search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்ச்சி"

    பிளஸ் 1 பொதுத்தேர்வில் கணிதத்தில் 95.24 சதவீதமும், உயிரியல் பாடத்தில் 96.96 சதவீத மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். #TNHSCResult #PlusOneResult2018
    சென்னை:

    பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    இதில் அறிவியல் பாடப்பிரிவுகளில் 92 சதவீதம் பேரும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 92.2 சதவீத பேரும், கலை பிரிவுகளில் 80 சதவீதம் பேரும், தொழிற் பாடப் பிரிவுகளில் 82.3 சதவீத மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

    உயிரியல் பாடத்தில்தான் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இதில் 96.96 சதவீத பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த பாடத்தை 3 லட்சத்து 4 ஆயிரத்து 281 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 27 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    அதற்கு அடுத்தப்படியாக கணிதம் பாடத்தில் 95.24 சதவீதம் தேர்ச்சி இருந்தது. 4 லட்சத்து 25 ஆயிரத்து 920 மாணவ-மாணவிகள் இந்த பாடத்தில் தேர்வு எழுதியதில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 667 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தை 3,14,964 பேர் எழுதினர். இதில் 3,00,189 மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.31 ஆகும்.

    இயற்பியல் பாடத்தில் தேர்ச்சி சதவீதம் 93 ஆகும். இந்த பாடத்தில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 792 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வேதியல் பாடத்தில் 92.74 சதவீதம் தேர்ச்சியாகும். இந்த பாடத்தில் 4,84,427 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    விலங்கியல் பாடத்தில் 91.86 சதவீதமும், தாவரவியலில் 89.32 சதவீதமும் தேர்ச்சி இருந்தது. வணிகவியலில் 93.7 சதவீத மாணவ-மாணவிகளும் கணக்கு பதிவியலில் 93.8 சதவீதமும் தேர்வாகி இருந்தனர்.

    ‘பிளஸ்-1’ பொதுத் தேர்வின் மொத்த மதிப்பெண் 600. இதில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் 36,380 பேர் பெற்றுள்ளனர். இதில் 25,412 பேர் மாணவிகள். மீதியுள்ள 10,968 பேர் மாணவர்கள்.

    451-500 மதிப்பெண் வரை 64,817 பேரும், 426-450 மார்க் வரை 48,532 பேரும், 401-425 மதிப்பெண் வரை 61,351 பேரும் பெற்றுள்ளனர்.

    351முதல் 400 மார்க் வரை 1 லட்சத்து 60 ஆயிரத்து 581 மாணவ-மாணவிகளும், 301 முதல் 350 மதிப்பெண் வரை 1 லட்சத்து 93 ஆயிரத்து 765 பேரும் பெற்றுள்ளனர்.  #TNHSCResult #PlusOneResult2018

    தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். #TNHSCResult #PlusOneResult2018
    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக இந்த ஆண்டு பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர்.

    மேலும், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர்.

    விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்ததையடுத்து தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.



    மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம்.

    பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 91.3 சதவீதம். மாணவிகள் 94.6 சதவீதமும், மாணவர்கள் 87.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனனர். #TNHSCResult #PlusOneResult2018

    பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி எம்.கே.பி.நகர் புது நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக உள்ளார். இவருடைய மனைவி விஜயா. இவர் வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த தம்பதிக்கு பிரியங்கா(வயது 17) என்ற மகளும் இருந்தார். இவர், சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள மூங்கில் பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவி பிரியங்கா தேர்ச்சி பெற்றார். ஆனால் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று இருந்தார். இதனால் மனம் உடைந்த அவர், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.

    மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த தியாகராஜன், தனது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி பிரியங்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த எம்.கே.பி.நகர் போலீசார், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் மாணவி பிரியங்காவுக்கும், அவருடன் படித்த சக மாணவிகளுக்கும் இடையே பிளஸ்-2 பொதுத்தேர்வில் யார் அதிக மதிப்பெண்கள் பெறுவது? என்பது தொடர்பாக போட்டி ஏற்பட்டதாகவும், அதில் சக மாணவிகளை விட பிரியங்கா குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகவும் தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த அவர், தனது தாயிடம் கூறி அழுது உள்ளார். அதன்பிறகே இந்த மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 
    ×