search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223934"

    • ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
    • இதனால் நெரிசலால் மலை பாதையில் வாகனங்கள் தேக்கம்

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். இதனால் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகிறது.

    இன்று 75-வது சுதந்திர தின விடுமுறையையொட்டி ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் படையெடுத்தனர். ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா , சேர்வராயன் குகை கோவில், பக்கோடா பாயிண்ட் , லேடிஸ்சீட் , படகு இல்லம் போன்ற சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். படகு இல்லத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

    ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக கன மழை பெய்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மழை குறைந்து இதமான சூழல் நிலவுகிறது. இச்சூழலை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர்.

    சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவில் ஏற்காடு வருவதால் இன்று மலை பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக அதிகாலையில் இருந்தே இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அணிவகுத்தப்படி சாரை, சாரையாக மலை பாதை வழியாக ஏற்காடுக்கு வந்தபடி இருந்தது. பொதுவாக சேலத்தில் இருந்து 45 நிமிடத்தில் ஏற்காடு வந்துவிடலாம். ஆனால் இன்று வாகன நெரிசலால் மலை பாதை வழியாக ஏற்காடு வர 2, 3 மணி நேரம் வரை ஆனது. இதனால் ஏற்காடு மலை பகுதி ஸ்தம்பித்து காணப்பட்டது.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் உள்ளூர் கடைக்காரர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 15ம் தேதி வரை 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • பலர் தங்களது குடும்பத்தினருடன் வந்தனர். பெரிய கோயிலை சுற்றி பார்த்து கட்டிடக்கலையை பார்த்து ரசித்தனர்.

    தஞ்சாவூர்:

    உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்வர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவர்.

    இந்த நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 15ம் தேதி வரை 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதனால் இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பலர் தங்களது குடும்பத்தி னருடன் வந்தனர். பெரிய கோயிலை சுற்றி பார்த்து கட்டிடக்கலையை பார்த்து ரசித்தனர்.

    கோவில் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாலையில் இதை விட கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் தஞ்சை மணிமண்டப பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    • ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • இதையொட்டி பாது காப்பு கருதி அணையை காண பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஆடி பெருக்கு விழாவை யொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கனைள சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூங்காவுக்கு சென்றனர்.

    தொடர்ந்து அவர்கள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் சறுக்கு விளையாடி குதுகளித்தனர்.

    ஆடி 18 அன்று மட்டும் பவானிசாகர் அணையின் மேல் பகுதியை காண பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதற்காகவே சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அணையை காண வரு வார்கள்.

    இந்த நிலையில் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை 102 அடியை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இதையொட்டி பாது காப்பு கருதி அணையை காண பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அணை யின் மேல் பகுதிக்கு செல்லும் நுழைவுவாயில் அடைக்கப்பட்டு தடை என அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணி க்கப் பட்டு வருகிறது.

    இதே போல் ஆடிப்பெ ருக்கு விழாவையொட்டி பண்ணாரியம்மன் கோவி லில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த னர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர் களின் கூட்டமாக காண ப்பட்டது.

    சென்னிமலை முருகன் கோவிலில் இன்று காலை முருகப் பெருமானுக்கு பால், தயிர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

    இதே போல் திண்டல் முருகன், கோபிசெட்டி பாளையம் சாரதா மாரி யம்மன், பாரியூர் கொண்ட த்து காளியம்மன், பச்சை மலை, பவளமலை முருகன், கொளப்பலூர் அஞ்சநேயர், அளுக்குழி செல்லாண்டி யம்மன், பவானி கூடுதுறை சங்க மேஸ்வரர், செல்லா ண்டியம்மன் உள்பட அனைத்து கோவில்களில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை சுற்றுலா பிரச்சார ஊர்தியை மாநகராட்சி மேயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 100 மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிப் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற தூய்மை சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு முதல் நிகழ்ச்சியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைக்கான உறுதிமொழி கலெக்டர் கார்மேகம் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை சுற்றுலா பிரச்சார ஊர்தியை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் , துணை மேயர் சாரதா தேவி, மண்டல க்குழுத்தலைவர்கள் எஸ்.டி. கலையமுதன், அசோகன், மாநகர பொறியாளர் ரவி, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும், மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோகுல்நாத் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 100 மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து தூய்மை சுற்றுலா மேற்கொள்ளும் வகையில் 4 மண்டலங்களுக்கு தனிதனியாக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் 25 மாணவ- மாணவியர்களை கலந்து கொள்ள செய்து, குப்பைகளை பிரிக்கும் செயல்முறை பணிகளையும், வீடு வீடாக பிரித்த நிலையில் குப்பைகளை பெறும் பணிகளையும், நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று நேரடியாக மாணவ- மாணவியர்களுக்கு தூய்மை குறித்தும், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரிப்பது குறித்தும், குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் முறைக்குறித்தும் நேரடியாக எடுத்துரைக்கப்பட்டது.

    இதையடுத்து அஸ்தம்பட்டி மண்டலம் சங்கர் நகர் பகுதியில் வீடு வீடாக பிரித்த நிலையில் குப்பைகளை பார்வையிடும் நிகழ்ச்சி, காக்காயன்காடு நுண் உயிரி உரம் தயாரிக்கும் நிலையம் பார்வையிடும் நிகழ்ச்சியில் மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 25 மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • செங்கோட்டையில் இருந்து கும்பாவுருட்டி அருவிக்கு சுமார் 21 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
    • வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கேரள வனத்துறை சார்பில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    செங்கோட்டை:

    தமிழகம், கேரளா ஆகிய 2 மாநிலங்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் எல்லை பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையாகும். இதில் கேரள எல்லைக்கு உட்பட்ட அச்சன்கோவிலில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. அங்கு 4,500 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

    கும்பாவுருட்டி அருவி

    இங்குள்ளவர்கள் ரப்பர் தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள அய்யப்பன்கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தை மாதம் வரை தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகம், கேரளாவை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இங்கு அமைந்துள்ள கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சி கொள்ளை கொள்ளும் அழகை கொண்டது. வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கும்பாவுருட்டி அருவிக்கு மேக்கரை சோதனை சாவடி அருகில் அமைந்துள்ள மணலாறு வழியாக செல்ல வேண்டும். செங்கோட்டையில் இருந்து கும்பாவுருட்டி அருவிக்கு சுமார் 21 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

    1,200 அடி உயரம்

    மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் வடபுறத்தில் தரைமட்டத்தில் இருந்து 1,200 அடி உயரத்தில் அமைந்துள்ள கும்பாவுருட்டி அருவி அச்சன்கோவிலிலுக்கு செல்லும் வழியில் 12 கொண்டைஊசி வளைவு கொண்ட குறுகிய மலை வழியாக செல்லும் சாலையில் இந்த அருவி அமைந்துள்ளது.

    இதன் அழகை காணவும், ஆனந்தமாக குளியல் போடவும் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகம், கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள்அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். இந்த அருவியானது முழுமையாக காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், அருவிக்கு செல்லும் பாதையின் இருபுறத்திலும் அடர்ந்த மரங்கள் இருக்கும்.

    குளிக்க தடை

    இங்கு வாழும் வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கேரள வனத்துறை சார்பில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த அருவியானது பல்வேறு மூலிகைகளை சுமந்து வருவதால், மிகவும் புனிதமானதாக கருதப்பட்டது.

    இந்நிலையில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இருந்தும் கடந்த 2018-ம்ஆண்டு அருவிகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் கவனக்குறைவால் நிலை தடுமாறி விழுந்ததால் அவர்களை சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் சிலர் உயிரிழக்கவும் நேரிட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அந்த அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது.

    மீண்டும் அனுமதி

    இந்நிலையில் தற்போது தடைவிதிக்கப்பட்ட அந்த அருவியில் குளிப்பதற்கு வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழக-கேரள எல்லை பகுதி வரையிலான அருவி சாலையானது மிகவும் மோசமாக உள்ளதால் இங்கு வரும் பெரும்பாலான வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது. மேலும் நடுக்காட்டில் அருவி உள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு விபத்து ஏதேனும் நேரிட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வழி இல்லாமல் போய்விடுகிறது.

    கோரிக்கை

    எனவே அருவிக்கு அருகிலேயே முதலுதவி அறைகள் அமைத்து டாக்டர்களை நியமிக்க வேண்டும். பெரிய அளவிலான விபத்து ஏற்பட்டால் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வர அருவி பகுதியில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை சுற்றுலா பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

    தமிழக எல்லையான மேக்கரை வரை தென்காசியில் இருந்து பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆந்திரா, கர்நாடகம் சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு தென்காசியில் இருந்து கும்பாவுருட்டி அருவி வரை போக்குவரத்து வசதி நீடித்தால் சுற்றுலா பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கேரளா நீர்வளத்துறை சார்பில் தற்போது அருவி பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் 2 மாநில பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகுநேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    • இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    கன்னியாகுமரி, ஜூன்.30-

    கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்"என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகுநேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    • ஆத்தூர் அருகே உள்ள முட்டல் ஏரியில் விசைப்படகு சவாரி விரைவில் தொடங்கவுள்ளது.
    • ஆைண வாரி நீர் வீழ்ச்சியை ரசிக்க ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் கல்வராயன் மலை அடிவாரத்தில் முட்டல் கிராமம் உள்ளது. அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்யவும், வனப் பகுதியில் புள்ளிமான், காட்டெருமை, காட்டுப் பன்றி, மயில் உள்ளிட்ட விலங்குகள், பறவைகளை பார்வையிடவும், ஆைண வாரி நீர் வீழ்ச்சியை ரசிக்க ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

    மூங்கில் குடில் விடுதிகள்

    மேலும் அங்கு தங்கி பார்வையிட, சூழல் சுற்றுலா திட்டத்தில் மூங்கில் குடில் கொண்ட விடுதிகள் உள்ளன. மோட்டார் படகு பழுதானதால் 3 மாதங்களாக படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் படகு சவரி செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் படகை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் முட்டல் ஏரி அழகை ரசிக்க, ரூ. 7 லட்சம் ரூபாயில், ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து செல்லும் வசதியுடன் மேற்கூரை கொண்ட விசைப்படகு, புதுச்சேரியில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.இந்த விசைப்படகு ஜுலை மாதத்தில் இயக்கப்பட உள்ளது.

    விசைப்படகில் என்ஜின் பொருத்தப்பட்டு அவை நிறுத்தப்படும் இடங்கள் தயார் செய்த பின் அதனை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் முட்டல் ஏரி செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நன்னிலத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவில் உள்ளது.
    • ஒட்டக்கூத்தர் புலவரால் பாடப்பட்டு கட்டப்பட்ட சரஸ்வதி அம்மன் கோயில் நன்னிலத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை தலைமை–யிடமாக கொண்டு சுற்றுலா மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். நன்னிலத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவாஞ்சியம் வாஞ்சிநாத கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோவில். இங்குள்ள குப்த கங்கை என்னும் திருக்குளம் காசிக்கு இணையான புகழ் பெற்றது.

    அதேபோல் ஒட்டக்கூத்தர் புலவரால் பாடப்பட்ட கட்டப்பட்ட சரஸ்வதி அம்மன் கோயில் நன்னிலத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகிலேயே ஆதிவிநாயகர் என்ற மனித முகம் கொண்ட விநாயகர் அமையப் பெற்றுள்ளது. இதேப்போல் மதுவனேஸ்வரர், சுயம்பு லிங்கம், சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன. மேலும் பல இடங்கள் பார்க்ககூடியதாக உள்ளது.

    எனவே நன்னிலம் பகுதியில் உள்ள கோவி–ல்களின் பெருமைகளை வெளிக்கொணரும் வகையில் நன்னிலத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் அவசியம் செல்ல வேண்டிய பள்ளத்தாக்கு பிரதேசம் இது.
    • ஜூன் மாதத்தில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களின் பட்டியலில் கூர்க், முக்கியமானது.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு சிறந்த மாதங்களுள் ஒன்றாக ஜூன் அமைந்திருக்கிறது. கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, மழை காலம் தொடங்குவதற்கு ஆயத்தமாகும் இந்த மாதத்தில் நிலவும் சீதோஷண நிலை சுற்றிப்பார்ப்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கும். அப்படி ஜூன் மாதத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் சிலவற்றின் பட்டியலை தொகுத்துள்ளோம்.

    ஷில்லாங்: 'கிழக்கு இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்றும் அழைக்கப்படும் ஷில்லாங், மேகாலயா மாநிலத்தின் சிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. பசுமையான மலைகள், அமைதியான ஏரிகள், மிரள வைக்கும் நீர்வீழ்ச்சிகள் என இயற்கை அதிசயங்கள் நிரம்பப் பெற்றது. உமியம் ஏரி, அடர்ந்த மலைகள், மூன்று அடுக்கு யானை நீர்வீழ்ச்சி, அடர்ந்த வனம் என இயற்கை நிலப்பரப்புகளால் சூழப்பட்டுள்ளது. மேகாலயாவைப் பற்றி மேலும் அறிய டான் போஸ்கோ அருங்காட்சியகத்தை பார்வையிடலாம். அங்கு பாரம்பரிய உடைகள், பழங்கால ஆயுதங்கள் மற்றும் கலைப்பொருட்களை காணலாம்.

    பந்தர்தாரா: மாறுபட்ட பயண அனுபவத்தை எதிர்பார்ப்பவர்கள் பந்தர்தாராவில் நடக்கும் மின்மினிப் பூச்சி விழாவில் கலந்துகொள்ளலாம். ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் பள்ளத்தாக்கு பகுதியில் ஒளிர்ந்து அந்த பகுதியையே பரவசத்தில் ஆழ்த்திவிடும். சற்று தொலைவில் இருந்து பார்த்தால் மின் மினிப்பூச்சிகள் கூட்டமாக குழுமி இருக்கும் சூழல் புதிய உலகத்திற்கு அழைத்து செல்லும் உணர்வை தரும். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 120 கிமீ தொலைவில் அமைந்துள்ள பந்தர்தாரா, 'புதையல்களின் பள்ளத்தாக்கு' என்றும் அழைக்கப்படுகிறது. அங்குள்ள ஆர்தர் ஏரியில் அமைதியான சூழலில் படகு சவாரியை அனுபவித்தும் மகிழலாம். சிவாஜி மலைக்கோட்டைகளுக்கு மலையேற்றம் செய்யலாம். ஆர்ப்பரித்து வரும் நீர்வீழ்ச்சியை கண்டும் ரசிக்கலாம்.

    தீர்த்தன் பள்ளத்தாக்கு: இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் அவசியம் செல்ல வேண்டிய பள்ளத்தாக்கு பிரதேசம் இது. மலையேற்ற பயணங்களை விரும்புபவர்களின் பட்டியலில் தவறாமல் இடம் பெற்றிருக்கும் அழகிய வன பிரதேசமாகும். மற்ற மாதங்களை விட ஜூன் மாதத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை அனைத்து தரப்பினரையும் வரவழைத்துவிடும். பசுமையான பள்ளத்தாக்கு, மேகங்களால் சூழப்பட்ட மலைகள், அழகான ஏரிகள், அமைதியான கிராமங்கள், மறைந்திருக்கும் நீர்வீழ்ச்சிகள், பழமையான கோவில்கள், சலசலக்கும் ஆறுகள் என இயற்கையின் அத்தனை அம்சங்களும் வளிமண்டலத்துடன் உறவாடி மாறுபட்ட கால நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

    சுகோ பள்ளத்தாக்கு: வட கிழக்கு மாநிலமான நாகலாந்து, மணிப்பூரின் எல்லை பகுதியில் அமைந்திருக்கும் இந்த பள்ளத்தாக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் சொர்க்கபூரியாக அமைந்திருக்கிறது. மலையேற்றம் மீது ஆர்வம் இல்லாதவர்களை கூட மலையில் உலவ விடும் அளவுக்கு தீவிர ரசிகனாக மாற்றிவிடும். அந்த அளவுக்கு வசீகரிக்கும் இயற்கை அழகுடன் இந்த பள்ளத்தாக்கு காட்சி அளிக்கும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீளும் அடர் பசுமை மலை தொடர்களும், அதனோடு தவழும் கார் மேகங்களும் மனதை குளிர வைத்துவிடும்.

    கூர்க்: இந்தியாவில் ஜூன் மாதத்தில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களின் பட்டியலில் கூர்க், முக்கியமானது. அமைதியை விரும்பும் நபர்களுக்கு ஏற்ற குடும்ப சுற்றுலா தலம் இது. கர்நாடகாவின் பசுமையான மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள இந்த இடம் 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்று குறிப்பிடப்படுகிறது. காபி பிரியர்களுக்கு சொர்க்கமாகவும் விளங்கும் இங்கு இயற்கை ஆர்வலர்கள், சாகச பிரியர்கள் பார்வையிட நிறைய இடங்கள் உள்ளன. சூரிய அஸ்தமனமும், இரவில் வான் பரப்பில் நிகழும் மாயாஜாலங்களும் மனதை லயிக்க வைத்துவிடும். இன்னொரு இரவு அங்கு தங்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிடும்.

    பச்மாரி: மத்தியப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஒரே மலைவாசஸ்தலம் பச்மாரி. சத்புரா ராணி என்றும் அழைக்கப்படும் இந்த உயரமான இடத்தில் குகைகள் ஏராளம் உள்ளன. வனவாசத்தின் போது பாண்டவர்கள் இங்கு தங்கியிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. பச்மாரியில் அரிய வகை தாவர இனங்கள் ஏராளம் உள்ளன. தேனீ நீர்வீழ்ச்சி மற்றும் ரஜத் பிரதாப் நீர்வீழ்ச்சிகளின் இயற்கை பின்னணியை ரசித்து மகிழலாம். அவற்றில் குளித்தும் ஆனந்தம் அடையலாம். இங்குள்ள குகைகளுக்குள் சென்று திரும்புவது வாழ்நாளில் மறக்கமுடியாத தருணமாக அமையும்.

    • சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் புதுச்சேரியில் அனுமதி தரப்படாததால் நடுக்கடலில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • 2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை துறைமுகத்தில் கார்டிலியா என்கிற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து சொகு கப்பல் சுற்றுலா திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை அறிமுகம் செய்தது.

    சென்னையில் இருந்த புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சொகுசு கப்பலில் மக்கள் பயணம் செய்யும் வகையில் சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முன்பதிவு செய்து ஏராளமான மக்கள் கப்பலில் சுற்றுலா சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் புதுச்சேரியில் அனுமதி தரப்படாததால் நடுக்கடலில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புதுச்சேரி அரசு அனுமதி அளிக்காத நிலையில் கீரப்பாளையம் லைட் ஹவுஸ் அருகே சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ×