search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொண்டர்கள்"

    • சீருடை அணிந்த 118 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர்.
    • தொடர்ந்து, பந்தலடியில் ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது.

    முன்னதாக மன்னார்குடி காந்தி சாலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம், பந்தலடி, மகாமாரியம்மன் கோவில் தெரு, ருக்மணி பாளையம், தேரடி, பெரிய கடைவீதி வழியாக சென்று கீழராஜ வீதியில் முடிவடைகிறது.

    இதில் சீருடை அணிந்த 118 ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கள் அணிவகுத்து சென்றனர்.

    தொடர்ந்து, பந்தலடியில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் வி.ஜி.கே. மணி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன், வளரும் தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் பாலை.பட்டாபிராமன், ஆர்.எஸ்.எஸ். கோட்ட இணை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஆரல்வாய்மொழியில் இருந்து வாகனங்கள் அணிவகுத்து சென்றது
    • மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் கலந்துகொள்ள உற்சாக பயணம்

    நாகர்கோவில் :

    மதுரையில் இன்று அ.தி.மு.க. மாநாடு நடக்கிறது. மாநாட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண் டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதையடுத்து தொண் டர்கள் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். குமரி மாவட்டத்தில் இருந்தும் அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மதுரைக்கு சென்றனர். குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் ஏற்பாட்டில் நிர்வாகிகள் வாகனங்களில் இன்று காலை மதுரைக்கு புறப்பட்டனர்.

    இதேபோல் கன்னியா குமரி கிழக்கு மாவட்டத் துக்குட்பட்ட அகஸ்தீஸ் வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் நிர்வாகிகள் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். நாகர்கோவில் பகுதியில் இருந்து முன்னாள் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் நாஞ்சில் முருகேசன், வடக்கு மாநகர செயலாளர் ஸ்ரீலிஜா ஏற்பாட் டில் ஏராளமான நிர்வாகிகள் வாகனங்களில் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.

    குமரி மேற்கு மாவட்டம், கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதியில் இருந்து புறப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் ஆரல்வாய்மொழி யில் இருந்து ஒன்று சேர இன்று காலை மதுரைக்கு சென்றனர்.

    வாகனங்கள் அனைத் தும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றது. குமரி மாவட் டத்தில் இருந்து புறப்பட்டு சென்ற நிர்வாகிகள் பலரும் சீருடையுடன் கையில் கட்சி கொடியுடன் புறப்பட்டு சென்றனர். இன்று காலையில் மட்டுமே 500-க் கும் மேற்பட்ட வாக னங்களில் நிர்வாகிகள், பொதுமக்கள் சென்றனர்.

    ஏற்கனவே நேற்று இரவும் 150-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிர்வாகிகள் சென்று இருந்தனர். குமரி மாவட் டத்தில் இருந்து மதுரைக்கு சென்ற நிர்வாகிகளுக்கு தேவையான உணவு உள்பட அனைத்து வசதி களையும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • மதுரையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
    • உரிமைத்தொகை தகுதியானவர்களுக்கு மட்டும் என்பது ஒரு கண்ணிலே வெண்ணெய், மற்றொரு கண்ணிலே சுண்ணாம்பு வைப்பது போன்று அரசு மக்களை வஞ்சித்துள்ளது.

    திருப்பூர்:

    அ.தி.மு.க., திருப்பூர் மாநகர் மாவட்டம், வடக்கு சட்டமன்ற தொகுதி, நெருப்பெரிச்சல் பகுதிக்குட்பட்ட பாண்டியன்நகரில் உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி, மகளிரணி, பாசறை அமைத்தல் மற்றும் அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் பட்டுலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளரும், அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும், மின்கட்டணமும், குடிநீர் கட்டணமும் உயர்ந்து விட்டது. மொத்தத்தில் தமிழக மக்களை தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது. எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்படி வரும் 20-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இதேபோல் அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள், பகுதி துணை செயலாளர் மூர்த்தி, வட்ட செயலாளர்கள் கணேசன், இம்மானுவேல், நாச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கொங்குநகர் பகுதி சார்பில் பகுதி செயலாளர் பி.கே.முத்து முன்னிலையிலும், கோல்டன்நகர் பகுதி சார்பில் பகுதி செயலாளர் ஹரிஹரசுதன் முன்னிலையிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மகளிருக்கு உரிமைதொகை ரூ.1000 வழங்குவதில் தகுதியானவர்களுக்கு என்ற ஒரு புதிய அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியின் போது குடும்பப் பெண்கள் அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது அரசே ஒரு தகுதியை நிர்ணயம் செய்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொங்கலுக்கு 2 கோடியே 10 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்பட்டது.

    அதற்கு முந்தைய ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் கொரோனா நிதியும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் உரிமைத்தொகை தகுதியானவர்களுக்கு மட்டும் என்பது ஒரு கண்ணிலே வெண்ணெய், மற்றொரு கண்ணிலே சுண்ணாம்பு வைப்பது போன்று அரசு மக்களை வஞ்சித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒன்றிய செயலாளர் ஜெஸீம் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
    • அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் இருந்து மதுரையில் நடக்கிறது

    கன்னியாகுமரி :

    அ.தி.மு.க.வின் பொன் விழா எழுச்சி மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளர்.

    அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாடு குறித்து அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்குட்பட்ட பேரூர் செயலாளர்கள், ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் அஞ்சுகிராமம் பேரூர் அ.தி.மு.க. அலுவல கத்தில் நடைபெற்றது.

    அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம் தலைமை தாங்கினார். அவைத்தலை வர் தம்பித்தங்கம், பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் ராஜபாண்டியன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் பொன் விழா மாநாடு குறித்த விழிப்பு ணர்வு சுவரொட்டியை ஒன்றிய செயலாளர் ஜெஸீம் கட்சி நிர்வாகிகளிடம் வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் பேரூர் செயலாளர்கள் சிவபாலன், மணிகண்டன், வீரபுத்திர பிள்ளை, மனோகரன், ஊராட்சி பொறுப்பாளர்கள் பார்த்தசாரதி, லட்சுமணன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பகவதியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரையில் வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி நடை பெறும் அ.தி.மு.க.வின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வாகனங் களில் திரளான தொண்டர் கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    • ராமநாதபுரத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்துவோம் என்று மாவட்ட தலைவர் தரணி முருகேசன் பேட்டியளித்துள்ளார்.
    • பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளால் இந்தியா வல்லரசு நாடாக திகழ்ந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா புதிய தலைவராக தரணி முருகேசன் பொறுப் பேற்றுக் கொண்டார்.

    ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி இயற்கை வேளாண் விவசாயியும், தரணி வேளாண் ஆராய்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரும், மாவட்ட பா.ஜனதா பொருளாளருமான தரணி முருகேசனை ராமநாதபுரம் புதிய மாவட்ட தலைவராக மாநில தலைவர் அண்ணா மலை நியமித்தார். இதனை தொடர்ந்து நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தரணி முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளால் இந்தியா வல்லரசு நாடாக திகழ்ந்து வருகிறது. மத்தியில் மட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகி றது. அகில இந்திய அளவி லும் அசைக்க முடியாத சக்தியாக பா.ஜனதா விளங்கி வருகிறது.

    அதேபோல தமிழகத்தில் மாநில தலைவர் அண்ணா மலையின் செயலாற்றல் காரணமாக பா.ஜனதா எழுச்சியுடன் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது.மாநிலத்தின் கடைக்கோடி கிராமத்திலும் தாமரை சின்னமும், பா.ஜனதா கொடியும் சென்றடைந்து உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத் தில் பா.ஜனதா சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளையும் கைப்பற்ற கூடிய அள விற்கு எங்களின் கட்சிப் பணியும், செயல்பாடும் அமையும்.

    அனைத்து சமுதாய மக்களின் ஆதரவைவும் பெறுவதற்கு தீவிரமாக பணியாற்றுவோம். மூத்த நிர்வாகிகள், முன்னோடி களின் ஆலோசனையும் பெற்று அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வளர்ச்சி பாதை நோக்கி கொண்டு செல்வோம்.

