என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 212735
நீங்கள் தேடியது "ஆதரவு"
பிரபலங்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு கோரும் தனது பயணத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, நாளை பாடகி லதா மங்கேஷ்கர், நடிகை மாதுரி தீக்ஷித், தொழிலதிபர் ரத்தன் டாட்டா ஆகியோரை சந்திக்க உள்ளார். #AmitShah
மும்பை:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை அக்கட்சி அறிமுகம் செய்தது.
இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், தங்களது துறைகளில் சிறந்து விளங்கும் சுமார் 1 லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும். பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மட்டும் 50 பேரை தனியாக சந்தித்து பா.ஜ.க ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறி அவர்களின் ஆதரவை கோர உள்ளார்.
அதனடிப்படையில், பதஞ்சலி நிறுவனதின் தலைவரும் யோகா துறையில் சிறப்பாக செயல்பட்டு வருபவருமான யோகா குரு பாபா ராம்தேவை அமித்ஷா நேற்று புதுடெல்லியில் சந்தித்தார். அவரிடம் பா.ஜ.க அரசின் சாதனைகளை விளக்கி கூறி அவரின் ஆதரவையும் அமித்ஷா கோரியுள்ளார்.
இந்நிலையில், நாளை மும்பை வர உள்ள அமித்ஷா, பாடகி லதா மங்கேஷ்கர், நடிகை மாதுரி தீக்ஷித், தொழிலதிபர் ரத்தன் டாட்டா ஆகியோரை சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.
முன்னாள் ராணுவ தளபதிகளான தல்பீர் சிங் சுஹாக் மற்றும் சுபாஷ் காஷ்யாப், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் ஆகியோரை அமித்ஷா ஏற்கெனவே சந்தித்து அவர்களின் ஆதரவை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலம் பாலஸ்-கதேகாவுன் சட்டசபை தொகுதிக்கு நடக்க உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு சிவசேனா கட்சி ஆதரவு அளித்துள்ளது. #Congress #ShivSena
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் பாலஸ்-கதேகாவுன் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த பதாங்ராவ் கதாம் கடந்த மாதம் காலமானார். இதனை அடுத்து, வரும் 28-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பதாங்ராவின் மகன் விஷ்வஜீத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவும் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது. பாஜக - சிவசேனா கூட்டனி ஆட்சி அம்மாநிலத்தில் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளது பாஜகவை கொந்தளிக்க வைத்துள்ளது.
மறைந்த பதாங்ராவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது மகனுக்கு எங்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது என சிவசேனா கட்சி விளக்கம் அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பாலஸ்-கதேகாவுன் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த பதாங்ராவ் கதாம் கடந்த மாதம் காலமானார். இதனை அடுத்து, வரும் 28-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பதாங்ராவின் மகன் விஷ்வஜீத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவும் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது. பாஜக - சிவசேனா கூட்டனி ஆட்சி அம்மாநிலத்தில் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளது பாஜகவை கொந்தளிக்க வைத்துள்ளது.
மறைந்த பதாங்ராவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது மகனுக்கு எங்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது என சிவசேனா கட்சி விளக்கம் அளித்துள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X