search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல்"

    • குழந்தைள் விரும்பி சாப்பிடுவர்.
    • காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இது நல்ல மாற்று.

    குழந்தைகள் சுரைக்காய் என்றாலே முகம் சுளித்து சாப்பிட மறுத்துவிடுவார்கள். குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் எளிமையாகவும், சுவையாகவும் சுரைக்காய் வைத்து கபாப் செய்யலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    சுரைக்காய் துருவல் – ஒன்றரை கப்

    இஞ்சி – ஒரு டீஸ்பூன்

    கடலைப்பருப்பு – அரை கப்

    சோம்பு – ஒரு டீஸ்பூன்

    நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

    கார்ன்ஃப்ளார் – ஒரு டேபிள்ஸ்பூன்

    கரம் மசாலா தூள் – ஒரு டீஸ்பூன்

    பூண்டு – 3 பல்

    பச்சை மிளகாய் – 5

    மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

    எண்ணெய், உப்பு – தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் சுரைக்காய்களை அதன் தோலினை நீக்கிவிட்டு அதனை துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கடலைப் பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் கடலைப்பருப்பினை தண்ணீரை வடித்துவிட்டு, இதனுடன் சுரைக்காய் துருவல், இஞ்சித் துருவல் சேர்த்துக் கலந்து ஆவியில் வேகவிட்டு எடுக்க வேண்டும். ஆறிய பிறகு இதனுடன் பூண்டுப் பல், பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் விடாமல் வடைக்கு அரைப்பதைப் போல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

    இதனுடன் உப்பு, சோம்பு, கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், சோள மாவு, கரம் மசாலா தூள் சேர்த்து பிசைய வேண்டும். மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, நீளவாக்கில் விரல்களைப் போல் உருட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீளவாக்கில் உருட்டியவற்றைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும். இதனை சூடாக தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.

    • உணவு பழக்க வழக்கத்தால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகிறது.
    • இதற்கு சரியான தீர்வு என்றால் அது பூசணிக்காய் சூப் தான்.

    மாறிப்போன நம் உணவு பழக்க வழக்கத்தால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகிறது. முக்கியமாக இளம் தலைமுறையினர் வயிற்றுப்புண்ணால் அவதிப்படுகின்றனர். அதிக காரம், பாஸ்ட் புட் போன்ற உணவுகளால் வயிற்றில் புண் உருவாகி பெரும் அவஸ்தையை கொடுக்கிறது. இதற்கு சரியான தீர்வு என்றால் அது பூசணிக்காய் சூப் தான்!

    தேவையான பொருட்கள்

    பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப்,

    வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை – சிறிதளவு,

    பால் – ஒரு டம்ளர்,

    மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,

    பூண்டு – 2 பல்,

    சின்ன வெங்காயம் – 4,

    உப்பு – தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். கடாயில் வெண்ணெயை போட்டு சூடாக்கி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், நசுக்கிய பூண்டை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூசணிக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் 4 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும்.

    பூசணிக்காய் வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு பூசணிக்காயை மட்டும் எடுத்து ஆற வைத்த பின் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதை, காய் வேகவைத்த தண்ணீரில் கலக்கவும். இதனுடன் பால், மிளகு, சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

    இதனால் கிடைக்கும் பலன்கள்:

    சிறுநீரகப் பிரச்சனைகள், கல் அடைப்புகள் நீங்கும். உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் அருந்தலாம். வயிற்றுப்புண், குடல் புண் இருப்பவர்கள் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும்.

    • சுவையான ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் பூனாதான்.
    • இதன் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும்.

    வட இந்தியாவில் மிகவும் காரமான மற்றும் சுவையான ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் பூனாதான். இதன் செய்முறை சற்று வித்தியாசமாக இருக்கும். மேலும் இதில் சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக வேக வைப்பதால், இதன் சுவை இன்னும் அதிகமாகும்.

    இந்த ரெசிபி சிக்கனை வித்தியாசமாக சமைக்க நினைப்போருக்கு சிறந்ததாக இருக்கும். இப்போது அந்த சிக்கன் பூனாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)

    பூண்டு - 12 பற்கள்

    வரமிளகாய் - 10

    கிராம்பு - 4

    ஏலக்காய் - 4

    பட்டை - 2

    சீரகம் - 1 டீஸ்பூன்

    தயிர் - 1/2 கப்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

    செய்முறை:

    முதலில் பூண்டு, வரமிளகாய், கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனை நன்கு கழுவி, அதில் உள்ள ஈரத்தை பேப்பர் டவல் கொண்டு முற்றிலும் எடுத்துவிட வேண்டும்.