    எந்த தேர்தல் நடை பெற்றாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் அளவிற்கு கட்சியை வலுப்படுத்து வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வை பாதுகாக்க தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என்று மதுரை ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பேசினர்.
    • அ.தி.மு.க. தொண்டர்கள் விஸ்வரூபம் எடுப்போம் என்பதை ஆளும் தி.மு.க.வுக்கு சவாலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் இன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மறு வடிவமாக திகழ்ந்து வருகிறார்.

    அவரது தலைமையில் இன்று அ.தி.மு.க. இயக்கம் ஒன்று பட்டுவிட்டது. இனி யாரைப் பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. அவர் தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக விரைவில் வருவார். அந்த நம்பிக்கை மக்கள் மன்றத்தில் பரவலாக ஏற்பட்டுள்ளது.

    எடப்பாடியார் மதுரைக்கு வரும் போதெல்லாம் மக்கள் எழுச்சி அதிகரித்து வருகிறது. இதை பொறுக்க முடியாத தி.மு.க. பொய் வழக்கை பதிவு செய்துள்ளது.

    உடனடியாக எடப்பாடி மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் இல்லாவிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து வீதிக்கு வந்து இந்த அரசை தூக்கி எறியும் வரை போராடுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    கடந்த 11-ந் தேதி மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மக்கள் எழுச்சி பயணத்தை இடைக்கால பொது செயலாளர் எடப்பாடியார் தொடங்கினார். இந்த எழுச்சி பயணத்தின் வெற்றியை தடுக்க தி.மு.க. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. தொடக்கம் முதலே போலீசார் நிகழ்ச்சி களுக்கு அனுமதி தராமல் மறுத்துவிட்டனர்.

    நீதிமன்றத்தில் முறையிட்டு பட்டா நிலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற்றோம். அதே நேரத்தில் தி.மு.க.வின் பி. டீம் என்று அழைக்கப்படும் சில துரோகிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அங்கு போலீசார் அனுமதி அளித்தனர். இது எந்த வகையில் நியாயம்?.

    அ.தி.மு.க. இயக்கத்தை எப்படியாவது அழித்து விடலாம். ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

    எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க. வலுவோடும் பொலி வோடும் செயல்பட்டு வருகிறது. மக்கள் தமிழகத்தின் அடுத்த முதல்வராக எடப்பாடி யாரை கொண்டு வர வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    ஆனால் ஒரு பொய்யான வழக்கை மனசாட்சியின்றி தி.மு.க. அரசு இன்றைக்கு அவர் மீது போட்டுள்ளது.யாரோ பெயர் தெரியாத, விலாசம் தெரியாத ஒருவர் கொடுத்த புகாரை ஏற்று எடப்பாடியார் மீது பொய் வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். யார் சொல்லி இவர்கள் வழக்கு போட்டார்கள்? என்றெல்லாம் எங்களுக்கு தெரியும்.

    இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் அ.தி.மு.க.வை பாதுகாக்க ஒவ்வொரு தொண்டனும் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த அரசு அ.தி.மு.க.வை சீண்டிப்பார்க்க வேண்டாம்.பழிவாங்க நினைப்பதை விட்டு விட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கி எறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ததன் காரணமாக மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க. இன்றைக்கு ஒரு பொய்யான வழக்கை பதிவு செய்திருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இதை நாம் மதுரை மண்ணில் இருந்து கண்டிக்க கடமைப்பட்டுள்ளோம். இதற்காகத்தான் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது இங்கே திரண்டிருக்கிறோம். அ.தி.மு.க. இயக்கம் சாதாரண இயக்கமல்ல. இந்த இயக்கம் தொண்டர்களால் கட்டுக்கோப்பாக கட்டமைக்கப்பட்டதாகும்.

