search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலதிபர்"

    • வின்னர் இல்ல திருமண விழா நடந்தது.
    • ஏற்பாடுகளை சஞ்சீவி பிரியா, தொழிலதிபர் சஞ்சீவி ராஜன், பொறியாளர் சஞ்சீவி ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ்- தமிழரசி தம்பதியரின் மகள் சுயம்பு கனிக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரிப்பையூர் ஊராட்சி அம்மன்புரம் முருகன் -லதா தம்பதியரின் மகன் பொறியாளர் அர்ஜூனுக்கும் கன்னிராஜபுரம் இசக்கியம்மன் கோவில் அருகில் உள்ள மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது.

    நாராயணன்- மகாலட்சுமி, அழகு லிங்கம் -கலைச்செல்வி, நடராஜன்- வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்கராசு உறவினர்கள் கீழக்கரை மகாலட்சுமி, நளினராஜா, பாதேசுவரி, பிரேமதி தமிழரசி, ராஜாங்கம், சத்தியபிரியா, செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நித்யா, சரவணன், கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலிங்கம், ஆதிபராசக்தி, புஷ்பரதி, சுரேஷ், நடராஜன், தினேஷ் லிங்கம், வான்மதி, பிரம்ம லிங்கம், காயத்ரி.

    செவல்பட்டியைச் சேர்ந்த அருணா தேவி, ராஜவேல், சாயல்குடி வி.வி.ஆர். நகரை சேர்ந்த உமா மகேஸ்வரி, சிவஞான குருநாதன், கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரி, பால சிந்தாமணி, மதுரையைச் சேர்ந்த பிச்சப்பிள்ளை, ராஜாங்கம், ஜெயராமன், விஜி பாரதி, வேல்முருகன், ஜெயராணி, காளிராஜன், மாரி, சண்முகம்.

    பொன்னகரம் கிராமத்தைச் சேர்ந்த சரசுவதி முருகேசன், பாலசுப்பிரமணியன், அனிதா, கன்னிராஜ புரத்தைச் சேர்ந்த பாலசுந்தரி, ராஜீவ் காந்தி, சாயல்குடி வி.வி.ஆர். நகரைச் சேர்ந்த ராஜ பெருமாள், புஷ்பவள்ளி தனசேகரராஜா, செல்லின், பார்த்திபராஜா, வின்னரசி, குலசேகர ராஜா.

    கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், வைதேகி உள்ளிடட உறவினர்கள், நண்பர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சஞ்சீவி பிரியா, தொழிலதிபர் சஞ்சீவி ராஜன், பொறியாளர் சஞ்சீவி ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • துப்பாக்கி சுடுதல் போட்டியில் 1300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
    • 50 மீட்டர் ஓப்பன்சைட் பிரிவில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்றார்

    மங்கலம் :

    தமிழ்நாடு மாநில அளவிலான 47-வது துப்பாக்கி சுடுதல் போட்டி திருச்சியில் சமீபத்தில் நடைபெற்றது இதில் 1300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் , இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருப்பூர் மாவட்டம், இடுவாய் , திருமலை கார்டன் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கார்த்திக்தனபால் தனிநபர் -50 மீட்டர் ஓப்பன்சைட் பிரிவில் பங்கேற்று மாநில அளவில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார்.

    கேரளாவில் சினிமா தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த சிறுமியிடம் ‘செக்ஸ்’ சில்மி‌ஷத்தில் தொழிலதிபர் ஈடுபடும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பெரும்பாலான சினிமா தியேட்டர்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடும் போது யாரும் திருட்டுத்தனமாக செல்போனில் படம் பிடிப்பதை தடுக்கவும், சினிமா தியேட்டரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகும் காட்சிகளை தியேட்டர் ஊழியர்கள் கண்காணிப்பார்கள். கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள எடப்பால் என்ற இடத்தில் உள்ள ஒரு சினிமா தியேட் டரின் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை தியேட்டர் நிர்வாகிகள் போட்டுப்பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியிடம் 60 வயதுக்காரர் ஒருவர் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த காட்சி அதில் பதிவாகி இருந்தது. படம் தொடங்கியதில் இருந்து அவர் அந்த சிறுமிக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருந்தார்.

    அந்த சிறுமி இதுபற்றி தனது அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கூறினார். ஆனால் அந்த பெண் அதை கண்டுகொள்ளாமல் படம் பார்ப்பதில் தனது கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தார்.

    சினிமா தியேட்டரில் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி சைல்டுலைன் அமைப்பு மூலம் சங்கரன்குளம் போலீசில் தியேட்டர் நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் சிறுமியிடம் தியேட்டரில் செக்ஸ் சில்மி‌ஷம் செய்யும் காட்சி கேரளாவில் உள்ள டி.வி.யில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    மலப்புரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இந்த சம்பவம் பற்றி சொர்ணூர் டி.எஸ்.பி. முரளிதரன் விசாரணை நடத்தினார். கண்காணிப்பு காமிரா காட்சியை போலீசார் முழுமையாக போட்டுப் பார்த்த போது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்தவர் தியேட்டரில் இருந்து சொகுசு காரில் செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் மைதீன்குட்டி என்பது தெரியவந்தது. தொழில் அதிபரான அவரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான தொழில் அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி புகார் செய்தும் அதுபற்றி போலீசார் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சங்கரன்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    அந்த சிறுமியுடன் தியேட்டருக்கு வந்த பெண்ணையும் போலீசார் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். அந்த பெண் சிறுமியின் தாயாரா? அவருக்கும் சிறுமிக்கும் என்ன தொடர்பு என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில் சிறுமிக்கு தியேட்டரில் செக்ஸ் கொடுமை நடந்தது பற்றி உரிய விசாரணை நடத்தாத போலீசார் மீதும், அதனை தடுக்காத அந்த சிறுமியுடன் வந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணைய தலைவர் (பொறுப்பு) மோகன்தாஸ் உத்தரவிட்டு உள்ளார்.  #tamilnews
    ×