search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • 200-க்கும் மேற்பட்ட ரகங்களில், 6 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன.
    • மலைப்பகுதிக்குள் உள்ள 2-வது பெரிய பூங்காவாக இது கருதப்படுகிறது.

    ஊட்டி,

    ஊட்டி கர்நாடக தோட்டக்கலை துறை பூங்காவில், சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின் தோட்டக்கலை பூங்காவில் நடப்பாண்டு கோடை சீசனையொட்டி, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மலர் பாத்திகளில், 200-க்கும் மேற்பட்ட ரகங்களில், 6 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகள், தொங்கு பாலத்தில் நடந்து சென்று 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர். பூங்கா நடுவே அமைக்கப்பட்ட கட்டமைப்பு வளையத்தில் பள்ளி குழந்தைகள், சுற்றுலா பயணிகள் விளையாடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் இந்த பிரபலமான இந்த பூங்கா சுற்றிலும் காணப்படும் அழகால் சூழப்பட்ட சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.

    புகைப்படக் கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மற்றும் மகிழ்ச்சிதரும் இடமாக கர்நாடக பூங்கா அமைந்துள்ளது. பசுமைக்கு மத்தியில் அமைதியை இங்கு அனுபவிக்கலாம். 38 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் கர்நாடக தோட்டக்கலைத் தோட்டம், ரோஜா தோட்டம், இத்தாலியத் தோட்டம், தேயிலைத் தோட்டம், பிரமைத் தோட்டம், எனப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    மலைப்பகுதிக்குள் உள்ள 2-வது பெரிய பூங்காவாக இது கருதப்படுகிறது.

    நீலகிரிக்கு வரும் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மலர் படுக்கைகளுடன் பல புல்வெளிகளும் உள்ளன. இந்த நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நன்கு பராமரிக்கப்படும் பூங்காவின் முக்கிய சிறப்பம்சமாக பூங்காவின் நர்சரி குடிலில் 50 ஆயிரம் வெவ்வேறு தொட்டிகளில் வளர்க்கப்படும் வண்ணமயமான மற்றும் அழகான மனதை கவரும் மலர்கள் உள்ளன. இங்கு மூலிகைகளுக்கான தனி பிரிவுவும் உள்ளது. பூங்காவின் நர்சரி குடிலில் உள்ள மலர்கள் அழகாய் அனைவரின் மனதையும் கவர்ந்து இழுகின்றது.

    • உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் உலா வருகிறது.
    • கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது.

    இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கேசலாடா கிராமத்தில் இரவு நேரத்தில் 2 குட்டிகளுடன் கரடிகள் கிராமத்துக்குள் உலா வந்தன. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த கரடிகள் கிராம மக்கள் யாரையாவது தாக்குமுன் வனத்துறையினர் இரவு நேரங்களில் கிராமத்துக்குள் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு சுமார் 60 சதவீதம் அளவிற்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
    • பிரதமர் மோடி மலை மாவட்டமான நீலகிரி கூடலூர் தெப்பக்காட்டிற்கு வந்து பாகன் தம்பதியை சந்திக்க உள்ளார்.

    ஊட்டி,

    பிரதமர் மோடி நாளை முதுமலைக்கு வருகிறார். அங்கு அவர் யானைகள் முகாமை பார்வையிடுகிறார்.

    ெதாடர்ந்து ஆவணப்படத்தில் இடம் பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியை பாராட்டுவதோடு, படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி யானைகளையும் பார்வையிடுகிறார்.

    பிரதமரின் நீலகிரி வருகையை முன்னிட்டு அவருக்கு சிறப்பான வரவேற்புகள் அளிக்க மாவட்ட பா.ஜ.கவினர் தயாராகி வருகின்றனர்.

    முதுமலை வரும் பிரதமருக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட தலைவர் மோகன்ராஜ் கூறுகையில், பிரதமர் மோடி எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறார். ஓலைகுடிசையில் இருந்தவர்களுக்க கான்கிரீட் வீடு கொடுத்து அழகு பார்த்தவர் பிரதமர் மோடி. சாலையோர வியாபாரிகளுக்கு வியாபார கடன் கொடுத்துள்ளார்.

    ஜல்ஜீவன் திட்டத்தை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தி கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு சுமார் 60 சதவீதம் அளவிற்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஜல்ஜீவன் திட்டம் ஊரக பெண்களின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது. முன்பு, அவர்கள் பல மைல் தூரம் நடந்து சென்று தலையில் பானைகளை சுமந்து வீடு திரும்ப வேண்டியிருந்தது.தற்போது, ஜல்ஜீவன் திட்டத்தால், குடிநீர் வீட்டு வாசலிலேயே கிடைப்பதால், அவர்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளது.

    எந்த ஒரு அரசியல் தலைவரும் சாதாரண சாமானிய மக்களை சந்திக்க வந்ததில்லை.

    தற்ேபாது பிரதமர் மோடி மலை மாவட்டமான நீலகிரி கூடலூர் தெப்பக்காட்டிற்கு வந்து பாகன் தம்பதியை சந்திக்க உள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. முதுமலை வரும் பிரதமருக்கு நீலகிரி மாவட்ட பா.ஜ.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துணை காவல்துறை கண்காணிப்பாளர் யசோதா தலைமை தாங்கினார்.
    • ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கணிவாகவும், பண்போடும் நடந்து கொள்ள வேண்டும்.

    ஊட்டி,

    மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் ஊட்டிக்கு உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் குறுகிய நகரமான ஊட்டி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

    இதனையடுத்து ஊட்டி சேரிங்கிராசில் சுற்றுலா மேக்ஸி கேப் ஒட்டுநர்கள் சங்கம் சார்பில் ஊட்டி நகர துணை காவல்துறை கண்காணிப்பாளர் யசோதா தலைமையில் சுற்றுலா வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

    பின்னர் அவர் கூறும் போது, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கணிவாகவும், பண்போடும் நடந்து கொள்ள வேண்டும். பாதுகாப்புடன் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல வேண்டும். அதிக வாடகை வசூலிக்க கூடாது. சுற்றுலா பயணிகள் தவறவிடும் செல்போன்கள் மற்றும் பொருட்களை கண்டெடுத்தால் குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    • 20 மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 4 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர் பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை நடப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜோதி லட்சுமணன், தாசில்தார் ராஜசேகர் தலைமையிலான அதிகாரிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார், சோிங்கிராஸ், ரெயில் நிலையம் அருகே உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஒரு சில கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. சோதனையில் சுமார் 50 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை பினாயில் ஊற்றி அழித்தனர்.

    இதைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் மீன்கள் வைத்திருந்த 4 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கபபட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டம் இல்லாததால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து மீன்கள் கொண்டு வருவதால், இங்கு வந்து சேர 4 முதல் 5 நாட்கள் வரை ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில் மீன்கள் அழுக அதிக வாய்ப்புகள் உள்ளன.

    எனவே பொதுமக்கள் மீன்களை சரிபார்த்து நல்ல மீன்களை மட்டுேம வாங்க வேண்டும். இதேபோல் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் ரசாயனத்தை பயன்படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.
    • சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, சுற்றிதிரிந்தது.

    கோத்தகிரி

    கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது.

    இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை விளங்குகிறது. இங்குள்ள பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.

    இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதி என்பதால், இங்குள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, அங்குள்ள சாலை வழியாக நடந்து சென்றது. பின்னர் அந்த அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து மறைந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்த தகவல் வெளியே பரவியதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் கரடிகள் மற்றும் சிறுத்தைகள் அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ளதால், பச்சை தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களும் பணிக்கு செல்ல தயக்கம் காண்பித்து வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே இதே பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 சிறுத்தைகள் மற்றும் 2 கருஞ்சிறுத்தைகள் உலா வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறுத்தை ஒன்று அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த வளர்ப்பு நாயை கவ்வி சென்றது.

    இது தவிர அங்குள்ள சாலையில் தினமும் கரடிகள், முள்ளம் பன்றிகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே வனவிலங்குகள் பொதுமக்களை தாக்கி அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன் வனத்துறையினர் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பலா மரங்களில் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன
    • பொதுமக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்

    குன்னூர்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக அங்கிருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து, குன்னூர் வனப்பகுதிக்கு வர தொடங்கியுள்ளன.

    இதற்கிடையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள பலா மரங்களில் காய்கள் காய்த்து குலுங்குகின்றன. இதை சுவைக்க காட்டுயானைகள் படையெடுக்கின்றன. அவை குழுக்களாக பிரிந்து பல்வேறு தோட்ட பகுதியில் உலா வருகின்றனர்.

