search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • கலசலிங்கம் பல்கலைக்கழகம் 35-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
    • என்.ஐ.ஆர்.எப். தர வரிசைகளை வழங்கி வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    மத்திய கல்வி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் கற்பித்தல், கற்றல் வளம், ஆராய்ச்சி ெதாழில்முறை பயிற்சி, பொதுமக்களின் கருத்து ஆகியவற்றை கொண்டு என்.ஐ.ஆர்.எப். தர வரிசைகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசையில் தேசிய அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் 35-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

    இதேபோல் இந்தியாவின் பொறியியல் பிரிவில் 35-வது இடத்தையும், அனைத்து பிரிவுகளில் 50-வது இடத்தையும் பிடித்துள்ளது. பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன், இணை வேந்தர் அறிவழகி, துணைத்தலைவர்கள் சசிஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், டீன்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களை பாராட்டினர்.

    • 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 33 மாணவர்களுக்கு ரூ. 1 லட்சத்து 3ஆயிரம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
    • 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்புகளை பெற்ற மாணவர்களுக்கு 27வது ஆண்டாக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் பகுதி, அமர்ஜோதி கார்டனில் உள்ள திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்புகளை பெற்ற மாணவர்களுக்கு 27வது ஆண்டாக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் அறக்கட்டளை செயலாளர் துரைசாமி வரவேற்று பேசினார். தலைவர் நிக்கான்ஸ் வேலுசாமி தலைமை தாங்கி பேசினார்.

    திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி மற்றும் திருப்பூர் மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் திருப்பூர் பகுதி பள்ளிகளில் கடந்த 2021-22 ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 33 மாணவர்களுக்கு ரூ. ஒரு லட்சத்து 3ஆயிரம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    திருப்பூர் பகுதி அளவில் முதலிடம் பெற்ற கொங்கு வேளாளர் பள்ளியின் சுதர்ஷிகா, இரண்டாமிடம் பெற்ற ஏ.வி.பி. ட்ரஸ்ட் பள்ளியின் ஹரிஷ் மற்றும் லிட்டில் பிளவர் பள்ளியின் தியா எம்.ராஜ் உள்ளிட்ட 33 மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுடன் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினர் கையால் கல்வி ஊக்கத்தொகை பெற்றுச்சென்றனர். டிசெட்டின் பொருளாளர் தேவராஜன் நன்றி கூறினார். ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் பழனிச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி, டிசெட்டின் நிறுவன உறுப்பினர்கள், நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர்கள், பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பிறகு அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

    • புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால் சாதனை படைக்கலாம் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
    • லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற உள்ளன.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள நகர்மன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வரும் 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை 5-வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. கலெக்டரை தலைவராக கொண்டு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ள இந்த புத்தகத் திருவிழாவில் 80 அரங்ககளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற உள்ளன.

    இந்த புத்தகத் திருவிழா குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நேற்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை புத்தக வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 1976 பள்ளிகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட கலை அறிவியல், பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரிகளிலும், 92 நுலகங்களிலும் நேற்று காலை 11.30 மணியிலிருந்து 12.30 வரை ஒரு மணி நேரம் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் தனக்குப் பிடித்த புத்தகங்களை வாசித்தனர்.

    புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, பொது அறிவு வளர வேண்டுமானால் மாணவர்கள் பாடத்திட்டத்தைத் தாண்டிய புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். நீங்கள் உங்களுக்குப் பிடித்த எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் வாசிக்கலாம். சிறிய வயதில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளர்களாக வளராலம். என்றார்.

    • தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
    • கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா மற்றும் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேரடி திடலில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு நகர செயலாளரும், எம்எல்ஏவுமான பிரபாகரன் தலைமை வகித்தார். நகர துணை செயலாளர்கள் ரெங்கராஜன், சபியுல்லா, கமலம், நகர பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயக்குமார், ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கொள்கை பரப்பு இணை செயலாளர் புதுக்கோட்டை விஜயா, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    இதில் மாநில ஆதிதிராவிடர் நல குழு துணை அமைப்பாளர் துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட அவைதலைவர் நடராஜன், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி, மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் அப்துல் பாரூக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர், மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மாரிக்கண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் சிவக்குமார், துரைகாமராஜ், சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நகர இளைஞரணி அமைப்பாளர் அப்துல்கரீம் வரவேற்றார். முடிவில் நகர மாணவரணி அமைப்பாளர் பா.ரினோபாஸ்டின் நன்றி கூறினார்.