    பின்னர் சிக்கன் துண்டுகளின் மேல் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை தேய்த்து, 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊறவைத்துள்ள சிக்கன் துண்டை போட்டு, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளித்து, வறுத்த சிக்கன் துண்டை சேர்த்து, உப்பு, தயிர் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி விட வேண்டும். விசில் போனதும், அதனை திறந்து குளிர வைத்து, அதனை மற்றொரு வாணலியில் ஊற்றி, 5 நிமிடம் சிக்கன் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

     இப்போது சுவையான சிக்கன் பூனா ரெடி! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாற வேண்டும்.

    • உடல் எடை குறைப்பதில் கோதுமைக்கு முக்கிய பங்கு உண்டு.
    • கோதுமையில் சுவையான பாயசம்.

    கோதுமை நமது உடல் எடையினைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. இந்த கோதுமையில் சுவையான பாயசம் செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை - 1 கப்

    பாதாம் பருப்பு -3

    முந்திரி பருப்பு -3

    உலர்ந்த திராட்சை -5

    வெல்லம் - 1 கப்

    நெய் - 2 ஸ்பூன்

    தேங்காய்த் துருவல் - 1 கப்

    பால் - 1/2 கப்

    ஏலக்காய்த் தூள் - 1 ஸ்பூன்

    செய்முறை:

    கோதுமையினை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு கோதுமையின் மீது உள்ள உமி போன்ற தோல் உரிந்து வரும் அளவிற்கு அரிசி களைவதுபோல் ஒன்றிரண்டு முறை நீரில் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் வெள்ளை முத்துக்கள் போன்று கோதுமை கிடைக்கும். இதனை குக்கரில் போட்டு 3 விசில் வரை வேக விடவும்.

    அடுத்து வாணலியில் வெல்லத்தை சேர்த்து தண்ணீர்விட்டு பாகுபோல் காய்ச்ச வேண்டும். பின்னர் வெல்லப்பாகினை வடிகட்டிவிட்டு மீண்டும் அதே கடாயில் சேர்த்து பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து கிளற வேண்டும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுத்து அதனை வெல்லப்பாகுக் கலவையில் கொட்டிக் கிளற வேண்டும்.

    அடுத்து பால் மற்றும் வேகவிட்ட கோதுமையை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறிவிட்டு இறக்கினால் சுவையான கோதுமை பாயாசம் ரெடி. இதனுடன் சிறிதளவு சுக்கு பொடி சேர்த்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

    • பிங்கான் பாத்திரங்கள் பலரது விருப்பமாக இருக்கின்றன.
    • பிங்கான் பாத்திரங்கள் வெப்பத்தை அதிகமாக உட்கிரகிக்காது.

    பார்ப்பதற்கு பளபளப்பாகவும், கண்ணைக் கவரும் டிசைன் மற்றும் வடிவமைப்புகளிலும் கிடைக்கும் 'செராமிக்' எனப்படும் 'பிங்கான்" பாத்திரங்கள் பலரது விருப்பத் தேர்வாக இருக்கின்றன. சீனாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பிங்கான், தற்போது உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சமைப்பதைவிட சமையலுக்கு உபபோகித்த பாத்திரங்களை சுத்தம் செய்வது பலருக்கும் கடினமான வேலையாக இருக்கிறது. அந்த வகையில், பாத்திரம் கழுவும் நேரத்தையும் செராமிக் பாத்திரங்கள் குறைக்கின்றன. காரணம், இவற்றில் எண்ணெய், உணவுத் துகள்கள் ஆகியவை அதிகமாக ஒட்டுவது இல்லை. இதனால் செராமிக் பாத்திரங்களை விரைவாக சுத்தப்படுத்த முடியும்.