    குறிப்பாக பர்லியார் பகுதியில் குட்டியுடன் காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். அங்குள்ள மரங்களில் இருந்த பலாப்பிஞ்சுகளை காட்டுயானைகள் ருசித்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காட்டுயானைகளை விரட்டியடித்தனர். மேலும் பொதுமக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • புகையிலை பொருட்கள் விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
    • போலீசார் அவரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கோத்தகிரி

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து கோத்தகிரி உதவி காவல் ஆய்வாளர் ரகுமான்கான் தலைமையிலான போலீசார் புகையிலை பொருட்கள் விற்பவர்களை கண்டறிய தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கோத்தகிரி அரவேனு பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்றிருந்ததை கண்டு அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் அரவேனுவை சேர்ந்த ரவி என்பதும், அவர் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • முகாமுக்கு டாக்டர் பவிஷ் தலைமை தாங்கினார்.
    • ரத்த பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரையில், தி.மு.க தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் ஆலோசனைப்படி நீலகிரி மாவட்ட மருத்துவரணி சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு டாக்டர் பவிஷ் தலைமை தாங்கினார்.

    இதில் ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த சோகை, ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர்கள் ரூபேஷ், ராமச்சந்திரன், சுப்பிரமணி, உன்னிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொட்டபெட்டா சதுக்கத்தில் இருந்து மலைசிகரம் வரை வனத்துறை சார்பில் வாகனம் இயக்கப்பட்டு வந்தது.
    • அறிவிப்பு இல்லாததால் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஜீப், காரில் பயணித்து வருகிறோம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

    ஊட்டிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு செல்வது வழக்கம். பலர் சொந்த வாகனங்களில் வருவார்கள்.

    சொந்த வாகனம் இல்லாதோர், ஊட்டியில் இருந்து பஸ் மூலமாக தொட்டபெட்டாவிற்கு வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக தொட்டபெட்டா சதுக்கத்தில் இருந்து மலைசிகரம் வரை வனத்துறை சார்பில் வாகனம் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த வாகனம் மூலம் தினமும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து மலைசிகரத்தை பார்த்து மகிழ்ந்து சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு இயக்கப்பட்டு வரும் வாகனம் பற்றிய முறையான அறிவிப்பு வெளியிடப்படுவதில்லை என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல வனத்துறை சார்பில் வாகனம் இயக்கப்பட்டு வந்தது. இதனால் ஊட்டிக்கு வரும் நாங்கள் அங்கிருந்து பஸ்சில் தொட்டபெட்டா சதுக்கத்திற்கு வந்து, அங்கிருந்து வனத்துறை இயக்கும் வாகனத்தில் பயணித்து வந்தோம்.

    ஆனால் கடந்த சில தினங்களாக வாகனங்கள் வருவது குறித்து முறையான அறிவிப்புகள் வருவதில்லை. இதன் காரணமாக நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம்.

    மேலும் வனத்துறை வாகனம் இயக்கப்படுவது குறித்த முறையான அறிவிப்பு இல்லாததால் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஜீப், காரில் இங்கு பயணித்து வருகிறோம். எனவே வனத்துறை முறையான அறிவிப்பு வெளியிட்டு வாகனத்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஜீப்பை ரகு அதிவேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது.
    • விபத்தில் ஜீப் பலத்த சேதம் அடைந்தது.

    கூடலூர்

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரில் இருந்து ஆரோட்டுப்பாறைக்கு ஜீப் ஒன்று சென்றது. ஜீப்பை ரகு(19) என்பவர் ஓட்டினார். அவர் அதிவேகமாக ஜீப்பை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதில், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் ஜீப் மோதியது. இதில் ரகு பலத்த காயமடைந்தார்.

    மேலும் அவருடன் சென்ற நண்பர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவர் பெயர் விவரம் தெரியவில்லை. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து ஜீப் பலத்த சேதம் அடைந்தது. இது குறித்து நியூகோப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆற்றில் சிலர் மீன் பிடிக்க முயன்றதை கண்டனர்.
    • வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர்.

    கூடலூர்

    கூடலூர் தாலுகா ஓவேலி வனச்சரகம் புன்னம்புழா ஆற்றுப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆற்றில் சிலர் மீன் பிடிக்க முயன்றதை கண்டனர்.

    இதை தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், கூடலூர் கோழிப்பாலம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (வயது 45), மணிகண்டன் (40) மற்றும் தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்த சுதாகரன் (36) ஆகிய 3 பேர் என தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உத்தரவின்பேரில் வனச்சரக யுவராஜ்குமார் கைதான 3 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தார்.

    ×