search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீர்காழி"

    • சீர்காழி பகுதியில் அதிகளவு திருட்டு போகும் மிதிவண்டிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • தனிப்படை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி நகரின் பல்வேறு பகுதிகளில் மிதிவண்டிகள் கடந்த சில நாட்களாக அதிக அளவு திருடு போகின்றன. சீர்காழி நகரில் தேர் தெற்கு வீதி உள்ளிட்ட இடங்களில் இரு தினங்களில் மூன்றுக்கு மேற்பட்ட மிதிவண்டிகள் திருடு போயின.

    வீட்டு வாசலில் முன்பு வைத்து பூட்டி வைக்கப்பட்டிருந்த மிதிவண்டிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது.

    சீர்காழியில் தற்போது அதிக அளவு பல்வேறு இடங்களில் மிதிவண்டிகள் திருட்டு போவது குறித்து புகார்கள் சீர்காழி காவல் நிலையத்தில் வருகின்றன.

    மிதிவண்டிகளை திருடினால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் தற்போது மிதிவண்டி திருட்டில் சிலர் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    திருடப்படும் மிதிவண்டிகளை பிரித்து பழைய இரும்பு கடையில் விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனை தனிப்படை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    சீர்காழி அருகே காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த தொழிலாளி குறித்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் மேலவளவுகுடி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 27). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செங்கொடி செல்வி (24) என்ற இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 18.1.2018 அன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு அன்பரசன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். உனது பெற்றோரிடம் சென்று புது மோட்டார் சைக்கிள், 10 பவுன் நகை வாங்கி வா என்று கூறி செங்கொடி செல்வியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். இதனால் வேதனையடைந்த அவர் இது பற்றி சீர்காழி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசித்ரா மேரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×