    சில பாத்திரங்களின் மேற்பகுதியில் பூசப்பட்டுள்ள பூச்சுகள் அதிக வெப்பத்தை உட்கிரகிக்கும். இதன் விளைவாக, அதில் உள்ள ரசாயனங்கள் சமைக்கப்படும் உணவிலும் கலந்து சாப்பிடுபவர்சுளுக்கு தீங்கு விளைவிக்கும். பிங்கான் பாத்திரங்கள் வெப்பத்தை அதிகமாக உட்கிரகிக்காது. இதன் மூலம் உணவில் எவ்விதமான ரசாயனமும் கலக்காது. பிங்கான் பூச்சு பூசப்பட்ட பாத்திரங்களை 500 டிகிரி பாரன்ஹீட் வரை சூடுபடுத்தினாலும் அது எவ்விதமான ரசாயன புகையையும் வெளியிடாது. தரமான பீங்கான் பாத்திரங்களை வாங்கி பயன்படுத்துவது முக்கியமானது.

    பிங்கான் பூச்சு பூசப்பட்ட உலோகப் பாத்திரங்களை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் விரிசலோ, கீறலோ ஏற்பட்டால் அடிப்பகுதியில் உள்ள உலோகத்தின் நன்மை சமைக்கும் உணவுடன் கலக்க நேரிடும். கீறல் விழுந்த பிங்கான் பாத்திரங்களை சுத்தப்படுத்துவது கடினமாக இருக்கும்.

    ஒழுங்கற்ற வடிவம் கொண்ட, சேதம் அடைந்த, தரம் குறைந்த பிங்கான் பாத்திரங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். மேலும் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் வண்ணங்கள் அதிகமாக பூசப்பட்ட பீங்கான் பாத்திரங்களை வாங்குவதையும் தவிர்க்கவும். ஏனெனில் இந்த வண்ணங்களை அடர்த்தியாக காட்டுவதற்காக அவற்றுடன் ஈயம் அதிகமாக கலக்கப்படுகிறது.

     பிங்கான் பூச்சு பூசப்பட்ட பாத்திரங்கள் பராமரிப்பு:

    செராமிக் பூச்சு பூசப்பட்ட பாத்திரங்களை மென்மையான திரவம் கொண்டே சுத்தப்படுத்தவேண்டும். கரடு முரடான ஸ்கிரப்பர்களை பயன்படுத்தாமல் ஸ்பாஞ்சு கொண்டு இவற்றை சுத்தப்படுத்துவது நல்லது. செராமிக் பாத்திரங்களில் சமைக்கும்போது குறைவான அல்லது மிதமான தீயை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக குடாக இருக்கும் செராமிக் பாத்திரங்களை உடனடியாக குளிர்ச்சியான வெப்பநிலைக்கு உட்படுத்தகூடாது.

    செராமிக் பாத்திரங்களை டிஷ்வாஷர் சுத்தப்படுத்துவதைவிட கைகளால் சுத்தப்படுத்துவதே சிறந்தது. செராமிக் பாத்திரங்களில் சமைப்பதற்கு பிளாஸ்டிக் அல்லது மரத்தால் ஆன கரண்டிகளையே பயன்படுத்த வேண்டும். உலோகக் கரண்டிகள் செராமிக் பூச்சுகளில் கீறலை உண்டாக்கும்.

    • 'கேக் அலங்காரம்' பற்றிய சில ஆலோசனைகள்.
    • பெண்கள் பலரும் 'கேக்' தயாரிப்பை சுயதொழிலாக செய்து வருகிறார்கள்.

    பெண்கள் பலரும் 'கேக்' தயாரிப்பை சுயதொழிலாக செய்து வருகிறார்கள். கேக்குகளை சுவைப்பதற்கு முன்பாக, அவற்றின் மேல் செய்யப்படும் அலங்காரம்தான் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்படி செய்கிறது. தயாரிப்பில் புதிதாக ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு 'கேக் அலங்காரம்' பற்றிய சில ஆலோசனைகள்...

     புரூட் கேக்

    வெள்ளை நிற கேக்கின் மேல் பகுதியில் ஒரு பக்கத்தில் மட்டும் மாதுனை முத்துகள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி இலைகளை வைக்கவும். அதைச் சுற்றிலும் சிறிய அளவுள்ள சர்க்கரை முத்துகளை தூவவும். இது பார்ப்பதற்கு அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சி அளிக்கும்.

