search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • வாழ்வாதார தேவைகளை அறிய கல்லூரி மாணவிகள் முகாம் நடைபெற்றது.
    • ஊராட்சி மன்றத்தலைவர்கள் தலைமையில் இந்த ஆய்வு தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது.

    கமுதி

    கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் உன்னத இந்தியா திட்டம் (உன்னத் பாரத் அபியான்) ஆகும்.

    இந்த திட்டத்தின் கீழ் மதுரை, பரவை பகுதியில் உள்ள மங்கைய ர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள், அந்தப்பகுதியில் உள்ள கிராமங்களான குட்லாடம்பட்டி, செம்மினி ப்பட்டி, கச்சைகட்டி, ராமை யன்பட்டி, பூச்சம்பட்டி ஆகிய 5 கிராமங்களைத் தத்தெடுத்து கிராமங்களில் எரிசக்தி, சாலை வசதி, விவசாய வளர்ச்சி, குடிநீர், சுகாதாரம், கல்விக்கூட வசதி மற்றும் கிராம பஞ்சாயத்துக்களில் தொழில் நுட்ப வசதி முதலான தகவல்களை சேகரித்து கிராம மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைகளை ஆய்வு செய்தனர்.

    இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெஸ்டினா, ஜெயக்குமாரி, சரண்யா, உறுப்பினர்கள் சாந்தி, உமாமகேஸ்வரி மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் தலைமையில் இந்த ஆய்வு தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது. மதுரை பரவை மங்கையர்க்கரசி கலைக்கல்லூரி மாணவிகள் கிராமப்புற மக்களின் வாழ்வாதார தேவைகளை அறிய இந்த முகாமை நடத்தினர்.

    • 75 சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் 75வது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாடும் வகையில் 75 சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கடந்த, 2ந் தேதி முதல் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. உடுமலை கச்சேரி வீதி நடுநிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.மேலும், துங்காவி ஊராட்சி, சீலநாயக்கன்பட்டி, வஞ்சிபுரம், உடையார் பாளையம் கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில் வக்கீல் சத்தியவாணி, வட்ட சட்ட பணிகள் குழு அலுவலர்கள், கிராம மக்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • காரைக்காலில் 2-ம் கட்ட குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் தினத்தை யொட்டி, காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒன்று முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அங்கன்வாடி, பள்ளி, கல்லூரியை சார்ந்த மாணவர்களுக்கு, 2-ம் கட்ட குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி, காரைக்கால் மேடுபக்கிரிசாமி உயிர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார்.நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் குமாரராசு, பொதுசுகாதார செவிலிய அதிகாரி மகேஸ்வரி, நோய்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்சி ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர்கள், சுகாதார உதவியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
    • தங்களது பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகம் மூலம் RVY திட்டம் மற்றும் CSR scheme of General Insurance corporation என்ற திட்டங்களின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் 60 வயது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு கருவிகள், செயற்கை பல்செட், ஊன்றுகோல்கள், செயற்கை அவயங்கள், பார்வையற்றவர்களுக்கான கண்ணாடிகள் மற்றும் செவித்திறன் அற்றவர்களுக்கான காதொலிக்கருவிகள் ஆகிய உபகரணங்களை Alimco என்ற நிறுவனத்தின் மூலம் இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதையடுத்து நேற்று தேவகோட்டையிலும், இன்று (11-ந் தேதி) கண்ணங்குடியிலும், நாளை (12-ந் தேதி) சாக்கோட்டையிலும், 13-ந் தேதி கல்லலிலும், 16-ந் தேதி எஸ்.புதூரிலும், 17-ந் தேதி சிங்கம்புணரியிலும், 18-ந் தேதி சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    கடந்த 2-ந் தேதி திருப்பத்தூரில் நடந்த முகாமில் 251 எண்ணிக்கையிலும், 3-ந் தேதி காளையார்கோவிலிலும் நடந்த சிறப்பு முகாமில் 257 எண்ணிக்கையிலும், 4-ந் தேதி மானாமதுரையில் நடந்த முகாமில் 459 எண்ணிக்கையிலும், 5-ந் தேதி திருப்புவனத்தில் நடந்த முகாமில் 338 வகையான உதவி உபகரணங்களும், 6-ந் தேதி இளையான்குடியல் நடந்த முகாமில் 407 எண்ணிக்கையிலான உதவி உபகரணங்களும் மொத்தம் 1,712 வகையிலான உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆதார் அட்டை மற்றும் ரேசன் கார்டு ஆகிய சான்றுகளுடன் தங்களது பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • 12-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்க உள்ளது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்த செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 12 -ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10மணி முதல் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளன. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 28 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் "தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

    • சோழவந்தான் அருகே தொழிற்பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெற்றது.
    • 6 மாத பயிற்சி திட்டத்தில் ஏராளமான மாணவமாணவிகள் சேர்ந்தனர்.

     சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் கல்வி அறக்கட்டளை சார்பில் மத்திய அரசின் தீன்தயாள் உபத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சியில் 2022-23-ம் ஆண்டிற்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன் முன்னிலை வகித்தார். துணை பொது மேலாளர் சுப்பிரமணி வரவேற்றார். 6 மாத பயிற்சி திட்டத்தில் ஏராளமான மாணவமாணவிகள் சேர்ந்தனர். பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி பிளஸ்-2 தேர்ச்சி ஆகும். பெண்களுக்கு தங்கும் இடவசதியுடன், வெளியூர் மாணவர்களுக்கு பயிற்சி ஊக்க தொகை வழங்கப்படுகிறது என்று கல்வி அறக்கட்டளையை சேர்ந்த ஜோசப் ஜெபராஜ், சவுந்தரியா ஆகியோர் தெரிவித்தனர்.

    • தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் 63 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு சளி பரிசோதனையும் செய்யப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தவெளி அம்பேத்கார் காலனியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட நடமாடும் நுண் கதிர் எக்ஸ்ரே வாகனம் மூலம் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மற்றும் ஆணையாளர் வசந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆத்தூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயலட்சுமி(காசநோய்), இணை இயக்குனர் டாக்டர் கணபதி ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்த முகாமில் 63 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு சளி பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்த காசநோய் குறித்து இணை இயக்குனர் கணபதி பேசும்போது, 2 வாரம் சளி ,இருமல் பசியின்மை, மாலை நேர காய்ச்சல், உடல் எடை குறைதல், சளியுடன் ரத்தம் சேர்ந்து வருதல் உள்ளிட்டவை காச நோயின் அறிகுறிகள் ஆகும். காசநோய் முற்றி லும் குணமாக கூடிய நோயாகும். காசநோய் பரம்பரை நோய் அல்ல. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு எளிதில் நோய் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது.

    எனவே இது போன்ற அறிகுறி உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். முகாமில் வட்டார காச நோய் முது நிலை சிகிச்சை மேற்பார்வையாளர் வீரமணிகண்டன், சுகாதார பார்வையாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு உணவுகள் வருவாய்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
    • அளக்குடி பகுதியில் தடுப்பு சுவரில் ஏற்பட்ட பள்ளங்களை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கப்படும் பணிகளை பார்வையிட்டார்.

    சீர்காழி:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்று பழையாறு கடலில் கலந்து வருகிறது.

    இந்த வெள்ளத்தால் திட்டு கிராமங்களான வெள்ளை மணல், நாதல்படுகை, முதலைமேடு திட்டு ஆகிய கிராமங்களை முழுமையாக தண்ணீர் சூழ்ந்து கிராமத்தின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் பலர் தங்கள் கால்நடைகள் மற்றும் உடமைகளுடன் கரைப்பகுதியில் தங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு உணவுகள் வருவாய்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    இதனிடைய கொள்ளிடம் ஆறு அளக்குடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வீட்டு வசதி நகர் வளர்ச்சி அரசு முதன்மை செயலர் கித்தேஸ்குமார் மக்வானா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காட்டூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்று நீர் கரையை அரித்து உள்ளே புகும் அபாய நிலை உள்ளதை நேரில் பார்வையிட்ட கித்தேஷ்குமார் அப்பகு தியில் கருங்கல் கொட்டி கரையை பலப்படுத்திட கூறினார். தொடர்ந்து அளக்குடி பகுதியில் தடுப்பு சுவரில் ஏற்பட்ட பள்ளங்களை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கப்படும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் முகாமில் தங்கி உள்ள மக்களை சந்தித்து உணவுகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் வழங்கப்படுகிறதாஎன அரசு முதன்மை செயலாளர் கேட்டறிந்தார். ஆய்வின் போது மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, ஆர்.டி.ஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் உடன் இருந்தனர்.

    • கால்நடைகளுடன் வெளியேறிய நிலையில் பெரும்பாலானோர் வீடுகளிலே தங்கி இருப்பதால் அவர்களை வருவாய் துறையினர் மீட்டு வருகின்றனர்.
    • கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் தங்கள் பகுதியிலேயே நிரந்தரமாக புயல் பாதுகாப்பு மையம் அமைத்து தர வேண்டும்.

