என் மலர்
நீங்கள் தேடியது "ஜல்லிகட்டு"
- மாவட்ட நிர்வாகம் இதுவரை அனுமதி அளிக்காததால் குழப்பம்
- ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள்,மாடுபிடி வீரர்கள் அனுமதிச்சீட்டு பெறுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சி கிராமத்தில் புனித அடைக்கல மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம்.கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு ஜனவரி 2ம் தேதி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழா ஆறாம் தேதி நடைபெறும் என்று விழா குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் இன்று வரை அதற்கான எந்த அனுமதி உத்தரவும் அதிகாரிகளிடம் இருந்து வரவில்லை. 6ம்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனுமதிச்சீட்டு பெறுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக தச்சங்குறிச்சி கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நிறைவுற்ற நிலையில் உரிய அனுமதி வராததால் விழா குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு விழா தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டால், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள்,விழா குழுவினர் ,கிராம பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதனால் தேவையற்ற குழப்பம் தீரும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- உரிய வகையில் அனுமதி பெறாமல் நடத்தினால் கடும் நடவடிக்கை...
- ஜல்லிகட்டு நடத்த விதிமுறைகள் அறிவிப்பு
அரியலூர்,
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். முன்னதாக, ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடம் அனுமதி பெற்று, அதன் பின்னர் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் குழுவினர், ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ள தேதிக்கு 20 நாட்கள் முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது, ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடம், ஜல்லிக்கட்டு தொடர்பாக கிராம கணக்கு புத்தகத்தில் பதியப்பட்டுள்ள விவரம் ஆகியவற்றை குறிப்பிட்டுகீழ்க்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கடந்த ஆண்டு முதல், கோவிட்-19 பெருந்தொற்று குறித்து கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளிலும் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமலும் மற்றும் பார்வையாளர்கள் கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாடுகளுடன் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்தில் கோவிட்-19 பெருந்தொற்று இல்லை என சான்று பெற்றிருப்பதுடன், கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கான (இரண்டு தவணைகளும்) சான்று பெற்றிருக்க வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளை உரிமையாளர், உதவியாளர் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், முகக் கவசம் அணிவதும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் - ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனுமதி கேட்கும் விழாக் குழுவினர் கீழ்க்கண்ட விவரங்களுடன் முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்.
கிராம விழாக்குழுவினரின் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விண்ணப்பம். காப்பீடு செய்யப்பட்டதற்கான காப்பீடு நகல். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அதற்கு ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவினரே பொறுப்பு என்பதற்கான உத்திரவாத பத்திரம். இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடைபெற்றதற்கான அரசாணை நகல். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காளைகளின் எண்ணிக்கை. ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ள பதிவு செய்யப்பட்டுள்ள மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை. கடந்த ஆண்டு தங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடந்ததில், அசாம்பாவிதம் ஏதேனும் நடந்திருப்பின், அதற்கான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதற்கான நகல். கடந்த ஆண்டு தங்கள் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்ற காளைகளில், காயம் அடைந்த காளைகளின் எண்ணிக்கை மற்றும் விவரம். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் தல வரைபடம். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படும் இடத்தின் மொத்தப் பரப்பளவு. காளைகள் ஓடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தின் பரப்பளவு. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் மொத்த இடத்தின் வரைபடம். ஜல்லிக்கட்டு களம் அமைத்திடும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்த கடித நகல்.