     சாக்லெட் மற்றும் ஸ்பிரிங்கஸ் கேக்

    கேக்கின் மேல் பகுதியை தவிர்த்து, பக்கவாட்டுப் பகுதியைச் சுற்றிலும் சாக்லெட், ஸ்பிரிங்கஸ் (சிறிய அளவு சர்க்கரை பூக்கள்) மற்றும் கான்பெட்டி (வண்ணமயமான சாக்லேட் துணுக்குகள்) ஆகியவற்றை கொண்டு கேக்கை அலங்கரிக்கவும். அது பார்ப்பதற்கு வண்ணமயமான தோற்றத்தைத் தரும்.

     ரோஸ் கேக்

    'கேக்' அலங்கரிக்கும் ஐசிங் முனைகள் கொண்டு கேக்கின் கீழ்ப்பகுதியில் இருந்து மேல்பகுதி வரையிலும் 'ஐசிங் கிரிம் மூலம் ரோஜா பூக்கள் போன்று வடிவமைக்கவும். ஒவ்வொரு அடுக்குக்கும் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டு அலங்கரித்தால் அழகாக இருக்கும்.

     ஸ்ட்ராபெர்ரி கேக்

    வெனிலா கேக்கின் மேல்பகுதியின் மையத்தில் ஸ்ட்ராபெர்ரி கிரீமை பூசவும், அதற்கு மேல் ஸ்ட்ராபெர்ரி இலைகளை வைக்கவும், இது பார்ப்பதற்கு நேர்த்தியான தோற்றமளிக்கும் பெர்ரி பழங்கள், உண்ணக்கூடிய ரோஜா பூக்கள் மற்றும் ஸ்டாப்பேரி இலைகளை வைக்கவும் இது பார்ப்பதற்கு நேர்த்தியான தோற்றமளிக்கும்.

     பைப்பிங் கேக்:

    'கேக்'கின் நிறத்துக்கு ஏற்றவாறு டபுள் கலர் கிரீமைகொண்டு மேல் பகுதியில் பைப்பிங் செய்யவும். அது பார்ப்பதற்கு எளிமையாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கும்.

     டஸ்டிங் பவுடர் கேக்:

    கேக்கின் மீது பொடித்த சர்க்கரை, கோகோ பவுடர் அல்லது உண்ணக்கூடிய மினுமினுப்பு கிளிட்டர்களை லேசாக தெளிக்கவும். இது எளிதாக செய்யக் கூடிய அலங்காரமாகும்.

     மக்ரூன்ஸ் கேக்:

    கேக்'கின் மேல்புறத்தில் மக்ரூன்களை கொண்டு பூ போன்ற வடிவத்தில் அடுக்கவும். கேக்கின் பக்க வாட்டுப் பகுதியையும் மக்ரூன்களை கொண்டு அலங்கரிக்கலாம்.

     பாஸ்கெட் வீவ் கேக்:

    கேக்கைச் சுற்றிலும் 'பாஸ்கெட் வீவ் (கூடை பின்னுவது போன்ற அமைப்பு) பைப்பிங் செய்யவும். பின்பு கிரீம் கொண்டு கேக்கின் மேலே ரோஜா பூக்கள் வடிவமைக்கவும். வெள்ளை நிற முத்துக்கள் கொண்டும் அலங்கரிக்கலாம்.

     பான்டன்ட் ரிப்பன் கேக்:

    'பான்டன்ட் ரிப்பன்' மூலம் வடிவமைத்த ரோஜாக் களைக் கொண்டு 'கேக்'கைச் சுற்றி வட்ட வடிவில் அலங்கரிக்கவும். பின்பு 'கேக்'கின் மேல் ஸ்பிரிங்கின்ஸ் அல்லது வெள்ளி நிற பால்களை தூவவும்.

    • அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஹெல்த்தியான கொரின் டிஷ்.
    • 5 நிமிடத்தில் ஈஸியா செய்து சாப்பிடலாம்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய ஹெல்த்தியான கொரின் ஸ்பெஷல் பனானா ஃபிரை 5 நிமிடத்தில் ஈஸியா செய்து சாப்பிடலாம். பொதுவாக மாலை நேரங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் தோன்றும். வாழைப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி 6, வைட்டமின் சி, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. எனவே ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வித்தியாசமான பனானா ஃபிரை செய்து சுவைத்து பாருங்கள்.

    தேவையான பொருட்கள்:

    கார்ன்பிளார்- 3 ஸ்பூன்

    சோடா உப்பு- கால் டீஸ்பூன்

    முட்டை- 2

    பால்- 50 மில்லி

    பிரெட் தூள்- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் வாழைப்பழங்களை இரண்டாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாழைப்பழ துண்டுகளில் ஐஸ் கிரீம் குச்சிகளை சொருகி லாலிபாப் போன்று வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பவுலில் கார்ன்பிளார் மாவு, சோடா உப்பு மற்றும் முட்டையை அதில் உடைத்து ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். இதில் பால் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்துகொள்ள வேண்டும்.

    இப்போது வாழைப்பழங்களை இந்த கார்ன்பிளார் மாவுக் கலவையில் தோய்த்து, பின்னர் பிரெட் தூள்களில் புரட்டி எடுத்து ஒரு பிளேட்டில் வரிசையாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைப்பழ துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான கொரியன் ஸ்பெஷல் பனானா ஃபிரை தயார். இதனை தேனுடன் தொட்டுக்கொள்ள சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். நீங்களும் உங்களது வீடுகளில் செய்து சுவைத்துப் பாருங்கள்.

    • வெல்லம் பாகு காய்ச்சி இடியாப்பத்தில் ஊற்றி சாப்பிட ருசியாக இருக்கும்.
    • முருங்கைக்காயை பேப்பரை சுற்றி பிரிட்ஜில் வைத்தால்காயாது.

    * பீட்ரூட் துருவலுடன் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி இடியாப்பத்தில் ஊற்றி சாப்பிட சத்துக்கு சத்து, சுவைக்கு சுவை. ருசியாகவும் இருக்கும்.

    * உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிது சேமியாவை தூள் செய்து போட்டால் சுவையாக இருக்கும். மாவு அரைக்கும்போது சிறிது துவரம் பருப்பும் சேர்த்து அரைக்க வடை மிருதுவாக இருக்கும்.

    * முருங்கைக்காயை அப்படியே பிரிட்ஜில் வைத்தால் காய்ந்துவிடும். அதில் ஒரு பேப்பரை சுற்றி வைத்தால் காயாது.

    * பிரட் காய்ந்து போனால் இட்லி சட்டியில் வைத்து ஐந்து நிமிடம் வேகவிட்டு எடுக்க மிருதுவாகும்.

    * தோசைக்கு மாவு அரைக்கும்போது வெண்டைக்காய் கொஞ்சம் சேர்த்து அரைக்க தோசை பஞ்சு மாதிரி இருக்கும்.

    * எலுமிச்சை, நார்த்தங்காயில் ஊறுகாய் செய்யும்போது அவைகளில் உள்ள விதைகளை நீக்கிவிட்டால் ஊறுகாயில் கசப்பு இருக்காது.

    * சட்னியில் காரம் அதிகமாக இருந்தால் சிறிது தயிர் கலக்க காரம் போய்விடும். சுவையும் கூடும்.

    * கொத்தமல்லி துவையலுக்கு புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்க ருசியாக இருக்கும்.

    * பூண்டுவை கொஞ்ச நேரம் தண்ணீரில் போட்டால் உரிப்பதற்கு எளிதாக இருக்கும்.

    * தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்க்க சுவை கூடும்.

    * டீ தயாரிக்கும்போது ஆரஞ்சு பழத்தோலை சிறிது சேர்த்து கொதிக்க வைத்தால் டீ சுவையாக இருக்கும்.

    * காய்கறிகளை நறுக்கி உப்பு கலந்த நீரில் போட்டு வைத்திருந்து சமைக்க நிறம் மாறாது. உப்பு சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.

    * சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து விட்டால் அதில் இரண்டு, மூன்று சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்க உதிரியாகி சுவையாக இருக்கும்.

    * தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில் கொள்ளு சேர்க்க தோசை மிருதுவாகிவிடும்.

    * இட்லி மாவு நீர்த்துப் போனால் எண்ணெய் இல்லாமல் வறுத்த ரவையை சேர்த்துவிட்டு பத்து நிமிடங்கள் கழித்து இட்லி சுட்டால் சுவையாகவும் இருக்கும்.

    * இடியாப்பத்திற்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் சேர்த்தால் பிழிவது எளிதாகும். இடியாப்பமும் நல்ல பதத்துடன் வரும்.

