search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள்"

    • சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இ-சேவை ஊழியர்கள் தனியார் மையங்களை பரிந்துரை செய்கின்றனர்.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு சிவகங்கையை சேர்ந்த வடிவேல் முருகன் என்ற ஆட்டோ டிரைவர் தனது குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்தார்.

    இதற்காக பலமுறை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்த இ-சேவை மையத்திற்கு வந்ததாகவும், அங்கு கருவி வேலை செய்யவில்லை என்றும், மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் பல்வேறு காரணங்களை கூறி சேவை மைய ஊழியர், தனியார் மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்குமாறு தெரிவித்தாராம்.

    இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கூறுகையில், அன்றாடம் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் நான் தனியார் மையங்களில் அதிக பணம் கொடுத்து குழந்தைக்கு சான்றிதழ் பெறுவது கடினமான செயல் என்று வருத்தம் தெரிவித்தார்.

    இதுபோன்று அரசு இ-சேவை மையங்களில் குறைகள் இருப்பின் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் இ-சேவை ஊழியர்கள் தனியார் மையங்களை பரிந்துரை செய்கிறார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.ஊழியர்கள், பரிந்துரை, E-service, private

    • கடந்த இரண்டு மாதங்களாக போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் கடனை சரிவர கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.
    • பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கதுவினை உடைத்து அவரை தகாத வார்த்தையில் திட்டி கடனை உடனடியாக செலுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணி–யை அடுத்த செம்பியன் மகாதேவியைச் சேர்ந்த அகிலா.இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கீழ்வேளூரில் செயல்பட்டு வரும் நிதி வங்கி நிறுவனத்தில் 30,000 கடனாகப் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் மாதந்தோ றும் தவணையாக 2020 வீதம் பத்து மாதங்கள் தவணைக் தொகையை சரியாஞ கட்டி கடனை ஓரளவுக்கு அடைத்து வந்துள்ளார்.மேலும் கடந்த இரண்டு மாதங்களாக போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் கடனை சரிவர கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நிறுவ னத்தில் பணி புரியும் ஊழியர்கள் இவர்களை கட்டாயப்படுத்தி கடனை கட்டுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.மேலும் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் பூட்டி இருந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கதுவினை உடைத்து அவரை தகாத வார்த்தையில் திட்டி கடனை உடனடியாக செலுத்த வேண்டும் இல்லை யெனில் வீட்டில் உள்ள பெண்ணை அனுப்பி வைக்குமாறு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் கடும் மனஉளைச்ச லுக்கு ஆளான அகிலா வீட்டில் உள்ள மண்ணெண்ணையை குடித்து தற்கொலைக்கு மேடு உள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு நாகை அரசு தலைமை மருத்து–வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கொடுத்த கடனை செலுத்த வற்புறுத்தி பெண்ணை தகாத முறையில் திட்டி தற்கொலை முயற்சிக்கு காரணமாய் இருந்த நிதி நிறுவனம் இது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்க–ப்பட்ட பெண்ணின் உறவி னர்கள் முன்வை த்தனர். பெண்ணை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த இரண்டு மாதங்களாக போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் கடனை சரிவர கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.
    • பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கதுவினை உடைத்து அவரை தகாத வார்த்தையில் திட்டி கடனை உடனடியாக செலுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செம்பியன் மகாதேவியைச் சேர்ந்த அகிலா.இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கீழ்வேளூரில் செயல்பட்டு வரும் நிதி வங்கி நிறுவனத்தில் 30,000 கடனாகப் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் மாதந்தோ றும் தவணையாக 2020 வீதம் பத்து மாதங்கள் தவணைக் தொகையை சரியாஞ கட்டி கடனை ஓரளவுக்கு அடைத்து வந்துள்ளார்.மேலும் கடந்த இரண்டு மாதங்களாக போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் கடனை சரிவர கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நிறுவ னத்தில் பணி புரியும் ஊழியர்கள் இவர்களை கட்டாயப்படுத்தி கடனை கட்டுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.மேலும் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் பூட்டி இருந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கதுவினை உடைத்து அவரை தகாத வார்த்தையில் திட்டி கடனை உடனடியாக செலுத்த வேண்டும் இல்லை யெனில் வீட்டில் உள்ள பெண்ணை அனுப்பி வைக்குமாறு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் கடும் மனஉளைச்ச லுக்கு ஆளான அகிலா வீட்டில் உள்ள மண்ணெண்ணையை குடித்து தற்கொலைக்கு மேடு உள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு நாகை அரசு தலைமை மருத்து–வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கொடுத்த கடனை செலுத்த வற்புறுத்தி பெண்ணை தகாத முறையில் திட்டி தற்கொலை முயற்சிக்கு காரணமாய் இருந்த நிதி நிறுவனம் இது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்க–ப்பட்ட பெண்ணின் உறவி னர்கள் முன்வை த்தனர். பெண்ணை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை அருகே மின்வாரிய பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • மோட்டார் சைக்கிள் மோதி விபத்து நடந்தது.

