search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223193"

    • கடும் பனிப்பொழிவு-முகூர்த்தம் காரணமாக உயர்வு
    • ஒரு கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தச் சந்தைக்கு தோவாளை, ஆரல்வாய்மொழி,காவல் கிணறு,புதியம்புத்தூர், மாடநாடார் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், மானாமதுரை, மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன் கோவில், ராஜபாளையம் பகுதிகளில் இருந்து மல்லி கைப்பூவும் வருகின்றன.

    சேலத்தில் இருந்து அரளி, பெங்களூரூவில் இருந்து மஞ்சள் கேந்தி, பட்டர் ரோஸ், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி போன்றவையும், ஆரல்வாய்மொழி, தோவாளை, ராஜாவூர், மருங்கூர் பகுதிகளில் இருந்து கோழிப்பூ, அரளி உள்ளிட்ட பூக்களும் தினமும் விற்பனைக்கு வருகின்றன.

    இங்கிருந்து மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமின்றி, கேரளாவுக்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன. எனவே தோவாளை சந்தை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தி ருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதே நேரம் தேவை அதிகமாக உள்ள தால் பூக்களின் விலை கிடு கிடு உயர்வை சந்தித்து உள்ளது.

    தோவாளை சந்தையில் இன்று மல்லிகைப் பூ கிலோ ரூ. 3 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ.1750-க்கும் விற்கப்பட்டது.அரளிப் பூ கிலோ ரூ.250, சேலம் அரளி ரூ.220, சம்பங்கி ரூ.125-க்கு விற்கப்பட்டன.

    மஞ்சள் கேந்தி ரூ.60, சிகப்பு கேந்தி ரூ.70, மரிக்கொழுந்து ரூ.150, பட்டர் ரோஸ் ரூ.150,கோழிப்பூ ரூ.50, துளசி ரூ.50 என விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்திற்கு பூக்களின் வரத்து குறைவும், அதிக அளவிலான முகூர்த்த ங்கள் நாளை இருப்பதுமே காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 அதிகரித்துள்ளது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.5,023-க்கும், ஒரு சவரன் ரூ.40,376-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.40,184-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.40,376-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,023-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.5,047-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.71.30-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து ரூ.72.5-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.72,500-க்கு விற்பனையாகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்தது.
    • ஒரே நாளில் கிராமுக்கு ரூ.4-ம், சவரனுக்கு ரூ.32-ம் குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று கிராம் ரூ 4,925-க்கு விற்பனை ஆனது. இன்று ரூ.4,921-க்கு விற்பனை ஆகிறது. நேற்று பவுன் ரூ.39,400-க்கு விற்பனை ஆன தங்கம் இன்று ரூ.39,368 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.4-ம், பவுனுக்கு ரூ.32-ம் குறைந்துள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிராம் ரூ.67.50-க்கும் கிலோ ரூ. 67,500-க்கும் விற்பனை ஆகிறது.

    • அதிகளவில் காலா மீன், வாவல், நிலக்கால் நண்டு, புள்ளி நண்டு, இறால் உள்ளிட்ட மீன்கள் கிடைத்துள்ளன.
    • மீன்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதா ரண்யம் கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

    தற்போது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரையில்யில் தாங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

    காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 10 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் நேற்று இரவு மீன் பிடிக்க சென்ற கோடியக்கரை மீனவர்களது வலையில் அதிக அளவில் காலாமீன், வாவல், நிலக்கால் நண்டு, புள்ளி நண்டு, இறால், உள்ளிட்ட மீன்கள் கிடைத்துள்ளன.

    இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் காலா மீன் கிலோ ரூபாய் 500, வாவல் மீன் ரூ. 700, இறால் ரூ. 200,நீலக்கால் நண்டு ரூ. 700, புள்ளிநண்டு ரூ.200க்கும், ஏலம் போயின.

    ஒரே நாளில் 5 டன்மீன்கள் கிடைத்ததாலும் அதற்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மீன்களை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஐஸ் வைத்து அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

    • வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ. 67 ஆயிரத்து 500 ஆக உள்ளது.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.39 ஆயிரத்து 400-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 925 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ. 67 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்படுகிறது.

    • முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 545 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
    • பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.98 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.107 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் தொடர்ந்து விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதால் இங்கும் மாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

    இதை அடுத்து முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 545 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையே பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.98 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.107 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

    • வெளிநாட்டுக்கு முட்டை ஏற்றுமதி உயர்ந்துள்ளதாலும், நுகர்வு அதிகரித்துள்ளதாலும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
    • ரூ.102-க்கு விற்கப்பட்ட முட்டை கோழி விலை, ரூ.5 உயர்த்தி ரூ.107 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதை அடுத்து முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது.

