search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223230"

    • கோர்ட்டில் சரண் அடைந்த 3 பேரை காவலில் எடுத்து விசாரணை
    • துப்பாக்கியை காட்டி 20 பவுன் நகையை கொள்ளையடித்து காரில் சென்றனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்த வர் முகமது உமர் சாகிப் (வயது 55). வெளி நாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர் தற்போது இங்கேயே வசித்து வருகிறார்.

    இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று ஜாஸ்மின், மகள் மற்றும் மாமியாருடன் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார். வீட்டில் முகமது உமர் சாகிப் மட்டும் இருந் தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் முகமது உமர் சாகிப்பிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி வீட்டிலிருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு காரில் சென்றனர்.

    இதுகுறித்து முகமது உமர்சாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார். ெகாள்ளை தொடர்பாக கோவில்பட்டியை சேர்ந்த சார்லஸ், இடலாக்குடியைச் சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த ரஹீம், அழகிய பாண்டியபுரத்தைச் சேர்ந்த கவுரி, இருளப்புரத்தைச் சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன்புகாரி, மேல சரக்கல்விளையை சேர்ந்த தர்வீஸ்மீரான் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டது.

    கொள்ளைக்கு பயன்ப டுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளை யர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டது. தனி படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர்.

    இந்த நிலையில் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் ஜெயிலில் அடைக் கப்பட்டனர். தலைமறை வாகி இருந்த 4 பேரை தேடி வந்த நிலையில் ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, தர்வீஸ் மீரான் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜே.எம். 2 கோர்ட்டில் சரண டைந்தனர். இவர்களை நீதிபதி ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, தர்வீஸ் மீரான் ஆகிய 3 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கோட்டார் போலீசார் 3 பேரையும் காவலில் எடுத்தனர். அவர் களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தலைமறைவாகி இருந்த முக்கிய குற்றவாளி சார்லசை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கோவில்பட்டியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த சார்லஸை போலீ சார் சுற்றி வளைத்து பிடித்த னர். பிடிபட்ட சார்லஸை நாகர்கோவிலுக்கு கொண்டு வந்து விசாரித்து வரு கிறார்கள். கைது செய் யப்பட்ட சார்லசுக்கு குமரி மாவட்டத்தில் வேறு திருட்டு வழக்கு களில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தி லும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    • அடுத்தடுத்து 3 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.
    • கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நகரில் நகை பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் நகைகளை பறித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் புஷ்பவள்ளி(வயது55). இவர் சம்பவத்தன்று திருப்பரங்குன்றத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புஷ்ப வள்ளி அரசு பஸ்சில் சென்றார். அங்குள்ள புளியமரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் மண்டபத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் புஷ்பவள்ளியை மறித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    மற்றொரு சம்பவம்

    நாகமலை புதுக்கோட்டை மேலக்குயில்குடியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சத்யா(33). இவரும் சம்பவத்தன்று திருப்பரங்குன்றத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    சன்னதி தெரு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சத்யா வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு தப்பினர். அதில், 2¾ பவுன் நகை இருந்தது. இந்த 2 நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை டி.ஆர்.ஓ. காலனியை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி தனபாண்டி (வயது37). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கணவருடன் வெளியே புறப்பட்டார். முத்தமிழ்நகர் 2வது தெருவில் சென்று கொண்டி ருந்தபோது அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென மறித்து தனபாண்டி அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்
    • தனியார் கல்லூரியில் பேராசிரியை யாக பணிபுரிந்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஸ். இவரது மனைவி மெர்லின் டயானா (வயது 36). இவர் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியை யாக பணிபுரிந்து வருகிறார்.

    தற்போது கல்லூரி விடு முறை என்பதால், மெர்லின் டயானா ஊருக்கு வந்தி ருந்தார். நேற்று இரவு அவர், கணவருடன் மோட் டார் சைக்கிளில் மார்த் தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    பின்னர் அங்கிருந்து கணவன்-மனைவி இருவரும் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப் பட்டனர். மார்த்தாண் டம் அரசு மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலை யில் சென்ற போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் வந்தவர்கள், திடீரென மெர்லின் டயானா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சங்கிலியை பிடித்துக் கொண்டு கூச்ச லிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இதற்கிடையில் மெர்லின் டயானாவின் கூச்சல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்த பகுதி வர்த்தக நிறு வனத்தினர் திரண்டனர். அவர்கள், மர்மமனிதர்கள் சென்ற பாதையில் வாகனங்களில் சென்று பார்த்தனர்.

    ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து மார்த் தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 16 பவுன் நகை பறிபோனதாக போலீ சாரிடம் மெர்லின் டயானா புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரு கின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மார்த்தாண்டம் நகரில், கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பிராந்தகம் அருகே தம்ம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 33) . லாரி டிரைவர். வீட்டின் பின்புறத்தில் புதிதாக மாடி வீடு கட்டி வருகிறார்.
    • திடீரென குடிசை வீட்டுக்குள் இருந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்து கரும்புகை வேகமாக வர ஆரம்பித்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பிராந்தகம் அருகே தம்ம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 33) . லாரி டிரைவர். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள், தாய், தந்தையுடன் அப்பகுதியில் உள்ள தகரம் வேயப்பட்ட குடிசை வீட்டில் குடியிருந்து வருகிறார். வீட்டின் பின்புறத்தில் புதிதாக மாடி வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுவதற்கான பொருட்கள் வாங்குவதற்காக குமார் வெளியில் சென்று விட்டார்.

    இந்நிலையில் திடீரென குடிசை வீட்டுக்குள் இருந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்து கரும்புகை வேகமாக வர ஆரம்பித்தது. உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரம் நிறுத்தப்பட்டது.அதை பார்த்த குமாரின் மகன் இதுகுறித்து அவரது தந்தைக்கு தகவல் தெரி வித்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்து பார்த்தபோது குடிசை வீட்டில் தீ வேகமாக எரிந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள் ஓடி வந்து தீயைஅணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடிய வில்லை.

    இது குறித்து வேலா யுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூரை வீட்டில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் குமார் மாடி வீடு கட்டுவதற்காக வீட்டில் வைத்திருந்த ரூ.5 1/2 லட்சம் பணம், 12 பவுன் தங்கச் செயின், வீட்டு பத்திரம், வெள்ளி கொலுசு, வெள்ளி அரணா மற்றும் பல்வேறு ஆவணங்கள், துணிமணி கள், உணவு பொருட்கள், பாத்திரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து ரூ. 12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாயின . இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நந்தனத்தை சேர்ந்த பிரபீர் ஷேக் என்பவர் திருடியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
    • இருவரை மாம்பலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சென்னை:

    சென்னை தி.நகர் சவுத் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 2 கிலோ 46 கிராம் மதிப்பிலான தங்க நகைகளை கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நந்தனத்தை சேர்ந்த பிரபீர் ஷேக் என்பவர் திருடியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் மாதம் 50 சவரன் நகைகளை கடையில் வேலை செய்த பிரபீர் ஷேக் மற்றும் அவரது நண்பர் பாலமுருகன் ஆகிய இருவர் திருடியதாக கொடுத்த புகாரில் அப்போதே பிரபீர் ஷேக், பாலமுருகன் ஆகிய இருவரை மாம்பலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பிரபீர் ஷேக் மீது மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் மாதத்தில் நாங்கள் தவறாக புகார் அளித்துவிட்டதாகவும் ஆனால் தற்போது 2 கிலோ 46 கிராம் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் நகை கடை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • வீரம் கொண்ட அம்மன் கோவிலின் நிர்வாகியாக பாலசுப்பிரமணியன் என்பவர் இருந்து வருகிறார்.
    • திருட்டு குறித்து பாலசுப்பிரமணியன் ஊத்துமலை போலீசில் புகார் அளித்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள சண்முகாபுரம் கிராமத்தில் வீரம் கொண்ட அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக அதே ஊரில் கீழத்தெருவில் வசிக்கும் பாலசுப்பிர மணியன்(வயது 53) என்பவர் இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் கோவிலுக்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 4 கிராம் எடை கொண்ட தங்கப்பொட்டு திருட்டு போயிருந்தது.

    இதுதொடர்பாக பாலசுப்பிரமணியன் ஊத்துமலை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • வீடு புகுந்து பெண்ணிடம் நகை திருடப்பட்டது.
    • இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள வலங்காங்குளம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(40). அரசு பஸ் மெக்கானிக். இவரது மனைவி வனிதா(35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டாமல் வனிதா கீழ் பகுதியிலும், கனகராஜ் மாடியிலும் தூங்கியுள்ளனர். அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் வனிதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர்.

