search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223427"

    • தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறார்கள்.
    • இந்தியை திணிப்பதன் மூலம் சமஸ்கிருதத்தை உள்ளே புகுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது

    நாகர்கோவில்:

    நாகர் கோவில் மாநகர தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று செம்மாங்குடி சாலையில் நடைபெற்றது.

    மாநகர செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கி னார். கிழக்கு பகுதி செயலா ளர் துரை வரவேற்று பேசினார். மாநகர மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் மாநில பேச்சாளர் பொன்னேரி சிவா கூறியதாவது:-

    தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறார்கள். முதல் முதலாக சென்னை, சென்னை ராஜ்தானியாக இருந்தபோது ராஜாஜி இந் தியை புகுத்தினார். இதற்கு எதிராக பெரியார் மற்றும் அண்ணா தலைமையில்பெ ரும்போராட்டம் நடைபெ ற்றது. மொழிக்காகமுதல் முதலில் சின்னச்சாமி உயிர் தியாகம் செய்தார். 1938-ல் மொழிக்காக சிறையில் சாகடிக்கப்பட்ட நடராஜன் மறைவிற்கு அண்ணாமலை செட்டியார் தனது காரை வழங்கினார். 1975-ம் ஆண்டு ஐ.நா. சபை முகப்பில் தமிழ கத்தைச் சேர்ந்த கணியன் பூங்குன்றன் எழுதிய யாதும் ஊரேயாவரும்கேளிர் என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.

    தமிழ் மொழியின் சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. செய்தி தொடர்பு துணை செயலாளர் தமிழன் பிர சன்னா கூறியதாவது:-ஆர்.எஸ்.எஸ். உத்தரவுக்கு ஏற்ப மோடி, அமித்ஷா அகியோர் இந்தியை திணித்து வருகின்றனர். நாடு முழுவதும் மருத்துவ கல்லூரி உள்பட அனைத்து கல்விநிறுவனங்க ளிலும் இந்தி கட்டாயமாக்கப்படும்.

    இவ்வாறு இந்தியை திணிப்பதன் மூலம் சமஸ்கி ருதத்தை உள்ளே புகுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. சமஸ்கிருதம் வரும்போது, சனாதானமும் தானாக வந்து விடும். இதுவே ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்கம். இவ் வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், முன் னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பொர்னார்டு, ராஜன், மாவட்ட நிர்வாகிகள் தில்லைசெல்வம், ஜோசப் ராஜ் பூதலிங்கம்,

    பார்த்த சாரதி, சதாசிவம், தாமரைபாரதி, ஒன்றிய, செயலார்கள் லிவிங்ஸ்டன், சுரேந்திரகுமார், செல்வம், பிராங்கிளின், மதியழகன், பாபு, தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல் செய்திருந்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள அண்ணா சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க ஒன்றிய தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு பேச்சாளர்களாக வி.பி. ராஜன், இலக்கிய அணி தலைவர் தென்னவன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, தலைமை கழக பேச்சாளர் ஒப்பிலாமணி ஆகியோர் பங்கேற்று இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து அனைவரும் ஓரணியில் நின்று பாடுபட வேண்டும் என்று பேசினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் சண்முக வடிவேல் செய்திருந்தார்.

    • தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.
    • பகுதி செயலாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.

    ராம்நகர் அண்ணா சிலையருகில் நடந்த கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏவுமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கி பேசினார். இதில், தலைமைக்கழக பேச்சாளர்கள் ஈரோடு இறைவன் திருப்பூர் கோவிந்தசாமி மற்றும் ஓசூர் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ.பி.முருகன் ஆகியோர் கண்டனவுரையாற்றினர்.

    இதில், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமாரன், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ். சீனிவாசன், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நாளை( 4-ந்தேதி ) தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
    • துண்டு பிரசுரங்களை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் பேரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நாளை( 4-ந்தேதி ) தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு தஞ்சாவூர் கரந்தை, கோட்டை, கீழவாசல் மற்றும் மருத்துவகல்லூரி பகுதி மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில் பொதுமக்களிடம் இது தொடர்பான துண்டு பிரசுரங்களை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டை மீறி அமைச்சர்கள் செயல்படுகின்றனர் என செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
    • சிவகங்கையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் அரண்மனை வாசல் முன்பு சண்முகராஜா கலையரங்கத்தில் நடந்தது.

    கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் காவல் துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அவர் தன்னை மீறி பேசுகின்ற எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்.

    அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் எம்.எல்.ஏ.க்களை பிரித்து சென்று விடுகிறார்கள் என்று அச்சப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜலெட்சுமி, பாஸ்கரன் மற்றும் நடிகர் சிங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், குணசேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், மாநில நிர்வாகிகள் கருணாகரன், தமிழ்செல்வன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் தசரதன், செல்லமணி, ஸ்டீபன், சேவியர், சிவாஜி, கோபி, பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், பழனிசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணைச் செயலாளர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் பாண்டி நன்றி கூறினார்.

    • ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது.
    • ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி அன்று மாலை 6மணியளவில் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் வாலிபாளையம் யூனியன் மில் சாலை ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6மணியளவில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., மற்றும் தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் ஜின்னா சிறப்புரையாற்றுகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை 3-ந்தேதி இந்தி திணிப்பை ஏன் எதிர்க்க வேண்டும் என்கின்ற தலைப்பில் தலைமை கழகத்தால் அனுப்பப்பட்ட துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கப்படவுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வீடு வீடாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கவுள்ளார். இதில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், நகர, பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட கழக நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொ.மு.ச., நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் அனைவரும் கலந்துகொண்டு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமெனவும், நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள காரத்தொழுவில் அ.தி.மு.க. பொன்விழா நிறைவு, 51ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் திருப்பூர் சி.சிவசாமி சிறப்புரையாற்றினார்.மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பொன்விழா பொதுக்கூட்டத்தில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.-நடிகர் வையாபுரி பேசுகிறார்கள்.
    • நிலையூரில் இன்று மாலை நடக்கிறது.

    மதுரை

    மதுரை அருகே நிலையூர் கைத்தறி நகரில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நிலையூர் கைத்தறி நகரில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி அளவில் நடக்கிறது.

    பொதுக்கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கவுன்சிலர் நிலையூர் முருகன் தலைமை தாங்குகிறார். மாவட்ட இளைஞரணி செயலாளர், திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் முன்னிைல வகிக்கிறார்.

    ராஜன்செல்லப்பா-வையாபுரி

    பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமைக்கழக பேச்சாளர் நடிகர் வையாபுரி, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்கின்றார்கள்.

    மேற்கண்ட தகவலை திருப்பரங்குன்றம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் நிலையூர் முருகன் தெரிவித்துள்ளார்.

    • திசையன்விளை நேரு திடலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.
    • ஜெயலலிதா ஆட்சியையும், கட்சியையும் சிங்கம் போல் நடத்தினார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க.சார்பில் கட்சி 51 வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் திசையன்விளை நேரு திடலில் நேற்று இரவு நடந்தது.

    நெல்லை மாவட் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், மாவட்ட மகளிரணி செயலாளரும் திசையன்விளை பேரூராட்சி தலைவருமான ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திசையன்விளை நகர செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார் கொள்கைபரப்பு துணை செயலாளர் விந்த்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆரம்பித்து 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. கட்சி ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடிய கட்சி, சாமானிய மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி.சூப்பர் ஆட்சி நடத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. சுமாரான ஆட்சி கூட நடத்தவில்லை. மின்கட்டணம், சொத்து வரியை உயர்த்திவிட்டு இதற்கெல்லாம் காரணம் மத்திய அரசு தான் என கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்பது பொய்யானது. ஜெயலலிதா ஆட்சியையும், கட்சியையும் சிங்கம் போல் நடத்தினார்.

    இவ்வாறு விந்தியா கூறினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் பால்துரை, முன்னாள் எம்.பி.சவுந்தர்ராஜன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் முத்துகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டமுடிவில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    • மாநில இளைஞரணி செய லாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் உத்தர வின் பேரில் குமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் வருகிற 16-ந்தேதி சுசீந்திரம் செல்வம் திருமண மண்டபத் தில் காலை 9 மணிக்கும், குளச்சல் தொகுதிக்கு குளச் சல் எஸ்.எஸ்.ஆடிட்டோரி யத்தில் மாலை 4 மணிக்கும் திராவிட மாடல் பயிற்சி பாச றைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • இதில் நிர்வாகிகள் அனைவரும் ஏராளமான இளைஞர் அணியினரை பங் கேற்கச் செய்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நாகர்கோவில், அக்.13-

