என் மலர்
நீங்கள் தேடியது "வேலைவாய்ப்பு முகாம்"
- வேலைவாய்ப்பு முகாம் காலை 10.30 மணிக்கு அறை எண் 439, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
- எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 28-ந்தேதி காலை 10.30 மணிக்கு புதிய மாவட்ட கலெக்டர் வளாகம், அறை எண் 439, 4வது தளம், பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
முகாமில் தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு பயன்தாரர்களை தேர்வு செய்ய வருகை தர இருக்கிறார்கள். அது சமயம் வேலைநாடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். 28.10.2022 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரிசெய்து கொள்ளலாம். புதுப்பித்துக்கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 29-ம் தேதி நடக்கிறது.
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளியில் பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 29-ம் தேதி நடக்கிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: -
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 29-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
இப்பணியிடங்கள் முழுமையாக பெண் மனுதாரர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதற்கான கல்வித்தகுதியாக 2020, 2021 மற்றும் 2022 கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 18 வயது முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், உடற்தகுதியாக உயரம் 150 செ.மீட்டரும், எடை 40 கிலோ இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாத சம்பளமாக ரூ.16,557-ம், உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். இதில், எஸ்சி, எஸ்டி மனுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தகுதியுடைய பெண் பணிநாடுநர்கள் தங்களு டைய 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவை அசல் மற்றும் நகல்களு டன், இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.
- ராஜபாளையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
- தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ெரயில்வே பீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் சிங்கராஜ், நகர்மன்ற தலைவி பவித்ரா சியாம்ராஜா கலந்து கொண்டு வேலை வாய்ப்பு முகாமில் கலந்து தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்.
இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞ ர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த முகாமில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் 800 பேர் தேர்வு செய்து பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. தேர்வாகாவர்கள் திறமை களை வளர்த்துக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து அடுத்தடுத்து நடக்க இருக்கும் முகாமில் கலந்து கொள்ளலாம்.
ராஜபாளையம் தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திதர உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த நிகழ்வில் திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், உதவி திட்ட அலுவலர் ஜேரோம், தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 3-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) நடை பெற உள்ளது.
இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 10, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற் றும் டிப்ளமோ, ஐ.டி.ஐ., பொறியியல் படித்த வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு பய ன்பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
- வருகிற 11 மற்றும் 25-ந் தேதிகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடப்பாண்டு இம்மாதத்தில் வருகிற 11 மற்றும் 25-ந் தேதிகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரை வெண்பாக்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அதில் கூறப்பட்டிருந்தன.
- 11, 25-ந் தேதிகளில் நடக்கிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட் டும் மையங்களில் வருகிற 11 - ந் தேதி மற்றும் 25-ந் தேதி ஆகிய 2 நாட்களில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் பல தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள் ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 - ம் வகுப்பு , எஸ்.எஸ்.எல்.சி. , பிளஸ் -2 , பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ. , டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
மேற்காணும் கல்வித்தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் முகாம் அன்று காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் பணி நியமன ஆணை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித் துள்ளார்.
- சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
- இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.
சிவகங்கை
சிகவங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படு த்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி வருகிற 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.
மேலும் இந்த முகாமில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவ தற்கான விண்ணப்ப படிவமும் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ படித்த இளைஞர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனியார்துறை மகளிர் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
மதுரை
கிருஷ்ணகிரி மாவ ட்டம் ஒசூர் தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஆலையில் இளநிலை தொழில் நிபுணர் பதவிக்கு 1000-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே 18- 20 வயது வரை உள்ள 2020, 2021 மற்றும் 2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு பயிற்சியுடன் மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். அந்த பதவிகளுக்கான நேர்காணல், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகிற 15- தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது.
இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் கல்விச்சான்றுடன், நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம். தனியார்துறை நிறுவனங்களில் பணி பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பாதிக்காது.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
- 300-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 40,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.
- இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடு நர்களும் www.tnprivatejobs.tn.gov.in , www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப் படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடந்தும் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 26-ந்தேதி சேலம் பத்மவாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நு ட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 40,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். மேலும், இம்முகாமில் 20,000-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வி தகுதி உள்ளவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடு நர்களும் www.tnprivatejobs.tn.gov.in , www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப் படுகிறது. எனவே பணிக்காலி யிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவனங்களும், வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெற லாம். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் அதில் தெரி வித்துள்ளார்.
- ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
- அரசுத்துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதம் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பை பெறலாம்.
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொள்ளலாம்.
இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.
மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணமின்றி தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.
இந்த இணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேலைவாய்ப்பு பெறுப வர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவுரத்து செய்யப்படமாட்டாது.
- அனைத்துவித கல்வித் தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள் தெரி வித்துள்ளன.
தருமபுரி,
தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துக்கொள்ளும் "தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 25-ந்தேதி தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.
எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும்.
இதன் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுப வர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவுரத்து செய்யப்படமாட்டாது.அரசுத் துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத் தேர்வு அனுப்பப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார்துறையில் வேலைக்கு சென்றால் அவர்களது பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனை யாளர், மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேசியர், மெக்கானிக், போன்ற பணி
களுக்கு தேர்வு செய்ய உள்ளனர்.
டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துவித கல்வித் தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள் தெரி வித்துள்ளன.
ஆகவே மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும் நாளை 25-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தவிர இதர கல்வித் தகுதிகள் உடையோரும் தகுந்த பணியிடங்களுக்கு பரிசிலீக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
- வேலை நாடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலகபதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம்.
- தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் சார்பில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 16.12.2022 காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் வளாகம், அறை எண் 439, 4வது தளம், பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர் -641604 என்ற முகவரியில் நடைபெறும்.
முகாமில் தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு பயன்தாரர்களை தேர்வு செய்ய வருகை தர இருக்கிறார்கள். அது சமயம் வேலை நாடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலகபதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம்.
வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். 16.12.2022 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரிசெய்து கொள்ளலாம். புதுப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் கல்விபதிவு செய்து கொள்ளலாம்.
தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைவிண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெறவிண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.