என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காலாண்டு"
- சேலம் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன.
- 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-வது வாரத்தில் காலாண்டு தேர்வு தொடங்குகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இங்கு மாணவ- மாணவிகள் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-வது வாரத்தில் காலாண்டு தேர்வு தொடங்குகிறது.
1-ம் வகுப்பு குழந்தைகளுக்கு 4 தாள்கள் தேர்வு நடக்கிறது. 5-ம் வகுப்பு குழந்தைளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாட பரீட்சைகள் நடைபெறுகிறது. தேர்வு முடிவடைந்ததும், 4-வது வாரத்தில் இக்குழந்தைகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. இந்த தேர்வு நடைபெறும் நாட் குறிப்புகள், விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் ஒவ்வொரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கும் பணியில் சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி இயக்க அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 2016-17 ஆண்டின் நான்காவது காலாண்டு வரவு - செலவுகளை தாக்கல் செய்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் வங்கியின் வருவாய் ரூ.68 ஆயிரம் கோடியாக இருந்துள்ளது.
இதே காலாண்டில் வங்கி ரூ.7718 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது. முந்தைய காலாண்டில் வங்கி ரூ.2814 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. செயலற்ற சொத்துகள் மூலம் அதிக கடன் அளிக்கப்பட்டதால் இந்த நஷ்டத்தை வங்கி சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SBI
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்