகிக்கும் பணியை செய்பவர்கள், மக்களுடன் நேரடி தொடர்பு வைக்கிறார்கள். எனவே பொறுப்புடன் செயல்பட வேண்டும். வேலைக்கு சேர்க்கும் போது நன்னடத்தை சான்றி தழ்களை நிறுவனங்கள் பெற வேண்டும். வாகனங்களை மெதுவாக ஓட்டிச் செல்ல அறிவுறுத்த வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தார். இதேபோல் உணவு விநியோகிக்கும் ஊழியர்கள், தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை போலீசாரிடம் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
- தமிழகத்தில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை அதிகரித்து வருகிறது.
- வருகிற 23-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில், அந்தந்த லாரி உரிமையா ளர்கள் சங்கங்கள் சார்பில் எஸ்.பி மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.
நாமக்கல்:
மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது:-
தமிழகத்தில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை அதிகரித்து வருகிறது. சாலையோரம் மற்றும் பெட்ரோல் பங்குகளில் நிறுத்தப்பட்டு இருக்கு வாகனங்களுக்கும், சாலைகளின் முறையாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களுக்கும் வாகன பதிவு எண்ணை மட்டும் குறிப்பிட்டு போலீசார் மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகள் ஆன்லைனில் அபராதம் விதிக்கின்றனர்.
அதில் என்ன குற்றம் என தெரிவிக்காமல் பொதுவான குற்றம் என கூறி அபராதம் விதிக்கின்றனர். ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்க ளுக்கும் தமிழகத்தில் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. சாலை விதிகளை பின்பற்றவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை, தலைக்கவசம் அணிய
வில்லை உள்ளிட்ட முரணான காரணங்க ளுக்காக அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.
இவ்வாறு விதிக்கப்படும் அபராதங்கள் தொடர்பாக வாகன உரிமையாளர்கள் வாகனத்துக்கான காலாண்டு வரை தகுதி சான்றிதழ் உரிமை பெறும்போது வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
எனவே ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கும் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி அனைத்து
மாவட்ட தலைநகரங்களில், அந்தந்த லாரி உரிமையா ளர்கள் சங்கங்கள் சார்பில் எஸ்.பி மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர், டி.ஜி.பி ஆகியோருக்கும் ஈமெயில் மூலம் மனு அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஒரு வாடகை வீட்டில் ஆன்லைன் மூலமாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களையும் மீட்க பட்டனர்.
பட்டீஸ்வரம்:
கும்பகோணம் பகுதியில் ஆன்லைன் வழியாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்க்கு வந்த தகவலின் அடிப்படையில் தஞ்சை மாவட்ட பகுதிகளில் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை கண்டு பிடித்து கைது செய்ய உத்தர விட்டார்.
இதன் அடிப்படையில் கும்பகோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மேற்பா ர்வையில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில்,சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, பார்த்திபநாதன், செந்தில்குமார், ஜனார்த்தனன், பெண் காவலர் சுபேகா ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கும்பகோணம் பாணாதுறை தெற்கு வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஆன்லைன் மூலமாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் ஆன்லைன் மூலமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்த ஜான் சர்ச்சில் (எ)ராஜா (வயது 43) , பட்டிஸ்வரம் அடுத்துள்ள உடையாளூரை சேர்ந்த ரேவதி (எ) ரம்யா (35) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களையும் மீட்க பட்டனர்.
இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் தஞ்சை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
- போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
- தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை சாலையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயன்றார். சுதாரித்து கொண்ட போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தினர்.
அதில் அவர் தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த சரவணன் (வயது 35) என்பதும் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
- ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தமிழக மக்களின் எதிர்ப்பு-போராட்டத்துக்கு கவர்னர் பணிந்துள்ளார்.
- பசும்பொன் பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் செயல் திட்டத்தை கவர்னர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு நிறைவேற்ற துடிப்பவர் தான் கவர்னர் ஆர்.என்.ரவி. அவர் தமிழ்நாடு என் பதை மறுதலித்து தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டும் எனப் பேசி பெரும் சர்ச்சையை கிளப்பி னார். பின்பு வலுவான கண்டனம் எழுந்த பின்னர் குடியரசு தின அழைப்பி தழில் தமிழ்நாடு என்று அச்சிட்டார்.
அதே போல அமைச்சரவை தயாரித்து ஒப்புதல் அளித்த அறிக்கையில் சில வாக்கியங்களை தவிர்த்தும், திரித்தும் வாசித்தார். இதன்மூலம் அரசியலமைப்பு சட்டத்தையும், தார்மீக நெறிகளையும் மீறினார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பாதிக்கப்பட்ட 60பேர் தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளனர்.
இதற்கு முடிவு கட்டும் வகையில் கடந்த ஆண்டு ஆன்-லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்பதலுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவரை நேரில் சந்திந்து மாநில அரசின் தரப்பில் தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இருந்தபோதிலும் 6மாத காலம் அந்த மசோதாவை கிடப்பில் போட்ட கவர்னர் இப்படி ஒரு சட்டத்தை இயற்ற தமிழ்நாட்டு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்ப்பட்ட மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார்.
இதற்கிடையே குடிமை தேர்வு எழுதும் மாணவர்களி டையே உரையாற்றிய கவர்னர் அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போட்டாலே அதற்கு ஒப்புதல் இல்லை என்று தான் அர்த்தம் என்று பேசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் மசோதா வுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு கால நிர்ணயம் செய்யும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட அரசியல் அழுத்தத்தின் காரணமாக வேறு வழியின்றி கவர்னர் ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல சங்க மாநில கூட்ட மைப்பின் மேற்கு மண்டல கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.
- போலி யான ஆன்லைன் வியா பாரத்தை தடுக்க மத்திய மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல்:
தமிழ்நாடு கார் வியா பாரிகள் மற்றும் ஆலோசகர் நல சங்க மாநில கூட்ட மைப்பின் மேற்கு மண்டல கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழகத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாகனம் சம்பந்தமான சான்றுகளுக்கு விண்ணப் பித்தால் மிகுந்த தாமதமா கிறது. இதை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவ தும் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வரும் போலியான விளம்பரத்தை நம்பி உபயோகப்ப டுத்தப்பட்ட காரை வாங்கு வதற்காக பணம் செலுத்தி ஏமாறு கின்றனர் .எனவே போலி யான ஆன்லைன் வியா பாரத்தை தடுக்க மத்திய மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சங்கத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உபயோக படுத்தப்பட்ட கார் விற்பனை மேளா நடத்த வேண்டும். கார் மற்றும் வாகன வியாபார தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்க ணக்கான வாகன ஆலோ சகர்கள் ஆன்லைன் வர்த்த கத்தால் மிகவும் நலிவடைந்து வருகின்றனர். எனவே இவர்களுக்கு ஒரு நல வாரி யம் அமைக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.