    * சுண்டலை தாளித்த பிறகு சிறிதளவு கசகசாவை வறுத்து தூவ சுவை கூடும்.

    * கீரைகளை வேகவைக்கும்போது எலுமிச்சை பழ சாறை சிறிது விட்டால், கீரையின் நிறம் மாறாது. கீரை இலையும் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் இருக்கும். ருசியும் அமோகமாக இருக்கும்.

    * உப்பு சேமித்து வைத்திருக்கும் ஜாடியில் சிறிது அரிசியை துணியில் முடிச்சு போட்டு வைத்தால் உப்பு ஈரமாகாது.

    * காளான்களை அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால் பாத்திரம் கறுத்துவிடும்.

    * உருளைக்கிழங்கை வேக வைக்கும்போது உப்பை சேர்க்க, விரைவில் வேகும். வெடிப்பும் வராது.

    * பஜ்ஜி மாவை மிக்சியில் போட்டு லேசாக அரைத்துவிட்டு பஜ்ஜி செய்தால் மிருதுவாகவும், உப்பியும் இருக்கும்.

    * பிரிட்ஜில் பேக்கிங் சோடா டப்பாவை திறந்த நிலையில் வைத்தால் துர்நாற்றம் வராது.

    * பாத்திரங்களில் எண்ணெய் பிசுபிசுப்பு இருந்தால் சிறிது தயிர் ஊற்றி தேங்காய் நார் கொண்டு அழுத்தி தேய்த்தால் பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

    • குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய இனிப்புகளில் ஒன்று சேமியா கேசரி.
    • மாலை வேளையில் தேனீருடன் சுவைக்கலாம்.

    குழந்தைகள் பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய இனிப்புகளில் ஒன்று தான் சேமியா கேசரி. இதனை மாலை வேளையில் தேனீருடன் சுவைக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 500 கிராம்

    சர்க்கரை - 400 கிராம்

    நெய் - தேவையான அளவு

    முந்திரி, பாதாம் - 2 (தேவையான அளவு)

    ஏலக்காய் - ஒரு ஸ்பூன்

    குங்குமப்பூ - சிறிதளவு

    செய்முறை:

    அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி அதில் முந்திரி, பாதாம் சேர்த்து வறுக்க வேண்டும். அதனுடன் சேமியாவையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சேமியாவை வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு சேமியா வெந்த பிறகு சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். அதனுடன் பாலில் குங்குமப்பூ சேர்த்து கலந்து சேமியா கேசரியில் சேர்க்க வேண்டும். நன்றாக கிளறி இறக்கினால் சேமியா கேசரி தயார்.

    • உஷ்ணத்தை தணிப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பது இளநீர்.
    • வித்தியாசமாக இளநீர் அல்வா செய்யலாம் வாங்க.

    உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பது இளநீர். இந்த இளநீரை வைத்து பலர் இளநீர் பாயாசம், இளநீர் சர்பத் போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதுமட்டுமில்லாமல் இதுவரை நீங்கள் எத்தனையோ அல்வாவை சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இளநீர் அல்வா செய்யலாம் வாங்க. இது பார்ப்பதற்கு கிளாசியா இருப்பது மட்டுல்ல சுவைப்பதற்கு சூப்பராக இருக்கும். நாக்கில் வைத்தவுடன் கரைந்துவிடும் அளவிற்கு சுவையாக இருகும் இந்த இளநீர் அல்வா.

    தேவையான பொருட்கள்:

    இளநீர்- 1

    கார்ன்பிளார் மாவு- ஒரு கப்

    சர்க்கரை- அரை கப்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    முந்திரி, பாதாம்- 10

    செய்முறை:

    ஒரு பவுலில் இளநீரின் தண்ணீரை ஊற்றி அதில் கான்பிளார் மாவினை கட்டி இல்லாமல் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரி, பாதாம் துண்டுகளை போட்டு வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி அதில் நாம் ஏற்கனவே கரைத்து வைத்துள்ள இளநீர் கலவையினை ஊற்ற வேண்டும். இதனை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த கலவை சிறிது கெட்டியாக ஆரம்பித்தவுடன் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும்.

