search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223226"

    • தலை, கை மற்றும் வலது கால் ஆகிய இடங்களில் வெட்டினர்.
    • வழக்கு மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

     மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த ஜாகீர்உசேன்.

    இவர் தனது வாழை தோட்டத்திற்கு செல்வதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி காலை 6.30 மணிக்கு மைதானம் மாரியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தியாகு, சக்திவேல் ஆகியோர் ஜாகீர்உசேனிடம் மது குடிக்க பணம் கேட்டனர். இதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது திடீரென சக்திவேல், தியாகு இருவரும் ஜாகீர் உசேனை தகாத வார்த்தைகளால் பேசி வாழை இலை அறுக்கும் கத்தியால் ஜாகீர் உசேனின் தலை, கை மற்றும் வலது கால் ஆகிய இடங்களில் வெட்டினர். இதுதொடர்பாக ஜாகீர் உசேன் கொடுத்த புகாரின் பேரில் அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சென்னகேசவன் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார்.

    இந்த வழக்கு மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி சிவகுமார் தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட தியாகுவிற்கு 4 ஆண்டு சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், சக்திவேலிற்கு 3 ஆண்டு சிறை தண்டணையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து அவர் தீர்ப்பு கூறினார்.  

    • 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • 2 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் ஜோன்ஷா (வயது 26). டிரைவர். சம்பவத்தன்று இவரும் கிட்டுப்பிள்ளை வீதயை சேர்ந்த பஸ் டிரைவர் ஜெயராம் (36) ஆகியோர் அந்த பகுதியில் உள்ள சிக்கன் கடை அருேக வைத்து மது குடித்தனர்.

    அப்போது ஜோன்ஷாவிடம் ஜெயராம் நீ முத்துராம் என்பவருடன் பழக கூடாது என கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயராம் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து ஜோன்ஷாவின் கழுத்து, கை ஆகிய பகுதிகளில் வெட்டினார்.

    அப்போது ஜோன்ஷா, ஜெயராமிடம் இருந்து அரிவாளை பறித்து அவரை திருப்பி வெட்டினார். இதில் அவருக்கு இடுப்பு பகுதியில் வெட்டு விழுந்தது. சிறிது நேரத்தில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து 2 பேரும் பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் 2 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • அனைத்து ரக வாழைத்தார்க–ளுக்கும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
    • விஷேச நாட்களையட்டி கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பொள்ளாச்சி

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் வாரத்தில் 2 நாட்கள் வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனை வாங்குவதற்காக கேரள, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

    அவ்வப்போது பருவமழையால், வெளி மாவட்டங்களில் இருந்து குறைவான எண்ணிக்கையிலேயே வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.

    கடந்த மாதம் துவக்கத்தில் வரத்து குறைவாக இருந்தாலும், முகூர்த்த நாட்கள் இல்லாததால் வாழைத்தார் விற்பனை மந்தமாக இருந்துள்ளதுடன், குறைவான விலைக்கு விற்பனையானது.

    தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை விழா களைகட்ட தொடங்கியுள்ளது. இதனால் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து வாழைத்தார் வாங்கி செல்கிறார்கள். இதனால் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது.

    கடந்த வாரத்திலிருந்து முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து இருந்ததால், அனைத்து ரக வாழைத்தார்க–ளுக்கும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று நடந்த ஏலத்தின்போது, சுற்று–வட்டார பகுதியிலிருந்து சுமார் 1900 க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

    8-ந் தேதி ஓணம் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வருவதால் அனைத்துரக வாழைத்தார்களும் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது.

    இதில்செவ்வாழைத்தார் ரூ.55க்கும், பூவந்தார் ரூ.40க்கும், சாம்ராணி ரூ.40க்கும், மோரீஸ் ரூ.40க்கும், ரஸ்தாளி ரூ.45க்கும், நேந்திரன் ஒருகிலோ ரூ.45க்கும், கேரள ரஸ்தாளி ஒருகிலோ ரூ.50க்கும் என, கூடுதல் விலைக்கு விற்பனையானது.

