என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223237"
- கரூர் அருகே கோவிந்தம்பாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
- கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்
கரூர்,
கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் மேல்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.முகாமில் கலந்து கொண்ட தூய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா விரைவில் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து கோவிந்தம்பாளையம் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தரம் பிரித்து வழங்குவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக நீர்நிலைகள் தூர்வாரும் சிறப்பு திட்டத்தின் கீழ் கோவிந்தம்பாளையம் ராஜவாய்க்கால் வழியாக பிரியும் கிளை ஓடைகள் தூர்வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, ஊராட்சித் தலைவர் பெரியசாமி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பண்டுதகாரன்புதூரில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது
- வரும், 16ந்தேதி, காலை, 10 மணி முதல் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது
கரூர்:
கரூர் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டம், பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வரும், 16ந்தேதி, காலை, 10 மணி முதல் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆடுகளை தேர்வு செய்தல், தீவன பராமரிப்பு, ஆடுகளை தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் ஆகிய தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர், நேரடியாக வந்து பங்கேற்கலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- முத்தூர் - கொடுமுடி சாலை சிவகங்கா திருமண மண்டபத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.
காங்கயம் :
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனுநீதி நாள் முகாம் முத்தூர் - கொடுமுடி சாலை சிவகங்கா திருமண மண்டபத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முகாமிற்கு கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்குகிறார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, பஸ் வசதி, சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.
மேலும் முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வருவாய் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கரூர்:
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் கோடைகால பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. முகாமை டி.ஆர்.ஓ. கண்ணன் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியர் 100 பேருக்கு நூலக உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. நாடக கலைஞர் ஜெயராமன் கதையல்ல விதைகள் என்ற தலைப்பில் குட்டி கதைகளை மாணவ, மாணவியருக்கு கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சக்திவேல், வாசகர் வட்ட தலைவர் சங்கர், நூலகர் கார்த்திக் நிவாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
- கிருஷ்ணராயபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது
- டாக்டர் பார்த்திபன் மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார்.
கரூர்:
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட பிச்சம்பட்டி கிராமத்தில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தற்போது கோடைமழை பெய்து வருவதால் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. டாக்டர் பார்த்திபன் மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார். முகாமில் சளி, காய்ச்சல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இப்பணியில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டனர்.
- 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் ரத்த தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
- இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாரம், சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கருகம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் 75 பேர் பங்கேற்றனர்.இந்த முகாமில் 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் ரத்த தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூமலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.க.சாந்தகுமாரி மற்றும் மருத்துவ குழுவினர், டாக்டர்.மனிஷா, தன்னார்வலர்கள் ஆகியோர் இந்த முகாமில் பங்கேற்றவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் இந்த முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்களான பெரியசாமி, துளசிமணி ஆறுமுகம், மைதிலிபிரபு மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாளை முதல் வரும் 19-ந் தேதி வரை தொடர்ந்து இப்பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.
- முகாமில் கலந்து கொள்ளும் சிறுவர்களுக்கு நிறைவு நாளில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வார விடுமுறை நாட்களான சனி காலை 9 மணி முதல் 12 மணிவரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தேசிலம்பம் போன்ற கலைப் பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளி (அரண்மனை வளாகம்)யில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சவகர் சிறுவர் மன்ற த்தில் 5 வயது முதல் 16 வயது வரையிலான சிறார்களுக்கு பள்ளிக்கல்வியோடு துணைக்கல்வியாக கலைப் பயிற்சி வழங்கி அவர்களை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் அமைவதற்கு, கலை பண்பாட்டுத் துறை வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு நாளை (புதன்கிழமை) முதல் வரும் 19-ந் தேதி வரை தொடர்ந்து இப்பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.
கலைப் பயிற்சி முகாம் தினசரி காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இக்கலைப் பயிற்சி முகாமில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே சிலம்பம் ஆகிய கலைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் சிறார்களுக்கு நிறைவுநாளில் பங்கேற்ற மைக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இக்கலைப் பயிற்சி முகாமில் கலந்து கொள்கின்றவர்கள் தங்களது வயதுச் சான்றிதழுடன் தஞ்சாவூர் (அரண்மனை வளாகத்தில் இயங்கிவரும்)அரசர் மேல்நிலைப் பள்ளிக்கு நாளை காலை 9 மணிக்கு வருகை தருமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை திருமங்கலத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
- பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தனியார் கண் மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தியது.
