search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 213755"

    தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்தது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்கிறது. கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது.

    வட, தென் தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழ்நாடு, இலங்கையை ஒட்டியுள்ள கடற்கரைக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அதேபோல், தென் தமிழகத்திலும் இடியுடன் கூடிய லேசான மழை ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் தெளிவாக காணப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘குளச்சல், தக்கலையில் தலா 7 செ.மீ., காஞ்சீபுரம், ஓமலூர், ஆலங்காயம், போளூரில் தலா 4 செ.மீ., சேலம், குழித்துறை, செங்கம், சங்கராபுரத்தில் தலா 3 செ.மீ., சாத்தனூர் அணை, குடியாத்தம், மயிலம், ஆர்.கே.பேட்டை, மரந்தஹள்ளி, ஆத்தூர், இரணியல், வந்தவாசி, நாகர்கோவில், ஏற்காட்டில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

    தென் கிழக்கு அரபிக்கடலில் கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரையையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

    இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதியில் மீனவர்கள் 30-ந் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். அடுத்த 48 மணிநேரத்தில் கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளது. அதன் பின்னர் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும்.

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று(திங்கட்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    பெரியாறு 7 செ.மீ., வத்திராயிருப்பு, பவானி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், பேச்சிப்பாறை, அரியலூர் தலா 2 செ.மீ., ராதாபுரம், ராஜபாளையம், புதுக்கோட்டை, செங்கோட்டை, நத்தம், பேரையூர், சூளகிரி, போடிநாயக்கனூர், பூதப்பாண்டி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த ஓரிரு தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, தமிழகத்தில் பெய்த மழை அளவு நிலவரம் வருமாறு:-

    சிவகங்கையில் 9 சென்டி மீட்டர் மழையும், குளச்சலில் 7 செ.மீ. மழையும், வெண்பாவூர், மானாமதுரை, மாயனூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது. சாத்தான்குளம், அரியலூரில் தலா 4 செ.மீ. மழையும், சாத்தூரில் 3 செ.மீ. மழையும், திருக்காட்டுபள்ளி, பேச்சிப்பாறை, மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

    மேலும், சிவகாசி, இரணியல், முசிறி, துறையூர், முதுகுளத்தூர், காரைக்குடி, மதுரை விமானநிலையம், அறந்தாங்கி, சின்னக்கல்லார், திருமங்கலம் போன்ற பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இந்தநிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    லட்சத்தீவை ஒட்டிய பகுதிகள், தெற்கு இலங்கையை ஒட்டிய பகுதிகளில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தெற்கு அரபிக் கடலில் 21-ந் தேதி(நாளை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது.

    தென்மேற்கு பருவமழை அந்தமான் கடற்பகுதிகளில் வருகிற 23-ந் தேதி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. திருவள்ளூர், வேலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருச்சி, கரூர், பெரம்பூர் போன்ற மாவட்டங்களில் 100 முதல் 105 டிகிரி வரை அதிகபட்ச வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி வரை பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-

    கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவானதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இன்று(புதன்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.

    காஞ்சீபுரம், திருவள்ளூர், சேலம், மதுரை, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் 100.4 முதல் 104 டிகிரி வரை இருக்கும்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    திருச்செங்கோடு 7 செ.மீ., தொண்டி, மணமேல்குடி தலா 5 செ.மீ., தேவகோட்டை 4 செ.மீ., கூடலூர் பஜார், பவானி, பட்டுக்கோட்டை, ஓட்டப்பிடாரம் தலா 3 செ.மீ., குமாரபாளையம், காரைக்குடி, தேனி மாவட்டம் கூடலூர், சூளகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், உத்தமபாளையம், பெண்ணாகரம், தாளவாடி, பவானிசாகர், போடிநாயக்கனூர் தலா 2 செ.மீ., அன்னூர், பெரியகுளம், சேலம், வேடசந்தூர், ராதாபுரம், பெருந்துறை, கொடுமுடி, ஒகேனக்கல், ராஜபாளையம், பாப்பிரெட்டிப்பட்டி, ஏற்காடு, ஈரோடு, பாண்டவராயர்தலை தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 
    கன்னியாகுமரி அருகே மேல் அடுக்கு சுழற்சிகாரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.
    சென்னை:

    கன்னியாகுமரி அருகே மேல் அடுக்கு சுழற்சிகாரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கோடை மழை பெய்துவருகிறது.

    இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

    கன்னியாகுமரி அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகி இருக்கிறது. மேலும் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றும், மேற்கில் இருந்து வீசும் காற்றும் தமிழகத்தின் வழியாக செல்கிறது. இந்த இரு காரணங்களால் தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்யும்.

    தென் மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். பெய்வது கோடை மழையாகும்.

    இவ்வாறு வானிலை அதிகாரி தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    சிவகங்கை 8 செ.மீ., பேச்சிப்பாறை 5 செ.மீ., திருப்பூர், கீரனூர், பெரியாறு தலா 4 செ.மீ., தாராபுரம், திண்டுக்கல், தாளவாடி, போடிநாயக்கனூர் தலா 3 செ.மீ., அம்பாசமுத்திரம், பீளமேடு, வால்பாறை, கழுகுமலை, வத்திராயிருப்பு, மாரண்டஹள்ளி, கூடலூர், கொடைக்கானல், நடுவட்டம் தலா 2 செ.மீ., தளி, குழித்துறை, சேரன்மகாதேவி, குளச்சல், கூடலூர் பஜார், சிவகிரி, பூதப்பாண்டி, தேன்கனிக்கோட்டை, கமுதி, தேவலா, நாமக்கல், பரமத்திவேலூர், அன்னூர், சின்னக்கள்ளார், பேரையூர், சேந்தமங்கலம், விளாத்திக்குளம் தலா 1 செ.மீ.மழை பெய்துள்ளது. 
    கேரளா அருகே மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் கோடை காலம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துவருகிறது. வெப்பத்தின் தாக்கம் குறைந்து உள்ளது.

    வானிலை மாற்றம் குறித்து சென்னையில் உள்ள வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

    கேரளாவையொட்டிய பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உள்ளது. மேலும் கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் தமிழகத்தின் வழியாக செல்கிறது. இந்த இரு காரணங்களால் மழை பெய்துவருகிறது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது.

    அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    கடந்த மார்ச் மாதம் முதல் இன்று (நேற்று) வரை தமிழகத்தில் 85 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆனால் 77 மி.மீ. மழைதான் இயல்பாக பெய்யவேண்டும். அதாவது 8 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது.

    இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    கோவிலங்குளம் 12 செ.மீ., மணியாச்சி 11 செ.மீ., சிட்டம்பட்டி 10 செ.மீ., மேலூர் 9 செ.மீ., மேட்டுப்பட்டி 7 செ.மீ., வால்பாறை, திருப்புவனம், துவாக்குடி, தாளவாடி, திருமங்கலம் தலா 5 செ.மீ., பாலக்கோடு, கேத்தி தலா 4 செ.மீ., பெருந்துறை, காங்கேயம், சாத்தூர், திருப்பத்தூர், பெரியநாயக்கன்பாளையம் தலா 3 செ.மீ. மற்றும் 3 செ.மீ.க்கு குறைவாக 45 இடங்களில் மழை பெய்துள்ளது. 
    ×