search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் அபாகஸ் போட்டியில் தேசிய சாதனை படைத்தனர்.
    • முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    இந்திய அளவிலான அபாகஸ் போட்டி சென்னை தமிழ் நாடு வர்த்தக மையத்தில் கடந்த 24-ந்தேதி நடைபெற்றது. இதில் இந்திய அளவில் சுமார் 5,500 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தனர்.இசட்-1 பிரிவில் ரியா முதல் இடத்தையும், இசட்-3 பிரிவில் ஆமினத் ஹாஜிரா 2-ம் இடத்தையும், அல் அஸ்ரியா3-ம் இடத்தையும் பிடித்தது சாதனை படைத்தனர்.

    அபாகஸ் பயிற்சியாளர் உமர் சரிப் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • சோழவந்தானில் தி.மு.க. சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • பேச்சாளர் அலெக்சாண்டர் பேசினார்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆலோசனையின்பேரில் சோழவந்தான் தி.மு.க. இளைஞரணி சார்பாக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, வாடிப் பட்டி ஒன்றிய செய லாளர் பசும்பொன்மாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். சோழவந்தான் பேரூர் சேர்மன் ஜெயராமன், பேரூர் செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், சோழவந்தான் பேரூர் இளைஞரணி முட்டைகடை காளி வரவேற்றனர். தி.மு.க. பேச்சாளர் அலெக்சாண்டர் பேசினார்.

    இதில் பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாலம் செந்தில், செல்வராணி, ஜெய ராமச்சந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் லதா, கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரி, ஸ்டாலின், நிஷா கவுதம ராஜா, குருசாமி, முத்து செல்வி சதீஷ், நகர அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், மாணவரணி சரவணன், மேலக்கால் பன்னீர்செல்வம், தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் பால சுப்பிரமணியன், மேலக்கால் ராஜா, தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் ரவி, சங்கங்கோட்டை சந்திரன், தவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • தெற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    மதுரை

    பாரதீய ஜனதா கட்சியின் மதுரை கிழக்கு மாவட்டம், மேலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மேலூர் கீழையூரில் நடந்தது.

    தெற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மத்திய அரசு நலத்திட்ட மாவட்ட தலைவர் காசிநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் மூவேந்திரன், வெள்ளைச்சாமி, வர்த்தக அணி தலைவர் தர்மலிங்கம், ஆன்மீக பிரிவு தலைவர் தங்கையா, விவசாய அணி செயலாளர் குமார், கிழக்கு ஒன்றிய தலைவர் பூமிராஜன், விவசாய அணி தலைவர் பிரகாஷ், ஒன்றிய பொதுச்செயலாளர் பிரபு மற்றும் மணி, புவனேஸ்வரன், சிவா, சிவகுமார், அருண், பாலமுருகன், செல்வராஜ், தங்கையா, சீனிவாசபெருமாள், பூபதி, சிவதானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க.அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • மாவட்ட இளைஞரணி தலைவர் வீரசோழன் சிவபாலன் செய்திருந்தார்.

    திருச்சுழி

    பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருச்சுழி யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி, விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பி னர் கஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கி பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற செய்ய வேண்டி வழிமு றைகள், பிரசார முறைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் பேசினார். இதில் விருதுநகர் கிழக்கு மாவட்டத்தின் பல்வேறு அணிகள் பிரிவு களின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கான ஏற்பாடு களை விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் வீரசோழன் சிவபாலன் செய்திருந்தார்.

    • சோழவந்தான் அருகே தி.மு.க. இளைஞரணி சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது.
    • ராயபுரம், திருமால்நத்தம் ஆகிய கிளைக்கழக நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே ரிஷபம் ஊராட்சி ராயபுரம் கிராமத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தி.மு.க. ஆட்சியின் 2 சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரிஷபம் சிறுமணி, திருவேடகம் பழனியம்மாள், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்றதுணைத்தலைவர் கேபிள்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பால் கண்ணன் ஆகியோர் வரவேற்றனர். தலைமை கழக பேச்சாளர் அலெக்சாண்டர், நிர்வாகிகள் பெரியகருப்பன், சந்தானலட்சுமி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் வனிதா ரங்கநாதன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கதிரவன் ஆகியோர் பேசினர். ஒன்றிய கவுன்சிலர்கள் ரேகாவீரபாண்டி, கார்த்திகாஞானசேகரன், தென்கரை சோலைராஜன், மேலக்கால் பன்னீர்செல்வம், ராஜா, ஒன்றிய இளைஞரணி ரிஷபம், ராயபுரம், திருமால்நத்தம் ஆகிய கிளைக்கழக நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் 

    • மாநாடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • மாநாட்டில் திருவள்ளூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அணிகள் மாநாடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பாரதப் பிரதமரின் 9 ஆம் ஆண்டு சாதனை விளக்கும் வகையில் நடைபெற்ற அணிகள் மாநாட்டில் பாஜக பட்டியல் அணி மாநில செயலாளர் அன்பாலாயா சிவகுமார் தலைமையில் பொதுச் செயலாளர்கள் வருண் காந்தி,முக்தா சரவணன், இளங்கோவன், கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி சுமதி ஜெயபால் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் செந்தில்குமார், பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் அரசு ரங்கேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பாஜக அரசின் பாரத பிரதமரின் 9 ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு விளக்கினர். இந்த மாநாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அணிகள் தலைவர்கள் பிரவீண் குமார், சரத்குமார், நாகராஜ்,ராஜன், பிரபாகரன், கலாவதி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நந்தன்,கோட்டி, பொதுச் செயலாளர் பொன்.பாஸ்கர்,முத்துராஜ்,பொன்னேரி நகரத் தலைவர் சிவகுமார், பொது செயலாளர் கோகுல், ரமேஷ்,பொருளாளர் பாலாஜி பொன்னேரி நகர பட்டியல் அணி தலைவர் டி.ஹரிதாஸ், பாஜக நிர்வாகிகள் மகேஷ்வரி உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • முத்துலட்சுமி வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலி முதலிடம் பிடித்துள்ளார்.
    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் முத்துலட்சுமி 583 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் சண்முகசாமி.இவரது மனைவி வள்ளியம்மாள். சண்முக சாமி ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆவார்.

    இவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் மகள் முத்துலட்சுமி வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். முத்துலட்சுமி தனது ஆரம்ப கால பள்ளி படிப்பை நவநீதகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து உள்ளார். 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை சங்கரன்கோவில் எஸ்.என்.ஆர். மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார். தற்போது வெளியான பிளஸ்-2 பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதம் ஆகிய 4 பாடங்களில் முழு மதிப்பெண்களுடன் முத்துலட்சுமி 600-க்கு 583 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

    தொடர்ந்து வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தர வரிசைப்பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளில் முத்துலட்சுமியும் ஒருவர் ஆவார். வேளாண் பல்கலைக்கழக பட்டியலில் முதலிடம் பிடித்த முத்துலட்சுமிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ், வகுப்பு ஆசிரியர் பார்வதி சிவகாமிநாதன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவி முத்துலட்சுமியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தினார். அப்பொழுது மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, தலைவன் கோட்டை கூட்டுறவு வங்கி தலைவர் விஜயபாண்டியன், நகர செயலாளர் பிரகாஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • வி.எஸ்.ஆர். பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுதினர்.
    • அஸ்வந்த் 557 மதிப்பெண்களும், முத்துராமன் 512 மதிப்பெண்களும் பெற்றனர்.

    திசையன்விளை:

    மருத்துவ கல்விக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 7-ந்தேதி நடந்தது. இந்த தேர்வினை திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். இதில் அனைத்து மாணவர்களும் வெற்றிபெற்றனர்.

    மாணவர்கள் அஸ்வந்த் 557 மதிப்பெண்களும், முத்துராமன் 512 மதிப்பெண்களும், அனிஷ் 487 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர். இவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கு இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், பள்ளி முதல்வர் பாத்திமா எலிசபெத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

    • உடையார்பாளையத்தை சேர்ந்த சிறுமி சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்தார்
    • இந்திய வீராங்கனை சர்வாணிகாவை அந்த பகுதி மக்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த சர்வாணிகா (வயது 8) என்ற மாணவி ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற மாபெரும் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு மொத்தம் 11 சுற்றுகளில் 8 சுற்றுகளில் வெற்றி பெற்று உலகளவில் 3-ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். சாதனை படைத்த இந்திய வீராங்கனை சர்வாணிகா தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் உள்ளார். மேலும் அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இந்திய வீராங்கனை சர்வாணிகாவை அந்த பகுதி மக்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

    • 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளில் விராலிமலை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்
    • தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களை பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டது.

    விராலிமலை,

    விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் தனிப்பிரிவில் 100 சதவீதம் தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களுக்கும் பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அதில் கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் 75 ஆக இருந்தது. அதனை வருகிற கல்வி ஆண்டில் இது 100 சதவீதமாக உயர வேண்டும் என்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், தனி பாடப்பிரிவுகளில் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாய் இருந்த ஆசிரியர்களை பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் மாரிக்கண்ணன், சமூக ஆர்வலரும் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான பூபாலன், விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ரவி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவன் கமல் நாத் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
    • பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முருகேசன். விசைத்தறி கூடத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி.

    இவர்களது மகன் கமல் நாத். இவர் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் மாணவன் கமல் நாத் 720-க்கு 623 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    மேலும் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 561 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் மாணவன் கமல் நாத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    • மதுரை ஜீவா நகரில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சென்னை அரங்கநாதன் கலந்து கொண்டு பேசினார்.

    மதுரை

    மதுரை ஜீவா நகரில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாநகர மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சென்னை அரங்கநாதன் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் பகுதி செயலாளர் காவேரி, 79-வது வார்டு வட்ட செயலாளர் பாலாஜி மற்றும் ஜெய்ஹிந்துபுரம் சிராஜ், சதீஸ் குமார், மரக்கடை வெங்கடேஷ், உமா மகேஸ்வரன், சிவபாலன், ஆர்.சதிஸ்குமார், அக்னி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநகர இளைஞரணி அமைப்பாளர் மூவேந்திரன், பகுதி இளைஞரணியை சேர்ந்த கோகுல்நாத் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

    ×