    இந்த இயக்கத்தை அழித்து விடலாம். ஒழித்து விடலாம் என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். இதுவரை யாரும் செய்யாத ஒரு செயலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய்யான புகாரை கொண்டு வழக்குப்பதிவு செய்கிறார். எடப்பாடி பழனிசாமியும் கடந்த 4 ஆண்டுகளில் முதல்வராக இருந்து மு.க. ஸ்டாலின் மீது எந்த பொய் வழக்கையாவது போட்டாரா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    ஆளுகின்ற மமதையில் ஸ்டாலின் இதுபோன்று பொய் வழக்குகளை போட்டு வருகிறார். தி.மு.க.வுக்கு தமிழ்நாடு பட்டா போட்டு கொடுக்கப் பட்டுள்ளதா? என்பதை சிந்திக்க வேண்டும் விரைவில் மக்கள் உங்களை மாற்றுவார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் நீங்கள் செய்தது போல இனி செய்ய முடியாது. அப்போது உங்கள் நிலைமை எப்படி ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள். அ.தி.மு.க. இயக்கம் ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கும் இயக்கமாகும். இது தேன்கூடு. இந்த தேன்கூட்டில் கம்பை வைத்தால் என்னவாகும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

    அ.தி.மு.க.வை சீண்டி பார்ப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு கொடுத்த வாக்கு றுதிகளை நிறைவேற்றுங்கள். மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துங்கள் என்று எச்சரிக்கை கடமைப்பட்டுள்ளோம். இனிமேலும் அ.தி.மு.க. தலைவர்கள் மீதும், அ.தி.மு.க. மீதும் காவல்துறையை கொண்டு பொய் வழக்கை போட நினைத்தால் அ.தி.மு.க. தொண்டர்கள் விஸ்வரூபம் எடுப்போம் என்பதை ஆளும் தி.மு.க.வுக்கு சவாலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள் தான் அவர்களுக்கு வாரிசு என்றார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாநகர் மாவட்டம் பரவை பேரூர், மேற்குதொகுதி ஊராட்சி அ.தி.மு.க. ஓ.பன்னீர் செல்வம் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் எம்.பி.கோபால கிருஷ்ணன் கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், தற்போது அ.தி.மு.க.வில் ஓ பன்னீர் செல்வம் கரத்தை வலுப்படுத்த இருப்பவர்கள் உண்மையான அ.தி.மு.க. தொண்டர் அணியினர். எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பவர்கள் டெண்டர் பெற்ற அணியினர். தனக்கு கிடைக்காதது யாருக்கு கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் படைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த இயக்கம் மனிதரால் ஆரம்பிக்கப்பட்டது அல்ல. மனித புனிதர் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும் பிள்ளைகள் கிடையாது வாரிசுகள். கிடையாது. அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள் தான் அவர்களுக்கு வாரிசு என்றார். 

    கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா தொண்டர்கள் கொலையால் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம், கவர்னர் அறிக்கை கேட்டுள்ளார். #Sathasivam
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்து வருகிறது.

    கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி அமைந்த பிறகு அந்த கட்சி தொண்டர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் அரசியல் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 2 கட்சியை சேர்ந்தவர்களும் படுகொலை செய்யப்படும் செயல்களும் அரங்கேறி உள்ளது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராய் மற்றும் கண்ணூரிலும் அதிகளவு அரசியல் கொலைகள் நடந்துள்ளது.

    இந்த நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் பாபு மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர் சமேஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.


    இதனால் கண்ணூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்த கொலைகள் காரணமாக பதட்டமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர் பாபு கொலையை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக அந்த கட்சியைச் சேர்ந்த 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல பாபு கொலை தொடர்பாக 4 பேர் மீதும் பாரதிய ஜனதா தொண்டர் சமேஜ் கொலை தொடர்பாக 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா நேரடியாகவும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே அரசியல் கட்சி தொண்டர்கள் 2 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது, அதனால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் கேரள கவர்னர் சதாசிவம் அறிக்கை கேட்டுள்ளார்.

    ஏற்கனவே 6 மாதத்திற்கு முன்பு இதேபோல அரசியல் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றபோது கேரள அரசிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #KeralaCM #PinarayiVijayan #Governor #Sathasivam
    ×