search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதீபா"

    நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட பிரதீபாவின் குடும்பத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். #NEET2018 #PratheebaSuicide #RahulGandhi

    புதுடெல்லி:

    மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி கடந்த 3-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார். 

    இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட பிரதீபாவின் குடும்பத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.  #NEET2018 #PratheebaSuicide #RahulGandhi
    மாணவி பிரதீபாவின் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். #NEET2018 #Pratheeba TNStudentSuicide #MKStalin
    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் பெருவளூரை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் சொந்த கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 6.45 மணிக்கு பெருவளூர் கிராமத்துக்கு வந்தார். அவர், பிரதீபாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் பிரதீபாவின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரண தொகையையும் அவர் வழங்கினார்.

    பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தோம். நீட் தேர்வினால் அன்று அனிதாவையும், இன்று பிரதீபாவையும் இழந்து இருக்கிறோம். இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படுவதில்லை. எனவே இவரது சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணமாகும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இந்த நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தமிழகத்தில் இதுபோன்ற நரபலி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.



    இவ்வாறு அவர் கூறினார்.

    ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன் மற்றும் பலரும் பிரதீபா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். #NEET2018 #Pratheeba TNStudentSuicide #MKStalin
    நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவுக்கு, கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண் பெற்றதால் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. #NEET2018 #Pratheeba TNStudentSuicide
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெருவளூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி சண்முகத்தின் 2-வது மகள் பிரதீபா (வயது 19). கடந்த ஆண்டு இவர் பிளஸ்-2 தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்றார். இதனால் தனது டாக்டர் கனவு நிறைவேறும் என்றிருந்த பிரதீபாவுக்கு பேரிடியாக நீட் தேர்வு அமைந்தது.

    கடந்த ஆண்டு பிரதீபா நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் அவருக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் தான் இடம் கிடைத்தது. அதற்கு அதிக பணம் செலவாகும் என்பதால், அடுத்த ஆண்டில் கூடுதல் மதிப்பெண் பெற்று அரசு கல்லூரியில் சேர்ந்துவிடலாம் என்று அதற்கு தயாராகி வந்தார்.

    ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வில் பிரதீபா 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். இதில் பெரும் அதிர்ச்சிக்குள்ளான அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள் நேற்று காலை அவரது வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது அந்த கிராமத்துக்குள் வந்த பஸ்சை சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த வளத்தி போலீசார் விரைந்துவந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தடுத்துநிறுத்தினர்.

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரதீபாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்காமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.

    அவர்கள், ‘நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். பிரதீபா குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். கலெக்டர் கந்தசாமி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசுக்கு பரிந்துரை செய்வதாக கூறினார்.

    ஆனாலும் அரசியல் கட்சியினர் கலெக்டர் பரிந்துரையை ஏற்று அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதனால் போலீசார் செஞ்சி தி.மு.க. எம்.எல்.ஏ. மஸ்தான் உள்பட சுமார் 100 பேரை கைது செய்து, சிறிது நேரம் கழித்து விடுவித்தனர்.

    பின்னர் பிரதீபாவின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு மஸ்தான் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பிரதீபா உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    பிரதீபாவின் தந்தை சண்முகம் கூறும்போது, “பிரதீபா டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். நானும், என் மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்துவிட்டதால் நான் டாக்டராக முடியாது, அதனால் விஷம் குடித்துவிட்டேன் என்று பிரதீபா கூறினார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். எங்கள் மகளை ‘நீட்’ தேர்வு கொன்றுவிட்டது. என் மகள் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். என் மகளை போன்று ஏராளமான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ‘நீட்’ தேர்வை ரத்துசெய்ய வேண்டும்” என்றார்.

    பிரதீபா எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், “நான் 2018 மே 6-ந் தேதி தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவி. தமிழ் மொழியில் வினாக்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு கேட்கப்பட்டிருந்ததால், அந்த வினாக்களுக்கு அதற்குரிய மதிப்பெண்கள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மாணவியின் கடிதத்தில் தமிழ் மொழி வினாக்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #NEET2018 #Pratheeba TNStudentSuicide 
    நீட் தேர்வால் உயிரிழந்த எனது தங்கைகள் அனிதாவும் பிரதீபாவும் வஞ்சகமான பாடத்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்டனர் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். #GVPrakash #Pratheeba
    இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கு என ஒரே தகுதித்தேர்வாக அறிவிக்கப்பட்டது நீட் தேர்வு. இந்த தேர்வு முறை அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளையும் வழக்குகளையும் சந்தித்து வருகிறது.

    மருத்துவ படிப்பை விரும்பிய மாணவர்களின் இலக்கிற்கு மிகப்பெரிய தடையாக அமைந்த இந்த நீட் தேர்வை தடை செய்யுமாறு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி வருடந்தோறும் தவறாமல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டுக்கான நீட் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பிரதீபா என்ற மாணவி தோல்வியடைந்துள்ளதால், விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பலர் ஆழ்ந்த இரங்கலையும், நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்.



    இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ‘தகுதி பெறுவதற்கான முறையான பயிற்சி அளித்தபின் போட்டிக்கு அழைத்திருக்க வேண்டும். எனது தங்கைகள் அனிதாவும் பிரதீபாவும் வஞ்சகமான பாடத்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்டனர். பல கனவுகளோடு படித்த எம் மாணவர்களின் உயிர்வலி உணர மறுப்பதும் குற்றமே...” என்றார்.
    நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். #NEET2018 #Pratheeba TNStudentSuicide

    விழுப்புரம்:

    மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகள் என்ற தளத்தில் சி.பி.எஸ்.இ. வெளியிடப்பட்டது. 

    தமிழகத்தில் இருந்து 114602 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 39.55 சதவீத தேர்ச்சி ஆகும். தமிழகத்தில் கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அளவில் இவர் 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.  

    இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெருவள்ளூரை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி எலி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார். #NEET2018 #Pratheeba TNStudentSuicide
    ×