என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தா.பேட்டை"
தா.பேட்டை:
தா.பேட்டை பேருந்து நிலைய வளாகத்தில் அகில இந்திய கிராமிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராமிய தபால் ஊழியர்கள் 7-வது ஊதியக்குழுவை அமுல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி முதல் தொடர் வேலை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தா.பேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டு போராட்ட குழுவின் தலைவர் சிவாஜி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் விஷ்ணு தேவன், நிர்வாகிகள் மனோகரன், துரைசாமி, முருகேசன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
அப்போது கிராம புறத்தில் பணி புரியும் கிராமிய தபால் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பெண்களுக்கான மகப்பேறு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும், கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிராமிய தபால்துறை ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்