search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 213161"

    • கேரளாவில் இருந்து மண்டிகளுக்கு வியாபாரிகளின் வருகை அதிகரித்துள்ளது.
    • விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

     மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பூண்டு, பெரியவெங்காயம் மண்டிகள் ஊட்டி சாலையிலும், கேரட், பீன்ஸ், நூல்கோல், டர்னிப், முள்ளங்கி, மேராக்காய், பீட்ரூட், பஜ்ஜி மிளகாய் மண்டிகள் அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் பகுதியிலும் செயல்பட்டு வருகின்றன.

    இதில் உருளைக்கிழங்கு மண்டி பகுதிகளில் இருந்து அதிகளவில் கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜடையம்பாளையம் புதுமார்க்கெட் பகுதியில் இருந்தும் திருச்சி, சென்னை, மதுரை மற்றும் கேரளா மாநிலத்திற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தநிலையில் கேரளாவில் நாளை மறுநாள் (8-ந் தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையில் விருந்தினர்களுக்கு காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட உணவு பதார்த்தங்களே அதிகம் பரிமாறப்படும்.

    இதனால் கேரளாவில் இருந்து இந்த மண்டிகளுக்கு வியாபாரிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. இதனால் 45 கிலோ எடை கொண்ட கர்நாடகா மாநிலம் திம்பம் பகுதியை வரும் உருளைக்கிழங்கு ஒரு துண்டு ரூ.1,300 முதல் ரூ.1,700 வரையும், ஹாசன் பகுதியில் இருந்து வரும் கிழங்கு ரூ.1,300 முதல் ரூ.1,500 வரையும், ஆக்ரா கிழங்கு ரூ.1,100 முதல் ரூ.1,300, குஜராத் கிழங்கு ரூ.1,050 முதல் ரூ.1,300, ஊட்டி கிழங்கு ரூ.1,800 முதல் ரூ.2,200 வரை விற்பனை செய்யப்படுகிறது.இதே போல் ஜடையம்பாளையம் புதுமார்க்கெட் பகுதியில் மேரக்காய் 1 கிலோ ரூ.12 முதல் ரூ.13 வரையும் பீட்ரூட் ரூ.25 முதுல் ரூ.45, கேரட் ரூ.65 முதல் ரூ.110, பீன்ஸ் ரூ.60 முதல் ரூ.70, கோஸ் ரூ.8 முதல் ரூ.15, நூல்கோல் ரூ.68 முதல் ரூ.80 வரையும், டர்னிப் ரூ.50 முதல் ரூ.80, முள்ளங்கி ரூ.10முதல் ரூ.20 வரையும், பஜ்ஜி மிளகாய் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வியாபாரிகள் அதிகளவில் வந்து காய்கறிகளை கொள்முதல் செய்து செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • கோவில் திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்பிரமணியர் சுவாமி கோவில் பவானி ஆற்றங்கரையில் உள்ளது.

    இக்கோவிலில் 1984-ம் ஆண்டு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சுப்ரமணியர், சிவன், அம்பாள் விக்கிரஹங்கள் புதிதாக பிரதிஷ்டம் செய்து திருவருள் கூட்டி உள்ளது.

    தற்போது கோவில் திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    தொடர்ந்து அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை புண்யாகவாசனம், தனபூஜை கணபதி மற்றும் நவகிரக ஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் தினமும் காலை, மாலை நேரங்களில் நடைபெற்றது.

    தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடந்தது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடந்தது.

    காலை 6.40 மணிக்கு கலசங்கள் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. 6.55 மணிக்கு மூலஸ்தான விமானம், பரிவார விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு மகாகும்பாபிஷகமும், 7.05 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமி முருகன், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    கோவில் கும்பாபிஷே கத்தை கோவை சீரவை ஆதினம் குமரகுருபர சுமாமிகள் செய்து வைத்தார்.கும்பாபிஷேக விழாவில் மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 7 மணிக்கு சுப்பிரமணிய முருகன் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பவானி ஆற்றில் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என விசாரணை நடத்திவருகிறார்கள்.

    கோவை:

    மேட்டுப்பாளையம் ஆத்துப்பாலம் அருகே உள்ள நெல்லித்துறை பவானி ஆற்றில் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என விசாரணை நடத்திவருகிறார்கள். 

    • வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்படுவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • மண்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது.