    • 1 நிமிடம் 10 விநாடியில் இழுத்து சென்று இலக்கை அடைந்து வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அபிஷியல் ரெக்கார்டு உலக சாதனை படைத்தார்.
    • ஒரு நிமிடம் 46 வினாடியில் தலைமுடியில் காரைக்கட்டி இழுத்துச் சென்று இந்தியன் ரெக்கார்டும், ஆசிய ரெக்கார்டும் வாங்கியுள்ளார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருபவர் சம்யுத்தா (வயது 12). இவர் தனது தலைமுடியில் 1410 கிலோ எடையுள்ள காரை கட்டி 110 மீட்டர் தூரத்தை, 1 நிமிடம் 10 விநாடியில் இழுத்துச் சென்று இலக்கை அடைந்து வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அபிஷியல் ரெக்கார்டு உலக சாதனை படைத்தார்.

    அதன் ரெக்கார்டு ஆபீசர் ஷரிபா மேற்பார்வையில் இந்த உலக சாதனை நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டது. இவரது உலக சாதனை நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    சம்யுத்தா இதற்கு முன் தனது பத்தாவது வயதில் 990 கிலோ எடையுள்ள காரை 112.2 மீட்டர் தூரத்தை, ஒரு நிமிடம் 46 வினாடியில் தலைமுடியில் காரைக்கட்டி இழுத்துச் சென்று இந்தியன் ரெக்கார்டும், ஆசிய ரெக்கார்டும் வாங்கியுள்ளார்.

    இது குறித்து மாணவி சம்யுத்தா கூறும்போது, இந்த முயற்சிக்கு தனது பெற்றோர் வெங்கடேஷ் மற்றும் ஆஷா, பயிற்சியாளரான கராத்தே மாஸ்டர் இளையராஜா, உடற்கல்வி ஆசிரியர் கரோலின் மற்றும் உடற்பயிற்சியாளர் ரிச்சர்டு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முக்கிய காரணம் என்றார்.

    இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் முத்துக்கு மார் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தனர்.

    • மதுரை ரெயில் நிலையம் சார்பில் சுதந்திரதின சாதனை படக்காட்சி வாகனத்தை மேலாளர் தொடங்கி வைத்தார்.
    • மோட்டார் சைக்கிள் மற்றும் படக்காட்சி வாகன பேரணி ஆகஸ்ட் 14 அன்று டெல்லி சென்று சேர இருக்கிறது.

    மதுரை

    மதுரை ரெயில்வே கோட்டம் சார்பாக 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பேரணி, சாதனை படக்காட்சி வாகன பேரணியை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில், 6 மோட்டார் சைக்கிள்களில் ௧௨ ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் விருதுநகர், செங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், ராமேஸ்வரம், காரைக்குடி, திண்டுக்கல் வழியாக சென்னை செல்கின்றனர். மேலும், சென்னையில் இருந்து அனைத்து கோட்ட பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து பேரணியாக புதுடெல்லி செல்ல இருக்கிறார்கள்.

    இந்த மோட்டார் சைக்கிள் பேரணியுடன் ஒரு பட காட்சி வாகனமும் செல்ல இருக்கிறது. ஆஸாதி கா அம்ரித் மஹோற்சவ நிகழ்ச்சி, இந்திய ரெயில்வே மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் சாதனைகள் ஆகியவை இந்த படக்காட்சி வாகனத்தின் மூலம் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

    மோட்டார் சைக்கிள் மற்றும் படக்காட்சி வாகன பேரணி ஆகஸ்ட் 14 அன்று டெல்லி சென்று சேர இருக்கிறது.

    • குறிச்சியில் உள்ள தமிழ்பால் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் விநியோகஸ்தர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
    • கூட்டத்தில் அதிக விற்பனை வளர்ச்சியை எட்டி சாதனை படைத்த 3 விநியோகஸ்தர்களை பாராட்டி தலா 2 கிராம் தங்க நாணயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனமான தமிழ்பால் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே குறிச்சியில் உள்ளது. இங்கு விநியோகஸ்தர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அதிக விற்பனை வளர்ச்சியை எட்டி சாதனை படைத்த 3 விநியோகஸ்தர்களை பாராட்டி தலா 2 கிராம் தங்க நாணயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில் செயல் இயக்குனர் தியாகராஜன், ஆலோசகர் செல்வன்ராஜ், விற்பனைதுறை மற்றும் மனிதவள மேம்பாடு ஆலோசகர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு விநியோகஸ்தர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    விழாவில் செயல் இயக்குனர் தியாகராஜன் பேசும்போது: -