    அதுபோல்ல, நேற்று தேர்நிலையில் உள்ள மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாழை இலைகட்டுகள், தொடர்ந்து விஷேச நாட்களையட்டி கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த 5 வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கோவை, -

    பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலை யாண்டிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 40). தொழிலாளி. இந்தநிலையில் இவர் கடந்த 5 வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

    சோமசுந்தரம் எப்போதும் வீட்டின் அருகே உள்ள பகவதியம்மன் கோவில் மண்டபத்திற்கு சென்று தூங்குவது வழக்கம். சம்பவத்தன்று சோமசுந்தரம் வழக்கம்போல தூங்குவதற்கு மண்டபத்திற்கு சென்றார். அங்கு தனது நண்பர் பூபதி என்பவருடன் பேசி கொண்டு படுத்திருந்தார்.

    அப்போது வாலிபர் ஒருவர் அங்கு மதுபாட்டிலுடன் வந்தார். பின்னர் மண்டபத்தில் அமர்ந்து மதுகுடித்தார். இதனை பார்த்த சோமசுந்தரம் அந்த வாலிபரிடம் கோவில் மண்டபத்தில் மதுகுடிக்க கூடாது என கண்டித்தார்.

    கொலை வழக்கு

    இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கல்லை எடுத்து சோமசுந்தரத்தின் தலையில் தாக்கினார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இதுகுறித்து கோட்டூர் போலீசார் அடிதடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த ராம்குமார் (29) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சோமசுந்தரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரவிச்சந்திரன் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(38). காய்கறி வியாபாரி. திருமணமாகவில்லை. சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென சுருண்டு கீேழ விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக ரவிச்சந்திரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ஷாஜகான் அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார்.
    • 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் ஷாஜகானை ஆற்றில் தேடி வருகின்றனர்.

    கோவை:

    பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 34). கூலி தொழிலாளி. இவர் தனது மாமா சாதிக் என்பவருடன் நேற்று அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார்.

    அப்போது ஷாஜகானின் காலணி ஆற்றில் விழுந்தது. உடனே அவர் ஆற்றில் குதித்து காலணியை எடுக்க சென்றார். அப்போது அவர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அதன் பின்னர் அவர் ஆற்றில் இருந்து வெளியே வரவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சாதிக் வீட்டுக்கு சென்று ஷாஜகானின் தாயாரிடம் நடந்தவற்றை கூறினார். உடனே அவர் ஆனைமலை போலீஸ் நிலையம் சென்று புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காலணி எடுக்க ஆற்றில் குதித்த ஷாஜகானை தேடி வந்தனர். இரவு நேரம் ஆனதால் நேற்று தேடும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    இன்று காலை மீண்டும் 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் ஷாஜகானை ஆற்றில் தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்க பணம், 1½ பவுன் தங்க கம்மல் கொள்ளை போனது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மானூர் அருகே உள்ள அய்யப்பா காலனியை சேர்ந்தவர் லட்சுமண குமார் (வயது 38). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கிணத்துக்கடவு கோதவாடி அருகே உள்ள தனது தோட்டத்துக்கு ெசன்றார். அப்போது லட்சுமண குமார் வீட்டில் உள்ள முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்க பணம், 1½ பவுன் தங்க கம்மல் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய லட்சுமணகுமார் வீட்டின் கதவு உடைப்பட்டு பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள குப்புச்சி பாளையத்தை சேர்ந்தவர் அய்யாலுசாமி (48). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது கடையின் பூட்டை உடைத்து 4 பேர் உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் கல்லாவில் இருந்த ரூ.2,300 ரொக்க பணம், 5 கிலோ அரிசி மூட்டை 2 ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது அய்யாலுசாமி கடைக்கு வந்தார். அவர் கடையில் 4 பேர் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்தார்.

    மற்ற 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அவரை பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஊட்டி காந்தலை சேர்ந்த வினித்குமார் (20) என்பது தெரிய வந்தது.

    பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சபரி, இமான், ஹரீஷ் ஆகியோரை ேதடி வருகிறார்கள்.  

    • பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடக்கிறது.
    • தனியார் கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியில் ஒருங்கிணைந்த ேகாவை மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று மாலை பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    இன்று காலை கோவை ஈச்சனாரி பகுதியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    அதன்பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு பொள்ளாச்சிக்கு சென்றார்.

    மாலை 5 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து தி.மு.க. கட்சி விழா நடைபெறும் ஆச்சிபட்டி திடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார்.

    50 ஆயிரம் பேர்

    இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணைய உள்ளனர். அதன்பிறகு முதல்-அமைச்சர் கட்சியில் இணைந்தவர்களை வாழ்த்தி, விழாவில் பேசுகிறார்.

    இதனையொட்டி அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் நிகழ்ச்சிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேராக பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திருப்பூர் செல்கிறார்.

    நாளை காலை 10 மணிக்கு திருப்பூரில் அவர் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மதியம் ஒரு மணிக்கு அங்கிருந்து ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் செல்கிறார். அங்கு கள்ளிப்பட்டியில் மாலை 5 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலையை திறந்துவைக்கிறார்.

    நாளை மறுநாள் (26-ந் தேதி) காலை 10.45 மணிக்கு பெருந்துறையில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். அங்கிருந்து மீண்டும் கோவை வரும் மு.க.ஸ்டாலின் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அன்று இரவு அவர் சென்னை திரும்புகிறார்.

    • பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் சுரங்க கால்வாய்கள் மற்றும் திறந்த வெளிக்கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
    • 12 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்ட மின்உற்பத்தி 21 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி

    பி.ஏ.பி திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளது.

    இந்த பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் சுரங்க கால்வாய்கள் மற்றும் திறந்த வெளிக்கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

    9 அணைகள் திட்டத்தில் இருந்தாலும் ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகளில் இருந்து மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆழியாறு அணையிலிருந்து 50 ஆயிரம் ஏக்கரும், திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.

    பி.ஏ.பி திட்டத்தில் அதிக கொள்ளவு கொண்டது பரம்பிக்குளம் அணை. இந்த அணை நிரம்பிவிட்டால் ஓராண்டுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்காது.

    திருமூர்த்தி அணைக்கும், ஆழியாறு அணைக்கும் பரம்பிக்குளம் அணையிலிருந்து தூணக்கடவு அணை வழியாக தண்ணீர் வழங்கப்படும்.

    திருமூர்த்தி அணையிலிருந்து 3.77 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுவதால் அந்த அணைக்கு தேவையான தண்ணீர் பரம்பிக்குளம் அணையிலிருந்து வழங்கப்படுகிறது. இதற்கு 39.3 கி.மீ நீளம் உடைய காண்டூர் கால்வாய் பயன்படுகிறது. காண்டூர் கால்வாயில் அதிக பட்சமாக 1000 கன அடிவரை தண்ணீர் கொண்டு செல்லமுடியும்.

    கடந்த மே மாத இறுதியில் இருந்து காண்டூர்கால்வாயில் புணரமைப்பு பணிகள் நடைபெற்றுவந்ததால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லமுடியவில்லை.

    இந்நிலையில், கடந்த புதன்கிழமை காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பரம்பிக்குளம் அணையிலிருந்து வழங்கப்படும் தண்ணீர் தூணக்கடவு அணை வழியாக சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையத்தை அடைகிறது.

    சர்க்கார்பதி மின் உற்பத்திநிலையத்தில் மின் உற்பத்திக்கு பிறகு காண்டூர்கால்வாயில் செல்லும் தண்ணீர் திருமூர்த்தி அணையை அடைகிறது. கடந்த புதன்கிழமை திறக்கப்பட்ட தண்ணீர் வெள்ளிக்கிழமை 850 கன அடியாக உயர்த்தப்பட்டதால் 12 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்ட மின்உற்பத்தி 21 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது. 

    • பொள்ளாச்சியில் காய்கறி மார்கெட்கள் உள்ளது.
    • ய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டடு விற்பனையாகி வருகிறது.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் காய்கறி மார்கெட்கள் உள்ளன இந்த மார்க்கெட்டு களுக்கு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோபா லபுரம், ஆனை மலை, வேட்டைக்காரன்புதூர் போன்ற உள்ளூர் பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டடு விற்பனையாகி வருகிறது.

