search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழுப்புரம்"

    செஞ்சி அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் மட்டப்பாறை கூட்ரோட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வேகமாக வந்தது. அந்த டிராக்டரை போலீசார் வழிமறித்தனர். இதை பார்த்த டிரைவர் டிராக்டரை நிறுத்தாமல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது ஏற்றுவது போல் வேகமாக வந்தார்.

    அவருக்கு பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு வந்த மேலும் 2 டிராக்டர் டிரைவர்களும் அதேபோல் வந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பெரியதச்சூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 45), விஜயரங்கன் (25), வரிக்கல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (38) ஆகிய 3 பேர் என்றும், மணல் கடத்தி வந்ததை தடுத்ததால் அவர்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மணல் கடத்தி வந்த 3 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். #Tamilnews
    பிளஸ்-2 தேர்வில் மாணவி தோல்வி அடைந்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நல்லாத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் இளமதி (வயது 17). இவர் நல்லாத்தூர் அருகே உள்ள குதிரைசந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இன்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் மாணவி இளமதி 2 பாடங்களில் தோல்வி அடைந்தார்.

    இதனால் மாணவி மனவேதனை அடைந்தார். பின்னர் அவர் அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணவேணி, கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக மிதந்த இளமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×