search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 211596"

    கேரளாவில் வீட்டு முகவரியை மறந்த 80 வயது முதியவர் ஆதார் மூலம் தனது குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #aadhaar #kerala
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தூன்கன்பாரா பகுதியைச் சேர்ந்த பாஷி என்ற 80 வயது முதியவர் சில நாட்களுக்கு தனது வீட்டை விட்டு வெளியேறினார். அவர் அரசு பேருந்தில் ஏறி அருகில் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் டிக்கெட் எடுத்துள்ளார்.

    ஆனால் அப்பகுதியில் இறங்காமல் இருந்த அவரை விசாரித்த போது அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. மறதி நோயால் பாதிக்கப்பட்ட அந்த முதியவரிடம் பஸ் கண்டக்டர் கேட்ட போது, அவர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற பதிலை மட்டும் மீண்டும், மீண்டும் கூறினார்.

    இதனால் சந்தேகமடைந்த பஸ் கண்டக்டர் போலீசுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரிடம் விசாரித்தனர். அவர் சரிவர பதில் அளிக்காததால், அவரை அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு அழைத்துச் சென்றனர். கண்டிப்பாக இவர் ஆதார் அட்டை வாங்கியிருப்பார் என்ற நம்பிக்கையில் அவர் கைரேகையை சோதனை செய்தனர். இதன் மூலம் முதியவரின் வீட்டு முகவரி மற்றும் போன் நம்பர் கிடைத்தது.

    இதையடுத்து, பாஷியின் வீட்டிற்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர் தனது குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டார். ஆதார் மூலம் முதியவர் தனது குடும்பத்துடன் இணைக்கப்பட்ட சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #aadhaar #kerala
    மதுரை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், சிறுவாலையை அடுத்துள்ளது செல்லகவுண்டன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் சங்கிலிமுருகன். இவரது மனைவி முத்து காமாட்சி (வயது 27). இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று அந்த சிறுமியின் தாத்தா முருகேசன் (50) அங்கு வந்து சிறுமியிடம் பிஸ்கட் வாங்குவதற்கு பணம் கொடுத்துள்ளார். அந்த சிறுமியும் அருகே உள்ள கடைக்கு சென்று பிஸ்கட் வாங்கி வந்துள்ளது.

    முருகேசன் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த வீட்டில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.

    இதனால் முத்துகாமாட்சி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது சிறுமியை, முருகேசன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    இது குறித்து சிறுமியின் தாயார் முத்துகாமாட்சி சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முருகேசன் மீது (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
    ×