search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223337"

    • காலை அல்லது இரவு மீந்து போன இட்லி வைத்து இந்த ரெசிபியை செய்யலாம்.
    • 10 நிமிடத்தில் தயிர் இட்லி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

    தேவையான பொருட்கள் :

    இட்லி - 6,

    புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன்,

    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,

    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,

    ஓமப்பொடி - 3 டீஸ்பூன்,

    மாதுளம் முத்துக்கள் - சிறிதளவு

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

    உப்பு - தேவையான அளவு,

    அரைக்க:

    தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 4,

    முந்திரிப்பருப்பு - 6.

    தாளிக்க:

    கடுகு - அரை டீஸ்பூன்,

    பெருங்காயம் - அரை டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    எண்ணெய் - 1 டீஸ்பூன்.

    செய்முறை:

    தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து தயிரில் கலக்கவும்.

    பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி கொத்தமல்லித்தழை, ஓமப்பொடி, மாதுளம் முத்துக்கள், மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம்.

    சூப்பரான தயிர் இட்லி ரெடி.

    அல்லது வெறும் கொத்தமல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம்.

    இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சேமியா, ரவையில் உப்புமா மட்டுமல்ல பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்:

    சேமியா - 2 கப்

    ரவை - 1/2 கப்

    பாசிப்பருப்பு - 1/2 கப்

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    நெய் - தேவையான அளவு

    மிளகு - 1 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    முந்திரி - 10

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    கறிவேப்பிலை

    செய்முறை:

    * வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

    * அதே வாணலியில் சேமியாவையும், ரவையையும் தனித்தனியாகச் சூடு வரும்படியாக வறுத்துக்கொள்ளவும்.

    * பாசிப்பருப்பை நன்றாக கழுவி விட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் குழையாமல் வேக வைக்கவும்.

    * ஒரு வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை போட்டு தாளித்த பின் ஒரு பங்கு சேமியா & ரவைக்கு இரண்டு (அ) இரண்டேகால் பங்கு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு மூடி வைக்கவும்.

    * பாசிப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்குத் தண்ணீர் ஊற்றவேண்டாம்.

    * தண்ணீர் கொதித்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

    * மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டித் தட்டாமல் கிளறிவிட்டு அது வேகும் வரை மூடி வைக்கவும்.

    * சேமியா வெந்ததும் ரவையைச் சிறிதுசிறிதாகக் கொட்டி, கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    * ரவை போட்டு நன்றாக கிளறிய பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும். இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.

    * ருசியான ரவா சேமியா பொங்கல் தயார்.

    * இதற்கு சாம்பார் அருமையான இணையாகும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த தோசையை சாப்பிடலாம்.
    • காலையில் குறைந்த நேரத்தில் சத்தான டிபன் செய்ய நினைப்பவர்கள் இதை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    கோதுமை ரவை - கால் கிலோ

    அரிசி மாவு - கால் கப்

    சின்ன வெங்காயம் - 10

    சீரகம் - அரை டீஸ்பூன்

    இஞ்சி - சிறிய துண்டு

    காய்ந்த மிளகாய் - 5

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கோதுமை ரவையை நன்றாக கழுவி கொள்ளவும்.

    ஒரு மிக்சி ஜாரில் சின்ன வெங்காயம், சீரகம், இஞ்சி, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக அரைக்கவும்.

    அடுத்து அதில் கழுவிய கோதுமை ரவையை போட்டு சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் அரிசி மாவு, பொடியாக நறுக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 15 நிமிடம் ஊற விடவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான டிபன் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
    • பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு - 100 கிராம்

    அரிசி மாவு - ஒரு மேசைகரண்டி

    ரவை - ஒரு தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    துருவிய பீட்ரூட் - 3 மேசைகரண்டி

    ப.மிளகாய் - ஒன்று

    கொத்தும்மல்லி - சிறிதளவு

    உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, ரவை, வெங்காயம், துருவிய பீட்ரூட், ப.மிளகாய், கொத்தும்மல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்துஎடுத்து பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான கேழ்வரகு பீட்ரூட் தோசை ரெடி.