    தக்காளி, கத்தரி, வெண்டை, பூசணி, பச்சை மிளகாய் போன்றவை பொள்ளாச்சி சுற்றுப்பகுதி களிலேயே உற்பத்தி நடைபெற்று வருகிறது. கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், காளிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் குளிர்ச்சியான தட்பவெட்ப நிலையில் உள்ள பகுதிகளில் நன்கு வளரும் என்பதால் ஊட்டி, மேட்டுப்பாளையம், குன்னூர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதனால், அந்த பகுதிகளில் இருந்து பொள்ளாச்சிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக அளவில் பீன்ஸ், கேரட் பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு வரத்து இருந்தது. ஏப்ரல், மே மாதங்களில் கேரட் ரூ.24 முதல் 30 வரையிலும் விற்கப்பட்டது. ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்ததால் பீன்ஸ், கேரட் விவசாயம் பாதிக்கப்பட்டது.

    இதனால், ஜூலை மாதத்தில் இருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு பீன்ஸ், கேரட் வரத்து குறைந்தது. இதனால், விலை அதிகரித்து ரூ.90 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

    • நல்லூரில் இருந்து பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும் என 2 பேர் கூறினர்.
    • 2 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து முருகேசனின் தலையில் குத்தினர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45).

    ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த போது 2 பேர் வந்தனர். அவர்கள் நல்லூரில் இருந்து பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும் என கூறினர். இதனையடுத்து முருகேசன் அவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றார். பாலக்காடு ரோட்டில் 2 பேரையும் இறக்கி விட்டார். அப்போது அவர்களிடம ஆட்டோ பயண கட்டணம் ரூ.100 கொடுக்கும்படி கேட்டார்.

    ஆனால் அவர்கள் கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து முருகேசனின் தலையில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அந்த 2 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முருகேசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி மேற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    முருகேசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான 2 பேரை தேடி வருகிறார்கள். 

    • சிறந்த பராமரிப்புக்காக கேரளாவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது
    • டாப்சிலிப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.

    பொள்ளாச்சி:

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலாந்தி வனச்சரகம் கோழிகமுத்தியில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது.

    இந்தக் காப்பகத்தில் கலீம் உள்ளிட்ட கும்கி யானைகள் மற்றும் பெண் யானைகள், வயதான யானைகள் குட்டி யானைகள் என 26 யானைகள் உள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மலசர் இனத்தவர்களால் பயிற்சி அளிக்கப்பட்ட யானைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் யானை - மனித மோதல் ஏற்பட்ட பகுதிகளில் கும்கிகளாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் டாப்சிலிப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. சமவெளியில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய யானைகள் பிடிக்க ப்பட்டு,கோழிகமுத்தி முகாமில் சிறப்பாக பழக்கப்படுத்தபட்ட பின்னர் கும்கியாக மாற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதில் மலசர் இனத்தவர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

    இந்தியா விலேயே யானைகள் பராமரிப்பில் சிறந்து விளங்கும் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள மாவூத்கள் மற்றும் காவடிகள் ஆகியோரை கவுரவிக்கும் விதமாக யானைகளை பராமரிக்கும் பணியில் உள்ள மலசர் இன மக்களுக்கு ''கஜ் கவ்ரவ்'' விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது.

    இந்நிலையில் இன்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாப்ஸ்லிப் யானை பாகங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

    கலீம் யானையை பராமரிக்கும் மணி, தேவி யானையை பராமரிக்கும் பழனிச்சாமி, சுயம்பு யானையை பராமரிக்கும் பிரசாத் உட்பட பலர் சேர்ந்து விருதை பெற்றனர்.

    இந்த விழாவில் ஆனைமலை புலிகள் காப்பக வனப் பாதுகா வலர் மற்றும் கள இயக்குனருமான ஆன ராமசுப்பிரமணியம், உலாந்தி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ×