search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்"

    • பிப்ரவரி மாதம் முதல் மே வரை தொடர்ந்து 104 நாட்களுக்கு வேலை செய்து வந்துள்ளார் அபாவ்
    • தொடர்ந்து வேலை செய்து வந்ததால் கடந்த மே 28 முதல் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது

    சீனாவில் 103 நாட்கள் தொடர்ந்து வேலைக்குச் சென்ற ஊழியர் உறுப்பு செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 30 வயதான அபாவ் [A'bao] என்று நபர் கிழக்கு சீனாவில் ஜென்ஜியாங்[Zhejiang] மாகாணத்தில் உள்ள சோசவுன் [Zhoushan] பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் கடந்த ஆண்டு [2023] பிப்ரவரி மாதம் காண்டிராக்ட் அடிப்படையில் பெயிண்டராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    இந்த வருடத்தின் பிப்ரவரி மாதம் முதல் மே வரை தொடர்ந்து 104 நாட்களுக்கு வேலை செய்து வந்த அபாவ் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று மட்டுமே உடம்பு சரியில்லை என்று விடுப்பு எடுத்துக்கொண்டு தனது டார்மெண்ட்ரியில் [ஷேரிங் அறையில்] ஓய்வு எடுத்துள்ளார். தொடர்ந்து வேலை செய்து வந்ததால் கடந்த மே 28 முதல் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. சக ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அபாவ், கல்லீரல் செயலிழப்பு மற்றும் மூச்சுத்திணறலால் கடந்த ஜூன் 1 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

    அவரின் உயிரிழப்புக்குத் தொடர்ச்சியாக வேலை வாங்கிய நிறுவனமே காரணம் என்று அபாவின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அபாவின் உயிரிழப்புக்கு நிறுவனமும் 20 சதவீதம் காரணமாக உள்ளது என்று கூறிய நீதிமன்றம் அபாவின் குடும்பத்துக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 10,000 யுவான் உட்பட மொத்தம் 400,000 யுவான்[இந்திய மதிப்பில் சுமார் ரூ. 47,000 லட்சம்] நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

    சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிக வேலைப் பளு காரணமாக உயிரிழப்புகளும், சராசரி குடும்ப வாழ்க்கையில் ஆர்வமின்மையும் ஏற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் அதிக வேலை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் கரோஷி எனப்படும் டிரண்டாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

     

     

    • வேலை நேரம் முடிய 1 நிமிடம் முன்னதாக சென்ற ஊழியருக்கு நிறுவனம் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ள நோட்டீஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது
    • எல்லாரும் 5 மணிக்கு தான் வெளியேற வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது, நீங்கள் ஒரு நிமிடம் முன்னதாக 4.59 மணிக்கே கிளப்பி விடுகிறீர்கள்

    சம்பளத்துக்கு ஊழியர்களிடம் முடிந்த அளவு வேலை வாங்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. முக்கியமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அதில் கண்ணும் கருத்துமாக இருப்பதைப் பலர் உணர்ந்திருக்கக் கூடும். கதவோடு கைரேகை மிஷினை இணைத்து ஊழியர்களை மறைமுகமாக அறைக்குள் அடைத்து வைக்கும் போக்கு இன்றைய காலகட்டத்தில் நவீன அடிமை முறையாக பலர் கருதுகின்றனர்.

    அந்த வகையில், வேலை நேரம் முடிய 1 நிமிடம் முன்னதாக சென்ற ஊழியருக்கு நிறுவனம் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ள நோட்டீஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரெட்டிட் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த போஸ்டில், உங்களின் வேலை நேரம் மாலை 5 மணிக்கு முடிகிறது, ஆனால் அதுவரை நீங்கள் காத்திருப்பது கிடையாது, எல்லாரும் 5 மணிக்கு தான் வெளியேற வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது, நீங்கள் ஒரு நிமிடம் முன்னதாக 4.59 மணிக்கே கிளப்பி விடுகிறீர்கள், இது பல மாதங்களாக தொடர்ந்து நடந்து வந்ததை நாங்கள் கவனித்தோம், இனியும் இதை பழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



    • செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் டெல் முதலீடு செய்யவுள்ளது.
    • கடந்தாண்டு சுமார் 13,000 ஊழியர்களை DELL நிறுவனம் பணிநீக்கம் செய்தது.