    அடுத்து வரவிருக்கும் அனைத்து விற்பனையின் வளர்ச்சியை ஆரோக்கியமான போட்டியாக எடுத்து கொண்டு அனைத்து விநியோகஸ்தர்களும் பங்கு பெற்று தங்க நாணயம் பெரும்படி வாழ்த்துகிறேன் என்றார்.இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும், தஞ்சை மற்றும் அரியலூர் சேர்ந்த விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர். தமிழ் பால் நிறுவனம் 3 மாதத்திற்கு ஒருமுறை நடத்தி வரும் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • மென்பொருள் சோதனை போட்டியில் பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • இந்த போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்விக்குழும மாணவர்கள் 18 பேர் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் உலக அளவில் ஐ.இ.இ. சமூகம் சார்பில் அமெரிக்கா விலுள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் கணிப்பொறியியல் துறை நடத்திய உலக அளவிலான மென்பொருள் சோதனை (சாப்ட்வேர் டெஸ்டிங்) போட்டியில் கலந்து கொண்டு அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். உலகின் பல்வேறு பகுதிகளின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்க ழகங்களின் மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்விக்குழும மாணவர்கள் 18 பேர் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர்கள் விஷ்ணுராம், பாலசுப்ரமணியன், டீன் மாரிச்சாமி, கணிப்பொ றியியல் துறைத்தலைவர் ராமதிலகம் ஆகியோர் வாழ்த்தினர்.

    இது போன்ற உலக அளவிலான போட்டிகள் மென்பொருள் துறையில் தற்போதைய ஆராய்ச்சிகளையும் அத்துறை சார்ந்த நுணுக்கங்களை அறிந்து கொள்ள உதவுவதோடு மாணவர்கள் உலக அளவிலான சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் வளர்த்துக் கொள்ள ஒரு பாலமாக அமைகிறது என்று பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் கூறினார்.

    அரசு பொது தேர்வு முடிவுகள் விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் திரு.வி.க. வீதியில் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. தற்போது வெளியான பிளஸ்-2 தேர்வில் மாணவி சரஸ்வதி 594 மதிப்பெண் பெற்று முதல் இடத்ைத பிடித்து உள்ளார். 2-ம், இடத்தை மாணவி அபிநயா, 3-ம் இடத்தை மாணவன் ரேஷிநாத், 4-ம் இடத்தை மாணவி பிரிய வர்தனா (583/600), 5-ம் இடத்தில் மாணவன் வாஞ்சிநாதன் (582/600) மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்து உள்ளனர். 10-ம் வகுப்பு பொது தேர்வில் அதிகபட்சம் மதிப்பெண்களை பெற்ற மாணவி ஐஸ்வர்யா (495/500) முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தில்மாணவி அம்ரூதா (481/500), மூன்றாம் இடத்தில் மாணவி ஜெயவர்ஷினி (476/500), நான்காம் இடத்தில் மாணவி இவாஞ்சிலின் மோனிக்கா (475/500), ஐந்தாம் இடத்தில் மாணவி தாரணி (473/500), லாவண்யா (473/500) மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

    சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின்சேர்மன் டாக்டர் எஸ். ரவீந்திரன், பொருளாளர் எம். சிதம்பரநாதன், மேளான் டிரஸ்டி ஜி. முத்து சரவணன் ,தாளாளர் எம்.ராஜசேகரன், பள்ளியின்முதல்வர்ஆர். யமுனாராணி, துணை முதல்வர் எம்.சாந்தி, ஆசிரியர்கள்,ஊழியர்கள் அனைவரும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள்.மேலும் இந்த கல்வி ஆண்டில்மாணவ/ மாணவியர்கள் மேற்படிப்பிற்கான அனைத்து விதமான நுழைவுதேர்வுகளையும் எதிர்கெள்ளும் வகையில் பள்ளியின் முதல்வர் மற்றும்ஆசிரியர்கள் திறன்படசெயல்படுவதாக தாளாளர்தெரிவித்துள்ளர்.

    • அஞ்சல் அட்டையில் 117 திருக்குறள் எழுதி சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
    • சிறுவனின் இந்த முயற்சியை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பள்ளி மாணவன் ஒருவன் நாணயம் சேகரிப்பு, ஸ்டாம்பு சேகரிப்பு, பேனாக்கள் சேகரிப்பு என்று சாதனை படைத்து வந்த நிலையில் தற்போது அஞ்சல் அட்டையில் 117 திருக்குறளை எழுதி புதிய சாதனை படைத்துள்ளான். விழிப்புணர்வு ராமநாதபுரம் அருகே உள்ளது புல்லங்குடி.

    இந்த ஊரைச் சேர்ந்தவர் முனியராஜ். இவர் விவசாயத்துடன் செங்கல் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். சிறுவயது முதலே பழங்கால நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட முனியராஜ் ஏராளமான நாணயங்களை சேகரித்து வருகிறார். இது தவிர கவிதை எழுதுவதிலும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். இவரது மகன் ராகுல்கவி (வயது16) என்பவர் ராமநாத புரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரும் தனது தந்தையை போன்றே நாணயங்கள் சேகரிப்பு, பேனாக்கள் சேகரிப்பு போன்றவற்றில் ஆர்வமிக்கவ ராக இருந்து வருகிறார். ஆர்வம் இவர் தனது தந்தை சேகரித்து உள்ளதைவிட அதிகமாக நாணயங்களை சேகரித்து உள்ளார். இதுவரை 250-க்கும் மேற்பட்ட பழங்கால நாணயங்கள், 15 நாடுகளின் நாணயங்கள், சுதந்திரத்திற்கு முந்தைய மகாராணி நாணயம், முகலாய மன்னர் கால நாணயம், மன்னர்கள் பயன்படுத்திய கட்டை பேனா உள்பட 300-க்கும் மேற்பட்ட பழங்கால பேனாக்கள் என சேகரித்துள்ளார்.

