search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க."

    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
    • குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்ந்த தமிழ் நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

    கடந்த சில மாதங்களாகவே, தொடர்ச்சியாக அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், 4 மாத கர்ப்பமான நிலையிலேயே வெளியில் தெரியவந்துள்ளது.

    காவல் துறை விசாரணையில், இந்த கொடூரச் செயலை செய்த கும்பல் மேலும் ஒரு சிறுமியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. தற்போது, நெஞ்சை பதைபதைக்கும் இத்தகு குற்றச் செயல்களைக் கூட சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செய்யத் துணிந்துவிட்டனர் சமூக விரோதிகள்.

    அன்று தன்னை பெண்களின் பாதுகாவலராக அறிவித்து முழங்கிய ஸ்டாலின், தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் இந்த தி.மு.க. ஆட்சியில், தொடர்ச்சியாக நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் இத்தகு பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தத் தவறிய தி.மு.க. அரசை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாமல், ஒரு தந்தை என்கிற அக்கறையுடனே கண்டிக்கிறேன்.

    உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வேலூர் தங்க கோவிலில் இன்று காலை தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்.
    • பாரதப் பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் தங்க கோவிலில் இன்று காலை தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வந்தே பாரத் ரெயில் தற்போது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த ரெயில் மூலம் பயணம் செய்வதால் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்த ரெயிலை அறிவித்த பாரத பிரதமருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி இதனை பொறுத்துக் கொள்ளாத எதிர்க் கட்சியினர் பிரித்தாள்கிறது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர் இதனை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள்.

    பாரதப் பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். விரைவில் சென்னையில் இருந்து மைசூருக்கு புல்லட் ரெயில் வர உள்ளது.

    நடைபெற்று முடிந்த 4 கட்ட தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க எவ்வளவு இடங்கள் வேண்டுமோ அவ்வளவு கிடைத்துவிட்டது.

    எதிர்க்கட்சியினர் சுயநலத்துக்காக வாக்குகளை கேட்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி மக்களின் நலன் கருதி வாக்குகளை கேட்டு வருகிறார்.

    தமிழக அரசு இந்தியா கூட்டணியில் இருந்து வரும் நிலையில் தமிழகத்திற்க்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டுமென ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் தமிழக அரசு இதற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. காங்கிரசும் தி.மு.க.வும் கூட்டணியில் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி தண்ணீருக்காக போராட்டம் நடத்தினார்.

    டாஸ்மாக் கடைகளுக்கும் போராட்டம் நடத்தினார். காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை. ஆனால் அதிகமாக டாஸ்மாக் கொண்டு வந்தார்கள் இதுதான் தி.மு.க.வின் சாதனை. தமிழக அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்து வருகிறது.

    கஞ்சா வழக்கில் ஜாபர் சாதிக்கை தி.மு.க. அரசு காப்பாற்ற நினைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உயர்நீதிமன்றமே கஞ்சா விற்பவர்களுக்கும் காவல் துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கும், விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் போதை தான் காரணம். போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதால் அதற்கான இடங்களை தமிழக அரசு கூடுதல் ஆக்க வேண்டும்.

    கருணாநிதி பற்றிய பாடம் 9 மற்றும் 10-ம் வகுப்பு ஆகிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்று இருந்தது.தற்போது 8-ம் வகுப்பிலும் அவரைப் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.

    பா.ஜ.க. கல்வியில் ஏதோ ஒரு சின்ன மாற்றம் கொண்டு வந்ததற்காக கல்வி காவியமாக்கப்படுகிறது என்று கூறினார்கள். இன்று தமிழகத்தில் கல்வி கலைஞர் மயமாக்கப்பட்டு வருகிறது.

    ஒரு தலைவரைப் பற்றி எத்தனை பாட புத்தகங்களில் கொண்டு வருவீர்கள். எனவே இதற்கு ஒரு வழிகாட்டும் முறைகள் இருக்க வேண்டும்.

    எத்தனையோ அறியப்படாத தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி புத்தகங்களில் இடம்பெற வேண்டும். குழந்தைகள் மனதில் விதைப்பது எல்லாம் நல்ல விதைகளாக இருக்க வேண்டும்.

    57 வருடமாக காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க தவறிவிட்டதாக இப்போது செல்வ பெருந்தகை கூறுகிறார். தி.மு.க.வின் தோளில் அமர்ந்து கொண்டு காங்கிரசை எப்படி வளர்க்க முடியும்.

    நாங்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தனித்து நிற்கிறோம். தி.மு.க.வை விட்டு ஒருபோதும் காங்கிரசால் வெளியே வர முடியாது.