    அமெரிக்காவைச் சேர்ந்த கம்பியூட்டர் தயாரிப்பு நிறுவனமான DELL, அதன் சேல்ஸ் பிரிவிலிருந்து 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

    செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவுள்ளதால் இத்தனை பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    கடந்தாண்டு சுமார் 13,000 ஊழியர்களை DELL நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப கிரிப்டோ கரன்சிகள் வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
    • இணையதளம் மூலம் தன் விவரங்களை பதிவு செய்த அவர், முதலில் சிறிதளவு முதலீடு செய்த தொகைக்கு பெரியளவில் லாபம் கிடைத்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்தவர் 46 வயது நபர். தனியார் நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி ஒரு குறுந்தகவல் (மெசேஜ்) வந்தது. அதில் ஒரு இணையதள முகவரி கொடுக்கப்பட்டிருந்தது.

    அதில், நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப கிரிப்டோ கரன்சிகள் வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் இதன் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு பணம் தேவைப்படும்போது அதை விற்றால் லாபத்துடன் உங்கள் முதலீட்டு தொகை உங்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதை நம்பி அந்த இணையதளம் மூலம் தன் விவரங்களை பதிவு செய்த அவர், முதலில் சிறிதளவு முதலீடு செய்த தொகைக்கு பெரியளவில் லாபம் கிடைத்தது. இதையடுத்து அவர் தன்னிடமிருந்த 66 லட்சத்து, 87 ஆயிரத்து, 500 ரூபாயை அனுப்பினார். ஆனால் அதன்பின் அந்த இணையதள பக்கம் முடங்கியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தன்னை தொடர்பு கொண்ட வாட்ஸ் அப் எண்களை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தீவிபத்து நிகழ்ந்தபோது அந்த பெட்ரோல் பங்கில் மற்ற வாகனங்களும் எரிபொருள் நிரப்புவதற்காக நின்று கொண்டிருந்தன.
    • விபத்து சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், புவனகிரி பகுதியில் அமைந்துள்ள நயாரா பெட்ரோல் பங்கில் ஒரு லாரி டீசல் நிரப்ப பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் உடனடியாக பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து துரிதமாக செயல்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த தீ விபத்து சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த தீவிபத்து நிகழ்ந்தபோது அந்த பெட்ரோல் பங்கில் மற்ற வாகனங்களும் எரிபொருள் நிரப்புவதற்காக நின்று கொண்டிருந்தன.

    லாரி டேங்க் வெடித்து தீப்பிடித்ததும் அங்கிருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தெறித்து ஓடினர். ஆனால், பெட்ரோல் பங்கின் ஊழியர்களில் ஒருவர் மட்டும் துணிவுடன் முன்வந்து ஓடிச்சென்று தீயணைப்பு கருவியை எடுத்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் மற்ற ஊழியர்களும் தீயணைப்பு கருவிகளுடன் வந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்து சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புற்றுநோய் பாதிப்பு காரணமாக சஜனா இறந்துவிட்டார்.
    • சஜனாவின் மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அசோக் நாயரையும் கவலையில் ஆழ்த்தியது.

    திருவனந்தபுரம்:

    உடல் உறுப்பு தானம் பற்றி மக்களிடம் தற்போது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மூளைச்சாவு நிலைக்கு சென்ற பலரின் உடல் உறுப்புகளை அவர்களது குடும்பத்தினர், உடல் உறுப்புகள் செயலிழந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்குகிறார்கள்.

    இதன் காரணமாக உடல் உறுப்புகள் பாதித்து அவதிப்படும் பலர் மறுவாழ்வு பெறுகின்றனர். இதயம், சிறுநீரகம், கல்லீரல், கணையம், நுரையீரல் உள்ளிட்ட மனிதன் வாழ அவசியமான முக்கிய உறுப்புகள் தானம் செய்யப்படுகின்றன. அது மட்டுமின்றி எலும்புகள், எலும்பு மஜ்ஜை, தோல் உள்ளிட்டவைகளும் தானமாக வழங்கப்படுகின்றன.

    இவ்வாறு உடல் உறுப்பு தானம் பெற்றதன் மூலம் மறுவாழ்வு பெறுபவர்கள், தங்களுக்கு உடல் உறுப்பு வழங்கியவரின் குடும்பத்திற்கு நன்றி செலுத்துவது வழக்கமான ஒரு நிகழ்வு தான். ஆனால் அதனையும் தாண்டி சில உணர்வு பூர்வமான சம்பவங்களும் அரங்கேறும்.

    அதுபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. தனக்கு இதய தானம் வழங்கிய ஒரு வாலிபரின் தாய் இறந்து விட்ட நிலையில், அவருக்கு செய்யவேண்டிய இறுதிச்சடங்குள் அனைத்தையும் மகன் ஸ்தானத்தில் இருந்து செய்துள்ளார்.