    சீர்காழி:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வரும் உபரி நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    இந்தஉபரி நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. கடந்த நான்கு தினங்களாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நீரின் அளவும் வேகமும் குறையவில்லை. கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    திட்டு கிராமங்களில் தங்கள் கால்நடைகளுடன் வெளியேறிய நிலையில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளிலே தங்கி இருப்பதால் அவர்களை படகின் மூலம் மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மீட்டு வருகின்றனர். மேலும் படகுகள் செல்ல முடியாத இடத்தில் உள்ள மக்கள் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி தங்கள் உடமைகள் மற்றும் குழந்தைகள் சுமந்து கொண்டு கிராமத்தை விட்டு கரையேறி வருகின்றனர்

    பாதிக்கப்பட்ட மக்களு க்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை விட்டு நிவாரண முகங்களுக்குச் செல்ல மறுத்து மக்கள் கரையிலேயே பந்தலமைத்து காத்துள்ளனர் இவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக உணவு குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்படும் பொழுது தங்கள் கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் தங்கள் பகுதியிலேயே நிரந்தரமாக புயல் பாதுகாப்பு மையம் அமைத்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.
    • இம்முகா மில், 180 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் நடமாடும் எக்ஸ்ரே எந்திரத்தை பயன்படுத்தி காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.

    கிராமத்திற்கே சென்று, காசநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகை யில், மாவட்டம் தோறும் தமிழக அரசு சுகாதாரத்துறை வாயிலாக நடமாடும் எக்ஸ்ரே எந்திரத்தை வழங்கியுள்ளது. இந்த எந்திரத்தை பயன்படுத்தி, தொடர் இருமல், சளி உள்ளிட்ட காசநோய் அறிகுறி உள்ளவர்களுக்கு அந்தந்த பகுதிக்கே சென்று பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    வாழப்பாடி அருகே பேளூர் சுகாதார வட்டா ரத்தில், சந்திரபிள்ளை வலசு கிராம மக்கள் மற்றும் சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவன ஊழியர்களுக்கு இருதி னங்களாக, இத்திட்டத்தின் கீழ் காச நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

    வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையில், தொண்டு நிறுவன மாநில பொறுப்பாளர் ரவிசங்கர், காசநோய் பிரிவு மாவட்ட மேற்பாற்வையாளர் சதாசிவம்,வட்டார காச நோய் மேற்பார்வையாளர் ராஜ்குமார், ஆய்வக நுட்புனர் கவிதா ஆகியோர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் மேலாளர்கள் சுரேஷ்குமார், மணிவேல் மற்றும் பணியாளர்கள் முனியசாமி, வடிவேல், பேளூர் சுகாதார ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் முகா மிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    இம்முகா மில், 180 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • சேலம் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 33-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
    • ஊரகப் பகுதியில் 2,315, சேலம் மாநகராட்சிப் பகுதியில் 375 என மொத்தம் 2,690 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 33-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. ஊரகப் பகுதியில் 2,315, சேலம் மாநகராட்சிப் பகுதியில் 375 என மொத்தம் 2,690 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டது.

    இந்த முகாமில் சேலம் மாநகராட்சி பகுதியில் 9 ஆயிரத்து 894 பேருக்கும், சேலம் புறநகர் பகுதியில் 60 ஆயிரத்து 980 பேருக்கும், ஆத்தூர் பகுதியில் 17 ஆயிரத்து 963 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடை வெளியைக் கடைப்பிடித்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதில் 15,500-க்கு மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இதுவரை 8,19,784 பேருக்கு முதல் தவணையும், 12,81,701 பேருக்கு இரண்டாம் தவணையும், 56,514 பேருக்கு முன்னெச்சரிக்கைபூஸ்டர் டோஸ் தடுப்பூசிஎன மொத்தம்21,57,999 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    • நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை மற்றும் சிகிச்சை,மருந்துகள் அளிக்கப்பட்டது.
    • முகாமில் 236 பேருக்கு கண்புரை, பார்வை குறைபாடு, கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அரிமா சங்கம், நகராட்சி நிர்வாகம், திருப்பூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை,மற்றும் சிகிச்சை முகாம் பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இந்த முகாமில் 236 பேருக்கு கண்புரை, பார்வை குறைபாடு, கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை மற்றும் சிகிச்சை,மருந்துகள் அளிக்கப்பட்டது. 26 நபர்கள் கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலவச கண் சிகிச்சை முகாமை பல்லடம் நகர மன்றத்தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் துவக்கி வைத்தார். அரிமா சங்க நிர்வாகிகள் நடராஜன், குமார், பாலன், மற்றும் நிர்வாகிகள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×