மேற்கண்ட தங்களது ஆவணங்களை மூன்று நகல்களில் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடத்த அறிவிக்கை செய்யப்படாத கிராமம் எனில் இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடைபெற்றதற்கான ஆதாரம் (புகைப்பட ஆதாரம், செய்தி நறுக்கு, செய்தித்தாள், கல்வெட்டு ஆதாரம், கிராம பஞ்சாயத்து தீர்மானம், துண்டு பிரசுரம்., போன்றவை) ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்து அரசாணை பெறப்பட்ட பின்னரே ஜல்லிக்கட்டு நடத்த தொடர்புடைய குழுவினருக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பின்னரே ஜல்லிக்கட்டு தொடர்பான ஏற்பாடுகளை தொடர்புடைய குழுவினர் மேற்கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்குபெறும் காளை உரிமையாளர், ஒரு உதவியாளர் மற்றும் காளை விவரங்களை நிகழ்ச்சிக்கு 7 நாட்களுக்கு முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாத நபர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை, அரசாணை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி எதுவும் பெறாமல் நடத்துபவர்கள் மீது காவல் துறையின் மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
- 17-ந் தேதி நடைபெறுகிறது
- வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு நடப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படுகிறது. இந்த ஆண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இனி வரிசையாக ஆங்காங்கே என மாவட்டத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறும். குறைந்தது 5 மாதங்களுக்கு இந்த ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் வருகிற 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அராசணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது உறுதியாகி உள்ளது. கலெக்டர் கவிதாராமு மற்றும் அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தினை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ள வழிகாட்டல்கள் நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா? என பார்வையிடுவார்கள். இந்த ஆய்வின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிப்பார்கள்.
- நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வரும் மார்ச் 3-ந்தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கேட்டு சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
- ஜல்லிக்கட்டு விழா சங்க தலைவர் மணிகண்டன் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடக்கவிருக்கும் இடத்தினை ஆய்வு செய்தனர்.
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரத்தில் இருந்து நைனாமலைக்கு செல்லும் சாலையில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக சேந்தமங்கலம் ஜல்லிகட்டு விழா சங்கத்தின் சார்பில் ஜல்லிகட்டு விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வரும் மார்ச் 3-ந்தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கேட்டு சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அட்மா குழு தலைவர் அசோக்குமார், துணை தலைவர் தனபாலன், ஜல்லிக்கட்டு விழா சங்க தலைவர் மணிகண்டன் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடக்கவிருக்கும் இடத்தினை ஆய்வு செய்தனர்.
தமிழக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடத்த சேந்தமங்கலம் தி.மு.க., நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு விழா சங்க நிர்வாகிகள், மாடுபிடி வீரர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.
- களமாடிய காளைகளால் அதிர்ந்த காளையர்கள்
- பொத்தமேட்டுபட்டியில் கோலாகலம்
மணப்பாறை,
தை மாதம் பிறந்ததில் இருந்து தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் தினந் தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டி வரு–கிறது. இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது. இதைய–டுத்து மதுரை அவனியா–புரம், பாலமேடு, அலங்கா–நல்லூரில் நடைபெற்றது.திருச்சி மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு பெரிய சூரியூரில் 16-ந்தேதி நடை–பெற்றது. இதைய–டுத்து மணப்பாறை அருகே கருங்குளம், ஆவாரங்காட் டில் நடந்த போட்டியில் பங்கேற்ற காளைகள் தங்களது வளர்ப்பை கம்பீ–ரத்துடன் காட்டி மிரட்டி–யது. நாங்களும் சளைத்த–வர்கள் அல்ல, என்பதை மெய்ப்பிக்கும் வகையில் காளையர்களும் திமில்களை பிடித்து அடக்கி ஆண்டனர்.அதன் தொடர்ச்சியாக மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் புனித வியாகுல மாதா திடலில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 750 காளைகள், 300 மாடு–பிடி வீரர்கள் கலந்து– கொண் டனர்.இதனை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் செவலூர் சின்னாக்கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டதை தொடர்ந்து கோவில் களை–கள் மற்றும் உள்ளூர் காளைகள் அடுத்தடுத்து வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தது.அதன் பின்னர் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, அரியலூர், கரூர் என பல் வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப் பட்ட காளைகள் கொட்டும் மழையிலும் கோலாகாலமாக அவிழ்த்து விடப்பட்டது. உற்சாகத்துடனும், வீரத்து–டனும் களமாடிய ஒருசில காளைகள், தங்களை பிடிக்க வந்த காளையர்களை மிரட் டியது.இதில் தன்னை அடக்க வந்த வீரர்களை காளை–கள் ஆக்ரோசமாக தூக்கி வீசுவதும், அதை வீரர்கள் துணிந்து பிடித்து அசத்து–வதுமாக மழை, குளிரிலும் ஜல்லிக்கட்டு களத்தில் அனல் பறந்தது. வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர் களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
- திமிலை உயர்த்தி வந்த காளைகளை, மல்லுகட்டி அடக்கிய காளையர்கள்
- கரைபுரண்டோடிய உற்சாகம்
மணப்பாறை,
மணப்பாறை அருகே மலையடிபட்டியில் நடைபெற்று வரும் ஜல்லி கட்டில் ஏராளமான காளை களும், காளைய ர்களும் களம் கண்டு வருகின்றனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. அங்குள்ள ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர், ஜல்லிக்கட்டு கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.முதலில் கோவில் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகள், மாடு பிடி வீரர்களுக்கு சாவல் விடுத்தது. சாவாலை ஏற்கும் வண்ணம், அப்பகுதி மண்ணின் காளையர்கள், சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க துணிந்தனர். இந்த வீரமிகு விளையாட்டை காண திருச்சி மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து பார்வையாளர்கள் வந்திருந்தனர். துள்ளி வந்த காளைகளை, துரிதமாக செயல்பட்டு அடக்கி வெற்றி பெற்ற காளையர்களையும், சிக்காமல் ஆட்டம் காட்டி சென்ற காளைகளையும் பார்வையாளர்கள் கைத்தட்டி, விசில் அடித்து பாராட்டியது விறுவிறுப்பை கூட்டியது.இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், – வெள்ளி நாணயங்கள், என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்க ப்பட்டது. போட்டி யில் காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் உள்ள மருத்துவமுகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுஜித் குமார் மேற்பார்வையில், மணப்பாறை போலீஸ் டி.எஸ்.பி. ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மாங்கோட்டையில் வடமாடு ஜல்லிகட்டு விழா நாளை நடைபெறுகிறது
- இதற்காக ஆலங்குடி போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை காளியம்மன் கோயில் சந்தனகாப்பு விழாவையொட்டி வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நாளை பிப்ரவரி 26ம் தேதி நடைபெற உள்ளது.
இதில், சிவகங்கை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும், வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இதற்காக ஆலங்குடி போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதற்காக அப்பகுதியில் திடல் அமைக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திடலின் நடுவில் பெரிய பள்ளம் வெட்டப்பட்டு உரல் இறக்கப்பட்டது. இதில், ஊர் தலைவர் சின்னத்துரை உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- திருச்சி கல்லக்குடியில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து 744 காளைகள் சீறிப்பாய்ந்தன
- காளைகளை அடக்குவதற்காக 375 பேர் களத்தில் இறங்கினர்.
டால்மியாபுரம்:
திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. போட்டியினை லால்குடி கோட்டாட்சியர் வைத்தி யநாதன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்று போட்டியினை துவக்கி வைத்தார். திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 744 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்ந்து விடப்பட்டது. காளைகளை அடக்குவதற்காக 375 பேர் களத்தில் இறங்கினர். இவர்களில் 51 பேருக்கு காளைகள் முட்டியதில் காயம் ஏற்பட்டது.
அனை வருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் 5 பேர் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விழாவில் வட்டாட்சியர் செசிலினா சுகந்தி துணைதாசில்தார் சங்கரநாராயணன், பேரூராட்சி தலைவர் பால் துரை, செயல் அலுவலர் குணசேகரன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். லால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கம் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
- 699 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர்
- மூனிஸ்வரர் கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது
ஆலங்குடி,புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபு ரத்தில் 55 ஆம் ஆண்டு முனீஸ்வரர் கோவில் ஆலய மாசிமகத் விழாவை யொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செல்வி மாடுபிடி வீரர்களுக்கான உறுதி மொழி வாசிக்க வீரர்கள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுச்சூழல்துறை அமை ச்சர் மெய்யநாதன், திருவர ங்குளம் ஒன்றி யக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.திருச்சி, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை தஞ்சாவூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 699 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களத்தில் விளையாடினர். அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு விழா குழுவினர் சார்பாக கட்டில், சைக்கிள், பீரோ, பிரிட்ஜ் மற்றும் இதர பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அமைச்சர் மெய்யநாதன் சார்பில் ஆட்டுக்குட்டி, சைக்கிள், குத்துவிளக்கு, கட்டில் பீரோ, சில்வர் பாத்திரங்கள், மிக்சி, குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.முன்னதாக இதில் கலந்து கொள்ள வைக்கப்பட்ட காளைகளுக்கும், களமிறங்கி ய வீரர்களுக்கும் முன்னதாக உரிய மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மேலும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு களத்திற்குள் அனுமதிக்க ப்பட்டனர். ஆலங்குடி டிஎஸ்பி தீபக்ரஜினி, காவல் ஆய்வாளர் அழகம் மை உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா கமிட்டி செல்வம் கார்த்திக், இளைஞர்களால் போட்டிக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- மாசி மக திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது
- 621 காளைகள், 166 காளையர்கள் கலந்து கொண்ட ஜல்லிகட்டு
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதிமொழி வாசித்து தொடக்கி வைத்தார்.துவக்க விழா நிகழ்ச்சியில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்துகொண்டார்.திருமானூர் ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் சீமான் தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர் உத்திராபதி, விழாக்குழு நிர்வாகிகள் முருகானந்தம், மதிவாணன், கிஷோர், நரசிம்மன், சூரியமூர்த்தி, திருவேங்கடம், ராஜேந்திரன், ஆனந்தன் மற்றும் பலர் உள்ளிட்டோர் ஏற்பாடுசெய்திருந்தனர்இப்போட்டியில், 621 காளைகள் மற்றும் 166 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் கலந்து கொண்டுள்ள காளைகள் மற்றும் வீரர்களுக்கு முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே வாடி வாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 32 பேர் காயம் ஏற்பட்டது. அவர்களில் பரத் என்கிற நபர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திருமானூர் ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் அவர்களுக்கு கட்டுப்படாமல் ஓடிய ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கும், ரொக்கப் பணம் உட்பட பல்வேறு பரிசு பொருட்கள் விழா குழு சார்பில் வழங்கப்பட்டன.அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, திருமானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் விஜயபார்த்திபன் உள்பட ஏராளமானோர், பார்வையாளர்களாக பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் (கால்நடை ப்பராமரிப்புத்துறை) கிரிஸ்டோபர், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன், திருமானூர் ஊராட்சி மன்றத் தலைவர் உத்திராபதி மற்றும் சுகாதாரத்துறை, மருத்துவ அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அரியலூர் போலீஸ் டிஎஸ்பி சங்கர் கணேஷ் தலைமை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழாவில் சுமார் நான்காயிரம் பேர் கலந்துகொண்டனர்.
- 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
- ஜெயங்கொண்டம் அருகே பூவாயிகுளம் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாயிகுளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஆலயத்தின் முன்பாக நடைபெற்றது. போட்டியில் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம், மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு சீறி பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர்.மாடுபிடி வீரர்கள் 25,25 வீரர் சுழற்சிமுறையில் களம் இறக்கப்பட்டனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் சில்வர் அண்டா, சில்வர் குவளை, பீரோ, கட்டில், சைக்கிள், டேபிள்,கட்டில், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், 5 ஆயிரம் 10 ஆயிரம் ரொக்கம் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழா ஜல்லிக்கட்டு போட்டியை உடையா ர்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் உள்ளிட்ட 100-க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.முன்னதாக ஒவ்வொரு காளைகளும், மாடுபிடி வீரர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.வீரர்கள், பொதுமக்கள் காளைகளால் காயம் அடைந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு வீரர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூவாயிகுளம் புனித வனத்து அந்தோணியார் ஆலய விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். இதில் மாடுபிடி வீரர்கள் 33பேர் காயமடைந்தனர் 3 பேர்பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் மருத்துவமனை கொண்டு சென்றனர் அங்கே அமைக்கப்பட்டிருந்த சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
- முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது
- அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்தார்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மழையூரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்த வருடமும் மழையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவரும், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளருமான தவ பாஞ்சாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜல்லிக்கட்டில் பல்வேறு புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றி பெற்ற காளைகளுக்கும் தங்க நாணயம், கட்டில், பீரோ, சைக்கிள், மிக்சி, பேன் ஆகிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி டி.எஸ்.பி. தலைமையில் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் முன்னிலையில் போலீசார் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.