search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 222372"

    • இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பரோல்.
    • இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் "பரோல்". இப்படத்தை டிஆர்ஐபிஆர் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் மதுசூதனன் தயாரித்துள்ளார். இப்படத்தி இசையை ராஜ்குமார் அமல் கவனிக்க ளிப்பதிவை மகேஷ் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.

    பரோல் படக்குழு

    பரோல் படக்குழு

     

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு மற்றும் திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    பரோல் படக்குழு

    பரோல் படக்குழு

     

    இதில் பேசிய ஆர்.எஸ்.கார்த்திக் பேசியதாவது, இந்த படம் ஒரு தாய்க்கும், அவரது இரு மகன்களுக்கும் இடையிலான கதை. வட சென்னையை பற்றிய கதைகள் எப்பொழுதும் தீவிரமான மற்றும் அழுத்தமான படைப்பாக இருக்கும். அது போலவே இந்த படத்தின் உள்ளடக்கம் அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்றாக இருக்கும். இந்த படம் தியேட்டரில் வெளியாகிறது, இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. இந்த படத்தின் வெற்றி இது போன்று உள்ள படங்கள் கொண்ட கதை வெற்றி பெற ஆரம்பபுள்ளியாக இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றார்.

    மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தற்போது மகன் திருமணத்துக்கான பரோலில் வந்துள்ள லாலு பிரசாத் யாதவுக்கு 6 வாரம் ஜாமின் வழங்கி ராஞ்சி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #LaluPrasadYadav
    ராஞ்சி:

    பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.

    முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

    ராஞ்சி பிர்சா முன்டா சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கால்நடை தீவன முறைகேடு தொடர்பான நான்காவது வழக்கில் அவருக்கு சமீபத்தில் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    ஏய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து பாட்னா திரும்பிய போது

    அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அடுத்து, டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் பாட்னா ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மருத்துவர்களின் கண்கானிப்பில் உள்ளார்.

    இதனை அடுத்து, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரி அவர் ராஞ்சி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை இன்று பரிசீலித்த நீதிபதிகள் 6 வார காலம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

    ஏற்கனவே, அவரது மகன் திருமணத்தை ஒட்டி அவருக்கு சிறைத்துறை 3 நாட்கள் பரோல் வழங்கியதை அடுத்து நேற்று சிறையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. #LaluPrasadYadav
    ×