search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 216847"

    • வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
    • வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

    அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகை வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் பள்ளி, கல்லூரி முடித்தவர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள், காது கேளாதோர் என மொத்தம் 67 லட்சத்து 55 ஆயிரத்து 466 நபர்கள் பதிவு செய்து காத்திருப்பதாக வேலை வாய்ப்பு மற்றும் பதிவுத்துறை அறிவித்து உள்ளது.

    • அழகு சாதனவியல், சிகை அலங்காரம் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணாக்கர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையிலுள்ள மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்கு வதற்கும் அழகு சாதன வியல் மற்றும் சிகை அலங்காரம் செய்வதற்கான பயிற்சியினை தாட்கோ சார்பில் அளிக்கப்பட உள்ளது.

    இப்பயிற்சியில் ஆதி திராவிடர், பழங்குடியி னத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும்.

    சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

    இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம். மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 17-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • முகாமில் கலந்து கொள்ளபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 17-ந்தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ./டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 17-ந்தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனத்தினர் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரி வித்துள்ளார்.

    • அறிவியல் வளர்ச்சியால் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பது வீண் பயம் என முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியில் கூறினார்.
    • அரசு பள்ளி, தனியார் பள்ளி என நாம் தான் தேவையில்லாமல் வேறு படுத்தி பார்க்கிறோம் என்றும் பேசினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எஸ்.எஸ்.எல்.வி. டி2 ராக்கெட் வெற்றிகரமாக ஏவியதன் மூலம் இனி வணிக ரீதியான ராக்கெட்டுகளை ஏவ முடியும். நிலவுக்கு செயற்கை கோள்களை அனுப்ப சோத னைகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவடைந்தவுடன் நிலவுக்கு ராக்கெட் மூலம் செயற்கைகோள் ஏவப்படும்.

    ஆன்மீகமும், அறிவி யலும் முக்கியமானது. ஆன்மீகத்தில் அறிவிய லையும், அறிவியலில் ஆன்மீகத்தையும் பார்க்க கூடாது. இவற்றின் மூலம் மக்கள் முன்னேற முயற்சிக்க வேண்டும் என்றார்.

    அரசு பள்ளியில் படிப்பது இழிவு கிடையாது. அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு சளைத்தது கிடையாது. நான் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்து ரையாடிய போது அவர்கள் திறமையானவர்களாக உள்ளனர் என்பதை கண்டறிந்தேன்.

    அரசு பள்ளி, தனியார் பள்ளி என நாம் தான் தேவையில்லாமல் வேறு படுத்தி பார்க்கிறோம். குறிப்பிட்ட தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அதற்கு காரணம் பள்ளி அல்ல, மாணவர்கள் போதிய பயிற்சி எடுக்காததே காரணமாகும். ஆண்டு தோறும் அறிவி யல் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் வேலை வாய்ப்பு குறையாது. அறிவியல் வளர்ச்சியால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது வீண் பயம் ஆகும். புது, புது முயற்சிகளை மேற்கொண்டால் நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு, கல்லூரிப்படிப்பை முடிப்பவர்கள் தங்களுடைய கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
    • கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி வரையிலான நிலவரப்படி, வேலைவாய்ப்புக்காக எவ்வளவு பேர் பதிவு செய்திருக்கிறார்கள் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து இருப்பவர்கள் எவ்வளவு பேர்? என்பது குறித்து விவரங்களை அரசு தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு, கல்லூரிப்படிப்பை முடிப்பவர்கள் தங்களுடைய கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்கத்தவறினாலும், அவர்களுக்கு 2 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டு, வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி வரையிலான நிலவரப்படி, வேலைவாய்ப்புக்காக எவ்வளவு பேர் பதிவு செய்திருக்கிறார்கள்? என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    * 31.1.2023-ன் படி, வேலைவாய்ப்புக்காக 31 லட்சத்து 49 ஆயிரத்து 398 ஆண்களும், 36 லட்சத்து 9 ஆயிரத்து 27 பெண்களும், 273 திருநங்கைகளும் என மொத்தம் 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 பேர் பதிவு செய்திருக்கின்றனர்.

    * இவர்களில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 243 பேர், 19 வயது முதல் 30 வயதுடைய பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 56 ஆயிரத்து 606 பேர், 31 வயது முதல் 45 வயது வரை அரசுப்பணிக்காக காத்திருக்கும் வேலைதேடுபவர்கள் 18 லட்சத்து 31 ஆயிரத்து 930 பேர், 46 வயது முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 185 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 734 பேர்.

    * மொத்தம் உள்ள 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 பேரில், 1 லட்சத்து 45 ஆயிரத்து 481 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.

