என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோஷ்டி மோதல்"

    • லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் உரசியதாக கூறப்படுகிறது.
    • இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோகுல்நகரை சேர்ந்தவர் கண்ணன். இவர் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சோனகன்விளை நீல்புரம் பகுதியில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதற்கு லோடு ஆட்டோவில் சென்றுள்ளார்.

    அப்போது நீல்புரத்தை சேர்ந்த ஜெபராஜ் என்ற கற்கண்டு (வயது 60) மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்துள்ளார். அப்போது லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் உரசியதாக கூறப்படுகிறது.

    இதில் கண்ணனை, ஜெபராஜ் அடித்தாராம். இது தொடர்பாக நேற்று இரவு கண்ணனுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் நீல்புரம் ஜெபராஜ் வீட்டிற்குச் சென்று தட்டிகேட்டுள்ளனர்.

    அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கண்ணன் ஆதரவாளர்கள் ஜெபராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெபராஜ் திருச்செந்தூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை ஜெபராஜ் தாக்கப்பட்டதை அறிந்த அவரது மகன் நவீன்(32) திருச்செந்தூருக்கு விரைந்து வந்துள்ளார்.

    அங்கு அவரது தந்தை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நவீன் ஆதரவாளர்களும், மற்றொரு தரப்பினரும் திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பு வைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

    அப்போது இருதரப்பின ரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவரை மாறி மாறி அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.

    இந்த சம்பவத்தில் நவீன், திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தவேல் (21), நட்டார் ஆனந்த் (20) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதற்கிடையே சம்பவ இடத்தில் தெருவோர ஓட்டலில் பிரைடு ரைஸ் வாங்க வந்த தூத்துக்குடி பூபால்ராயபுரம் விஜயபி ரகாஷ் (27) என்பவருக்கு முதுகு, கால் ஆகிய இடங்கள் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

    காயமடைந்த அனைவருக்கும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த கந்தவேல், நட்டார் ஆனந்த் ஆகியோர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜெபராஜ், அவரது மகன் நவீன் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சி்கிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஏ.டி.எஸ்.பி. திபு, டி.எஸ்.பி. மகேஷ்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குரும்பூர் மற்றும் திருச்செந்தூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதட்ட மான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் திருச்செந்தூரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். இந்த சம்பத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • போலீசார் எச்சரிக்கை
    • இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு

    வேலூர்:

    வேலூர் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓல்டு டவுன் பகுதியில் கடந்த 23-ந் தேதி பிற்பகல் சுமார் 2 மணியளவில், ஊர் நாட்டாண்மை தேர்ந்தெடுத்தது தொடர்பாக ஏற்கனவே இருந்த பிரச்சினையில் இருதரப்பினருக்கு இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசி தாக்கிக்கொண்டனர்.

    இதில் அவர்களுக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் மீதும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து தகவல்கள் யாருக்கேனும் கிடைத்தால் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கலாம். அப்பகுதியில் மேற்கொண்டு எவ்விதபிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க போலீசார் பணிய மர்த்தப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீண் வதந்திகளை நம்பி மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று கேட்டு க்கொள்ளப்படுகின்றது.

    • திருச்சி அருகே ஏற்பட்ட திடீர் கோஷ்டி மோதலால் பதட்டத்தை தணிக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்
    • சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் லால்குடி டி.எஸ்.பி. சீதாராமன், இன்ஸ்பெக்டர் பிரபு, கல்லக்குடி சப் -இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் டால்மியாபுரம் அருகிலுள்ள கல்லக்குடி நடுத்தெருவில் வசித்து வருபவர் கங்காதரன் மகன் கார்த்திகேயன் மற்றும் அவரது தம்பி பால் என்கின்ற பாலசுப்ரமணியன்.

    இவர்கள் இருவரையும் அதே பகுதியைச் சார்ந்த காமராஜ், சேகர், கவியரசன், மணிகண்டன், பிரேம்குமார், கிருஷ்ணவேணி, விஜயா, ஹேமலதா, ராஜாங்கம் மற்றும் இரண்டு பேர் கொண்ட கும்பல் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கார்த்திகேயனை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார்த்திகேயனுக்கும் காமராஜ் குடும்பத்திற்கும் இடையே கடந்த 15 நாட்களுக்கு இறந்தவர் ஊர்வலம் சென்ற பொழுது வெடி வைத்ததில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் மற்றும் அவரது தம்பி இருவரும், காமராஜ் குடும்பத்தைச் சார்ந்த நண்பர்களிடம் எதற்கு என்னுடைய வீட்டுக்கு முன்னால் வெடி வைத்தீர்கள். இதனால் உடல் நலக்குறை காரணமாக இருந்த எனது அப்பா இறந்து விட்டார் என்று கூறி அவரை தாக்கியுள்ளனர்.