    இதனால் 535 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. வெளிநாட்டுக்கு முட்டை ஏற்றுமதி உயர்ந்துள்ளதாலும், நுகர்வு அதிகரித்துள்ளதாலும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

    நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

    சென்னை-575, ஹைதராபாத்-530, விஜயவாடா-529, பார்வாலா-538, மும்பை-590, மைசூர்-550, பெங்களூரு-550, கொல்கத்தா-593, டெல்லி-560 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கோழி உற்பத்தி விலை நிர்ணயம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    ரூ.102-க்கு விற்கப்பட்ட முட்டை கோழி விலை, ரூ.5 உயர்த்தி ரூ.107 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழியில் எவ்வித மாற்றமும் செய்யாமல் ஒரு கிலோ ரூ.98 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.4931-க்கும், ஒரு சவரன் ரூ.39,448-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த 16-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.39,760-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் நேற்று 1 பவுன் ரூ.39,168-க்கு விற்றது.

    இந்த நிலையில் இன்று தங்கம் பவுனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. இன்று 1 பவுன் தங்கம் ரூ.39,448-க்கு விற்கப்படுகிறது. தங்கம் 1 கிராம் நேற்று ரூ.4896-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரு.4931-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ரூ.68.20-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.68,200-க்கு விற்பனையாகிறது.

    • கடந்த வாரம் ரூபாய் 20-க்கும் விற்கப்பட்ட தக்காளி நேற்று 16 கிலோ தக்காளி பெட்டி 60 ரூபாய்க்கு விற்பனையானது.
    • ஒரு கிலோ தக்காளி ரூ.4க்கும் குறைவாக விற்கப்பட்டது.

    குனியமுத்தூர்:

    மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாச்சிபாளையத்தில் காய்கறி கமிஷன் மண்டிகள் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.

    இந்த மார்க்கெட்டிற்கு நாச்சிபாளையத்தை சுற்றியுள்ள வழுக்குபாறை, வேலந்தாவளம், கண்ணமநாயக்கனூர், திருமலையம் பாளையம், பிச்சனூர், சொக்கனூர், அரிசிபாளையம், பாலத்துறை, மதுக்கரை போன்ற பகுதியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வருகின்றனர். குறிப்பாக தக்காளி அதிகளவில் வருகிறது.

    கடந்த சில தினங்களாக மார்க்கெட்டில் தக்காளியின் விலை கடுமையாக குறைந்தே காணப்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனைஅடைந்தனர்.

    நேற்றும் விவசாயிகள் வழக்கம் போல் மார்க்கெட்டிற்கு தக்காளிகளை கொண்டு வந்தனர். கடந்த வாரம் ரூபாய் 20-க்கும் விற்கப்பட்ட தக்காளி நேற்று 16 கிலோ தக்காளி பெட்டி 60 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ தக்காளி ரூ.4க்கும் குறைவாக விற்கப்பட்டது.

    விலை மிகவும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் வேறு வழியின்றி தக்காளியை சாலையோரம் வீசி சென்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இவ்வளவு குறைவான விலைக்கு தக்காளி விற்கும் போது, லோடுமேன் இறக்கு கூலி மற்றும் கமிஷன் ஆகியவை கொடுக்க முடியவில்லை. இந்த காரணத்தால் வேறு வழியின்றி கீழே கொட்டி விட்டு செல்கிறோம் என்றனர்.

    நாச்சிபாளையம் பகுதியில் தக்காளிகள் பெட்டி பெட்டியாக கீழே கொட்டப்பட்டு செல்வதால், விவசாயிகள் மட்டுமன்றி அப்பகுதி மக்களும் கவலையில் உள்ளனர்.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை கிராம் ரூ 67.20-ல் இருந்து ரூ.67 ஆகவும் கிலோ ரூ. 67,200-ல் இருந்து ரூ. 67 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து உள்ளது. நேற்று கிராம் ரூ 4,950-க்கும் பவுன் ரூ 39,600-க்கும் விற்பனை ஆனது. இன்று இது கிராம் ரூ. 4,951 ஆகவும், பவுன் ரூ. 39,608 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராம் ஒரு ரூபாயும், பவுன் 8 ரூபாயும் அதிகரித்து உள்ளது.

    ஆனால் வெள்ளி விலை குறைந்து இருக்கிறது. கிராம் ரூ 67.20-ல் இருந்து ரூ.67 ஆகவும் கிலோ ரூ. 67,200-ல் இருந்து ரூ. 67 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது. கிராம் 20 காசுகளும் கிலோ ரூ.200-ம் குறைந்து இருக்கிறது.

    • நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ஒரு கிலோவுக்கு மேலும் ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். இதனால் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.106 ஆக அதிகரித்து உள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் கடந்த 14-ந் தேதி கறிக்கோழி ஒரு கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களில் படிப்படியாக ரூ.10 உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சபரிமலை சீசன் தொடங்கி இருப்பதால் கறிக்கோழி உற்பத்தியை 20% குறைத்துள்ளது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

    முட்டை கொள்முதல் விலை 535 காசுகள் ஆகும். முட்டை கோழி விலை கிலோ ரூ.102 ஆகவும் நீடிக்கிறது. அதன் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.1300 குறைந்து ரூ.67 ஆயிரத்து 200 ஆக உள்ளது.

    சென்னை:

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39 ஆயிரத்து 600-க்கும் விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 950 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.1300 குறைந்து ரூ.67 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.20-க்கு விற்கிறது.

    ×