search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 215693"

    • மணல் ஏற்றி செல்லும் லாரிகள் அதனை தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்கிறது.
    • அந்த லாரிக்கு அபராதம் விதிக்க சீர்காழி காவல்து றைக்கு பரிந்துரைத்தார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மாதிரவேளுர், பாலுரான் படுகை ஆகிய இடங்களில் மணல் குவாரி அமைக்கப்பட்டு ஆன்லைன் பதிவு செய்து மணல் விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்த மணல் குவாரியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு மணல் விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மணல் ஏற்றி செல்லும் லாரிகள் அதனை தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்கிறது.

    இதனால் அந்த சாலைகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இந்நிலையில், வழக்கம்போல் மணல் குவாரியில் இருந்து திருநகரிக்கு மணல் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.

    அந்த லாரி சீர்காழி சூரக்காடு வழியாக கலெக்டரின் ஆய்விற்கு சென்று கொண்டிருந்த தாசில்தார் செந்தில்குமார் லாரியை வழிமறித்து நிறுத்தினார்.

    பின், ஆவணங்களை ஆய்வு செய்து விட்டு தார்ப்பாய் கொண்டு மூடாமல் மணல் ஏற்றி சென்றதை அறிந்து அந்த லாரிக்கு அபராதம் விதிக்க சீர்காழி காவல்து றைக்கு பரிந்துரைத்தார்.

    அதேபோல், அவ்வழியாக வந்த மற்ற லாரிகளையும் நிறுத்தி அபராதம் விதிக்க காவல்துறைக்கு பரிந்துரைத்து அனுப்பி வைத்தார்.

    இதனை அறிந்த மற்ற லாரிகள் மாற்று பாதை வழியாக திருப்பிக்கொண்டு சென்றனர்.

    • லாரியில் இருந்த சுமார் 4 டன் மரங்கள், உருண்டு வந்தன.
    • முதியோர் இல்லம் முன்பு கனரக லாரிகளை நிறுத்துவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராமச்சந்த் பகுதியில் ஜெர்மனியை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் முதியோர் இல்லம் நடத்தி வருகிறது. இங்கு பிள்ளைகளால் கைவிடப்பட்டோர், உடல்நலம் குன்றியவர்கள், ஆதரவற்றோர்கள் உள்பட சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    இந்த நிலையில் மரம் ஏற்றி வந்த ஒரு லாரி இன்று காலை முதியோர் இல்லம் அருகே வந்தது. அப்போது பாரம் தாங்காமல் திடீரென கவிழ்ந்தது. எனவே லாரியில் இருந்த சுமார் 4 டன் மரங்கள், உருண்டு வந்தன.

    எனவே இல்லத்தில் இருந்த முதியோர் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். எனவே அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி பிழைத்தனர்.

    இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், முதியோர் இல்லத்தின் முன்பு உள்ள போக்குவரத்து சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குறுகலாக இருந்தது. எனவே நெடுஞ்சாலைத்துறை சமீபத்தில் விரிவுபடுத்தியது.

    அதன்பிறகு அங்கு கனரக வாகனங்களின் வரத்து அதிகமாக உள்ளது. ஒருசிலர் பாரம் ஏற்றிய லாரிகளை கொண்டு வந்து நிறுத்துகின்றனர். இரவு நேரங்களில் அங்கு ஒருசிலர் உட்கார்ந்து மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர்.

    ஒரு மணி நேரத்துக்கு முன்பு முதியவர்கள் நடைப்பயிற்சி சென்றனர். அந்த நேரத்தில் லாரி கவிழ்ந்து இருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். முதியோர் இல்லம் அருகே இந்த மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே முதியோர் இல்லம் முன்பு கனரக லாரிகளை நிறுத்துவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர்.
    • உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் ஒரு டாரஸ் லாரி எம் சண்ட் ஏற்றி வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர். அதில் அதிக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    மேலும் இதனை உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர். உடனே போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் காவல்கிணறு பகுதியில் இருந்து ஏற்றி கேரளா மாநிலம் செங்கவிளை பகுதிக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது.

    இது சம்பந்தமாக தக்கலை போலீசார் லாரி டிரைவர் கேரளா மாநிலம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த சுஜித் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப நிகழ்ச்சிக்காக கோவையிலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
    • பயணம் செய்த 6 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது.

    பல்லடம் :

    கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மனைவி சசிரேகா( வயது 57). இவரது மகன் சோமுகுமார்(38). இவரது மனைவி மகாலட்சுமி(27) .இவர்களது குழந்தை கிருத்திக் மற்றும் பிரணவ்(13) ,ரித்திக்(11) . இவர்கள் ஒரு ஆம்னி வேனில், உறவினர் வீட்டு குடும்ப நிகழ்ச்சிக்காக கோவையிலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    ஆம்னி வேன் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே கேரளாவிற்கு செல்வதற்காக வந்த சரக்கு லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஆம்னி வேனின் முன் பகுதி அப்பளமாக நொறுங்கியது. இதில் பயணம் செய்த 6 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் இந்தவிபத்து குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அனைவரும் சிறு,சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • பல்லடம் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
    • லாரிகளுக்கு போலீசார் சுமார் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி,நடு வேலம்பாளையம்,கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனகர வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் நேரிடையாக களத்தில் இறங்கி கடந்த 4 நாட்களாக அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற 10க்கும் மேற்பட்ட கேரளா மாநில லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அந்த லாரிகளுக்கு போலீசார் சுமார் ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதித்தனர்.இதற்கிடையே, கனிம வளங்களை அதிக அளவில் எடுத்துச் செல்வதை தடுத்து நிறுத்த விட்டால் போராட்டம் நடத்தப் போவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆகியோர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், போலீசார் மற்றும் வருவாய்த்துறை நடவடிக்கையால் தற்பொழுது வெளி மாநில லாரிகள் வருகை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கல்குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்குவாரி லாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். உதாரணமாக 6 டயர் கொண்ட லாரிக்கு 18டன், 10 டயர் கொண்ட லாரிக்கு 28 டன், 12 டயர் கொண்ட லாரிக்கு 38 டன், 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன், என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும்.பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். உரிய அனுமதி சீட்டுக்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.

    கல்குவாரி மற்றும் பாரம் ஏற்பட்ட லாரிகளை புலத் தணிக்கை செய்ய உள்ளோம். கிராமப்புற சாலைகள் பழுதடையாமல் அனுமதிக்கப்பட்ட பாரம் கொண்ட லாரிகளை பயன்படுத்த வேண்டும்என அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர் சுப்ரமணியன், திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஒருவர் படுகாயம்
    • இந்த விபத்தில் அரசு பஸ் ஓட்டுநரும், பயணிகளும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    கன்னியாகுமரி:

    திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். லாரி டிரைவர். இவர் இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி லாரியில் சென்றுக்கொண்டிருந்தார்.

    களியக்காவிளை அருகே பி.பி.எம். சந்திப்பில் அவர் வந்தபோது அவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றுலுமாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் அரசு பஸ் ஓட்டுநரும், பயணிகளும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி டிரைவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 7 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது
    • பறிமுதல் செய்த 6 லாரிகளையும் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலத்துக்கு கனிமவளங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கொண்டு செல்லப்படுவதையொட்டி வந்த புகாரின் அடிப்ப டையில் வருவாய் துறை, கனிம வளத்துறை, போலீஸ், போக்குவரத்து துறை உள்பட 7 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் விளவங்கோடு தனி தாசில்தார் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அழகியமண்டபம் பகுதியில் ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதிக பாரம் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் தொடர்ந்து சோதனை செய்ததில் இதுபோல் மேலும் 5 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்த 6 லாரிகளையும் கோழிப்போர் விளையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த லாரி களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கனிம வளங்களை கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
    • அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை மடக்கினர்.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

    இதில் பல டாரஸ் லாரிகள் அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு செல்கின்றன. இதனால் குமரி மாவட்ட எல்லைப் பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

    குறிப்பாக அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களால், சாலைகள் சேதமடைந்து மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. இதனால் விபத்துக்களும் ஏற்பட்டு, உயிர் சேதம் ஏற்படுவதாக களியக்காவிளை, கொல்லங்கோடு பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    அதிக பாரத்துடன் கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கனிம வளங்களை கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    இருப்பினும் அவரது எச்சரிக்கையை மீறி, டாரஸ் லாரிகள் அதிக பாரத்துடன் கேரளாவுக்கு செல்வதாகவும் போலீசார் இதனை கண்டு கொள்ளவில்லை என்றும் பொது மக்கள் மீண்டும் புகார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், நேற்று இரவு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வந்தார். அப்போது எதிரே, அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரிகள் சென்றதை பார்த்துள்ளார்.

    இதனை தொடர்ந்து கோழிவிளை சோதனை சாவடியில் காரை நிறுத்திய அவர், அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். அங்கு பணியில் இருந்த போலீசாரிடம், அதிக பாரத்துடன் லாரிகள் செல்கின்றன. நீங்கள் என்ன செய்தீர்கள்? எத்தனை லாரிகள் சென்றன என்பதை பதிவு செய்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டு உள்ள பதிவேட்டையும் அவர் பார்வையிட்டார். சோதனை சாவடியில் இருந்த போலீசார் விழிப்புடன் பணி செய்யுமாறு எச்சரிக்கை விடுத்த அவர், இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத்தை, போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அதிக பாரத்துடன் சென்ற லாரிகளை உடனே பறிமுதல் செய்யுமாறு அப்போது கூறினார். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடியாக தனிப்படை அமைத்து கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்திய லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு, அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை மடக்கினர். 10 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. அமைச்சர் மனோ தங்கராஜின் அதிரடி நடவடிக்கையால் நள்ளிரவிலும் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • லாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.
    • 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன் என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களுடன் வருவாய்த்துறை, கனிமவளத்துறை, காவல்துறை, அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்குவாரி லாரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். உதாரணமாக 6 டயர் கொண்ட லாரிக்கு 18டன், 10 டயர் கொண்ட லாரிக்கு 28 டன், 12 டயர் கொண்ட லாரிக்கு 38 டன், 16 டயர் கொண்ட லாரிக்கு 48 டன் என்ற விதிமுறைப்படி பாரம் ஏற்ற வேண்டும்.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். உரிய அனுமதி சீட்டுக்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் கனிமவள வருவாய் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம், பல்லடம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
    • லாரிகளுக்கு ரூ.1,30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட்,ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால்,பொதுமக்கள்,மற்றும் விவசாயிகள் நேரிடையாக களத்தில் இறங்கி கடந்த 2 நாட்களாக அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்து,போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இந்தநிலையில் சுக்கம்பாளையம் பகுதியில் நேற்று மாலை அதிக அளவு கனிமங்களை ஏற்றி வந்த 6 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனிமங்களை ஏற்றி வந்ததாக அந்த லாரிகளுக்கு ரூ.1,30,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகள் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் வரை, லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் தொடரும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • பெங்களூரில் இருந்து வெங்காயம் லோடு ஏற்றி வந்த டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென சாலையின் குறுக்கே அமைக்கப்பட் டுள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
    • தகவல் அறிந்து வந்த போலீசார், லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து வெங்காயம் லோடு ஏற்றி வந்த டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென சாலையின் குறுக்கே அமைக்கப்பட் டுள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    • நடுவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
    • ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

    இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட்,ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனகர வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுது ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சுக்கம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் இது பற்றி பாதகையும் கிராம மக்கள் வைத்தனர். இந்த நிலையில் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற நான்கு கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார்,மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தத்தின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ×