search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 220390"

    • அ.தி.மு.க. அலுவலகம் மோதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் மற்றும் வாக்குமூலம் அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவான அறிக்கையாக தயாரித்துள்ளனர்.
    • அலுவலக மோதல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற வன்முறை மற்றும் மோதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார், மோதல் தொடர்பாக அ.தி.மு.க. அலுவலகத்துக்கு இரண்டு முறை நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அ.தி.மு.க. அலுவலகம் உடைக்கப்பட்டது தொடர்பான தடயங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்து பல்வேறு ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர்.

    இதனை தொடர்ந்து தலைமை கழக மேலாளர் மகாலிங்கத்தை நேரில் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. இருவரும் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் போலீசார் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    ஓ.பி.எஸ். ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து உள்ளனர்.

    அ.தி.மு.க. அலுவலகம் மோதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் மற்றும் வாக்குமூலம் அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவான அறிக்கையாக தயாரித்துள்ளனர். அலுவலக மோதல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது மோதல் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் உரிய விசாரணையை போலீசார் மேற்கொள்ளவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம் சாட்டி இருந்தனர். இந்த நிலையில் தான் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தற்கொலை செய்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • மாணவி வர்சா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

    சித்தோடு:

    திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் வர்சா (22).

    இவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவி வர்சா தற்கொலை செய்துகொண்டார்.

    இதையடுத்து மாணவியின் தாய் சித்ரா சித்தோடு போலீசில், தனது மகள் காதில் வண்டு புகுந்து விட்டதால் வலி ஏற்பட்டு தன்னால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்று தன்னிடம் போனில் தெரிவித்ததாகவும் கூறினார்.

    இந்த நிலையில் எனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி முதல்வர் தகவல் தெரிவித்தார் என்றும் தங்களது மகள் சாவில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் கூறியிருந்தார். அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பின்னர் தற்கொலை செய்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மாணவி வர்சா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து கோவை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் ஈரோடு சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    அவர்கள் நேற்று கல்லூரிக்கு சென்று மாணவி தற்கொலை செய்துகொண்ட அறையில் சோதனை செய்தனர். மேலும் மாணவியின் லேப்டாப் மற்றும் செல்போன்களை கைப்பற்றினர்.

    இன்று 2-வது நாளாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர். அவர்கள் மாணவி வர்சாவின் தோழிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப், செல்போனையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இறுதி ஆண்டு தேர்வில் 4 பேப்பர்களில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் அந்த மாணவர் இருந்தார்.

    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி.யில் 4-ம் ஆண்டு ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இறுதி ஆண்டு தேர்வில் 4 பேப்பர்களில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் இருந்த அவர், ஸ்கிப்பிங் கயிறு மூலம் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், ஐஐடியில் ஒடிசா மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

    கல்வி நிலைய வளாகங்களில் நடைபெறும் தற்கொலைகளை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • ஜூலை 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் விசாரணை.
    • அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையை எம்பி சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி கடந்த 7ம் தேதி நேரில் ஆய்வு நடத்தினர். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்ற சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் ராஜா பூபதி, வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையை எம்பி சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டார்.

    இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஜூலை 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது.
    • அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையை எம்பி சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி இன்று நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணையை துரிதப்படுத்த டிஜிபிக்கு உத்தரவிடமாறு சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்றுள்ள சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் ராஜா பூபதி, வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையை எம்பி சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டார்.

    • சமூக ஊடகங்கள், பத்திரிக்கை, காட்சி ஊடகங்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களை வெளியிடுகின்றன.
    • ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ புலன்விசாரணையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் 17 வயது பள்ளி மாணவி இறந்தது தொடர்பான வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு புலன்விசாரணையில் உள்ளது. விழுப்புரம் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையினர் மேற்படி வழக்கில் புலன்விசாரணை மேற்கொண்டு, மேற்படி இறப்பு சம்பந்தமாக அனைத்து கோணங்களிலும் புலன் விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கில் நியாயமான மற்றும் விரிவான புலன்விசாரணை நடைபெற்று வருகின்றது. இவ்வழக்கின் புலன்விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகின்றது.

    சமூக ஊடகங்கள், பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்கள் இது சம்பந்தமாக அவர்களது சொந்தக் கருத்துக்களையும், அறிக்கைகளையும் காணொளி காட்சிகள் வாயிலாக வெளியிட்டும், மேலும் இது சம்பந்தமாக இணையான புலன்விசாரணை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் புலன்விசாரணையை பாதிக்கும் வகையில் அமைகின்றது.