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த தம்பதி ஷாஜி-சஜனா. இவர்களது மகன் விஷ்ணு, மகள் நந்தனா. இந்நிலையில் விஷ்ணு விபத்தில் சிக்கினார். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மூளைச்சாவு நிலைக்கு சென்றார்.

    இதனால் அவரது குடும்பத்தினர் துடித்து போகினர். விஷ்ணு தங்களு டன் வாழப்போவதில்லை எனபதை நினைத்து மனம் உடைந்தனர். அந்த நேரத்தில் விஷ்ணுவின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் முடிவுக்கு வந்தனர். அதன்படி விஷ்ணுவின் சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல் ஆகியவை அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் கீழ் தானமாக வழங்கப்பட்டது.

    மேலும் உறுப்புகளை தானம் பெறுபவர்கள் தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் விஷ்ணுவின் குடும்பத்தினர் வைத்தனர். விஷ்ணுவின் உடல் உறுப்பு கள் 4 பேருக்கு பொருத்தப்பட்டன. விஷ்ணுவின் இதயம் பத்தினம்திட்டாவை சேர்ந்த அசோக் நாயர்(வயது44) என்பவருக்கு பொருத்தப்பட்டது.

    அவர் அறுவை சிகிச்சை நாளில் விஷ்ணுவின் தாய் சஜனாவை சந்தித்தார். அப்போது தான், சஜனா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததை அசோக் நாயர் அறிந்துகொண்டார். புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நிலையிலும், தனக்கு தன்னுடைய மகனின் இதயத்தை தானமாக வழங்கியதை நினைத்து அசோக் நாயர் நெகிழ்ந்து போனார்.

    தனக்கு அறுவை சிகிச்சை முடிந்து வழக்கம்போல் வாழ தொடங்கிய அசோக் நாயர், சஜானாவை தவறாமல் சந்தித்து வந்தார். மேலும் தனக்கு இதயத்தை தானமாக வழங்கிய விஷ்ணு பற்றிய விவரங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டார்.

     

    சஜனா மற்றும் அவரது மகன் விஷ்ணு

    சஜனா மற்றும் அவரது மகன் விஷ்ணு

    அப்போது விஷ்ணுவுக்கு அவரது தாய் சஜனாவை மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்துகொண்டார். இதனால் சஜனாவுக்கு தேவையான அனைத்தையும் செய்து மகனாகவே அசோக் நாயர் மாறினார். இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சஜனா இறந்துவிட்டார்.

    சஜனாவின் மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அசோக் நாயரையும் கவலையில் ஆழ்த்தியது. சஜனாவுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை மகன் ஸ்தானத்தில் இருந்து செய்ய வேண்டும் என்று விஷ்ணுவின் தந்தை கேட்டுக்கொண்டார்.

    அதன்பேரில் சஜனாவின் இறுதிச்சடங்கை மகன் ஸ்தானத்தில் இருந்து அசோக் நாயர் செய்தார். மேலும் சஜனாவின் உடலுக்கு அவரே தீ மூட்டினார். இது சஜனாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற விஷ்ணுவின் குடும்பத்தினர் மட்டுமின்றி அனைவரையும் கண்கலங்க செய்தது. 

    • சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் என்னதான் சிறப்பாக பணிபுரிந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போகும்.
    • 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் நாம் என்ன செய்வோம்.

    ஒரு சில சமயங்களில் நமக்கு பிடித்த வேலையை பெறுவதற்காக பிடிக்காத வேலையை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். அத்தகைய சூழல்களில் வெறுப்பாகவும், வேலையை முழு ஈடுபாடு இல்லாமலும் செய்ய நேரிடும். சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் என்னதான் சிறப்பாக பணிபுரிந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போகும்.

    ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்ப்பது ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு. அதிலும் முக்கியமாக ஊதிய உயர்வு என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்பதால் அது கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம். அதிலும் 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் நாம் என்ன செய்வோம். ஆனால், இங்கு ஒருவர் செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார் அன்கேத். கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு தராத நிறுவனத்தில் இருந்து வேலையை ராஜினாமா செய்துள்ளார். வேலையை ராஜினாமா தானே செய்துள்ளார் என்றால் சரி. அதனை கொண்டாடும் விதமாக இசைக்குழுவுடன் இணைந்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதால் தற்போது பேசுபொருளாகியுள்ளார்.

