என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாதனை"
- தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
- 150 கிலோ எடையுள்ள பளுதூக்கி தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஆதித்யா தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார் .
இந்நிலையில் பளுதூக்குதலில் ஏற்கனவே கோவையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 135 கிலோ பளு தூக்கி நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் 140 கிலோ பளு தூக்கி அதனை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கு அனுப்பி உள்ளார் .அது அங்கீகாரம் பெற்று இன்று கோவையில் நடைபெறும் விழாவில் அங்கீகார சான்றிதழ் பெற உள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய 140 கிலோ சாதனையை முறியடிக்கும் வகையில் இன்று 150 கிலோ எடையுள்ள பளுதூக்கி தன்னுடைய சாதனையை தானே முறியடிதுள்ளார். இதனையும் உலக சாதனை அங்கீகாரம் பெற அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (81) தனது வாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப் படைத்துள்ளார். ஜேம்ஸ் தனது 14 வயதில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரது ரத்தத்தை சோதனை செய்த மருத்துவர்கள் ரத்தத்தில் வித்தியாசமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் ஆண்டி-டீ இருப்பதை கண்டறிந்தனர்.
அவரது ரத்த பிரிவின் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தைகளை கிமோலைட்டிக் என்ற நோயிலிருந்து தடுக்க முடியும். இந்த நோயினால் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ரத்த சிவப்பு அணுக்கள் சிதைவிலிருந்து பாதுகாக்க ஜேம்சின் ரத்தம் உதவுகிறது.
ஜேம்சிடமிருந்து 1964-ம் ஆண்டிலிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு கற்பமாக உள்ள பெண்களுக்கு அளிக்கப்படுகிறது. இதன்மூலம் இதுவரை 2.4 மில்லியன் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜேம்ஸ் 70 வயதை கடந்து விட்டதால் அவர் தனது கடைசி ரத்த தானத்தை வழங்கினார். ஜேம்சின் செயலுக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இது போன்று ஆண்டி-டீ சிகிச்சைக்கு உதவும் வகையிலான ரத்தம் கொண்டவர்கள் 160 பேர் உள்ளனர். #donatingblood
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்