search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • சதுரங்க போட்டி–யில் இந்த பள்ளியின் 9-ம்வகுப்பு மாணவர் ஏ.அஜய் ஜோலூயிஸ் 2-வது இடம் பிடித்தார்.
    • அகாடமி இயக்குனர் பி.சாவித்திரி மற்றும் முதல்வர்பி.சுப்பிரமணி ஆகியோர் பாராட்டி, பரிசளித்தனர்.

    காங்கயம்:

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான தடகள போட்டி திருவண்ணாமலையில் நடந்தது. இதில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 64 மாணவர்கள் வட்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டனர். சிவன்மலை ஜேசீஸ் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் கே.லிங்கேஷ் 14-வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாநில அளவில் 4-வது இடம் பிடித்து பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார். மேலும் நாமக்கல் பிரைம் செஸ் அகாடமி நடத்திய சதுரங்க போட்டியில் இந்த பள்ளியின் 9-ம்வகுப்பு மாணவர் ஏ.அஜய் ஜோலூயிஸ் 2-வது இடம் பிடித்தார்.

    மேலும் மாவட்ட அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பி.சிவகாந்தஸ்ரூபன் 3-வது இடமும், 19 -வயதுக்கு உட்பட்ட டேக்வாண்டா போட்டியில் 12-ம் வகுப்பு மாணவர் எஸ்.கேசவன் 3-வது இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சி.பழனிச்சாமி, பொருளாளர் பி.மோகனசுந்தரம், அகாடமி இயக்குனர் பி.சாவித்திரி மற்றும் முதல்வர்பி.சுப்பிரமணி ஆகியோர் பாராட்டி, பரிசளித்தனர். 

    • நாகர்கோவில் பார்வதிபுரத்தில் பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
    • ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு உடனடியாக ரத்தக்குழாயில் ஸ்டென்டிங் போடப்பட்டு ரத்தக்குழாய் அடைப்பு நீக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரத்தில் பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9-ந்தேதி 62 வயது முதியவர் ஒருவர் நெஞ்சுவலி மற்றும் மூச்சுதிணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அதன்பின்னர் அவருக்கு டாக்டர்கள் இ.சி.ஜி. மற்றும் எக்கோ பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு மேஜர் மாரடைப்பு வந்தது தெரியவந்தது. பின்னர் அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதில், இதயத்தில் உள்ள ரத்தக்குழாய் முழுவதும் கொழுப்பு மற்றும் த்ரோம்பஸால் அடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக ரத்தக்குழாயில் ஸ்டென்டிங் போடப்பட்டு ரத்தக்குழாய் அடைப்பு நீக்கப்பட்டது. அதன்பிறகு அவருக்கு நெஞ்சுவலி முழுமையாக குறைந்து விட்டது. மறுநாள் அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். இப்போது அவர் நலமாக உள்ளார். 62 வயது முதியவரின் ரத்தக்குழாய் அடைப்பை நீக்கி பொன் ஜெஸ்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    • சிறு வயது முதலே சிலம்பப் போட்டியின் மீது அதீத ஆா்வம் இருந்தது.
    • 5ம் வகுப்பு படித்து வரும் மதுமிதா (10) தங்கம் வென்றாா்.

    பல்லடம்,நவ.29-

    தமிழ்நாடு மாநில சிலம்பாட்ட கழகம், திருப்பூா் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் சின்னசாமியம்மாள் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது. இதில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற காரணம்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் மதுமிதா (10) தங்கம் வென்றாா்.

    இதுகுறித்து மதுமிதாவின் தந்தையான பல்லடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலா் மதிவாணன் கூறியதாவது:-எனது மகளுக்கு சிறு வயது முதலே சிலம்பப் போட்டியின் மீது அதீத ஆா்வம் இருந்தது. இதன் காரணமாகவே தொடா் பயிற்சி மேற்கொண்டதால் மாவட்ட அளவிலான போட்டியில் தொடா்ந்து 5வது ஆண்டாக தங்கப்பதக்கம் வென்றுள்ளாா். மேலும், கடந்த 2021ம் ஆண்டு பொங்கலூரில் நடைபெற்ற மாநில அளவிலான தனித்திறமை போட்டியிலும் தங்கம் வென்றுள்ளாா் என்றாா். தங்கம் வென்ற மாணவியை பயிற்சியாளா், பெற்றோா் மற்றும் உறவினா்கள் வெகுவாக பாராட்டினா்.

    • தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • ப்ளூபேர்டு பள்ளி மாணவர்கள் முதல் மற்றும் 2-வது இடம் மற்றும் 3-வது இடங்களை பிடித்தனர்.

     பல்லடம் :

    கோவை, சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பல்லடத்தில் உள்ள ப்ளூபேர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ப்ளூபேர்டு பள்ளி மாணவர்கள் முதல் மற்றும் 2-வது இடம் மற்றும் 3-வது இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்யின் முதல்வர் சு.ஹேமலதா வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

    • இஸ்லாமியா பள்ளி மாணவ- மாணவிகள் கராத்தே, சிலம்பம் போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
    • இதேபோல் கட்டா, கும்தே பிரிவில் 3-வது இடம் பெற்று மாணவி ஹர்ஷிகா சாதனா சாதனை படைத்தார்


    சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்.

     கீழக்கரை

    சென்னை நீலாங்கரையில் உள்ள புத்தாக்க மையத்தில் 46-வது தேசிய கராத்தே போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி 7-வது வகுப்பு மாணவி ஹர்ஷிகா சாதனா, 8-வது வகுப்பு மாணவி ஹேமா வர்ஷினி, ஹேமா வர்ஷினி ஆகியோர் கட்டா பிரிவில் 2-வது இடமும், கும்தே பிரிவில் 3-வது இடமும் பெற்று சாதனை படைத்தனர். இதேபோல் கட்டா, கும்தே பிரிவில் 3-வது இடம் பெற்று மாணவி ஹர்ஷிகா சாதனா சாதனை படைத்தார்

    பரமக்குடியில் நடை பெற்ற தேசிய அளவிலான 14 வயதுக்குட்பட்டோர் தனி நபர் பிரிவில் இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைபள்ளி, 10-ம் வகுப்பு மாணவன் கதிர்வேல் தென்னிந்திய அளவில் 3-ம் இடமும், மாவட்ட அளவில் 3-ம் இடமும் மற்றும் 9-ம் வகுப்பு மாணவன் மோஹித் மாவட்ட அளவில் (அடிமுறை) 2-ம் இடமும் பெற்றனர்.

    மேலும் தென்னிந்திய அளவில் 13 வயதுக்கு உட்பட்டோர் (ஒத்த கம்பு) பிரிவில் 6- வகுப்பு மாண வன் சக்தி வீர கணபதி தென்னிந்திய அளவில் முதல் இடமும், மாவட்ட அளவில் 2-ம் இடமும் பெற்றார்.

    மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் மற்றும் முதல்வர் மேபல் ஜஸ்டஸ், ஆசிரியர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.


    • விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
    • குழு விளையாட்டுகளில் கால்பந்து போட்டிகளில் மாணவிகள் பிரிவில் மாவட்ட அளவில் 2 வது இடமும், கோ-கோ மாணவிகள் பிரிவில் 2 வது இடமும் பெற்றுள்ளனர்.

    திருப்பூர் :

    பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியர்களுக்கான தடகளப் போட்டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அதில் திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதில் குண்டு எறிதல் போட்டியில் ஆர்யுஸ்‌ ரோகித் என்ற மாணவர் தங்க பதக்கம் பெற்றார்.

    யுவன் பாரத் என்ற மாணவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்றார். அபிகிருஷ்ணன் உயரம் தாண்டுதலில் தங்கம் பதக்கம் பெற்றார். 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புவனேஸ் என்ற மாணவன் தங்க பதக்கமும், 200 மீட்டரில் வெள்ளி பதக்கமும் பெற்றார். சஞ்சய் மும்முறைத்தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 400 மீட்டரில் காயத்ரி வெள்ளிப் பதக்கமும் வெண்கல பதக்கமும் வென்றார்.