    ஊதிய உயர்வு தராமல் இருந்ததால் கடும் அதிருப்தியில் இருந்த அன்கேத், பணியில் இருந்து விலகுவதை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட முடிவெடுத்தார். இதையடுத்து தனது நண்பர்கள் மற்றும் இசைக்குழுவை அழைத்து அன்கேத், நிறுவனத்தின் மேலாளர் அலுவலகம் முடிந்து வெளியில் வந்த போது வாசல் முன்பு மகிழ்ச்சியுடன் மேளம் அடித்து ஆடிப்பாடி நடனம் ஆடி கொண்டாடினார். இதனால் எரிச்சலடைந்த நிறுவனத்தின் மேலாளர், அன்கேத் மற்றும் குழுவினரை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    • கண்காணிப்பு குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சோதனையில் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வரும் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை மேம்பாலம் அருகே பறக்கும் படை தனி தாசில்தார் கண்ணன் தலைமையில் குழுவினர் போலீசார் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 480 ரொக்கம் இருந்தது கண்டுபிடி க்கப்பட்டது.

    இது குறித்து காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வடுவூர் நெய்வாசல் டாஸ்மாக்கில் பணிபுரிவதும், அங்கு வசூலான பணத்தை தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள தனது வீட்டுக்கு கொண்டு வந்து பின்னர் வங்கியில் செலுத்த இருந்ததும் தெரியவந்தது. இருந்தாலும் அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 480-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • கவுண்டரில் வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.
    • டிக்கெட் முன்பதிவு செய்யவந்தவர்கள் கூறிய விபரங்களை புரிந்து கொள்ள முடியமால் அந்த பணியாளர் பரிதவித்து உள்ளனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ரெயில் நிலையம் மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரெயில்வே நிலையங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி என 4 மாவட்ட மக்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ரெயில் பயணிகள் கட்டணத்தில் அதிகளவில் கோவில்பட்டி ரெயில்வே நிலையம் வருமானத்தினை ஈட்டி வருகிறது.

    இவ்வாறு அதிகமாக மக்கள் வரும் ரெயில்வே நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற ஒரு கவுண்டர் தான் செயல்பட்டு வருகிறது. இதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க அந்த ஒரே ஒரு கவுண்டரில் வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வழக்கம் போல வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர் கவுண்டரில் இருந்துள்ளார். அவருக்கு தமிழ், ஆங்கிலம் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்தி மட்டும் தெரிந்து இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்தவர்கள், தட்கல் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யவந்தவர்கள் கூறிய விபரங்களை புரிந்து கொள்ள முடியமால் அந்த பணியாளர் பரிதவித்து உள்ளனர்.

    மேலும் இந்தியில் பேசினால் மட்டும் தான் விரைந்து தன்னால் டிக்கெட் கொடுக்க முடியும். இல்லை என்றால் மெதுவாக தான் தருவேன் என்று கூறியுள்ளார். இதனால் தட்கலில் முன்பதிவு செய்ய வந்தவர்கள் பரிதவித்துள்ளனர். மேலும் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க வந்தவர்களும் சிரமம் அடைந்துள்ளனர்.

    30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை டிக்கெட் எடுக்க நேரமானதால் ஆத்திரமடைந்த பயணிகள் அங்குள்ள ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தும் ரெயில்வே நிலைய போலீசார் மற்றும் கிழக்கு காவல்நிலைய போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இது குறித்து நிலைய மேலாளரிடம் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நிலைய மேலாளர் அலுவலகம் சென்று புகார் கொடுக்க சென்ற போது அங்கு பணியில் இருந்த ஊழியர் அலட்சியமாக பதில் கூறியதால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினையும் சமதானப்படுத்தி புகார் அளிக்குமாறு கூறினர். அடுத்தடுத்து நடைபெற்ற இந்த பிரச்சினையினால் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    இது குறித்து கோவில்பட்டி ராகவேந்திரா சேவை அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கூறியதாவது:-

    கோவில்பட்டி ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டர், முன்பதிவு கவுண்டர் என இருந்தாலும் ஒரு ஒரு கவுண்டர் தான் செயல்படுகிறது. அந்த கவுண்டரிலும் தமிழ், ஆங்கிலம் தெரியாத நபர்களை பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்தி மட்டும் அவர்களுக்கு தெரிவதால், தமிழ், ஆங்கிலத்தில் பேசினால் புரியவில்லை என்று கூறி டிக்கெட் தர மறுக்கின்றனர். அப்படியே தந்தாலும் நீண்ட நேரம் காக்க வைத்து டிக்கெட் வழங்கி வருகின்றனர். குறிப்பாக தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. திருநெல்வேலிக்கு டிக்கெட் கேட்டால் திண்டுக்கலுக்கு டிக்கெட் வழங்கிவிடுகின்றனர். இதனால் சரியான நேரத்தில் டிக்கெட் எடுக்க முடியாத நிலை இருப்பதால் ரெயில் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்த ஊழியரை பணியில் அமர்த்த வேண்டும். இல்லையென்றால் தமிழ் தெரிந்த பணியாளரை உதவிக்கு அமர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓட்டல் ஊழியர்கள் உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தாக்கினர்.
    • வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ஐதராபாத் அமிட்சில் பழமை வாய்ந்த பிரபல ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் ஐதராபாத் பிரியாணி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    புத்தாண்டு தினத்தையொட்டி ஓட்டலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது வாடிக்கையாளர்கள் கும்பலாக பிரியாணி சாப்பிட வந்தனர்.