    இத்தகைய சூழ்நிலையில், புலன்விசாரணையின் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில் எந்தவிதமான பதிவு மற்றும் காணொளி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாமென்று அனைவரும் வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

    மேலும், இது தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கும், நியாயமான புலன்விசாரணை மேற்கொள்ளவும் அனைவரும் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி வேண்டிக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

    ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன்விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களுடைய வலைதள கணக்குகள் மற்றும் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வழக்கு தொடர்பாக யாருக்கேனும் உரிய தகவல் கிடைத்தால் அதனை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் உயர் அதிகாரியின் அலைப்பேசி எண்.9003848126 க்கு நேரடியாக பகிரும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இதுவரை மாணவி சரளாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
    • மாணவி சரளா படித்த பள்ளியில் இன்று 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கீழச்சேரியில் சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தெக்களூரை சேர்ந்த சரளா (வயது 17) என்பவர் பள்ளியின் விடுதியில் தங்கி 12 -ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று காலை விடுதியில் உள்ள முதல் மாடி அறையில் மாணவி சரளா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா, மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மாணவி தற்கொலை பற்றி அறிந்ததும் பள்ளி விடுதி முன்பு அவரது உறவினர்கள் மற்றும் விடுதியில் தங்கி உள்ள மற்ற மாணவிகளின் பெற்றோர் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதேபோல் மாணவியின் சொந்த ஊரான தெக்களூரிலும் கிராம மக்களின் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    மப்பேடு போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுப்படி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு உடனடியாக மாற்றப்பட்டது. போலீசார் 3 பிரிவாக பிரிந்து மாணவியுடன் தங்கி இருந்தவர்கள் மற்றும் விடுதி நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை மாணவி சரளாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்தநிலையில் மாணவியின் உடல் வைக்கப்பட்டு இருந்த திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.

    ஆஸ்பத்திரி டீன் அரசிவர்ஷன் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் நாராயண பாபு, பிரபு, வைரமாலா ஆகியோர் மாணவியின் அண்ணன் சரவணன் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தினர். இது முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மாணவி உடல் பரிசோதனை நடந்ததையொட்டி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    வடக்கு மண்டல ஐ.ஜி.தேன்மொழி, ஆயுதப்படை ஐ.ஜி.கண்ணன் மேற்பார்வையில் காஞ்சிபுரம் சரக டி.ஏ.ஜி சத்திய பிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண், தலைமையில் கண்ணீர் புகைகுண்டு வீசும் வாகனத்துடன் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    இதனால் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் பதட்டமான நிலை நிலவியது. ஆஸ்பத்திரிக்குள் வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. விடுதலை சிறுத்தை கட்சியினர், புரட்சி பாரதம் கட்சியினர் ஏராளமானோர் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

    அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். ஆஸ்பத்திரி வளாகம் முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருந்தனர்.

    இதற்கிடையே காலை 10.30 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்தது. 2½ மணிநேரம் மாணவி சரளாவின் உடலை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து உள்ளனர்.

    பிரேத பரிசோதனை முடிந்ததும் மாணவி சரளாவின் உடலை பெற்றுக்கொள்ளும்படி ஆஸ்பத்திரியில் இருந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் மாணவியின் சாவில் உள்ள மர்மம் மற்றும் இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைககள் குறித்து கேட்டு வாக்குவாதம் செய்தனர். மேலும் மாணவி சரளாவின் உடலை பெற்றுக் கொள்ள மறுத்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் மதியம் 12.30 மணி வரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாணவி சரளாவின் உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். பின்னர் மாணவியின் உடல் அவரது அண்ணன் சரவணன் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மதியம் 12.40 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் சொந்த ஊரான தெக்களூருக்கு ஆம்புலன்சு வேனில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாணவியின் உடல் நல்லடக்கம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தெக்களூரில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் மாணவி சரளா படித்த பள்ளியிலும் இன்று 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. விடுதியில் தங்கி படித்த 80 மாணவிகள் அவர்களது பெற்றோரை வரவழைத்து வீட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

    பள்ளி திறப்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கூறும்போது, நிதி உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர் பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் வழக்கின் தன்மையை பொறுத்து பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றனர். மாணவியின் கிராமமான தெக்களூரிலும் தொடர்ந்து பதட்டமான நிலை நீடித்து வருகிறது. அங்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். வெளி நபர்கள் கிராமத்துக்குள் வருவதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • திருவள்ளூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மாணவி வழக்கில் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுர சுந்தரி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் "சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி" உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சரளா பிளஸ்-2 படித்து வந்தார். அவர் பள்ளியின் விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

    இன்று காலை வழக்கம்போல் தோழிகளுடன் உணவு சாப்பிடுவதற்காக விடுதியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது மாணவி திடீரென விடுதி அறைக்கு செல்வதாக மற்ற தோழிகளுடன் கூறி விட்டு திரும்பிச் சென்றார்.

    நீண்ட நேரம் ஆனதால் விடுதி அறைக்கு சென்று பார்த்த தோழிகள், தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் திருவள்ளூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவி வழக்கில் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுர சுந்தரி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மாணவி மரண வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் டிஐஜி சத்யபிரியா கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று டிஐஜி சத்யபிரியா கூறினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் "சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி" உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம் என்பவரது மகள் சரளா (வயது17) பிளஸ்-2 படித்து வந்தார். அவர் பள்ளியின் பின்புறம் உள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

    இன்று காலை வழக்கம்போல் மாணவி சரளா சீருடை அணிந்து பள்ளிக்கு புறப்பட்டார். பின்னர் அவர் தோழிகளுடன் உணவு சாப்பிடுவதற்காக விடுதியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது மாணவி திடீரென விடுதி அறைக்கு செல்வதாக மற்ற தோழிகளுடன் கூறி விட்டு திரும்பிச் சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் மாணவி சரளா திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தோழிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து விடுதி பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் திருவள்ளூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவி மரண வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் டிஐஜி சத்யபிரியா கூறினார்.

    • கடந்த ஒரு வாரமாக நடந்த தடயவியல் குழுவினரின் ஆய்வு பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது.
    • இவர்கள் சேகரித்த தடயங்களின் கோப்புகளை, சிறப்பு புலனாய்வு குழுவுக்கும், சி.பி.சி.ஐ.டி.,க்கும் சமர்ப்பிக்க உள்ளனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தது குறித்து கடந்த 17-ந்தேதி கலவரம் வெடித்தது.

    கலவரம் தொடர்பான குற்றவாளிகளை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உதவிடும் வகையில், விழுப்புரம் மண்டல தடயவியல்துறை துணை இயக்குனர் சண்முகம் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கலவரத்தில் போராட்ட குழுவினர் எந்த வகையான ஆயுதங்களை பயன்படுத்தினர்.

    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களை ஏதேனும் பயன்படுத்தியுள்ளனரா? வெளிநபர்கள் வந்து செல்வதற்கான தடயங்களை விட்டுள்ளனரா? சி.சி.டி.வி., வீடியோ ஆதாரங்கள், கடிதங்கள் உள்ளதா? என தடயங்களை தடயவியல் குழுவினர் சேகரித்தனர்.

    கடந்த ஒரு வாரமாக நடந்த தடயவியல் குழுவினரின் ஆய்வு பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது. இவர்கள் சேகரித்த தடயங்களின் கோப்புகளை, சிறப்பு புலனாய்வு குழுவுக்கும், சி.பி.சி.ஐ.டி.,க்கும் சமர்ப்பிக்க உள்ளனர்.

    அதேபோல், கைரேகை பிரிவு அலுவலர்களின் ஆய்வு பணிகளும் நிறைவடைந்தது. ஆனால் தொடர்ந்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு அலுவலர்கள் பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன் ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேரை, கடந்த 17-ந் தேதி போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
    • கைதான 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டதையொட்டி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார்.

    இதையடுத்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. அதன்பின்னர் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன் ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேரை, கடந்த 17-ந் தேதி போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    கைதான 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டதையொட்டி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்குவிசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழுவினரும், சி.பி.சி.ஐ.டி.,போலீசாரும் பள்ளியில் தினமும் ஆய்வு மற்றும் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிறையில் உள்ள பள்ளி நிர்வாகத்தினரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    • மாணவி உடல் ஐகோர்ட்டு உத்தரவுபடி மறுபிரேத பரிசோதனை இன்று கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற உள்ளது.
    • இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த மரணத்துக்கு நீதிகேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் செய்தனர்.

    இவர்களுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கலவரமாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து இந்த மரணம் தொடர்பாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று கள்ளக்குறிச்சி வந்தனர்.

    அவர்கள் முதல்கட்ட விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மாணவி உடல் ஐகோர்ட்டு உத்தரவுபடி மறுபிரேத பரிசோதனை இன்று கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது.

    வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை நடைபெறுவதையொட்டி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பேர் கொண்ட குழுவாக சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யவந்துள்ள டாக்டர்கள் மற்றும் அங்குள்ள நிலவரங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கலவரம் நடந்த இடம், சூறையாடப்பட்ட பள்ளிக்கு சென்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    ×