    இதோடு நின்றுவிடாமல் ஸ்டாம்பு சேகரிப்பிலும் ஆர்வம் கொண்டு சேகரித்து வருகிறார். Also Read - 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 6 லட்சம் சைக்கிள்கள் தயாரிக்கும் பணி தீவிரம் இதுதொடர்பான அரிய வகை புத்தகங்களையும் சேகரித்து தனது வீட்டில் 200-க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்டு மினி நூலகம் போன்று வைத்துள்ளனர்.

    சிறுவன் ராகுல்கவி கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் நடந்த திருவள்ளுவர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்புவித்து பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார். சாதனை இதன் தொடர்ச்சியாக சிறுவன் ராகுல்கவி தற்போது அஞ்சல் அட்டையில் 117 திருக்குறளை எழுதி சாதனை படைத்துள்ளார்.

    இதுவரை யாரும் செய்யாத முயற்சியாக சிறுவன் திருக்குறளை மனப்பாடம் செய்து அதனை அஞ்சல் அட்டையில் சிறிய எழுத்துக்களில் 117 திருக்குறளை அதில் எழுதி உள்ளார். சிறுவனின் இந்த முயற்சியை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    பல்வேறு சாதனைகளை சத்தமின்றி செய்து வரும் சிறுவன் ராகுல்கவி நன்றாக படித்து ஐ.ஏ.எஸ். ஆவதே தனது லட்சியம் என்று அடுத்த சாதனையை நிச்சயமாக சொல்லி அசத்தி வருகிறார்.

    • சாதனை புரிந்தவர்களுக்கான குடியரசு தின விருது பெற விண்ணப்பிக்கலாம்.
    • அரசு பணியாளர் மற்றும் பொது நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் டாக்டர், விஞ்ஞானிகள் தவிர மற்றவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வருகிற ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினவிழாவில் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை,இலக்கியம்,

    மருத்துவம், சமூகசேவை,அறிவியல், பொறியியல், மத்திய அரசுப்பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிகள் உடைய தனித்தன்மைக் கொண்ட நபர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.

    இந்த விருது எப்பொழுதும் உயரிய சாதனை செய்பவருக்கே வழங்கப்படும். இந்த விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் சாதனை எல்லோராலும் விரும்பத்தக்கதாக இருக்க வேண்டும். இந்த விருது உயர்ந்த தர நிர்ணயத்தை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படும். பத்ம விருதுகள் நாட்டிலேயே 2-வது உயரிய விருதாக இருப்பதால் விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே அவர்கள் துறையில் தேசிய விருதோ அல்லது குறைந்தபட்சம் மானிய விருதோ பெற்றிருக்க வேண்டும்.

    விருதிற்கு உரியவரை தேர்ந்தெடுக்கப்படும் போது சமூகத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள பெண்கள் நலிவடைந்த சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்டவர்கள், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு விருதிற்கு பரிந்துரை செய்யப்படும்.

    அரசு பணியாளர் மற்றும் பொது நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் டாக்டர், விஞ்ஞானிகள் தவிர மற்றவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

    மேற்காணும் தகுதிகள் பெற்றவர்கள் பத்ம விருதிற்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பபடிவம் www. padmaawards.gov.inஎன்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விருதிற்கு இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.9.2022 ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்தார்.
    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பொத்தனூர் அரசு பள்ளி மாணவன் சாதனை செய்துள்ளார்.

    பரமத்திவேலூர்:

    பிளஸ்-2 பொது தேர்வில் பொத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் வைரப்பெருமாள் 600க்கு 580 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்தார். அதேபோல்10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி சுபஸ்ரீ பள்ளி யில் முதலிடம் பிடித்தார்.

    மாணவன் வைரப்பெரு–மாள் மற்றும் மாணவி சுபஸ்ரீக்கு பொத்தனூர் பேரூராட்சி தலைவர் ஆர். கருணாநிதி சால்வை அணிவித்து கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் தலைமை ஆசிரியர் குமார், விவசாயிகள் சங்க தலைவர் என் . வி .எஸ். செந்தில்நாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சுப்பிரமணியம், டி.பி. ஏ. அன்பழகன், கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அலுவலக பணியாளர்களும் வாழ்த்தினார்கள்.

    ×