என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 214945
நீங்கள் தேடியது "கணியம்பாடி"
வேலூர் அடுத்த கணியம்பாடியில் தேரில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணமங்கலம்:
வேலூர் அடுத்த கணியம்பாடி என்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் மகன் கோபி (வயது 28). பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கோபிக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை.
நேற்று முன் தினம் என்.எஸ்.கே. நகரில் செல்லியம்மன் கோவில் திருவிழா நடந்தது. பெங்களூருவில் இருந்து கோபி மனைவியுடன் திருவிழாவிற்கு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மாட்டுவண்டியில் ஜோடித்த சிறிய தேரில் செல்லியம்மன் வீதிஉலா நடந்தது. இதில் கோபி உள்பட அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, கோவில் அருகே அம்மன் பவனி வந்த மாட்டுவண்டி தேர் நிலை நிறுத்தப்பட்டது. நேற்று மாலை அந்த தேரை பிரித்து எடுப்பதற்காக கோபி தேரை தள்ளி சென்றார்.
அப்போது, தாழ்வாக சென்ற மின்சார கம்பி தேர் மீது உரசியது. இதில் தேரில் மின்சாரம் பாய்ந்தது. தேரை தள்ளிச் சென்ற கோபி மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோபி உயிரிழந்தார்.
இதுகுறித்து, வேலூர் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
வேலூர் அடுத்த கணியம்பாடி என்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் மகன் கோபி (வயது 28). பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கோபிக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை.
நேற்று முன் தினம் என்.எஸ்.கே. நகரில் செல்லியம்மன் கோவில் திருவிழா நடந்தது. பெங்களூருவில் இருந்து கோபி மனைவியுடன் திருவிழாவிற்கு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மாட்டுவண்டியில் ஜோடித்த சிறிய தேரில் செல்லியம்மன் வீதிஉலா நடந்தது. இதில் கோபி உள்பட அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, கோவில் அருகே அம்மன் பவனி வந்த மாட்டுவண்டி தேர் நிலை நிறுத்தப்பட்டது. நேற்று மாலை அந்த தேரை பிரித்து எடுப்பதற்காக கோபி தேரை தள்ளி சென்றார்.
அப்போது, தாழ்வாக சென்ற மின்சார கம்பி தேர் மீது உரசியது. இதில் தேரில் மின்சாரம் பாய்ந்தது. தேரை தள்ளிச் சென்ற கோபி மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோபி உயிரிழந்தார்.
இதுகுறித்து, வேலூர் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
கணியம்பாடி அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த சதுப்பேரியை சேர்ந்தவர் சதானந்தம் (வயது 56). விவசாயி.
சதானந்தம் சம்பவத்தன்று தனது உறவினர் சிங்காரவேலு (58). என்பவருடன் கணியம்பாடியிலிருந்து வேலூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். பைக்கை சிங்காரவேலு ஓட்டினார்.
கணியம்பாடி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பைக்கிற்கு பெட்ரோல் போடுவற்காக சிங்காரவேலு, சதானந்தத்தை பைக்கில் இருந்து சாலையின் ஓரம் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
அப்போது கண்ணமங்கலத்திலிருந்து வேலூர் நோக்கி வந்த கார் சாலையின் அருகே நின்று கொண்டிருந்த சதானந்தத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் சதானந்தம் பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதானந்தம் இறந்தார்.
இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X