    அதனால் ஆத்திரமடைந்த காமராஜ் குடும்பத்தினர் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கார்த்திகேயன் மற்றும் அவரது தம்பியை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

    ேமலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் காமராஜின் மனைவி கிருஷ்ணவேணியும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் லால்குடி டி.எஸ்.பி. சீதாராமன், இன்ஸ்பெக்டர் பிரபு, கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக கல்லக்குடி கடைவீதியில் பிரியாணி கடை நடத்தி வரும் காமராஜின் கடையை அடித்து நொறுக்கி உள்ளனர்.

    இதனால் கல்லக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • 6 பேர் கைது, 30 பேர் மீது வழக்கு
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை,

    கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவில் காளை மாடு விடும் நிகழ்ச்சியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலின் காரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது பல்வேறு பிரச்சினைகள் இருதரப்பினர் இடையே ஏற்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையின் போது ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் ஒரு தரப்பினர் வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போது கெங்கவரம் பகுதியை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனை அடுத்து மீண்டும் இரு தரப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் ஒரு தரப்பினருக்கு படுகாயம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

    சம்பவத்தால் ஆதமங்கலம் புதூர் பகுதி சேர்ந்த பொதுமக்கள் தகராருக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி திடீரென நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து கடலாடி போலீசார் மற்றும் திருவண்ணாமலை ஏடிஎஸ்பி ஸ்டீபன், போளூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர் இதனை தொடர்ந்து இரு தரப்பினர் இடையே கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 30க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதில் தற்போது இரு தரப்பினர்களிடமிருந்து சசிகுமார், சிதம்பரம், கவியரசு, மற்றும் தினேஷ், அருண், அஜித்குமார் ஆகிய 6 பேரை கடலாடி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தலைமறைவாக உள்ள மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்படி ஆதமங்கலம் புதூர் பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    • கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்ட நிர்வாகிகள் சிலர் வாக்குவாதம்.
    • காங்கிரஸ் தலைமை அலுவலத்தில் கலவரம் போன்ற சூழல் உருவானது.

    சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று கோஷ்டி மோதல் ஏற்பட்டது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 300 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியை, கட்சி நிர்வாகிகள் சிலர் முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த இரண்டு பேர் கன்னத்தில் அடித்த அழகிரி வெளியேறுமாறு கூறினார். இந்த முற்றுகையின் போது இருதரப்பு நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது. 


    இதையடுத்து ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக் கொண்டனர். காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே சாலையிலும் இந்த மோதல் தொடர்ந்தது. இதில் ஒருவருக்கு தலையிலும், ஒருவருக்கு முகத்திலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இந்த மோதலால் அங்கு கலவரம் போன்ற சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனுக்கு போலீசார் வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

    • தாடி முருகன் தலைமையில் ஒரு அணியினரும் நகர துணை செயலாளர் மோகன் தலைமையில் ஒரு அணியினரும் தனி தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
    • இரண்டு அணியினருக்கும் திடீர்மோதல் ஏற்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி நகர அ.தி.மு.க.வில் நகர செயலாளர் தாடி முருகன் தலைமையில் ஒரு அணியினரும் நகர துணை செயலாளர் மோகன் தலைமையில் ஒரு அணியினரும் தனி தனியாக செயல்பட்டு வருகின்றனர். பண்ருட்டி நகர அ.தி.மு.க. சார்பில் பண்ருட்டி 4முனை சந்திப்பில் இன்று எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் இரண்டு அணியினருக்கும் திடீர்மோதல் ஏற்பட்டது.இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் காரசாரமாக தாக்கிப் மோதிக்கொண்டனர் .இதனால் திடீர் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் இரண்டு பிரிவுகளும் ஏக வசனத்தில் பேசியவாறு கடந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டமும் நிலவியது.

    • தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் இவர்கள் தனித்தனியே ராட்டினம் அமைத்தனர். விழா முடிந்ததும் ராட்டினத்தை கழட்டும் பணியில் 2 தரப்பினரும் ஈடுபட்டனர்.,
    • வாக்குவாதம் வந்தது. இதில் இருவர் மற்ற இருவரை தடியால் அடித்த தாக்கினர்,


    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆண்டிமடம் பூக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் (வயது 26). இவரது சகோதரர் சத்தியமூர்த்தி (24). இவர்கள் திருவிழாக்களில் ராட்டினம் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். இதேபோல விருத்தாசலம் புதாமூர் கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் (30), இவரது சகோதரர் தினேஷ் (23). இவர்களும் அதே தொழில் செய்து வருகின்றனர்  திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பேரங்கியூர் தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் இவர்கள் தனித்தனியே ராட்டினம் அமைத்தனர். ஆற்றுத் திருவிழா முடிந்து ராட்டினத்தை கழட்டும் பணியில் 2 தரப்பினரும் ஈடுபட்டனர். தொழில் போட்டி காரணமாக இவர்களிடையே வாக்குவாதம் வந்தது. இதில் சதிஷ், தினேஷ் ஆகியோர் சரவணன், சத்தியமூர்த்தி ஆகியோரை தடியால் தாக்கினர். இதில் காயமடைந்த சத்தியமூர்த்தி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்

    .  திருவெண்ணைநல்லூர் அருகே டி.கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 63). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மோகன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆற்றுத் திருவிழா முடிந்து சாமி விதியுலா நடந்தது. இதில் சுப்பிரமணியன் மகன் சந்தோஷ் சாமிக்கு தீபாராதனை காட்டினார். அப்போது அங்கு வந்த மோகன், மஞ்சு, மனோஜ், நாராயணன் ஆகியோர் சந்தோஷை ஆபாசமாக திட்டி கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சந்தோஷ் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்  இவ்விரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பள்ளியில் படித்து வருகின்றனர்.
    • ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பள்ளி மைதானத்தில் இன்று காலையில் மோதி கொண்டனர்.

