என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊழியர்கள்"
- யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ஆர்.கலைமகள் கலந்து கொண்டு யோகா செய்வதன் அவசியத்தையும் அதன் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
- அலுவலகத்தில் பணிபுரிகின்ற ஊழியர்கள் அனைவருக்கும் எளிய முறையில் செய்யும் விதமாக பல்வேறு யோகாசனங்களை பயிற்றுவித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் 8-வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தஞ்சை தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்.அருள்தாஸ் தலைமை தாங்கி நடத்தினார். சிறப்பு விருந்தினராக யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ஆர்.கலைமகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி அளித்தார். மேலும் யோகா செய்வதன் அவசியத்தையும், அதன் பயன்களை பற்றியும் எடுத்துரைத்தார்.
அலுவலகத்தில் பல்வேறு வயது வரம்பில் பணிபுரிகின்ற அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் எளிய முறையில் செய்யும் விதமாக பல்வேறு யோகா சனங்களை பயிற்றுவித்தார். முன்னதாக, தஞ்சாவூர் தலைமை அஞ்சலக துணை அஞ்சலக தலைவர் குழந்தைராஜ் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக சித்ரா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- ரேசன் கடை ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது.
- பழங்காநத்தம் ரவுண்டனா அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை
நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று (7-ந் தேதி) முதல் 9-ந்தேதி வரை 3 நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம் இன்று காலை தொடங்கியது. பழங்காநத்தம் ரவுண்டனா அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
'பொது விநியோக திட்டத்துக்கு என்று தனித்துறை உருவாக்க வேண்டும், 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியுடன், அரசு பணியாளர்களுக்கான 31 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும், நியாயவிலை கடைகளில் புதிய 4ஜி சிம் வழங்க வேண்டும், இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட நிர்வாகிகள் பாலமுருகன், செல்லத்துரை உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்