    மதுரை

    மதுரை கடச்சனேந்தலை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் தமிழக மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் சரவணகுமாரும், மற்றொரு ஊழியர் வடிவேல் என்பவரும் சம்பவத்தன்று மதியம் மின்வாரிய பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அது சரவணகுமார், வடிவேல் மீது மோதியது. இதில் சரவணகுமாருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. ஆனால் தூக்கி வீசப்பட்ட வடிவேலுக்கு உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது.

    இதில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சரவணகுமார் அப்பன் திருப்பதி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை படுவேகமாக ஓட்டி வந்ததாக ஆனையூர் முகமது ரியாஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் பணிகளை புறக்கணித்து செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தின்போது வட்டார மருத்துவ அலுவலர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம்சேதுபா வாசத்திரம் வட்டத்திற்கு உட்பட்ட அழகிய நாயகி புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கத்தின் அராஜக போக்கை கண்டி த்தும், பெண் ஊழியர்களை இழிவாக பேசுவதை கண்டித்தும் தஞ்சை துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலக வளா கத்தில் இன்று தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் பணிகளைப் புறக்கணித்து செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கு மாநிலத் தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஜெயராணி, செயலாளர் சீதாலட்சுமி, பொருளாளர் திலகவதி, மாநில செயற்குழு உறுப்பினர் உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தின்போது வட்டார மருத்துவஅலுவலர் ராமலிங்கம் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.இதில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாகன ஒட்டிகள் வாக்குவாதம்-பரபரப்பு ஏற்பட்டது.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி திருமங்கலம் நகராட்சி எல்லை பகுதியில் செயல்பட்டு வருகிறது. எனவே உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. இருந்த போதிலும், சில நேரம் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் கேட்டதால் பொதுமக்களுக்கும், சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் திருமங்கலத்தில் இருந்து வந்த தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனத்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தி கட்டணம் செலுத்த வலியுறுத்தி உள்ளனர். இதனால் உள்ளுர் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் திருமங்கலத்தில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட திருமங்கலம் பகுதி வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்பி வைத்தனர். மேலும் உள்ளூர் வாகனங்களுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    • 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நன்னிலம் வருவதற்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
    • நன்னிலம் பேரூர் கிராமங்களை இணைக்கும் வகையில் நான்கு வட்ட பஸ் பாதைகளை அமைத்து வட்ட பஸ்–களை இயக்க வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவின் தலைநகரம், நன்னிலம் ஆகும், நன்னிலத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள், ஐந்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி, 12-க்கும் மேற்பட்ட வங்கிகள், குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்றம், சுமார் 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.