    * கல்வித்தகுதிகள் வாரியாக பதிவு செய்தவர்களை பார்க்கும்போது, 10-ம் வகுப்பை கல்வித்தகுதியாக கொண்டு பதிவு செய்தவர்கள் 50 லட்சத்து 82 ஆயிரத்து 712 பேர், பட்டதாரி ஆசிரியர்களாக 3 லட்சத்து 37 ஆயிரத்து 244 பேர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக 2 லட்சத்து 51 ஆயிரத்து 555 பேர் பதிவு செய்திருக்கிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 31-ந்தேதி வரையிலான நிலவரப்படி, தமிழ்நாட்டில் 67 லட்சத்து 61 ஆயிரத்து 363 பேர் வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்து காத்திருந்ததாக புள்ளி விவரங்கள் வெளியாகி இருந்தன. அதனுடன் தற்போதைய புள்ளி விவரங்களை ஒப்பிடுகையில், பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதை பார்க்கமுடிகிறது.

    • ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
    • வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சார்பில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ேவலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.

    மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

    இவ்விணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    • 522 பேருக்கு தனியார் துறையில் பணி நியமன ஆணையை அமைச்சர் மூரத்தி வழங்கினார்.
    • வக்கீல் கலாநிதி,வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கூடல்நகரில் உள்ள ஜெயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா தலைமை தாங்கினார். சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில் தனியார் துறையைச் சேர்ந்த 100-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் வேலை பெறுவதற்காக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வருகை தந்து நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர்.

    இவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வுகளை நடத்தி 522 பேரை தேர்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் தேர்வான 522 பேருக்கும் தனியார் துறையில் பணி ஆணையை வழங்கினார்.

    இதில் மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மண்டல தலைவர், வாசுகி சசி குமார், மாணவர் அணி அமைப்பாளர் மருது பாண்டி, பகுதி செய லாளர் சசிகுமார்,வக்கீல் கலாநிதி,வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • வேலை நாடுநர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வி தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம்.

    வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
    • 15 புதிய வண்ணங்களில் சேலைகளும், வேட்டியில் ஒரு அங்குலத்தில் கரையும் உற்பத்தி செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விசைத்தறி வேட்டி, சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல் முன்னேற்றம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில், திருப்பூா், கோவை, ஈரோடு மற்றும் திருச்செங்கோடு சரகங்கள் இடம் பெற்றிருந்தன. இக்கூட்டத்துக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

    இதில் அமைச்சா் ஆா்.காந்தி பேசியதாவது:- பொங்கல்வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்குத் தேவையான 177 லட்சம் வேட்டிகள், 177 லட்சம் சேலைகளில் இதுவரை 50 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும், 2023 ஜனவரி 10-ந் தேதிக்குள் மீதமுள்ள வேட்டி, சேலைகளை போா்க்கால அடிப்படையில் உற்பத்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகளில் மாறுதல் செய்யப்பட்டு தற்போது 15 புதிய வண்ணங்களில் சேலைகளும், வேட்டியில் ஒரு அங்குலத்தில் கரையும் உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இதன் மூலமாக ஒரு லட்சம் கைத்தறி, விசைத்தறி நெசவாளா்கள் 6 மாதத்துக்கு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். இத்திட்டத்தின் மூலமாக உபதொழில்களில் 50 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என்றாா்.

    இதைத்தொடா்ந்து திருப்பூா் சரகத்தில் உள்ள கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க நெசவாளா்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின்கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கடனுதவிகளையும், கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து 60 வயது பூா்த்தியடைந்த கைத்தறி நெசவாளா்களுக்கு முதியோா் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும் அமைச்சா் வழங்கினாா்.

    கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலா் (கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா்த் துறை)தா்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறித் துறை ஆணையா் த.பொ.ராஜேஷ், துணிநூல் துறை ஆணையா் மு.வள்ளலாா், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம்.
    • பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மகளிருக்கு ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இளநிலை தொழில் நிபுணா் பணி வழங்கப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மகளிா் தனியாா் நிறுவனத்தில் பணியில் சேருவதற்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகியன சாா்பில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மகளிருக்கு ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இளநிலை தொழில் நிபுணா் பணி வழங்கப்படவுள்ளது.

    இதற்கான வேலைவாய்ப்பு முகாம் திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 26-ந்தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் நடைபெறுகிறது.

    ஆகவே, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 18 வயது முதல் 22 வயதுக்கு உள்பட்ட மகளிா் தங்களது மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றுடன் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடிக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.
    • விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சைமாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை தேடும் பெண்களுக்காக ஓசூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்கு பெண் பணியாளர்களை தேர்வு செய்யும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    இந்த முகாமில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடிக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.

    இவர்கள் 18 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    நாளை காலை 8 மணி முதல் 10 மணிக்குள் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்காணல் நடைபெறும். இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 8110919990, 9442557037 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வோண்டும்.
    • கணினி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படவுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் செயல்படும் கிராமிய சுய வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் கணிணி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    கணிணிப் பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வோண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

    கணிணி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்படவுள்ளது.

    பயிற்சிக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்து பயிற்சி நிறுவனம் வரை பயிற்சி காலத்திற்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும்.

    மேற்படி பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி அருகில் ஈஸ்வர் நகர், 4 பக்கிரிசாமி தெருவில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நேரில் வந்து வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்கள் பெற 04362-242377 என்ற தொலைபேசி எண்ணில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மேற்கூறிய ஆவணங்களுடன் கணிணி பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெ றலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×