என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223268"
- 30 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்யலாம்.
- சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
நெத்திலி கருவாடு - 100 கிராம்
தக்காளி - 4 நறுக்கியது
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 1
தட்டிய இஞ்சி பூண்டு - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிதளவு
கடுகு - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* கருவாட்டை இரண்டு மூன்று முறை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்தது வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமானதும், இதில் தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பச்சை வாசனை போனதும், இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
* மசாலாவில் பச்சை வாசனை போனதும் இதில் கருவாடை போட்டு கிளறவும்.
* சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
* கிரேவி திக்கான பதம் வந்ததும் இறுதியாக சிறிது கறிவேப்பில்லை சேர்த்து இறக்கவும்.
* இப்போது சூப்பரான நெத்திலி கருவாடு தொக்கு ரெடி.
- சிக்கனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூ
முந்திரி - ஒரு கைப்பிடி
மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
சோம்பு - கால் ஸ்பூன்
கசகசா - கால் ஸ்பூன்
பட்டை, கிராம்பு - சிறிதளவு
ஏலக்காய் - 2
ஜாதிக்காய் - 1
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - 4 ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - ஸ்பூன்
தயிர் - 1 ஸ்பூன்
பால் - 2 ஸ்பூன்
செய்முறை
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
பாதி முந்திரி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், புதினா மல்லித்தழையை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட்டு, அதில் இஞ்சி, பூண்டு விழுது, முந்திரி மிளகு அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தயிர், நெய், எலுமிச்சை சாறு, சோயா சாஸ், தேவையான அளவு உப்பு போட்டு நன்கு பிசைந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதமுள்ள முந்திரியை போட்டு சிவந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் ஊறவைத்த சிக்கன் மசாலா கலவையை போட்டு, மிதமான தீயில் கிளறவும்.
சிக்கனில் உள்ள நீரே போதுமானதும். சிக்கன் நன்றாக வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லி தழைதூவி இறக்கவும்.
இப்போது சூப்பரான செட்டிநாட்டு முந்திரி சிக்கன் கிரேவி ரெடி.
- குழந்தைகளுக்கு மேகி நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று மேகி நூடுல்ஸ், முட்டை சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மேகி பாக்கெட் - 1
முட்டை - 2
கேரட் துருவல் - 2 டீஸ்பூன்
குடைமிளகாய் - 1
தக்காளி - 1 (சிறியது)
ப.மிளகாய் - 3
வெங்காயம் - 1 (சிறியது)
உப்பு, எண்ணெய் - சிறிதளவு
மஞ்சள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய் , குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும் .
மேகியை கடாயில் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் மசாலாவை மட்டும் போட்டு வேக வைத்தால் போதும். தண்ணீர் இறுகும்வரை வேக வேண்டும். தண்ணீர் அதிகமாகிவிட்டால் வடித்துக்கொள்ளுங்கள். மேகி குழையாமல் உதிரியாக இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கேரட் துருவல், குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் முட்டை கலவையை நன்கு பரப்பி ஊற்றுங்கள். தீ குறைத்து வைத்து அதன் மேலே வேக வைத்த மேகியை தூவினாற்போல் போடுங்கள். சிறு தீயிலேயே 2 நிமிடங்கள் அப்படியே விடுங்கள்.
பின் தோசையை மடிப்பது போல் ஒரு புறமாக மடித்துக்கொள்ளுங்கள். திருப்பிப் போடக் கூடாது. மடித்த வாக்கில் அப்படியே தட்டி எடுத்து வைத்து பரிமாறவும்.
அவ்வளவுதான் மேகி நூடுல்ஸ் ஆம்லெட் தயார்.
- காய்கறிகள், சிக்கன் சேர்த்து செய்யும் சூப் உடலுக்கு நன்மை அளிக்கிறது.
- இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 1
காளான் – 1 கப்
கேரட் – 3
பீன்ஸ் - 3
கோஸ் - சிறிய துண்டு
தனி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு,மிளகு தூள், கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வேகவைத்து கொள்ளவும்.
பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டை கொரகொரப்பாக தட்டி வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டை போட்டு வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிகள், காளான் சேர்த்து வதக்கவும்.
இதற்கு தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து சிக்கன் வேக வைத்த நீரை ஊற்றி காய்கறிகளை வேக விடவும்.
இப்போது வேக வைத்த சிக்கனை சேர்த்து கொள்வதோடு உப்பு மற்றும் மிளகு சேர்த்து வதக்க வேண்டும்.
காய்கறிகள் மற்றும் சிக்கன் வெந்துள்ளதா? என சரிபார்த்துவிட்டு சிக்கன் வெஜிடபிள் சூப்பை பரிமாறலாம்.
- மாட்டிறைச்சியில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- மாட்டிறைச்சியை கடையில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கிலோ,
பீப் (மாட்டிறைச்சி) - 1 கிலோ,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
வெங்காயம் - 500 கிராம்,
பழுத்த தக்காளி - 500 கிராம்,
பச்சை மிளகாய் - 5
கொத்தமல்லி, புதினா - தலா 1 கொத்து,
எண்ணெய் - 200 மில்லி,
நெய் - 50 மில்லி,
எலுமிச்சை -அரை பழம்
பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2,
பிரியாணி இலை - 2,
உப்பு தூள் - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும்.
பீப் (மாட்டிறைச்சி) கொழுப்பெடுத்து கழுவி தண்ணீரை வடிக்க வேண்டும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தைசேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு புதினா, தயிர் சேர்க்கவேண்டும்.
அடுத்து தக்காளி, கொத்தமல்லியை சேர்க்க வேண்டும்.
அடுத்து உப்பு சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து பீப் (மாட்டிறைச்சி) சேர்த்து வேக விட வேண்டும்.
பீப் (மாட்டிறைச்சி) வெந்து கிரேவி பதம் வரும் வரை வேக விட வேண்டும்.
பீப் (மாட்டிறைச்சி) அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவேண்டும்.
தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின்மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விட வேண்டும்.
பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான ஆம்பூர் பீப் (மாட்டிறைச்சி) பிரியாணி ரெடி.
- முட்டையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இது சப்பாத்தி, தோசைக்கு அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
பட்டை - 1 இன்ச்
பிரியாணி இலை - 1
கிராம்பு - 2
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
ஹரியாலி மசாலாவிற்கு…
கொத்தமல்லி - 1 கட்டு (பெரியது)
புதினா - 1 கட்டு
பச்சை மிளகாய் - 3
வெங்காய மசாலாவிற்கு…
வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 இன்ச்
செய்முறை:
* முட்டையை வேக வைத்து இரண்டாக வெட்டி கொள்ளவும்.
* வெங்காயம், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதலில் ஹரியாலி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருளை மிக்சியில் போட்டு அதனுடன் அரை கப் நீரை ஊற்றி நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்த வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டுகளை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, சேர்த்து தாளித்த பின்னர், அரைத்த வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த ஹரியாலி மசாலா மற்றும் பிரஷ் க்ரீம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, வெட்டிய முட்டைகளை போட்டு மூடி வைத்து, 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், சுவையான ஹரியாலி முட்டை கிரேவி தயார்.
- இறாலில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
இறால் - 1/4 கிலோ,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
பச்சைமிளகாய் - 5,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
சோம்பு, சீரகம் - தலா 20 கிராம்,
மஞ்சள் தூள்- 10 கிராம்,
நல்லெண்ணெய் - 10 மி.லி.,
எலுமிச்சை பழம் - 1,
உப்பு,கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவைக்கு.
செய்முறை
இறாலை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த இறாலை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்த இறாலை போட்டு கிளறவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
இறால் வெந்து உதிரியாக வரும் போது கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு பிழிந்து புட்டு மாதிரி வரும்வரை கிளறி இறக்கவும்.
இப்போது சூப்பரான இறால் புட்டு ரெடி.
- காய்ச்சல், உடல் வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தை குடிக்கலாம்.
- இந்த ரசத்தை சூப்பாகவும் குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்
நல்லி எலும்பு - கால் கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்
மஞ்சள் - 1/4 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க :
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி - கையளவு.
மிளகு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
நல்லி எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆட்டுக்காலை போட்டு தண்ணீர் ஊற்றி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, சிறிது கொத்தமல்லி தழை, மிளகு தூள், வெங்காயம், சீரகப் பொடி, மஞ்சள் சேர்த்து நன்குக் கலந்து குக்கரை மூடி அடுப்பில் குறைவான தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
பின் வேக வைத்த மட்டன் தண்ணீரை ஊற்றவும்.
இறுதியாக மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
இப்போது காரசாரமான நல்லி எலும்பு ரசம் தயார்.
- கிரீன் சிக்கன் டிக்கா சூப்பராக இருக்கும்.
- இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
புதினா - 2 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
எலுமிச்சை சாறு - பாதி
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, கொத்தமல்லி அனைத்தையும் விழுதாக அரைக்கவும்.
* சிக்கனுடன் அரைத்த விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கலந்து 4 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் ஊற வைக்கவும்.
* ஊறிய சிக்கனை மைக்ரோவேவ் ஓவனில் கிரில் செய்து எடுக்கவும்.
* மைக்ரோவேவ் ஓவன் இல்லையெனில், பேனில் நெய் விட்டு, மிதமான சூட்டில் சிக்கனை போட்டு வேக விட்டு எடுக்கவும்.
* சுவையான கிரீன் சிக்கன் டிக்கா ரெடி.
- தேங்காய் எண்ணெயில் செய்யும் மீன் கறி சுவையாக இருக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அயிலை மீன் - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
இஞ்சி - 1
பூண்டு - 7
கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் -1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி, வெங்காயம் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் மண் சட்டியை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தனியா தூள், சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
இப்போது அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி-வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்து பச்சை வாசனை போனபின்பு அதில் மீன் சேர்த்து வேக விடவும்.
மீன் வெந்தவுடன் இறுதியாகக் கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான கேரளா மீன் கறி தயார்.
- மீனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- மீனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
துண்டு மீன் - அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
வினிகர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
வெங்காயத்தை தோல் நீக்கி பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய மீனை போட்டு, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி ஆற விடவும்.
மீனில் உள்ள தோல், முள்ளை எடுத்து விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து மசித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, வெங்காய விழுது, உப்பு, வினிகர் சேர்த்து நன்றாக பிசைந்து, அதனை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் நீளவாக்கில் தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள மீன் கபாப்பை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
அருமையான பிஷ் கபாப் ரெடி.
- கத்தரிக்காயில் பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும்.
- இப்போது இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கப்,
பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ,
சின்ன வெங்காயம் - ஒரு கப்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
புளித்தண்ணீர் - 2 கப்,
தக்காளிச் சாறு - கால் கப்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க
பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம்- சிறிதளவு
அரைக்க :
காய்ந்த மிளகாய் - 5,
தனியா - ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்.
செய்முறை :
* சின்னவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கத்திரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டிகொள்ளவும். பார்க்க பூப்போல இருக்கும்.
* பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும்.
* வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் போடு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்...
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
* அடுத்து அதில் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
* புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட்டு, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்