    பின்னர் இளநீர் துண்டுகளில் உள்ள வலுக்கைகளை சிறிது சிறிதாக பொடித்து அந்த அல்வாவில் சேர்க்க வேண்டும். இளநீர் அல்வா கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் மற்று சிறிதளவு நெய் சேர்த்து கிளறி இறக்கலாம்.

    அல்வா சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கண்டிப்பாக இளநீர் பிரியர்களுக்கு ஃபேவரட் அல்வாவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    • ஜப்பான் சிக்கன் இணையம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.
    • பல உணவகங்கள் தங்கள் மெனுவில் சேர்க்கத் தொடங்கி உள்ளன.

    ஜப்பான் சிக்கன் இணையம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இது அம்மன் மெஸ் எனப்படும் ஈரோடு உணவகத்தில் பிரபலமான உணவு. இந்த உணவு இணையத்தில் மிகவும் புகழ் பெற்று வருகிறது தமிழகம் முழுவதும் உள்ள பல உணவகங்கள் இதை தங்கள் மெனுவில் சேர்க்கத் தொடங்கி உள்ளன. இந்த வித்தியாசமான மற்றும் சுவையான ஜப்பான் சிக்கன் வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போம்...

    தேவையான பொருட்கள்:

    சிக்கன்- அரை கிலோ

    மைதா- 3 ஸ்பூன்

    சோள மாவு- 2 ஸ்பூன்

    மிளகு-1 டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    வெண்ணெய்- 3 டீஸ்பூன்

    பூண்டு- 3 பல்

    பச்சை மிளகாய்- 2

    பால்- 1/2 லிட்டர்

    முந்திரி- 10

    சர்க்கரை-1 டீஸ்பூன்

    கொத்தமல்லி இலை- சிறிதளவு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள சிக்கன், மைதா, சோள மாவு, உப்பு, மிளகுதூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கலந்துவைத்துள்ள சிக்கனை பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    முந்திரியை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து மற்றொரு கடாயில் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பின்பு அதில் காய்ச்சி ஆறவைத்த பால் மற்றும் பொத்த முந்திரியை சேர்த்து கிளற வேண்டும்.

    இதனைத்தொடர்ந்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை, மிளகுத்தூள் சேர்த்து கிளறி கடைசியாக பொரித்த சிக்கனை சேர்க்க வேண்டும்.

    இறுதியாக கிரேவி பதத்திற்கு வந்ததும் அதில் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான ஜப்பான் சிக்கன் தயார்.

    • உடல் எடையை குறைக்க உதவும் குதிரைவாலி ராகி களி.
    • உடலுக்கு தேவையான புரதச்சத்து, நார்ச்சத்தை கொண்டுள்ளது.

    அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்தை அதிகம் கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    குதிரைவாலி அரிசி- ஒரு கப்

    கேழ்வரகு மாவு- ஒன்றரை கப்

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் குதிரைவாலி அரிசியை 3 முறை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை அரைமணிநேரம் மூடி போட்டு ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பங்கிற்கு 3 மக்டங்கு தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ள வேண்டும். அரைப் பதத்திற்கு அரிசி வெந்தவுடன் கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டி இல்லாமல் மிதமான தீயில் வைத்து  கிளற வேண்டும். பருப்பு மத்து கொண்டு நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

    அவ்வாறு கிளறும்போது ஒட்டாமல் நன்றாக வெந்துவரும் அப்போது தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, களியை தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்கவேண்டும். குதிரைவாலி ராகி களி தயார்.

    இந்த களியை கீரைக்குழம்பு, மீன்குழம்பு, கறிக்குழம்பு, கருவாட்டுக்குழம்பு ஆகியவை வைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். ஆனால் உடல் எடை குறைக்கும் முயற்சியை மேற்கொள்பவர்கள் இதனை மோரில் சின்னவெங்காயம் சேர்த்து இந்த களியையும் கரைத்து காலை வேளைகளில் குடிக்கலாம். கீரை வகைகளை சைட் டிஷ்சாக வைத்து மதிய சாப்பாடாகவும் சாப்பிடலாம்.

     பலன்கள்

    கால்சியம் இருப்பதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இரும்புச்சத்து இருப்பதால் ரத்த உற்பத்திக்கு உதவும். கொழுப்பைக் குறைக்கும். குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். கேழ்வரகு உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்து வலுவைச் சேர்க்கும். எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம். பெண்கள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவு.

    ×