    * இதற்கு தொட்டு கொள்ள புதினா துவையல் மற்றும் இட்லி மிளகாய் பொடியுடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • முளைகட்டிய தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • உடல் ஆரோக்கியத்திற்கு இந்த பரோட்டா மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை - ஒரு கப்

    கோதுமை மாவு - கால் கிலோ

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * முதலில் தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும்.

    * முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    * கோதுமை மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.

    * மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும்.

    * தேய்த்த பரோட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.

    * இப்போது சத்தான சுவையான முளைகட்டிய தானிய ஸ்டப்ஃடு பரோட்டா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமை ரவை உகந்தது.
    • டயட்டில் இருப்பவர்கள் கோதுமை ரவை உணவுகளை எடுத்துகொள்ளலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1 கப்

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    வரமிளகாய் - 2

    இஞ்சி - சிறிது

    தேங்காய் துருவல் - அரை கப்

    கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - சிறிது

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    * இஞ்சியை தட்டி வைத்து கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, வரமிளகாய், தட்டி வைத்த இஞ்சியை போட்டு தாளித்த பின் அதில் பொருங்காயத்தூளை தூவி, ஒரு முறை கிளற வேண்டும்.

    * அடுத்து அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.

    * வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    * தண்ணீர் கொதித்ததும், அதில் வறுத்த கோதுமை ரவை, தேங்காய் துருவல் சேர்த்து, நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி போட்டு மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    * பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.

    * இப்போது சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி!!!

    * இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • பச்சை பயறு, கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம், புரதம் அதிகம் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு - அரை கப்

    பச்சை பயறு - முக்கால் கப்

    இஞ்சி - சிறிய துண்டு

    சீரக தூள்- அரை டீஸ்பூன்

    ப.மிளகாய் - 2

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    தக்காளி - 1

    வெங்காயம் - 1

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    கேழ்வரகு, பச்சை பயறை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஊறவைத்த கேழ்வரகு, பச்சை பயறை மிக்சிஜாரில் போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, ப.மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சீரகத்தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான கேழ்வரகு பச்சை பயறு தோசை ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள கார சட்னி அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • உடல் எடையை குறைப்பதற்கு இது ஒரு சுவையான உணவு.
    • சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த உணவு சிறந்தது.

    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு - 1 கப்

    தக்காளி - 1

    கேரட் - 1

    சின்ன வெங்காயம் தோலுரித்து - 10

    இஞ்சி - சிறிய துண்டு,

    பூண்டு - 4 பல்

    மிளகு, சீரகம் - 1 ஸ்பூன் நன்றாக பொடி செய்தது,

    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 1

    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,

    ஓமம் - 1/2 ஸ்பூன் இடித்தது

    உப்பு - தேவையான அளவு,

    கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு

    செய்முறை

    தக்காளி, கேரட், சின்ன வெங்காயத்தை கொரகொரப்பாக ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்ற வேண்டாம் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    பூண்டை துருவிக்கொள்ளவும்.

    கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகு, சீரகத்தை பொடித்துகொள்ளவும்.

    ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு, அரைத்த விழுது, துருவிய பூண்டு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, ப.மிளகாய், இஞ்சி, பொடித்த மிளகு, சீரகம், மிளகாய் தூள், ஓமம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு அடை மாவு பதத்திற்கு மாவை கரைத்து கொள்ள வேண்டும்.

    அடை மாவு பதம் தெரியாதவர்கள் இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை மொத்தமாக ஊற்றி கடலை மாவைக் கரைத்தால், கட்டி கட்டியாக ஆகிவிடும். ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, உங்கள் கைகளை போட்டு நன்றாக பிசைந்து அடை மாவு பதத்தில் மாவைத் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

    5 நிமிடம் மாவை ஊறவைத்து விட்டு, அதன் பின்பு, தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சுவையான அடை தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஓட்ஸில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகளவு உள்ளது.
    • ஓட்ஸ் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    தேவையான பொருள்கள்

    ஓட்ஸ் - 3 கப்

    தயிர் - 2 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 3

    அரிசி மாவு - 2 ஸ்பூன்

    சோள மாவு - 2 ஸ்பூன்

    வெங்காயம் - 1

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை

    வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓட்ஸை எண்ணெய் விடாமல் வெறும் கடாயில் போட்டு வறுத்து, மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தையும் அரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில், சிறிதளவு வெந்நீர் ஊற்றி, அதில் ஓட்ஸ் பொடி, தயிர், அரிசி மாவு, சோள மாவு, அரைத்த பச்சை மிளகாய் கலவை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    ஊறிய ஓட்ஸ் மாவில், நறுக்கிய வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து, தோசைக் கல்லில் மெல்லிய தோசை போல ஊற்றி வேகவைத்து, எடுக்க வேண்டும்.

    இப்போது சத்தான சுவையான ஓட்ஸ் வெங்காய தோசை ரெடி.

    இதற்கு கார சட்னி, தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சிவப்பரிசியில் புரதச்சத்து, நார்ச்சத்து அதிகம் நிறைந்தது.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    சிவப்பரிசி மாவு - 4 கப்

    தேங்காய் துருவல் - 1 கப்

    தண்ணீர் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு, அதில் கொதிக்க வைத்துள்ள உப்பு நீரை விட்டு, புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். (முக்கியமாக தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட வேண்டாம். அதற்காக மிகுந்த வறட்சியுடனும் இருக்கக் கூடாது.)

    புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்கவிடவும்.

    பின்னர் புட்டு குழாயில், முதலில் சிறிது புட்டு மாவு போட்டு, பின்னர் துருவிய தேங்காயை போட்டு, மறுபடியும் புட்டு மாவைப் போட்டு, குழாய் நிரம்பும் வரை இந்த முறையில் மாவை நிரப்பவும்.

    பிறகு அந்த குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 10 முதல் 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.

    பின்னர் அதனை வெளியில் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு ரெடி. சன்னாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மசால் தோசை எனில் உருளைக்கிழங்கு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள்.
    • இன்று முட்டை சேர்த்து மசாலா தோசை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தோசை மாவு - 1 கப்

    முட்டை - 4

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 1

    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 2

    கடுகு - அரை ஸ்பூன்

    மிளகு தூள் - அரை ஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

    தனியா தூள்- அரை ஸ்பூன்

    மிளகாய் தூள்- அரை ஸ்பூன்

    கரம் மசாலா- அரை ஸ்பூன்

    கறிவேப்பிலை - 2 கொத்து

    கொத்தமல்லித்தழை - கையளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    முட்டையை ஒரு பௌலில் ஊற்றி நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும்.

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக அரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு தக்காளியை சேர்த்து குழை வதக்கி விட வேண்டும்.

    தக்காளி நன்கு மசிந்த பிறகு , மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகிய மசாலாக்களை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும் .

    இப்போது முட்டையை ஊற்றி உப்பு, மிளகுத் தூள் சேர்த்து முட்டை நன்றாக உதிர்ந்து வரும் வரை கிளறி விட வேண்டும்.

    அடுப்பில் தோசைக்கல் வைத்து , கல் சூடானதும் மாவை சற்று தடிமனாக ஊற்றி அதன் மேல் முட்டை மசாலாவை தோசை மேல் தோசை முழுவதும் பரப்பி விட வேண்டும். சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வெந்த பிறகு எடுத்து , மேலே கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறினால் எத்தனை வைத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

    இப்போது சூடான முட்டை மசாலா தோசை ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • சீஸ் பூரியை வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் செய்து கொடுத்து அசத்தலாம்

    தேவையான பொருட்கள்:

    பூரி மாவிற்கு...

    கோதுமை மாவு - 1 கப்

    ரவை - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    உள்ளே வைப்பதற்கு...

    துருவிய சீஸ் - 1 கப்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை:

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து ஈரத் துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    * சிறிது மாவை எடுத்து உருட்டி, அதை சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே சிறிது சீஸ் கலவையை வைத்து மூடி அதை மீண்டும் தட்டையாக பூரி அளவிற்கு தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சீஸ் மசாலா பூரி தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×