திருமங்கலம்
திருமங்கலத்தில் பெருந்தலைவர் காமராஜர் நினைவாக மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தனியார் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. நகர்மன்றத் தலைவர் ரம்யா முத்துக்குமார் தொடங்கி வைத்தார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.
இதற்கான ஏற்பாட்டை 23-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா சரவணன் செய்திருந்தார். நகர தலைவர் சவுந்தரபாண்டியன் முன்னிலை வைத்தார். இதில் கண்புரை, சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை, தூரப்பார்வை, வெள்ளை எழுத்து பார்வை உள்ளவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. நகர செயலாளர் பால்பாண்டி, நிர்வாகிகள் செல்லப்பாண்டி, துரை சண்முகம், முன்னாள் கவுன்சிலர் பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை மேற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
- கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.
மதுரை
மதரை திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் தியாகராசர் பொறியியல் கல்லூரி செல்லும் வழியில் உள்ள உள்ள மதுரை மாநக ராட்சியின் மேற்கு மண்டல அலுவலகத்தில் நாளை மறுநாள் (9-ந்தேதி) காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
மேயர் இந்திராணி தலைமை தாங்குகிறார். இந்த மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளான மாடக்குளம், முத்துராமலிங்கபுரம், முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, பழங்காநத்தம், கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, மீனாட்சி நகர் அவனியாபுரம், பாம்பன் சுவாமி நகர், பசுமலை, திருநகர், சவுபாக்யாநகர், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம் சன்னதி தெரு, திருப்பரங்குன்றம் பாலாஜி நகர், அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.
மேற்கண்ட தகவல் மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
- ம.தி.மு.க.சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
- அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ராமநாதபுரம்
ம.தி.மு.க. 30-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி ராமநாதபுரம் நகர் பகுதியில் கொடியேற்று விழா மற்றும் ரத்ததான முகாம் முன்னாள் மாவட்ட செயலாளர் பேட்ரிக் தலைமையில் நடந்தது. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினரும், பரமக்குடி நகரசபை துணைத் தலைவருமான குணா, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
முன்னதாக புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் அரண்மனை, ஓம் சக்தி நகர் ஆகிய பகுதிகளில் நகர பொறுப்பாளர் ரத்தினகுமார் ஏற்பாட்டிலும், கேணிக்கரை பகுதியில் நகர பொறுப்பாளர் சுப்பிரமணி ஏற்பாட்டிலும், பரமக்குடி நகர் பகுதியிலும் மாவட்ட செயலாளர் வி.கே.சுரேஷ் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.
திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் இளையராஜா முன்னிலையில் அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது.
முகாமிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் நகர பொறுப்பாளர் ரத்தினகுமார் செய்திருந்தார்.
- 150க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது
- சிகிச்சைக்காக 25 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை நடத்தும் ரத்ததான குழு, சிறுநீரக நோய் மற்றும் பொது அறுவை சிகிச்சைக்கான மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒருங்கிணைப்பு நிறுவன தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ் முருகன், துணை ஆசிரியர் ஏசுதாஸ் மற்றும் பள்ளி சாரணர் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். அதில் மேல் சிகிச்சைக்காக 25 நபர் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில் ஆண், பெண் இருவருக்கும் சிறுநீரக கற்களால் ஏற்படும் வயிற்று வலி, வாந்தி, நீர் கடுப்பு, சிறுநீரக வீக்கம், சிறுநீரக பாதையில் அடைப்பு மற்றும் பொது அறுவை சிகிச்சையாக பித்தப்பை கல்லுக்கான அறுவை சிகிச்சை, மார்பக கட்டி அறுவை சிகிச்சை, தைராய்டு கட்டி அறுவை சிகிச்சை, குடல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, தீக்காயத்திற்கான அறுவை சிகிச்சை, மூலத்திற்கான அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 16 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன
- 35 பேருக்கு ரூ.4.37 லட்சம் மொபைல் போன் வழங்கப்பட்டது
கரூர்,
கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் முகாமை தொடங்கி வைத்தார். அதில் 16 தொழில் துறை நிறுவனங்கள் பங்கேற்றன. பிறகு, நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. கலெக்டர் பிரபு சங்கர் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் மொபைல் போன்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., கண்ணன், திட்ட இயக்குனர் சீனிவாசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீலா உள்பட பலர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்