search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 217364"

    மேட்டூர் அணை பூங்காவை நேற்று விடுமுறை நாள் என்பதால் ஒரே நாளில் 12 ஆயிரத்து 600 பேர் பார்வையிட்டனர்.

    சேலம்:

    மேட்டூர் அணை பூங்காவுக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள் . நேற்று விடுமுறை நாள் என்பதால் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது.

    மேட்டூர் அணையை பார்வையிட்டவர்கள் காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப் பனை தரிசித்தனர். பின்னர் ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். குடும்பத்துடன் அனைவரும் பூங்காவிற்கு வந்து உண்டு மகிழ்ந்தனர்.

    கடைகளில் மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட்டனர். சுற்றுலா பயணிகள் வருகையால் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை அதிகரித்தது. வண்ணமீன் காட்சி சாலை, பாம்பு பண்ணை, மீன் பண்ணை, மான் பண்ணை ஆகியவற்றை கண்டு ரசித்தனர். சிறியவர்கள் உடன் பெரியவர்களும் ஊஞ்சல் ஆடி விளையாடி மகிழ்ந்தனர்.

    நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணை பூங்காவிற்கு 12,598 சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர் .இதன்மூலம் நுழைவு கட்டணமாக 62 ஆயிரத்து 990 வசூலானது.மேட்டூர் அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா கோபுரத்திற்கு 1237 சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.இதன் மூலம் 6 ஆயிரத்து 185 பார்வையாளர் கட்டணமாக வசூலிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தூய்மைக்கான மக்கள் இயக்க பேரணி நடைபெற்றது.
    • நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி சார்பில் நகரங்களின் உரிமைக்கான மக்கள் இயக்கம் என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆணையாளர் சாந்தி, நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

    பேரணி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. குப்பைகளை மழைநீர் கால்வாய் மற்றும் பொது இடங்களில் போடக்கூடாது.

    புதன்கிழமைதோறும் உடற் கழிவுகளை மட்டும் தனியாக பிரித்து வாங்கும் திட்டம் தற்போது நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இல்லங்களில் தினசரி குப்பை கழிவுகள் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தனியாக பிரித்து தங்கள் வீட்டுக்கு வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

    ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டுக்கு வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் பிளாஸ்டிக், பாலித்தீன், பைகள், கண்ணாடி தெர்மாகோல், பேப்பர் அட்டை, பழைய இரும்பு, பழைய துணி, மரச்சாமான்கள், ரப்பர் மற்றும் தோல் பொருள்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள் என மக்காத குப்பைகளை வழங்க வேண்டும்.

    புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் மக்கும் குப்பைகளான உணவுக் கழிவுகள், பழ கழிவுகள், காய்கறி கழிவுகள், மலர் கழிவுகள், இறைச்சி கழிவுகள், முட்டை ஓடு, தோட்டக் கழிவுகள் போன்றவற்றை வீட்டுக்கு வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அனைத்து வீடுகளிலும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நிபா வைரஸ் காய்ச்சல் குறித்து பொது மக்கள் பீதியடைய வேண்டாம் என மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்து உள்ளார்.
    திண்டுக்கல்:

    நிபா வைரஸ் கிருமியால் நிபா காய்ச்சல் எனும் தொற்றுநோய் பரவுகிறது. நோய் பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது தும்மும்போது உமிழ்நீரில் கிருமிகள் வெளிப்படுகின்றன. இக்கிருமிகள் நம்மை அறியாமல் நம் உடலில் ஊடுருவி தாக்க ஆரம்பிக்கிறது

    வவ்வால் கடித்த பழங்கள், பாதி உண்ட பழங்கள், பன்றி மற்றும் வெளவாலுடன் தொடர்புடையவர்களிடமிருந்து நோய் பரவுகிறது. தற்போது கேரளாவில் நிபா வைரஸ் பரவி உள்ளது.

    நிபா வைரஸ் தாக்கினால் மூக்கில் நீர்ச்சளி ஒழுகுதல், தலைவலி, காய்ச்சல், இருமல், மூச்சு திணறல், கழுத்து பிடிப்பு, தசைவலி, ஞாபகம் மறத்தல், மயக்கமடைதல், வலிப்பு, கோமா பிறகு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. நோய் ஏற்படின் அறிகுறிகளுக்கேற்ப உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் இந்நோய் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கைகளை சுத்தமாக கழுவுதல், கைகளை மூக்கு, வாய் பகுதிக்கு அடிக்கடி கொண்டு போகாமல் இருத்தல். இருமல் வந்தால் பாதுகாப்பாக கைகுட்டை பயன்படுத்துதல், மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

    எனவே, பொதுமக்கள் பழங்களை கழுவிய பிறகு பயன்படுத்தவும், வவ்வால், பறவைகள் கடித்த பழங்களை பயன்படுத்தாமலும், இப்பழங்களை வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கு கொடுக்காமலும் இருக்க வேண்டும். பன்றி வளர்ப்போர் பண்ணைகளை சுத்தமாகவும், தினந்தோறும் கிருமிநாசினி கொண்டு பண்ணையை சுத்தப்படுத்த வேண்டும்.

    மேலும், பன்றிகளை ஊராட்சியிடம் உரிமம் பெற்று பன்றிகளை அவர்கள் அளிக்கும் நிபந்தனைகளின்படி பொதுமக்கள் வசிக்காத இடங்களில் வளர்க்க வேண்டும்.

    பொது மக்களுக்கு தொல்லைதரும் விதமாக பன்றிகளை நடமாட விடுவது, பொது இடங்களில் அலையவிடுவது, அசுத்தம் செய்வது, வீடுகளில் புகுந்து பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் பன்றி வளர்க்கும் நபர்களின் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். பன்றிகள் நோய் வாய்ப்பட்டாலோ, இறந்தாலோ உடனடியாக கால்நடைத்துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியுடன் நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்கப்படும். பொது மக்கள் இத்தொற்று நோய் குறித்து பீதியடைய வேண்டாம் என மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்து உள்ளார்.
    ×