    இதில் 6 வார்டு பகுதியில் உருளைக்கிழங்கு, பூண்டு, பெரிய வெங்காயம், சாக்கு உள்ளிட்ட மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இதன்மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து உருளைக்கி ழங்கு, பூண்டு, பெரிய வெங்காயம் சாக்கு உ ள்ளிட்டவை ஏற்றுமதி, இறக்குமதி மேற்கொள்ள ப்படுகிறது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டுப்பாளையம் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பகுதிகளில் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு வருகிறது.

    இதில் மேட்டு ப்பாளையம் உருளைக்கி ழங்கு மண்டி பகுதிகளில் பாக்குகார சாலை செல்லும் வழியில் உள்ள கிழங்கு மண்டி சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இச்சாலை வழியாக அனைத்து மகளிர் காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மகாஜன பள்ளி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மக்கள் சென்று வரும் வழியாக உள்ளது. மேலும் நெல்லித்துறை சாலை வழியாக தினசரி நிலகீரி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய வாகனங்களில் எடுத்து செல்கின்றனர். இதுபோன்ற நேரங்களில் இச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்களும், வியாபா ரிகளும் பெரும் அலைச்சலுக்கு உள்ளாகி வருகின்றன. எனவே இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியின் உபதலைவர் எம்.என்.கோபால், செயலாளர் பி.ரங்கசாமி ஆகியோர் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டி பகுதியில் தினசரி கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இத ன்மூலம் ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உள்ளது.

    இப்பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் உருளைக்கிழங்கு மண்டி பகுதிகளில் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது.
    • மழைகாலங்களில் மின் வயர் அருந்து விழுந்தால் எவ்வாறு அதனை கையாள்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேம்பட்டியில் பிரசித்தி பெற்ற வனபத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ளூர் மக்கள் மற்றும் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அருகில் உள்ள பவானி ஆற்றில் குளிக்க செல்கின்றனர். அவர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது.

    சில சமயங்களில் குளிக்க வரும் பக்தர்கள் தடுப்பு கம்பிகளை தாண்டி ஆழமான பகுதிக்கு சென்றுவிடுகின்றனர். அப்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பக்தர்கள் அடித்து செல்லப்படுகின்றனர்.

    இதனால் உயிரிழப்பும் ஏற்படும் சூழ்நிலையும் இருந்து வருகிறது. இதையடுத்து அதனை தடுக்கும் வகையில் வாருவாய் துறை சார்பில் விழிப்புணர் முகாம் நடத்தப்பட்டது.

    இதில் தீயனைப்பு துறை, மின்சார துறை, காவர் துறை, தேசிய பேரிடர் மேலான்மை மற்றும் மருத்துவத்துறை ஆகிய துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பவானி ஆற்றில் யாராவது அடித்து செல்லப்பட்டால் அவர்களை எவ்வாறு மீட்பது.

    மழைகாலங்களில் மின் வயர் அருந்து விழுந்தால் எவ்வாறு அதனை கையாள்வது, இதில் யாருக்காவது ஆபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

    இதற்கு கோவை மாவட்ட கோட்டாட்சியர் பூமா தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் பால முருகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்காக ஏற்படுகளை தாசில்தார் மாலதி செய்து இருந்தார்.

    • அன்னூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்
    • 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கோவை

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 17 சிறுமி. இவர் அன்னூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சிறுமி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். அப்போது தர்மபுரி மாவட்டம் டி.ஆண்டியூரை சேர்ந்த பனியன் தொழிலாளி விக்ரம் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளை கண்டித்தனர். ஆனால் சிறுமி தொடர்ந்து வாலிபருடன் பழகி வந்தார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறிவிட்டனர்.

    பின்னர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிறுமி அன்னூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 25-ந் தேதி சிறுமி தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் சேலத்துக்கு சென்றார்.

    அவர் இது குறித்து தனது காதலன் விக்ரமுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக சேலத்துக்கு விரைந்து சென்று சிறுமியை தர்மபுரிக்கு அழைத்து சென்று அங்குள்ள ஒரு பெருமாள் கோவிலில் வைத்து சிறுமியை திருமணம் செய்தார். பின்னர் விக்ரம் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    மாயமான தங்களது மகை ள கண்டுபிடித்து தரும்படி சிறுமியின் ெபற்ேறார் ேமட்டுப்பாைளயம் ேபாலீசில் புகார் ெசய்தனர்.

    புகாரின் ேபரில் ேபாலீசார் வழக்குப்பதிவு ெசய்து சிறுமியின் ெசல்ேபாைன ைவத்து அவர் இருக்கும் இடத்ைத கண்டுபிடித்தனர்.

    பின்னர் ேபாலீசார் தர்மபுரிக்கு ெசன்று விக்ரமுடன் தங்கி இருந்த சிறுமிைய மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமிைய விக்ரம் பாலியல் பலாத்காரம் ெசய்தது ெதரிய வந்தது.

    இதைனயடுத்து ேபாலீசார் சிறுமிைய திருமணம் ெசய்து பாலியல் பலாத்காரம் ெசய்த விக்ரம் மீது ேபாக்ேசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ெசய்தனர். பின்னர் அவைர ேகார்ட்டில் ஆஜர்படுத்தி ெ ஜயிலில் அைடத்தனர்.

    • இந்து முன்னணி சார்பில் 34-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • 2-ந் தேதி விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை––யொட்டி 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்‌ பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக இந்து முன்னணி யினர் தெரிவித்துள்ளனர். கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம்

    இந்து முன்னணி சார்பில் 34-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சிவப்புகழ் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் தங்கவேல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட பொறுப்பாளர்கள் ரவி பாரதி, அன்னூர் கார்த்திக், மந்தைவேல், நகர பொறுப்பாளர்கள் ராஜ்மோகன், புஷ்பராஜ், காளியப்பன், சாஸ்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வருகிற 31-ந் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என்றும், அதைத்தொடர்ந்து 2-ம் நாள் கோ பூஜை, விளக்கு பூஜை, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது, 2-ந் தேதி விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும்.

    மேட்டுப்பாளையத்தில் 85 விநாயகர் சிலைகளும், காரமடையில் 202 

    • இந்த கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
    • இப்பகுதியில் உள்ள ஓடையை சுற்றி முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் உள்ளது பட்டக்காரனூர் கிராமம். இந்த கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இக்கிராமத்தினை சுற்றி விளைநிலங்கள் உள்ளன. மேலும் இப்பகுதியில் உள்ள ஓடையை சுற்றி முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த புதர்களில் இருந்து அவ்வப்போது அதிகளவில் பாம்புகள் குடியிருப்புகளில் நுழைந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகின்றன.

    இதனிடையே பட்டகாரனூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டின் முன்பு நேற்று மாலை 2 சாரை பாம்புகள் பின்னி பினைந்து நடனமாடியது. இதனையறிந்து அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.

    வீட்டின் வாசல் முன்பு 2 பாம்புகளும் நடனமாடி கொண்டு இருப்பதை கண்டு அப்பகுதியினர் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சென்று வேடிக்கை பார்த்து சப்தம் எழுப்பியும் கூட அதனை பொருட்டாக நினைக்காமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த வீட்டின் சுவர் பகுதியிலேயே நடனமாடியாது.

    இதனை அந்த பகுதி மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்து சென்றனர். கடந்தாண்டும் இதே பகுதியில் சாரை பாம்புகள் நடனமாடியது. இந்த நிலையில் தற்போது பாம்புகள் நடமாடியது அப்பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் பொது கிணறு ஒன்று உள்ளது.
    • கிணறு சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளதால் தற்போது எந்தவித பாதுகாப்பும் இன்றி தடுப்புகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் சிக்காரம் பாளையம் ஊராட்சி உள்ளது.

    இந்த ஊராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் தெக்கலூர் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான பொது கிணறு ஒன்று உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இந்த கிணறு இருந்து வந்துள்ளது.

    கிராமத்தின் நடுவில் அமைந்துள்ள இந்த கிணற்றில் இருந்து பல ஆண்டுகளாக மக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர். ஆரம்ப காலத்தில் கயிற்றால் வாளி மூலம் தண்ணீர் எடுத்து வந்தனர். பிற்காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மின்மோட்டார்கள் வைத்து தண்ணீர் எடுத்தனர்.

    இதன்மூலம் அப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெய்த பருவமழை காலங்களில் கனமழை காரணமாக இந்த கிணற்றின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மூலம் கிராமத்தின் நடுவில் உள்ள கிணறு சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளதால் தற்போது எந்தவித பாதுகாப்பும் இன்றி தடுப்புகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் வீடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் வருவோர் தவறி கிணற்றினுள் விழும் நிலை உள்ளதாகவும் அதேபோல் குழந்தைகள், சிறுவர்கள் யாரேனும் இந்த கிணற்றில் விழும் அபாயம் நிலையில் உள்ளது.

    எனவே இதன்மூலம் உயிரிழப்புகள் ஏற்படும் முன் கிணற்றின் பக்கவாட்டு சுவரை அமைத்து தர வேண்டும் என மாவட்ட, காரமடை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை பலமுறை வலியுறுத்தி உள்ளனர். இதன்படி ஒன்றிய கவுன்சிலர் சாமிநாதன், வார்டு உறுப்பினர் அமாவாசை ஆகியோர் இது குறித்து பலமுறை வலியுறுத்தி உள்ளனர்.

    • விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
    • அகத்தியர் பீடம் அருகே 1½ வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடந்தது.

    மேட்டுப்பாளையம் 

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துரை, அகத்தியர் பீடம், ஊட்டி-குன்னூர் சாலை, கல்லார் காட்டேஜ் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

    இந்த வனப்பகுதிகளில் உள்ள காட்டு யானை, புள்ளிமான், சிறுத்தை, கடமான், காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடியும், தண்ணீருக்காகவும் குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கம்.அப்படி வரும் போது விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது.


    இந்த நிலையில் அகத்தியர் பீடம் அருகே 1½ வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதனை அந்த பகுதியில் மாடுகள் மீது ஆசிட் வீசப்பட்டதை விசாரிப்பதற்காக வந்த தாசில்தார் மாலதி பார்த்தார். உடனடியாக அவர் சம்பவம் குறித்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து, புள்ளிமானை கைப்பற்றினர். இந்த பகுதியில் 20-க்கும் ேமற்பட்ட நாய்கள் சுற்றி திரிகிறது. இதனால் நாய்கள் கடித்ததில் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

    இருப்பினும் நாய்கள் கடித்ததால் தான் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 1 மாதத்தில் மட்டும் இந்த பகுதியில் 3 மான்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தொழிலாளிக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர்.
    • பெற்ற மகள் என்றும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்தார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் 41 வயது தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர்.

    இவரது 2-வது மகள் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது முதல் மகள் மற்றும் கடைசி மகள் அவர்களது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். 2 மகள் மட்டும் பெற்றோருடன் இருந்து வந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி கோபித்து கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்றார்.

    சம்பவத்தன்று தொழிலாளியின் 2-வது மகள் 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது வீட்டுக்கு வந்த சிறுமியின் தந்தை திடீரென சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் மகளிடம் , நடந்ததை யாரிடமும் செல்ல கூடாது என மிரட்டி அங்கிருந்து சென்றார்.

    இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் சென்றார்.அங்கு போலீசாரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதார். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுமியிடம் இருந்து புகார் பெற்றனர்.

    இதையடுத்து போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிறுமியின் வீட்டுக்கு சென்று அங்கு இருந்த ெதாழிலாளியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    • பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

     மேட்டுப்பாளையம், :

    மேட்டுப்பாளையம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளையில் 1சி 25 நகர பஸ் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூருக்கு பெரியபுத்தூர் வழியாக இயங்கி வருகிறது. அந்த பஸ்சில் டிரைவராக மூடுதுறை மீனம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அருணாச்சலக்குமார் (41) என்பவரும், கண்டக்டராக கணேசன் என்பவரும் பணியாற்றி வந்தனர்.

    நேற்று இரவு 7.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து பஸ் அன்னூருக்கு புறப்பட்டது. பஸ் வெளியே வரும் வழியில் சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த போதை நபர் ஒருவர் டிரைவரை கீழே இறங்கி வாடா என்று தகாத வார்த்தையால் திட்டி ரகளை ஈடுபட்டார் . டிரைவர் அருணாச்சலகுமார் கீழே இறங்கி ஏன் பஸ்சை மறித்து நிற்கிறாய், ஓரமாக செல், பஸ் செல்ல வேண்டும் என கூறினார். உடனே போதை நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டிரைவர் அருணாச்சலகுமாரின் கை மற்றும் வயிற்றுப் பகுதி கத்தியால் குத்தினார். . இதை சற்றும் எதிர்பாராத அருணாச்சல குமார் படுகாயம் அடைந்து அலறினார்.

    அவரை சக ஊழியர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அரசு பஸ் டிரைவரை கத்தியால் குத்திய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் மணிகண்டன் (வயது 40) என்பது தெரியவந்தது. மேட்டுப்பாளையம் பஸ் நிலைய பகுதியில் டாஸ்மாக் கடைக்கு வருபவர்களிடம் காசு வாங்கி மதுகுடிப்பதை வாடிக்கையாக கொண்டு அந்த பகுதியிலேயே திரிந்துள்ளார். நேற்று போதை அதிகமாகி பஸ்நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டு பஸ் டிரைவரை கத்தியால் குத்தி விட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலர்கள் இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தேவையான காவலர்களை நியமித்து பஸ் டிரைவர், கண்டக்டர், பயணிகள் மற்றும் பெண்கள் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

    ×