    குழு விளையாட்டுகளில் கால்பந்து போட்டிகளில் மாணவிகள் பிரிவில் மாவட்ட அளவில் 2 வது இடமும், கோ-கோ மாணவிகள் பிரிவில் 2 வது இடமும் பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் தேர்வாகியுள்ள மாணவர்களை பள்ளி நிர்வாகிகள், தாளாளர் சாமிநாதன் , மூத்த முதல்வர் மணிகண்டன், முதல்வர் சின்னையா, துணை முதல்வர் ரவி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.

    • 75 கிலோ எடை பிரிவில் மொத்தம் 350 கிலோ பளு தூக்கி முதல் பரிசை வென்றார்.
    • மாநில அளவிலான பெண்கள் பளு தூக்கும் போட்டியில் முதல் பரிசு.

    பல்லடம் : 

    மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ(வயது 38)என்ற வீராங்கனை 75 கிலோ எடை பிரிவில் மொத்தம் 350 கிலோ பளு தூக்கி முதல் பரிசை வென்றார். இதுகுறித்து ஜெயஸ்ரீ கூறியதாவது:- மதுரை அவனியாபுரம் எனது சொந்த ஊர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையத்தில் கணவர் விஜய் உடன் வசித்து வருகிறேன். சிறு வயதில் பளு தூக்கும் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டேன். பின்னர் திருமணம் நடைபெற்றது. 12 மற்றும் 7 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவருடன் விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறேன். இந்தநிலையில் எனது பளுதூக்கும் ஆர்வத்தை கணவரிடம் தெரிவித்தேன். அவர் என்னை ஊக்குவித்தார். சென்ற வருடம் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் பளு தூக்கும் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். இதையடுத்து தற்போது மத்திய பிரதேசம் குவாலியரில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோல ஆண்கள் பளு தூக்கும் போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் தாராபுரத்தை சேர்ந்த கார் வேந்தன்(28) என்பவர் முதல் பரிசு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திருப்பூர் மாவட்டம்சார்பாக மாவட்ட அளவிலான கலைப்பண்பாட்டு திருவிழா திருப்பூரில்நடைபெற்றது.
    • மாநில அளவிலான போட்டிகளில் தனிநபர் நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றார் .

    பெருமாநல்லூர் :

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திருப்பூர் மாவட்டம்சார்பாக மாவட்ட அளவிலான கலைப்பண்பாட்டு திருவிழா திருப்பூரில்நடைபெற்றது . இதில் வாய்ப்பாட்டுஇசை, கருவி இசை, நடனம், காட்சி, கலை, உள்ளுர் தொன்மை பொம்மைகள் மற்றும் நாடகம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு அதில் ஒவ்வொன்றிலும் முதல் பரிசு பெற்ற மாணவ மாணவிகள்மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதில் ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹர்சினி நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் தனிநபர் நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றார் .

    அவரை பள்ளி தலைவர் தியாகராஜன், செயலாளர் செந்தில்நாதன்,தாளாளர் பாலசுப்பிரமணியம்,பொருளாளர் சந்திரசேகர், முதல்வர் கிருஷ்ணமூர்த்தி,ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் மற்றும் அலுவலகஊழியர்கள் ஆகியோர் பாராட்டினர் . இத்தகவலை பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

    • தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை நடத்தும் மாநில அளவிலான கலை பண்பாட்டு திருவிழா.
    • அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜீவிதா.

