search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பித்தல்"

    வள்ளுவர் கோட்டத்தை சிறப்பாக புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். #TNAssembly #TNMinister #KadamburRaju
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் நீண்ட நாட்களாக புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது.

    சமூக விரோத செயல்கள் நடைபெறும் வாய்ப்புக்கள் உள்ளது. வர்தா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வள்ளுவர் கோட்டத்தை சிறப்பாக புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பதில் வருமாறு:-

    ‘‘வள்ளுவர் கோட்டத்தை அரசு முறையாக பராமரித்து வருகிறது. அங்கு எந்தவித சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்பு இல்லை. அங்கு தற்போது தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். வர்தா புயலின் போது பாதிக்கப்பட்ட சுற்றுச்சுவர் ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


    சிற்பங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள திருக்குறள் எழுத்துக்களை புதுப்பிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுபோன்று சிற்பங்களுக்கு வர்ணம் பூசுவது போன்ற தனியாரின் நடவடிக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    தற்போது இங்கு கண்காட்சிகள் நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்கி வருகிறது. சமீபத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் வள்ளுவர் கோட்டத்தை சிறப்பாக புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த துறையின் மானிய கோரிக்கை வரும்போது வள்ளுவர் கோட்டம் புதுப்பிப்பது தொடர்பான முழு விவரங்கள் அறிவிக்கப்படும்’’ என்றார். #TNAssembly #TNMinister #KadamburRaju
    பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க மாகாண அரசு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. #Pakistan #KrishnaTemple
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் ரவல்பிந்தி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இரு நகரங்களுக்கும் சேர்த்து ஒரே இந்து கோவிலாக கிருஷ்ணர் கோவில் இயங்கி வருகிறது. இந்த கோவில் 1897-ம் ஆண்டு கட்டப்பட்ட சிறிய கோவில் ஆகும். தற்போது இந்த கோவிலை புதுப்பிக்க அரசு முன்வந்துள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டின் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த அறக்கட்டளை சொத்து வாரியத்தின் முதன்மை நிர்வாகி முகமது ஆசிப் கூறுகையில், ‘கிருஷ்ணா கோவிலை புதுப்பிக்க வேண்டி, மாகாண சபை உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று, அரசு ரூ.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கோவில் புணரமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், புதுப்பிக்கும் பணி நிறைவடைந்தவுடன், அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வர இயலும் எனவும் குறிப்பிட்டுள்ளார். #Pakistan #KrishnaTemple 
    ×