    கடலூர்:

    புதுப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. அந்த சமயத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களை கண்டித்து அனுப்பி விடுவார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மாணவர்களுக்குள் பள்ளி வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவர்கள் அவரவர்களின் ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பள்ளி மைதானத்தில் இன்று காலையில் மோதி கொண்டனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் உடனடியாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து கண்டித்தனர். பள்ளி மாணவர்களுக்குள் கருத்து வேறுபாடு வரும் போது ஆசிரியர்களிடம் கூறி தீர்த்துக் கொள்ள வேண்டும். வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து சண்டையிடக் கூடாது என்று அறிவுரை கூறினர். பின்னர் மாணவர்களை வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மோதல் குறித்து இரு தரப்பினரும் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • தலைமறைவான நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி புதிய தமிழ் காலனியைச் சேர்ந்தவர் சுகுமார். இவரது மகள் கௌசல்யாவுக்கும், இதே பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், நேற்று இரவு இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி தாக்கி கொண்டார்களாம். மேலும், கௌசல்யாவை தாக்கி அவரது ஆடைகளை ஷர்மிளா குடும்பத்தினர் கிழித்து எறிந்தார்களாம்.

    இந்த சம்பவம் குறித்து கௌசல்யா மற்றும் ஷர்மிளா ஆகியோர் தனித்தனியாக ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். எனவே போலீசார் இரண்டு தரப்பைச் சேர்ந்த வெங்கடேசன்(வயது33), ஷர்மிளா(வயது29), நவீன், ஜெகதா, சுமதி, வெற்றிச்செல்வன்(வயது31), ஜெயா(வயது36), சரளா என மொத்தம் இரண்டு தரப்பைச் சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேசன், ஷர்மிளா, வெற்றிச்செல்வன், ஜெயா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவான நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்றம் மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    • ஒரு மாணவியை 2 பேர் காதலித்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது அந்தப் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை அதே பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவரும், பிளஸ்-1 மாணவர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

    ஒரே மாணவியை 2 மாணவர்கள் காதலித்து வந்ததால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மாணவர்க ளுக்கிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மாணவர்கள் இருவரும் தங்களுக்கு வேண்டி யவர்களை அழைத்து வந்ததால் மீண்டும் 2கோஷ்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் 2 கோஷ்டியினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்து படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே மாணவியை 2 மாணவர்கள் காதலித்ததால் 2 கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 4 பேர் பலத்த காயம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிந்து மாதவ பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவில் திருவிழா நேற்று நடந்தது.

    இதனையொட்டி இன்று அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரு தரப்பினருக்கும் இடையே பேனர்கள் வைப்பதில் மோதல் ஏற்பட்டது.
    • போலீசார் அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி: 

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாள் வருகிற 4-ந் தேதி கொண்டா டப்படுகிறது. இந்நிலையில், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி மெயின் ரோட்டில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சந்திர பிரி யங்கா மற்றும் எம்.எல்.ஏ. திருமுருகன் ஆதர வாளர்கள் பல்வேறு இடங் களில் டிஜிட்டல் பேனர் வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே பேனர்கள் வைப்பதில் மோதல் ஏற்பட்டு, பேனர் களை கிழித்தெறிந்தனர். தொடர்ந்து, சாலை மறி யலில் ஈடுபட்டனர். இத னால், அன்று இரவு சுமார் 2 மணி நேரம், காரைக்கால்- சென்னை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, அமைச்சரின் தனி அலுவலர் லக்ஷ்மணபதி, கோட்டு ச்சேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ராஜ்கு மார், பாலாஜி, கணபதி, சிவராமன், வேல்பாண்டி, சுகுமாரன் ஆகிய 6 பேர் மீது போலீசார் அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல், திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர் பிரதீப் கொடுத்த புகாரின் பேரில், ஜெயக்குமார், புருணோ தேவா, தவசு முத்து, சரவணன், அய்யப்பன், கார்த்தி, நிதின், ஈஸ்வர் ஆகியோர் 8 மீது அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோடுச் சேரி பகுதியில் போட்டி பேனர் வைப்பது தொடர்வ தால், மோதல் ஏற்படாமல் இருக்க, கோடுச்சேரி போலீ சார், 24 மணி நேரமும் பாது காப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். போலீ சார் பேனர்களுக்கு காவல் நிற்கும் படங்கள், சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.

    ×