    திருப்பூர்:

    தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை நடத்தும் மாநில அளவிலான கலை பண்பாட்டு திருவிழா நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்றது.விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஓவியப் போட்டியில் ஊதியூரை அடுத்துள்ள தாயம்பாளையம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜீவிதா கலந்துகொண்டு, மாநில அளவில் 3 ம் இடம் பிடித்துள்ளாா்.வெற்றிபெற்ற மாணவி ஜீவிதாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியா்தண்டபாணி, ஓவிய ஆசிரியா் ரவி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

    • தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றமகளிா் கல்லூரி மாணவிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அஸ்ஸாம் மாநிலத்தில் 37வது தேசிய அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

    உடுமலை :

    தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற உடுமலை ஜிவிஜி. விசாலாட்சி மகளிா் கல்லூரி மாணவிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.அஸ்ஸாம் மாநிலத்தில் 37வது தேசிய அளவிலான ஜூனியா் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் படித்து வரும் ஜி.வைஷாலி (முதலாம் ஆண்டு மாணவி) 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், மேலும் 400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.

    இந்நிலையில் கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத், ஆலோசகா் மஞ்சுளா, முதல்வா் ராஜேஸ்வரி, உடற்கல்வி இயக்குநா் பா.சுஜாதா மற்றும் பேராசிரியா்கள் மாணவியை பாராட்டினா்.

    • மேல்நிலைக்கல்வியை உள்ளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார்.
    • அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த கீர்த்தனாவை பலரும் பாராட்டினர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன்.

    இவரது மனைவி சித்ராதேவி. இவர்களது மகள் கீர்த்தனா.

    இவர் நடுநிலைக்கல்வியை தளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார். பின்னர் மேல்நிலை கல்வியை உள்ளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார்.

    இதையடுத்து மருத்துவராகி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீட் தேர்வு எழுதினார்.

    அந்த தேர்விலும் வெற்றி பெற்ற கீர்த்தனாவுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிக்க இடம் கிடைத்தது.

    அரசு பள்ளியில் படித்து அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த கீர்த்தனாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் தளிக்கோட்டை அரசு பள்ளி சார்பில் சாதனை படைத்த மாணவி கீர்த்தனாவை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி தளிக்கோட்டையில் பாராட்டு விழா நடந்தது.

    இந்த விழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன் தலைமை தாங்கினார்.

    தளிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பி.சரவணன் முன்னிலை வகித்தார். தளிக்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். சூரியபிரபா வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவி கீர்த்தனாவுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    இதில் மாணவியின் பெற்றோர் இளவரசன், சித்ராதேவி மற்றும் வட்டார கல்வி அலுவலர் சம்பத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கே. சுந்தரமூர்த்தி, எஸ். மாசிலாமணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.விஜயகுமார், எஸ்.பி.ஏ. மெட்ரிக் பள்ளி தாளாளர் பி.ரமேஷ், கிராம பிரமுகர் ஞானம், ஆசிரியர் சவுந்தர்ராஜன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சசிக்குமார் நன்றி கூறினார்.

    • வடகாடு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர்
    • பல்வேறு விளையாட்டு போட்டிகளில்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போ ட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். இ வர்களை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி பாராட்டி னார்.

    வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் ஆகிய போட்டிகளில் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். இதேபோன்று, 400 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் இடம், குண்டெறிதலில் முதலிடம், 1,500 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் மாணவர்கள் 2-ம் இடம் பெ்ற்றனர்.

    மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம், 19 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 3-வது இடமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2-வது இடம், கடற்கரை கைபந்து போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம், 17 -வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2-வது இடம் பிடித்து மாணவர்கள் சாதித்துள்ளனர். மேலும், 19 வயது க்கு உட்பட்ட வாலிபால் போட்டியில் மாணவிகள் 3-வது இடம் பெற்றனர்.

    மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கைப்பந்து போட்டியிலும், 17 வயது வயதுக்கு உட்பட்ட மாணவிகள் கடற்கரை கைப்பந்து போட்டியிலும், 100 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் போட்டியில் மாணவி காவியாவும் கலந்து கொள்ள உள்ளார்கள்.

    அடுத்தடுத்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவ, மாணவிகளையும் அவர்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி பாராட்டினார்.

    ×