    அவர்களுக்கு பிரியாணி பரிமாறப்பட்டது. அந்த பிரியாணி சூடாக இல்லை. மேலும் ருசியாகவும் இல்லை என வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

    இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கும் ஓட்டல் ஊழியர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    திடீரென அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஓட்டல் ஊழியர்கள் உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தாக்கினர்.

    மேலும் சேர்களை தூக்கி அவர்கள் மீது வீசினர். இதனைக் கண்ட பொதுமக்கள் ஓட்டலில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் அனைத்து சென்று விசாரித்தனர்.

    ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.அதில் ஓட்டல் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் மீது கட்டை மற்றும் சேர்களை கொண்டு தாக்குவது பதிவாகி இருந்தது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்:

    பிரியாணி சூடாக இல்லை என்றதால் இந்த பிரச்சனை நடந்துள்ளது.முதலில் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது திடீரென இந்த வாடிக்கையாளர் ஓட்டல் ஊழியரை தாக்கியதால் நிலைமை மோசமாகியுள்ளது.

    இது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மிதந்த பிணத்தை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர்.
    • மகாலிங்கத்துக்கு கீதா என்ற மனைவியும், தங்கம் என்ற ஒரு மகனும், பகவதி கோகிலா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் மேலத்தெரு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 76). இவர் ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியர் ஆவார். இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கொட்டாரம் சுடுகாடு பக்கம் உள்ள நாஞ்சில் நாடு புத்தன் ஆற்றில் ஆகாயத் தாமரை செடி, கொடி களுக்கு இடையே பிணம் ஒன்று மிதந்து கொண்டி ருந்ததை அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனே இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மிதந்த பிணத்தை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர்.

    ஆற்றில் மழை வெள்ளம் அதிக அளவில் கரைபுரண்டு ஓடியதால் அந்த பிணத்தை மீட்க முடியவில்லை. உடனே இதுபற்றி கன்னியா குமரி தீயணைப்பு நிலை யத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் வெங்கட் தம்பி மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மிதந்து கொண்டிருந்த அந்த பிணத்தை மீட்டனர். அப்போதுதான் ஆற்றில் பிணமாக மிதந்தது கொட்டா ரம் மேலத்தெரு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மகாலிங்கம் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள் ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆற்றில் பிணமாக மிதந்த மகாலிங்கத்துக்கு கீதா என்ற மனைவியும், தங்கம் என்ற ஒரு மகனும், பகவதி கோகிலா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    • வாரம் வாரம் தவணை முறையில் கட்டி முடிக்கும் விதத்தில் லோன் வாங்கி உள்ளார்.
    • போலீசார் ராஜகுமாரை தேடுவது தெரிந்த உடன் அவர் கேரளா தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    களியக்காவிளை :

    களியக்காவிளை அருகே உள்ள இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜிஜோ. இவர் சுய உதவி குழுவில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ஜிஜோ சுய உதவி குழுவில் இருந்து கொடுக்கப்படும் கடன் தொகையை வசூலிக்கும் வேலையையும் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் குழித்துறை பகுதியை சேர்ந்த ராஜகுமார் என்பவருக்கு சுய உதவி குழுவில் இருந்து லோன் கொடுத்துள்ளனர். வாரம் வாரம் தவணை முறையில் கட்டி முடிக்கும் விதத்தில் லோன் வாங்கி உள்ளார்.

    சம்பவத்தன்று லோன் தொகையினை வசூலிப்பதற்காக ராஜகுமாரின் வீட்டுக்கு ஜிஜோ சென்றுள்ளார். அப்போது ராஜகுமார் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் லோன் தொகை வசூலிக்க சென்ற ஜிஜோவை தகாத வார்த்தைகளால் திட்டி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜகுமார் திடீரென ஜிஜோவை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஜிஜோ களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார், ராஜகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் போலீசார் ராஜகுமாரை தேடுவது தெரிந்த உடன் அவர் கேரளா தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மது போதையில் சுய உதவி குழு ஊழியரை வாலிபர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×