    நன்னிலத்தில் சுற்றி 40-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து நன்னிலம் வருவதற்கு, போதுமான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    எனவே பொதுமக்கள் காலை மாலை நேரங்களில் வட்ட பேருந்துகளை இயக்க கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வர்த்தக நிறுவனத்தில் பணியாற்ற கூடிய ஊழியர்கள், அரசு அலுவலர்கள் பயன்பெறுவார்கள். எனவே நன்னிலம், மாப்பிள்ளை குப்பம், கீழ் அகரம், சலி பேரி, திருவாஞ்சியம், அச்சுதமங்கலம், வடகுடி, சிகார் பாளையம் வழியாக வந்தடைய வட்டப்பாதை பேருந்தும், நன்னிலம், நல்லமாங்குடி, மணவாளன் பேட்டை, ஆலங்குடி, முடிகொண்டான், சன்னா–நல்லூர், கீழ பனங்குடி, ஆண்டிபந்தல், பனங்குடி, மூல மங்கலம், மாப்பிள்ளை குப்பம் வழியாக ஒரு வட்ட பேருந்தும், நன்னிலம், செங்கமேடு, ஆனை குப்பம், த ட்டாத்தி மூலை, வீதிவிடங்கன், திருவாஞ்சியம், அச்சுத–மங்கலம், கீழ்குடி, கீழ் அகரம், சலிப்பே ரி, மாப்பிள்ளை குப்பம் வழியாக, ஒரு வட்ட பேருந்தும் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    போதுமான போக்கு–வரத்து வசதி இல்லாத காரணத்தினால், நன்னிலம் வர்த்தகமும், மந்த நிலையில் காணப்படுகிறது. எனவே நன்னிலம் பேருரை கிராமங்களை இணைக்கும் வகையில் நான்கு வட்ட பேருந்து பாதைகளை அமைத்து, வட்ட பேருந்து–களை இயக்க வேண்டும். என கோரிக்கை மக்களிடம் வலுவாக இருந்து வருகிறது.

    மக்களின் கோரிக்கையை ஏற்கும் வகையில், கிராம மக்கள் நன்னிலம் பகுதிக்கு வந்து செல்லும் வகையில், வட்ட பேருந்து பாதை அமைக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • சத்துணவு - அங்கன்வாடி உதவியாளருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் மாநாடு நடந்தது.

    மதுரை

    தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 4-ஆம் வட்ட கிளை மாநாடு உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.

    வட்ட கிளை தலைவர் ஆடிட்டர் பாண்டி தலைமை தாங்கினார். பழனி, அக்கினிபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டக்கிளை துணைத் தலைவர் அமிர்தம் வரவேற்றார்.

    மாவட்ட பொருளாளர் ஜெயராமன், வட்ட கிளை செயலாளர் மகேஸ்வரன், வட்ட கிளை பொருளாளர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் பாலமுருகன், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரஞ்சனி சுதந்தரம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் முத்துராணி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அய்யங்காளை பெரியகருப்பன், ராசையா, ரங்கமலை மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சத்துணவு - அங்கன்வாடி வருவாய்க் கிராம உதவியாளருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம்ரூ.7,850 வழங்கவும், 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும், தமிழக அரசு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றினர்.

    முடிவில் மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

    • தலைமை மின்பொறியாளர் செல்வகுமார், நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் ஆகியோர் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
    • பாராட்டு விழா ஏற்பாடுகளை தொழில்நுட்ப பயிற்சி மேம்பாட்டு மைய முதன்மை மேலாளர் ராகவன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் பழுது இல்லாமல் மின்மாற்றிகளை பராமரிப்பு செய்த நெல்லை மண்டல பிரிவு அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் கடந்த 2020-21 ஆம் ஆண்டில் 26 பிரிவு அலுவலகம் மற்றும் 2021-22 ஆம் ஆண்டில் 31 பிரிவு அலுவலகத்திலும் மின்மாற்றிகளை பராமரிப்பு செய்து பழுது இல்லாமல் பணிகள் மேற்கொண்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நெல்லை மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மண்டல தலைமை மின்பொறியாளர் செல்வகுமார், நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர். இந்த விழாவில் செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ் மணி, செயற்பொறியாளர் (நகர்ப்புறம் )முத்துக்குட்டி, செயற்பொறியாளர் (கல்லிடைக்குறிச்சி) சுடலையாடும்பெருமாள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப பயிற்சி மேம்பாட்டு மைய முதன்மை மேலாளர் ராகவன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    • இதில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை ரெயில்வே காலனியில் உள்ள ரெயில்வே மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு பகுதியில் இன்று தக்சின் ரெயில்வே ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இணைச் செயலாளர் சங்கர நாராயணன் தலைமை தாங்கினார். நிர்வாகி சரவணன், கார்டுகள் சங்க நிர்வாகி கல்யாண சுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    மதுரை ரெயில்வே மருத்துவமனையில் காலி யாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மதுரை கோட் டத்தில் உள்ள 9 ரெயில் நிலைய பகுதிகளில் வசிக்கும் ரெயில்வே ஊழியர்கள் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