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க.மாநகர, நகர, ஒன்றிய,பேரூர், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நாகர் கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் எப்.எம். ராஜரெத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம். எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரைபா ரதி, பார்த்தசாரதி, பொதுக் குழு உறுப்பினர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பாபு, செல்வம், பிராங்கிளின், சுரேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் பேசும்போது கூறியதா வது:-

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றவேண்டும். தனித்து நின்றாலும் தி.மு.க. வெற்றி பெறும் அளவுக்கு உங்களின் அனைவரது உழைப்பும் இருக்க வேண்டும். கட்சி நிர் வாகிகளுக்குள் என்ன பிரச் சினை இருந்தாலும் அவற்றை எல்லாம் மறந்து கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்றார்.

    நடந்து முடிந்த கட்சியின் 15-வது பொதுத்தேர்தலில் கட்சித் தலைவராக 2-வது முறையாக தேர்ந் தெடுக்கப்பட்ட, திராவிட மாடல் தத்துவம் மூலமாக தமிழகத்தில் பொற் கால ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கும், தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனை களை ஏழை, எளிய மக்களை சென்றடையும் வகையில் மாவட்டம், ஒன்றியம், மாநக ரம், நகரம், பேரூர், ஊராட்சி மற்றும் கிளைக்கழக பகுதி களில் சாதனை விளக்க பொதுக்கூட்டம், தெரு முனை கூட்டங்கள், கவிய ரங்கம், பட்டிமன்றம் நடத்த வேண்டும்.

    மாநில இளைஞரணி செய லாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் உத்தர வின் பேரில் குமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் வருகிற 16-ந்தேதி சுசீந்திரம் செல்வம் திருமண மண்டபத் தில் காலை 9 மணிக்கும், குளச்சல் தொகுதிக்கு குளச் சல் எஸ்.எஸ்.ஆடிட்டோரி யத்தில் மாலை 4 மணிக்கும் திராவிட மாடல் பயிற்சி பாச றைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் நிர்வாகிகள் அனைவரும் ஏராளமான இளைஞர் அணியினரை பங் கேற்கச் செய்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஊழல் பற்றி பேச தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் இல்லை என்று பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    • தேர்தல் வாக்குறுதியில் சொத்துவரி, மின்கட்டணம் உயர்த்தப்படாது.

    மதுரை

    ஊழல் பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி மதுரை பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.

    மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் வரவேற்று பேசினர். கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது-

    மீனாட்சியம்மன் அருளால் மதுரையில் இன்று பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. மதுரை எப்போதுமே புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் கோட்டையாகும். கடந்த சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது கடந்த தேர்தலில் அதிமுக சற்று கவனக்குறைவாக இருந்த காரணத்தால் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது.

    வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது. ஏனென்றால் தமிழகத்தின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. சாவி கொடுத்தால் பொம்மை சுற்றி வருவது போல முதலமைச்சர் மு க ஸ்டாலின் காலையிலிருந்து மாலை வரை சுற்றி வருகிறார் இவரது சுற்றுப்பயணத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகிவிட்டன இதனால் என்ன நன்மை கிடைத்து இருக்கிறது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    திமுகவுக்கு வாக்களித்த மக்கள் இப்போது வருத்தப்பட்டு வருகிறார்கள். திமுக ஆட்சி எப்போது போகும் என்று சொல்ல தொடங்கிவிட்டனர் மதுரையில் உள்ள ஒரு அமைச்சர் அறிவு ஜீவி அவருக்கு தான் அறிவு இருக்கிறது என்று நினைக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம் ஆனால் திமுக இதுவரை எந்த திட்டத்தையாவது கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?.

    கருணாநிதிக்கு நூலகமும் நினைவு மண்டபமும் கட்டி வருகிறார்கள் கடலிலும் கருணாநிதியின் பேனா வைப்போம் என்று அடம் பிடிக்கிறார்கள் எழுதாத பேனாவுக்கு எதுக்கு 89 கோடியில் திட்டம்.