    அரசியலுக்காக தற்போது செல்வ பெருந்தகை இப்படி பேசியுள்ளார். இது ஒரு புறமிருக்க தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என ஈ . வி. கே. எஸ். இளங்கோவன் சொல்கிறார்.

    இது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்டு வெற்றி பெறும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த புகழேந்தி இருந்தார். இவர் உடல் நலக்குறைவால் ஏப்ரல் 6-ந் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடந்தது. பாராளுமன்ற தேர்தல் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இறுதி கட்ட தேர்தலின் போது, விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட பா.ம.க., விரும்புவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் தெரிவித்தார். அதே சமயம் அந்த தொகுதியில் போட்டியிட, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ.க.வும் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வை அடுத்து பா.ஜ.க. பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று பலம் வாய்ந்த கூட்டணி உருவானது. எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்டு வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சகித்துக் கொள்ள முடியாமல் அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றது.
    • எதிர்த்து பேசுபவர்கள் மீது வழக்கு போட்டு கொண்டிருக்கிறது.

    வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை, குடிநீர் பிரச்சினை ஆகியவற்றை தி.மு.க. அரசு கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.

    தி.மு.க. குடும்பத்திற்கு எதிராக டுவிட்டர், சமூக வலைதளங்களில் விமர்சித்து பேசுபவர்களை கைது செய்வதிலேயே அக்கறை காட்டுகிறது.

    பத்ரி சேசாத்ரி, மாரிதாஸ் என தொடர்ச்சியாக பல்வேறு நபர்களை கைது செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக தற்போது சவுக்கு சங்கரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சவுக்கு சங்கர், பா.ஜ.க.வை பற்றி செய்யாத விமர்சனங்களே இல்லை. நான் தி.மு.க.விற்கு போக போகின்றேன் என்று கூட சொன்னார்.

    ஆனால் தி.மு.க.வோ விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாமல் அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

    தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை, போதை கலாச்சாரம் இருக்கின்றது. இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

    பாராளுமன்ற தேர்தலின் போது பல்வேறு இடங்களில் எதிர்ப்பு இருப்பது தி.மு.க.வுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பழிவாங்கும் நோக்கில் எதிர்த்து பேசுபவர்கள் மீது வழக்கு போட்டு கொண்டிருக்கிறது.

    பெண்களை இழிவுபடுத்தி விட்டதாக கைது செய்யப்பட வேண்டும் என்றால் தி.மு.க.வினர் பாதி பேர் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமச்சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதில் அரசு தோல்வி.
    • முன்னேற்றத்திற் கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் முன்னேற்றம் என்ற மயக்கும் முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அ.தி.மு.க.வின் 57 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களிடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

    தனிநபர் வருமானத்தில் மாநில சராசரிக்கும் குறைவாக உள்ள 24 மாவட்டங்களில் 16 மாவட்டங்கள் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்தவை என்பதிலிருந்தே சமச்சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதில் அரசு தோல்வியடைந்திருப்பது உறுதியாகியுள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனரும், சென்னை பொருளாதாரப் பள்ளியின் தலைவருமான முனைவர் சி. அரங்கராஜன், சென்னை பொருளாதாரப் பள்ளியின் இயக்குனர் முனைவர் கே.ஆர். சண்முகம் ஆகியோர் இணைந்து தமிழக பொருளாதாரம் குறித்த 69 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

    அதில் 2019-20-ம் ஆண்டு புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழ் நாட்டின் சராசரி தனிநபர் வருவாயான ரூ.2,36,783-ஐ விட 19 மாவட்டங்களின் தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதாக குறிப்பிட்பட்டிருக்கிறது. 13 மாவட்டங்கள் மட்டுமே சராசரியை விட அதிக வருமானம் ஈட்டியுள்ளன.

    சென்னையை ஒட்டி யுள்ள தொழிற்சாலைகள் நிறைந்த திருவள்ளூர் மாவட்டம் தான் ரூ.3,64,337 ஆண்டு வருமானத்துடன் தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் உள்ளது. பெரம்பலூர் ரூ.1,07,731 வருமானத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.

    வட மாவட்டங்களும், காவிரி பாசன மாவட்டங்களும் முன்னேறாமல் தமிழ்நாடு முன்னேறாது என்ற உண்மையை உணர்ந்து அந்த மாவட்டங்களின் முன்னேற்றத்திற்கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் தொழிற்திட்டங்களைத் தொடங்க வேண்டும். இந்த மாவட்டங்களுக்கு சிறப்பு சலுகைகளை பெறுவதற்கு வசதியாக இந்திய

    அரசியலமைப்புச் சட்டத்தில் 371 (கே) என்ற புதிய பிரிவைச் சேர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளது.
    • தமிழ்நாட்டு மக்களால் போற்றிப் பாராட்டப்படுகின்றன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று 3 ஆண்டு நிறைவு பெற்று 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிகார பலத்துடன் பி.ஜே.பி., பணபலத்துடன் அ.தி.மு.க. வந்த போதிலும், அஞ்சாத சிங்கமாய்ச் சீறி எழுந்து, மக்களைச் சந்தித்து தமிழ்நாடு முழுவதும் சென்றார். வென்றார்.

    தமிழ்நாட்டு, மக்கள் நம் தளபதியின் தலைமையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டார்கள்.

    2021 சட்டமன்றத் தேர்தலில் கழகத்திற்கு 165 இடங்களைத் தந்து ஆட்சியை மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்கள்.

    7.5.2021 அன்று காலை, கவர்னர் மாளிகையில் "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" எனக்கூறி நிமிர்ந்த தலையுடன் உறுதி மொழிகள் ஏற்றுத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூன்றாம் முதலமைச்சராக-பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோருக்குப் பின் முதல் முறையாகத் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

    முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், நேரே கோட்டைக்குச் சென்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவுடன் தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கி, "விடியல் பயணத் திட்டம்" கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.4,000/-வழங்கும் திட்டம், முதல்வரின் முகவரித்துறை உருவாக்கும் திட்டம், பால்விலை லிட்டருக்கு 3 குறைப்புத் திட்டம், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 குறைப்புத் திட்டம் ஆகிய 5 கோப்புகளில் முதன் முதல் ஆணைகள் பிறப்பித்து, நிறைவேற்றி, "சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்" என்பதுடன், "சொல்லாததையும் செய்வோம்" எனக் கூறி மக்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய சாதனைகள் எல்லாம் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளது. இதனை ஒன்றிய அரசின் ஆய்வு நிறுவனங்களே உறுதிப்படுத்தியுள்ளன.

    உற்பத்தி பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்து தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளது.

    அதில் 80 முதல் 100 விழுக்காடு அளவுக்கு ஏற்றுமதி செய்து தமிழ்நாடே முதலிடம் பெற்றுள்ளது என்று கூறிப் பாராட்டியது.

    அதேபோல, கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் மற்றும் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023-ம் ஆண்டுக்கான அறிக்கையில்; கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று கூறியது.

    கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக்கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம்.

    அதாவது 99 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு அரசை வெகுவாகப் பாராட்டியுள்ளது.

    குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது.

    ஜவுளித்துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், எலக்ட்ரானிக் துறை மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

    இப்படி ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகளே தமிழ்நாடு பெரும்பாலான முக்கியத் துறைகளில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, கோவை , தூத்துக்குடி ஆகிய இடங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் வாயிலாக மொத்தம் 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஏறத்தாழ 30 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் நடைபெற்று இதுவரை தொழில் வளர்ச்சி வரலாற்றில் இல்லாத ஒரு மாபெரும் புரட்சி நிகழ்த்தப்பட்டுள்ளது.

    ஆட்சிப்பொறுப்பேற்ற பின், 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள்திறந்துவைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

    இவைகள் அல்லாமல், கடந்த மூன்றாண்டுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நிறைவேற்றியுள்ள திட்டங்கள் படைத்துள்ள சாதனைகள் எண்ணிலடங்காதவை.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் நடைமுறை படுத்தியுள்ள காலை உணவுத்திட்டத்தின் சிறப்புகளை, தெலுங்கானா மாநில அரசு அறிந்து நேரில் பார்வையிட்டு தெலுங்கானா மாநிலத்திலும் இந்த காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக கனடா நாட்டில் அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் 2.4.2024 அன்று "கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

    இதே போல இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்ற மாநில அரசுகளையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழ்நாட்டை பின்பற்றி இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. வேறு பல மாநிலங்களில் இத்திட்டத்தினை நடைமுறை படுத்திட பரிசீலித்து வருகின்றன.

    இப்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாண்டுகளாகப் படைத்துவரும் சாதனைகள் தமிழ்நாட்டு மக்களால் போற்றிப் பாராட்டப்படுகின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்களின் தலைவர்களும் முதல்-அமைச்சரின் திட்டங்களை அறிந்து வியந்து அவற்றைத் தத்தம் மாநிலங்களில் செயல்படுத்திடவும் முனைப்புடன் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இவையெல்லாம் சாதனைச் சிகரங்கள் பல படைத்த சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகழை இந்த புவி என்றும் பாராட்டிக்கொண்டே இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. பட்டியல் தயார் செய்து வருகிறது.
    • விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி (தி.மு.க.) மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் 7-வது கட்டமாக ஜூன் 1-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் நடத்தினால் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

    அதன் அடிப்படையில் எந்த நேரத்திலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அனேகமாக நாளையே (7-ந்தேதி) தேர்தல் தேதிக்கான அட்டவணை வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலில் இருப்பதால் தேர்தலில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களை வைத்து இடைத்தேர்தலை நடத்தி விடலாம் என தேர்தல் ஆணையம் கருதுவதாக தெரிகிறது.

    ஆனால் வெயில் அதிகமாக இருப்பதால் இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்வதற்கு முன்பு தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவு எடுக்க கூடாது என்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    மே 4-ந் தேதி முதல் தமிழகத்தில் வெப்ப அலை நிலவி வருவதால் தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

    இந்த சூழ்நிலையில் எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் கட்சிகள் இடைத் தேர்தலை சந்திக்க தயாராகவே இருப்பதாக தெரிகிறது.

    பா.ம.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணியின்றி இப்போது தனித்தனியாக இருப்பதால் தேர்தலில் தமக்கு சாதகமான நிலை காணப்படுவதாக தி.மு.க. கருதுகிறது. இதனால் இப்போதே யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று தி.மு.க. பட்டியல் தயார் செய்து வருகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் தலைமையை அணுகி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெயச் சந்திரன் விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, மறைந்த புகழேந்தி எம்.எல்.ஏ.வின் மருமகள் பிரசன்னா தேவி (கோலியனூர் முன்னாள் சேர்மன்) ஆகியோர் `சீட்' பெறுவதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர்.

    அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.எம். பன்னீர், முன்னாள் பொதுக் குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் உள்பட நிர்வாகிகள் போட்டியிட ஆர்வம் காட்டி அ.தி.மு.க. மேலிடத்தை அணுகி வருகின்றனர்.

    பா.ம.க.வில் மாவட்டத் தலைவர் புகழேந்திக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் ஏற்கனவே பிரபலமான முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் உள்ளார்.

    இவர் பா.ஜனதா கட்சி யில் இருப்பதால் பா.ம.க. ஆதரவுடன் அவர் களம் காணுவாரா? என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை அறிவிப்பதை பொறுத்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரத்து 500 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன.
    • தி.மு.க. அரசு அரசு மதுபான வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

    சேலம்:

    ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 30-ந் தேதி மாலை 60 அடி பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

     சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஏற்காடு பஸ் விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவியை உடனடியாக வழங்கவேண்டும்.

    விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

    தி.மு.க. அரசு 2021-2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 5 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதாக அறிவித்தனர். 2022-23-ல் ஆயிரம் பஸ்கள் வாங்குவதாக அறிவித்தனர். எனக்கு தெரிந்து 400 முதல் 500 பஸ்கள் வரை மட்டுமே புதியதாக வாங்கப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரத்து 500 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. அரசு பஸ்கள் பழுதடைந்து விட்டது. அரசு பஸ்களில் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கிறார்கள். சில நேரங்களில் மழைகாலங்களில் பஸ்சில் ஒழுகிறது.

    மின்சார பஸ் ஜெர்மன் நாட்டுன் அ.தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. வறட்சியின் காரணமாக பொது மக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். ஆனால் இந்த அரசு மதுபான வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

    கோடைகாலத்தில் மின்தேவை அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    அத்திக்கடவு அவினாசி திட்டம் அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் 85 சதவீதம் நிறைவுற்ற நிலையில் இன்னும் அந்த திட்டம் நிறைவு பெற வில்லை. அதேபோல் சேலம் மாவட்டத்திலும் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஏராளமான திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து இருந்தாலே தற்போது கோடை காலத்தில் அந்த நீரை பயன்படுத்தி இருக்கலாம்.

    ரூ. 1000 கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் பூட்டி கிடக்கிறது. இதை இதுவரை திறக்கவில்லை. ஒற்றை செங்கல் உதயநிதி ஆயிரகணக்கான செங்கலால் கட்டப்பட்ட இந்த பூங்காவை ஏன் திறக்க வில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் என்பதால் இதை முடக்கி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. மாணவர் அணி கருத்தரங்கில் பங்கேற்க தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி. தென்காசி மாவட்டத்திற்கு வந்தார்.
    • சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த ஆ.ராசா எம்.பி.க்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற தி.மு.க. மாணவர் அணி கருத்தரங்கில் பங்கேற்க தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி. தென்காசி மாவட்டத்திற்கு வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த ஆ.ராசா எம்.பி.க்கு தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட அலுவலகத்திற்கு வந்த ஆ.ராசா எம்.பி.க்கு வீரவாள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப் பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, யூ.எஸ்.டி. சீனிவாசன், பரம குரு, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் முத்துச் செல்வி, மாநில மருத்துவர் அணி துணை செய லாளர் செண்பகவிநாயகம், மாவட்ட அவை தலைவர் பத்மநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி பாண்டியன், தேவதாஸ், சாகுல் ஹமீது, மாரிச்சாமி, பராசக்தி, மகேஸ்வரி, ஒன்றிய செய லாளர்கள் லாலாசங்கர பாண்டியன், பொன்.முத்தையா பாண்டியன், கடற்கரை, பூசைப்பாண்டி யன், சேர்மதுரை, வெற்றி விஜயன், பெரியதுரை, ராமச்சந்திரன்,

    மதிமாரிமுத்து, நகர செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, பேரூர் செயலாளர்கள் குரு, ருபி பாலசுப்ரமணியம், மாரி முத்து, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் முகேஷ் உதயகுமார், வக்கீல் பிச்சையா, கே.எஸ்.எஸ். மாரியப்பன், கிப்ட்சன், சிவசங்கரி, அப்பாஸ் அலி, விஜயா சவுந்தரபாண்டியன், மாடசாமி, பிரேம்குமார்,

    பசுபதி பாண்டியன், நாகூர்கனி, மணிகண்டன், சரவணன், சேதுராமன், அமிதாப், சாமுவேல், அழகு துரை மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பா ளர்கள் கார்த்திக், சரவணன் அன்சாரி, ராஜ், மணிகண்டன் ராஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தீர்மானம்
    • உணவு மற்றும் பொருள் உதவிகள் வழங்கி கொண்டாடுவது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இரணியல் :

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் திங்கள்நகர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் விஜயன், ரமணிரோஸ், ஏசு ரெத்தி னராஜ், வைகுண்டதாஸ், ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் சசிசுபாசிங் வரவேற்றார்.

    ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். பேரூர் செயலாளர்கள் சேவியர் ஏசுதாஸ், சுஜெய்ஜாக்ஸன், செல்வதாஸ், நிர்வாகிகள் குளச்சல் சபீன், ஜெயவி ஜயன், அருள்பிரபின், ஜெய்வின்ராஜா, சிவகுமார், வில்சன், அசன், ரெஜின் உட்பட பலர் கலந்துகொண்டனர். மகளிர் அணி நிர்வாகி லீமா நன்றி கூறினார்.

    நாளை (27-ந்தேதி) தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது. ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அங்கன்வாடி மையங்கள், முதியோர் இல்லங்கள், மாணவர் காப்பகங்கள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், தொழுநோயாளிகள், புற்றுநோய் மையங்கள், மருத்துவமனைகள் போன்றவைகளுக்கு தேவையான உணவு மற்றும் பொருள் உதவிகள் வழங்கி கொண்டாடுவது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • தி.மு.க. சார்பில் மாணவர்களுக்கு நோட்டு-புத்தங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நாளை மறுநாள் ( 27-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.

    அதனை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்காசி கலைஞர் அறிவாலயத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-புத்தங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பா ளர் கிருஷ்ணராஜா முன்னிலை வகித்தார்.

    இதில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கி தென்காசியில் உள்ள திருவள்ளுவர் தொடக்கப் பள்ளி, நேரு உயர்நிலைப் பள்ளி, பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளி மற்றும் செயின்ட் ஜான்சன் உயர் நிலைப்பள்ளியை சேர்ந்த பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு-புத்தகங்கள், பென்சில் மற்றும் பேனா ஆகியவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணி யன், முகமது அப்துல் ரஹிம், ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் , தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், நகர, பேரூர் செயலாளர்கள், மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகமது அப்துல் ரஹிம் செய்திருந்தார்.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்க வேண்டும்.
    • அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது:-

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    அவரது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சங்கரன்கோவிலில் உள்ள சிறப்பு குழந்தைகள் பள்ளியில் முழு நேர உணவு வழங்குதல், வாசுதேவநல்லூரில் உள்ள சிறப்பு இல்லத்தில் முழு நேர உணவு வழங்குதல், வடக்கு மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரங்கள் மற்றும் குழந்தைகள் காப்பு பெட்டகம் வழங்குதல்,

    வடக்கு மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்க ளுக்கு சீருடை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும்.

    மேலும் பிறந்தநாள் அன்று ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இளைஞர் அணி சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிற பாராளுமன்ற தேர்தலில் இளைஞரணியின் பங்கு குறித்து தொடர் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணியினர் அந்தந்த பகுதிகளில் இந்த நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×