    எனவே மேற்கண்ட 9 ரெயில் நிலையங்களிலும் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும். தூய்மை பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் அங்கன்வாடி பணிகளை மேற்கொள்வதற்காக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கைபேசிகள் முற்றிலும் பழுதடைந்து விட்டன.
    • பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரேமா தலைமை வகித்தார். கூட்டத்தில் சிஐடியு மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தவமணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன், மாவட்டத் தலைவர் மாலதி, மாவட்டப் பொருளாளர் வைத்தியநாதன் மற்றும் அங்கன்வாடி சங்க நிர்வாகிகள் திரிபுரசுந்தரி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அங்கன்வாடி பணிகளை மேற்கொள்வதற்காக ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கைபேசி வழங்கப்பட்டது. தற்போது இந்த கைபேசிகள் முற்றிலும் பழுதடைந்து விட்டன. ஆனாலும் பழுதடைந்த கைபேசிகளை வைத்து பணி செய்ய வேண்டும் என வற்புறுத்தப்படுகிறது.

    இதனை கண்டித்து வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவல ர்களிடம் கைபேசியை ஒப்படைப்பு என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மூன்றாண்டு பணி முடித்த அங்கன்வாடி உயர்வு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வில் சென்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.

    எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு அனுபவமிக்க அங்கன்வாடி ஊழியர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும். சில்லறை செலவினம் பயணப்படி ஆகியவைகளை உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களையும் பணி வரன்முறை செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தரமணியில் உள்ள இயக்குனர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள காத்திருப்பு போராட்ட த்தில் திருவாரூர் மாவ ட்டத்திலிருந்து ஏராளமா னவர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. இறுதியில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மாலதி நன்றி கூறினார்.

    • ரெயில் பயணிகள் வசதிக்கு 5 செயலிகளை உருவாக்கிய ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • “ரெயில் தண்டோரா, ரெயிலில் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க “ரெயில் சென்சஸ்” உள்பட 5 செயலிகளை உருவாக்கி உள்ளனர்.

    மதுரை

    மதுரை ரெயில்வே கோட்ட ஊழியர்களான அணில் சவுத்ரி, அபிநயா, சரவணன், நித்யராஜ், சுந்தர் ஆகியோர் கையடக்க முன்பதிவில்லாத பயணச்சீட்டு வழங்கும் எந்திரம், புறநகர் ரெயில் கால அட்டவணை மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ள வசதிகள் பற்றி அறிந்து கொள்ள "ரெயில் பார்ட்னர்", தெற்கு ரெயில்வே வர்த்தகத் துறை அறிவிப்புகளை அறிந்துகொள்ள "ரெயில் தண்டோரா, ரெயிலில் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க "ரெயில் சென்சஸ்" உள்பட 5 செயலிகளை உருவாக்கி உள்ளனர்.

    அவர்களை நேரில் அழைத்து கவுரவப்படுத்திய தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையா, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்த தலைமை முதன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லூரி, தலைமை முதன்மை ரெயில் இயக்க மேலாளர் நீனு இட்டியரா, முதன்மை வர்த்தக மேலாளர் நிதின் பன்சால், முதன்மை ரெயில் இயக்க மேலாளர் வினயன் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

    சென்னை புறநகர் ரெயில் நிலையங்களில் கையடக்க முன்பதிவில்லாத பயணச்சீட்டு வழங்கும் எந்திரம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது விரைவில் மதுரை உள்பட பல்வேறு ரெயில் நிலையங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    ×