    கடந்த அதிமுக ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டு மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மீட்கப்பட்டது மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உலக தமிழ்ச் சங்கம் ஆம்னி பஸ் நிலையம் பெரிய ஆஸ்பத்திரி விரிவாக்க கட்டிடம் புற்றுநோய் சிகிச்சை மையம் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலங்கள் தடுப்பணைகள் பாதாள சாக்கடை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம் ஆனால் திமுக கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மட்டுமே தொடங்கி வைத்து வருகிறது யாரோ பெற்ற பிள்ளைக்கு யாரோ பெயர் வைப்பது போல உள்ளது அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பெண்களுக்கான இருசக்கர வாகன திட்டம் மாணவ மாணவிகளுக்கான மடிக்கணினி ஏழைப் பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டம் ஆகியவற்றை நிறுத்திவிட்டார்கள் தேர்தல் அறிக்கையில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் திருமண உதவித்தொகை உயர்த்துவோம் என்று கூறினார்கள் ஆனால் இப்போது அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்கள் அதுபோல முதியோர் ஓய்வூதிய தொகையும் அதிகரிப்போம் என்று சொல்லி தற்போது பயனாளிகளின் எண்ணிக்கையும் குறைத்து விட்டார்கள் இதுபோல மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றாமல் ரத்துசெய்து கொண்டிரு க்கிறார்கள்.

    தி.மு.க.வின் இந்த செயல்பாடுகள் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பிரதிபலிக்கும் தேர்தல் வாக்குறுதியில் சொத்துவரி மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று திமுக சொல்லியிருந்தது ஆனால் இப்போது 100 சதவீதம் சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது மின் கட்டணத்தையும் அதிகரித்து விட்டார்கள் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களை திமுக அமைச்சர் இழிவாக பேசுகிறார். இதுதான் திராவிட மாடலா? தேர்தலில் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக மறந்து விட்டது.

    இது எல்லாமே நடிப்பு என மக்கள் தற்போது புரிந்து கொண்டார்கள் மதுரையில் ஒரு அமைச்சர் தனது மகன் திருமணத்தை ரூ. 30 கோடியில் பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறார்.

    கோவையில் அவருக்கு எங்கிருந்து இந்த பணம் வந்தது எல்லாம் கமிஷன் கலெக்சன் கரப்ஷன் தான் அரசு பணிகளில் ஒப்பந்ததாரர்களிடம் 20 சதவீத கமிஷன் கேட்கிறார்கள் கரூரில் போடாத சாலைக்கு நிதி எடுக்கிறார்கள் இதுதான் திராவிட மாடலா? எனவே அதிமுகவை ஊழல் செய்தது என்று சொல்வதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது ஓட்டு போட்ட மக்களுக்கு திமுக அரசு வேட்டுவந்துவிட்டது ஏழை எளியவர்கள் மற்றும் அரசு ஊழியர்களையும் இந்த அரசு வஞ்சித்து விட்டது இதன் மூலம் படித்தவர்களையும் படிக்காதவர்களையும் ஏமாற்றிய ஒரே அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல் நினைவு பரிசு வழங்கப்பட்டது இதனை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு ஆர் பி உதயகுமார் ராஜன் செல்லப்பா ஆகியோர் வழங்கினர் .

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ, மதுரை நகர நிர்வாகிகள் வில்லாபுரம்ராஜா, திரவியம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், மாவட்ட துணை செயலாளர் கணேஷ் பிரபு, பரவை ராஜா, வில்லாபுரம் ரமேஷ், பி.ஆர்.சி.மகாலிங்கம் பைகாரா கருப்புசாமி, முத்துவேல், பாசறை ஜெயரீகன், முன்னாள் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
    • கார் மூலம் எடப்பாடி பழனிச்சாமி சிவகாசிக்கு புறப்பட்டு சென்றார்.

    சிவகாசி

    தி.மு.க. அரசின் வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் மாவட்ட தலைநகரங்களில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகிறார்.

    தி.மு.க. அரசின் விலை வாசி உயர்வை கண்டித்து மதுரை, சிவகாசியில் இன்று அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    இதற்காக விமானம் மூலம் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி மதுரை வந்தார். அவரை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட கட்சியினர் திரளாக திரண்டு வந்து வரவேற்றனர்.

    அதனைத் தொடர்ந்து கார் மூலம் எடப்பாடி பழனிச்சாமி சிவகாசிக்கு புறப்பட்டு சென்றார். விருதுநகர் மாவட்ட எல்லையில் அ.தி.மு.க. சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து சிவகாசி திருத்தங்கல் அண்ணா மலையார் நகரில் நடந்த அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் இந்நாள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இன்று மாலை மதுரையில் நடக்கும் கண்டன பொது கூட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசுகிறார்.

    ×