    அப்போது வனிதா கூச்சலிட்டதை கேட்டு கனகராஜூம், அக்கம் பக்கத்தினரும் வந்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணத்துக்கு ஆசைப்பட்டு கொள்ளை கும்பலுடன் இணைந்த கவுரி
    • தலைமறைவாகி உள்ள மற்ற 4 பேரையும் பிடித்தால் தான் மேலும் பல தகவல்கள் தெரியவரும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்தவர் முகமது உமர் சாகிப் (வயது 55). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர், தற்போது இங்கு வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று முன்தினம் மாலையில் ஜாஸ்மின் அவரது மகள் மற்றும் மாமியார் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றனர். வீட்டில் முகமது உமர் ஷாகிப் மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது வீட்டிற்குள் புகுந்த கும்பல் முகமது உமர் சாஹிப்பை துப்பாக்கியை காட்டி மிரட்டினார்கள். பின்னர் அவரை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்தனர். அப்போது வீட்டிற்கு வந்த ஜாஸ்மினை பார்த்து, கொள்ளை கும்பல் அங்கி ருந்து தப்பி ஓடி விட்டது. கொள்ளை கும்பல் வந்த காரையும், கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து முகமது உமர் ஷாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள். பொதுமக்கள் பிடியிலிருந்து கொள்ளை யனையும், காரையும் மீட்டனர். பிடிபட்ட கொள்ளையனிடம் விசாரணை நடத்தியபோது கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் குறித்து முழு தகவலையும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீ சார் கோவில்பட்டியை சேர்ந்த சார்லஸ், இட லாக்குடியை சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த மீரான், இடலாக்குடியை சேர்ந்த ரஹீம், அழகிய பாண்டிய புரத்தை சேர்ந்த கவுரி, இருளப்பபுரத்தை சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன் புகாரி ஆகிய 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    கொள்ளை வழக்கில் தொடர்புடைய ரஹீம், அமீர், கவுரி 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வர்களிடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ரஹீம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    கோட்டார் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் ரஹீம் பெயர் இடம் பெற்றுள்ளது. அமீர் கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டு உள்ளார். தலைமறை வாகியுள்ள மற்ற 4 பேரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து போலீஸ் விசார ணையில் பரபரப்பு தகவல் கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட ரஹீம் வீட்டிற்கு கோவில்பட்டியை சேர்ந்த சார்லஸ் வந்து சென்றுள்ளார். அமீருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் சீக்கிரம் பணக்காரராக என்ன செய்யலாம் என்று ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது அனைவரும் இணைந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். ஆண்கள் ஒன்றாக இணைந்து வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது கஷ்டம் என்பதால் பெண் ஒருவரையும் இந்த கூட்டத் தில் இணைத்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அப்போது அமீர் தனக்கு பழக்கப்பட்ட பெண் ஒருவர் இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில் அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்த கவுரியை இணைத்துள்ளனர். கவுரி ஏற்கனவே வறுமையில் இருந்து வந்த நிலையில் இவர்கள் அவருக்கு ரூ.3000 பணம் தருவதாக கூறியுள்ளார்கள். இதையடுத்து கவுரி இதற்கு சம்மதம் தெரிவித்து அவர்களுடன் சென்றுள்ளார். கொள்ளை கும்பல், முகமது உமர் ஷாகிப் வீட்டுக்குள் கிரகப் பிரவேசத்திற்கு அழைப் பிதழ் கொடுப்பது போல் உள்ளே புகுந்து இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ள னர்.

    தலைமறைவாகி உள்ள மற்ற 4 பேரையும் பிடித்தால் தான் மேலும் பல தகவல்கள் தெரியவரும். தப்பி சென்ற வர்கள் 10 பவுன் நகையையும் எடுத்துச் சென்றுள்ளனர். அதை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். முகமது உமர் ஷாகிப் வீட்டில் கொள்ளையர்கள் விட்டு சென்ற துப்பாக்கி பொம்மை துப்பாக்கி என்பதும் தெரியவந்துள்ளது.

    இந்த துப்பாக்கியை ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளை கும்பல் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கி டையில் கைது செய்யப்பட்ட ரஹீம், கவுரி ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அமீர் சிகிச்சைக்காக ஆஸ்பத் திரியில் அனும திக்கப்பட்டுள்ளார்.

    கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட கவுரிக்கு கொள்ளை கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக் தகவல் வெளியானது. கைதான கவுரி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் நில புரோக்கர் ஆவார். வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு விசா எடுத்து கொடுக்கும் ஏஜென்ட் ஆக இருந்து வந்துள்ளார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அமீர் வெளிநாடு செல்வதற்காக விசா வேண்டி கவுரியை சந்தித்துள்ளார். இதுதான் அவர்களுக்குள் ஏற்பட்ட முதல் சந்திப்பாகும். பின்னர் இருவரும் நல்ல நட்புடன் பழகி வந்தனர். ஏற்கனவே கவுரியின் குடும்பம் சற்று வறுமையில் வாடியது. இதை அறிந்த அமீர் அவருக்கு ஒரு யோசனையை கூறியுள்ளார். நீ, நான் மற்றும் எனக்கு தெரிந்த சிலர் ஒரு குழுவாக கூட்டு சேர்ந்து வீடுகளில் கொள்ளையடிக்கலாம். இதன் மூலம் நமக்கு அதிக அளவு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    முதலில் கவுரி இதற்கு சம்மதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் தனது குடும்பம் வறுமையில் வாடியதை எண்ணியதையடுத்து இதற்கு சம்மதம் தெரிவித்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. முதல் கொள்ளை சம்பவத்திலேயே கவுரி போலீசில் சிக்கிக்கொண்டார்.

    • மொபட் ஓட்டிய பெண்ணிடம் 15 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கே.கே.நகர் மானகிரி 5-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் மனைவி மகாலட்சுமி (வயது37). இவர் மொபட்டில் அண்ணாநகர் செல்வ விநாயகர் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 வாலிபர்கள் இருந்தனர்.

    அவர்கள் மகாலட்சுமி அணிந்திருந்த 15 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • நகை மற்றும் செல்போன் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
    • 45 பவுன் நகை மற்றும் 10 ஐ போன்களை மரைக்காயரிடம் கொடுத்து அதனை பர்மா பஜாரில் உள்ள கடை ஒன்றில் கொடுக்குமாறு மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்தார்.

    போரூர்:

    சென்னை அசோக் நகர், 1-வது தெருவை சேர்ந்தவர் முஸ்தாக் அகமது. இவர் தனது வீட்டின் கீழே பழைய நகை மற்றும் செல்போன் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லாமுனார் மரைக்காயர் என்பவர் கடந்த 5 மாதங்களாக தங்கி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் முஸ்தாக் அகமது தன்னிடம் இருந்த 45 பவுன் நகை மற்றும் 10 ஐ போன்களை மரைக்காயரிடம் கொடுத்து அதனை பர்மா பஜாரில் உள்ள கடை ஒன்றில் கொடுக்குமாறு மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் மரைக்காயர் திரும்பி வரவில்லை. மேலும் அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அவர் நகை மற்றும் செல்போன்களை சுருட்டிக் கொண்டு தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சின்ன மருளூத்து பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (வயது55). இவர் அங்கு உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார் சம்பவத்தன்று வெளியூர் செல்வதற்காக தோட்டத்தில் இருந்து மெயின் ரோட்டிற்கு நடந்து வந்தார். அப்போது மெயின் ரோட்டில் ஒரு காரின் அருகே 2 மர்ம நபர்கள் நின்றிருந்தனர்.

    நாகம்மாள் அருகே வந்தபோது ஒரு மர்ம நபர் திடீரென்று நாகம்மாளின் வாயை பொத்தி அவர் கழுத்தில் அணிந்து இருந்த கவரிங் செயினை பதித்துள்ளார். மற்றொருவர் காதில் அணிந்திருந்த கம்மலை அறுத்து எடுத்துள்ளார். நாகம்மாள் சுதாரிப்பதற்குள் கண்ணி மைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் இருவரும் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

    இதில் படுகாயமடைந்த நாகம்மாள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • நீண்ட நேரம் தங்க நகையை கோவில் வளாகம் முழுவதும் தேடினார்
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடந்தது

    கன்னியாகுமரி :

    திருச்சி மாவட்டம் செங்கதிர் சோலை பகுதியை சேர்ந்தவர் அமுதா.இவர் 35 பேர் அடங்கிய குழுவி னருடன் நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார்.

    இவர்கள் காலையில் சூரிய உதய காட்சியை பார்த்துவிட்டு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அமுதாவின் பர்ஸ் மற்றும் அதில் இருந்த 10 பவுன் தங்க நகையும் தொலைந்தது.பின்னர் நீண்ட நேரம் தங்க நகையை கோவில் வளாகம் முழுவதும் தேடினார்.

    இதனையடுத்து அவர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் அவர் தவறவிட்ட பர்ஸ் மற்றும் அதில்இருந்த தங்க நகையையும் பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் பிரசாத ஸ்டால் நடத்திவரும் ராமச்சந்திரன் என்பவர் மீட்டு கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி முன்னிலையில் ராமச்சந்தி ரன் சுற்றுலா பயணி அமுதா விடம் 10 பவுன் தங்க நகையை ஒப்படைத்தார்.

    நகையை மீட்டு பெண் சுற்றுலா பயணியிடம் ஒப்படைத்த ராமச்சந்திரனுக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.

    ×