search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பம்"

    • 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட திட்ட செயலாக்க அலகு, வாழ்வாதார திட்ட பணிகள் மேற்கொள்வதற்கு செம்பனார்கோயில், சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இப்பணிகளுக்கு 28 வயதுக்கு மிகாமல் உள்ள பட்டதாரிகள் விண்ண ப்பிக்கலாம். MS-Office 3 மாத காலத்திற்கு படித்திருக்க வேண்டும் (சான்றுடன்), கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    வாழ்வாதார திட்டப்பணிகள் குறித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    அதே வட்டாரத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

    எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மூலம் விண்ணப்ப தாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும், அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.

    விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நடைபெறும் தேதி கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: –

    திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், கச்சேரி ரோடு, ஆர்.டி.ஓ. அலுவலகம் பின்புறம், மயிலாடுதுறை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 668 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப படிவத்தை வீடுகளுக்கே சென்று அமைச்சர் வழங்கினார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த வல்ளூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 17 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான இலவச வீட்டுமனை பட்டா, 56 நரிக்குறவ பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 128 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 215 பயனாளிகளுக்கு இணைய வழிபட்டா, 200 பயனாளிகளுக்கு மாதந்திர உதவித்தொகை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 52 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் என மொத்தம் 668 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 88 லட்சத்து 41 ஆயிரத்து 251 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.

    முன்னதாக, வள்ளூர் ஊராட்சியில் புதிய பகுதி நேர அங்காடி கட்டிடத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்து, கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப படிவத்தை அப்பகுதியிலுள்ள வீடு களுக்கே சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 3 நாட்களில் வாங்காதவர்களுக்கு ரேசன் கடைகளில் கொடுக்க முடிவு.
    • அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுநிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்களுக்கு இந்த சலுகை இல்லை.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

    நடப்பு ஆண்டில் 1 கோடி பெண்களுக்கு உதவி தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் வீடு வீடாக நேற்று முதல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களில் தகுதியானவர்களுக்கு வழங்கும் வகையில் ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் வழியாக மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் வழங்கப்படுகிறது.

    சென்னையில் 2 கட்டமாக படிவங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்கள் நாளைக்குள் (சனிக்கிழமை) கொடுத்து முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு வேளை விடுபட்டவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமையும் வழங்கப்படலாம்.

    24-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அவரவருக்கு ஒதுக்கப்பட்ட முகாம்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் மற்றும் நேரத்திற்கு சென்று சமர்பிக்க வேண்டும்.

    படிவங்களை பூர்த்தி செய்ய இயலாதவர்களுக்கு முகாம்களில் உதவி செய்ய தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய பணி மாலை 5 மணி வரை நடந்தது.

    தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் 2¼ கோடி பேர் பயன்பெற்று வருகிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுநிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்களுக்கு இந்த சலுகை இல்லை.

    மேலும் ஆண்டிற்கு 2.5 லட்சம் வருமானத்திற்கு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் இது தவிர ஏற்கனவே பிற திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உதவி தொகை பெறுபவர்களும் மகளிர் உரிமைத் தொகையை பெற முடியாது.

    இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 25 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு உள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இன்று 2-வது நாளாக படிவங்கள் வழங்கப்படுகின்றன. நாளைக்குள் 90 சதவீதம் பேருக்கு படிவங்கள் சென்றடையும் வகையில் ஊழியர்கள் முனைப்புடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    படிவம் பெற முடியாமல், விடுபட்டு போனால் கூட பயப்பட தேவையில்லை. ரேசன் கார்டை நியாய விலை கடைகளுக்கு நேரில் கொண்டு சென்றால் கூட படிவங்கள் வழங்கப்படும். படிவங்கள் வழங்குவதற்கு கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் வடக்கு, மத்தியம், தெற்கு என 3 மண்டலங்களாக பிரித்து இந்த பணிகள் நடைபெறுகின்றன. சென்னையில் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மகளிர் உரிமை தொகை பெற தகுதி உடையவர்களாக இருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் படிவங்களை வழங்கி, பெறுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 1.5 லட்சம் பேருக்கு நேற்று படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    • படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    • ஆகஸ்ட் 31ம்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுரை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவ லகத்தில் படித்த வேலை வா ய்ப்பற்ற இளைஞ ர்களிடமி ருந்து வேலை வாய்ப்பற்ற உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெ றுவதற்கான வி ண்ணப்பங்கள் வரவேற்க ப்படுகின்றன.பத்தாம் வகுப்பு தோல்வி பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலை வாய்ப்பு அலுவ லகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து ஐந்தா ண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி கா த்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவி த்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறு த்தவரையில் வே லைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடி த்திருந்தால் போது மானது.உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலு வலகத்தில் விண்ண ப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே, விண்ணப்பித்து மூன்றா ண்டுகள் உதவி த்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையி ல்லை.பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பங்களை அடுத்த மாதம் ஆகஸ்ட்டு 31-ந் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப் பிரிவில் நேரில் சமர்ப்பி க்கலாம் என்று கலெக்டர் தெரிவி த்துள்ளார்.

    • சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
    • சமூக பணிகள் ஆகியவற்றிலுள்ள அர்ப்பணிப்பு ஆகிய தகுதிகள் இருத்தல் வேண்டும்.

    கடலூர்:

    ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் தொகையும், ஒரு சவரன் தங்க பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

    விண்ணப்பதாரர்கள் சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூக சீர்திருத்த கொள்கை, கலை, இலக்கியம், சமூக பணிகள் ஆகியவற்றிலுள்ள அர்ப்பணிப்பு ஆகிய தகுதிகள் இருத்தல் வேண்டும். விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம்,முழு முகவரி மற்றும் மேற்குறிப்பிட்ட தகுதிகள் உடையவராயின் அதற்குரிய ஆவணங்கள், புகைப்படங்கள், நிகழ்வுகள் குறித்த நாள், இடம் ஆகிய விவரங்களை தவறாது குறிப்பிட்டு செப்டம்பர் 15-ந்தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்பட்டோர் நல அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், கடலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    • டோக்கன் வழங்கும் பணி, முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பு தொடங்கும்.
    • காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி வரையும், 2-ம் கட்ட முகாம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நியாயவிலை கடை பணியாளர் ஒவ்வொரு நியாய விலை கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவர்.

    டோக்கன் வழங்கும் பணி, முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பு தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களை பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வரத்தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். முதல் மற்றும் 2-ம் கட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும் கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டவுடன், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் நியாயவிலை கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும்.

    முதல்கட்டமாக மயிலாடுதுறை வருவாய் வட்டத்தில் ஆனந்ததாண்டவபுரம், அருவாப்பாடி, ஆத்தூர், பூதங்குடி உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், சீர்காழி வருவாய் வட்டத்தில் ஆச்சாள்புரம், அகரபெருந்தோட்டம், அகரவட்டாரம், அளக்குடி உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடை பகுதிகளிலும்,

    குத்தாலம் வருவாய் வட்டத்தில் ஆலங்குடி, அனந்தநல்லூர், அரிவேளூர், அசிக்காடு உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், தரங்கம்பாடி வருவாய் வட்டத்தில் ஆக்கூர், ஆக்கூர் முக்கூட்டு, ஆனைக்கோயில், அனந்தமங்கலம் உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலைக்கடை பகுதிகளில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற உள்ளது.

    2-ம் கட்டமாக மயிலாடுதுறை வருவாய் வட்டத்தில் அகரகீரங்குடி, ஆனைமேலகரம், அருண்மொழித்தேவன், சோழம்பேட்டை உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், சீர்காழி வருவாய் வட்டத்தில் ஆச்சாள்புரம், ஆதமங்கலம், அகணி, அகரஎலத்தூர், ஆலங்காடு உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், குத்தாலம் வருவாய் வட்டத்தில் கீழையூர், குத்தாலம், மாதிரிமங்கலம், மேக்கிரிமங்கலம், மேலையூர் உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும், தரங்கம்பாடி வருவாய் வட்டத்தில் அகராதனூர், அகரவல்லம், அரசூர், அரும்பாக்கம் உள்ளிட்ட வட்டத்தில் உள்ள நியாய விலை கடை பகுதிகளிலும் 2-ம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற உள்ளது.

    மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட அனைத்து நியாய விலைக்கடை பகுதிகளிலும் 2-ம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும். இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட கலெக்டரின் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 04364-

    222588. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.
    • இவ்விருதிற்கு விண்ணப்பிக்க வருகிற 20.7.2023-ந்தேதி கடைசிநாளாகும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015-ம் ஆண்டு முதல் "முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது" ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த விருது ரூ.1 லட்சம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

    அதன்படி 2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருது வருகிற 15.8.2023 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. 15 முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் விண்ணப்பிக்கலாம்.

    ஏப்ரல் 1, 2022 (1.4.2022) அன்று 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 31, (31.3.2023) அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதி ஆண்டில் (2022-2023) அதாவது 1.4.2022 முதல் 31.3.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

    விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்பட கூடியதாகவும், அளவிட கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

    மத்திய-மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

    விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் உள்ளது. விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    தற்போது இவ்விருதிற்கு விண்ணப்பிக்க வருகிற 20.7.2023-ந்தேதி கடைசிநாளாகும். மேலும் விவரங்கள் பெற திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366-290620 அல்லது மாவட்ட விளையாட்டு-இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண் 7401703448-க்கு தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
    • நடப்பு கல்வியாண்டு முதல் பகுதி நேர பி.இ., படிப்புகள் நான்கு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது

    திருப்பூர்:

    அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வருகிற 23-ந் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

    தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., படிப்புகள் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டு முதல் பகுதி நேர பி.இ., படிப்புகள் நான்கு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் 28ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் உரிய நேரத்திற்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் விபரங்களுக்கு 0422-2590080,94869-77757 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் ஆர்வமாக உள்ளதால் புதிய குடும்ப அட்டைக்கு அதிகளவில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.
    • வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா வழங்கல் அலுவலர்கள் இதற்கான தொடர் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவி ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.

    இதற்காக நடப்பு ஆண்டில் ஒரு கோடி பெண்களுக்கு உதவித் தொகை வழங்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் மூலம் இதனை செயல்படுத்த முடிவு செய்து விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் குறித்த நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

    விண்ணப்ப படிவங்கள் 20-ந்தேதி முதல் வீடுதோறும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைக்கு உட்பட்ட தகுதி உள்ளவர்களுக்கு படிவங்கள் வழங்கப்படும். இதற்கான சிறப்பு முகாம்கள் மூலம் படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவது குறித்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரையில் குடும்ப அட்டை பெறாதவர்கள் இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதே போல ஒரே வீட்டில் 2, 3 குடும்பங்கள் கூட்டாக வசித்து வருபவர்களும் இத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலனை பெற தீவிரமாக உள்ளனர். இதனால் கூட்டு குடும்பங்களாக உள்ளவர்கள் தனியாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.

    கடந்த சில நாட்களாக குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம் அதிகரித்து வருவதாகவும், புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் எண்ணிக்கையும் தினமும் கூடி வருவதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பதிவாகின்றன. ஏற்கனவே உள்ளவர்களுக்கே ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதில் அரசுக்கு நெருக்கடி ஏற்படக்கூடும் என்பதால் உணவு பாது காப்பு துறை சம்பந்தட்ட தாலுகா வழங்கல் அலுவலர், உதவி ஆணையர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அதனை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை தற்போது மேற்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் ஆர்வமாக உள்ளதால் புதிய குடும்ப அட்டைக்கு அதிகளவில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை. ஆனால் கள ஆய்வு தற்போது செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளோம்.

    வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா வழங்கல் அலுவலர்கள் இதற்கான தொடர் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தில் இதுவரையில் குடும்ப உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கிடைக்கும். புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை கிடைக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பதிவு செய்யும் தன்னார்வலர்களுக்கு தாலுகா அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • வருகிற 24-ந்தேதி முதல் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதற்காக ரேஷன்கடைகள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அதனை முகாம் அமைத்து பதிவு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ரேஷன்கடைக்கும் அருகில் உள்ள அரசு கட்டிடங்களில் இதற்காக முகாம் அமைத்து தன்னார்வலர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய உள்ளனர். அவ்வாறு பதிவு செய்யும் தன்னார்வலர்களுக்கு தாலுகா அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவையாறு, பூதலூர், கும்பகோணம், திருவிடைமருதூர் உள்ளிட்ட 9 தாலுகாக்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை தாலுகாவில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி தஞ்சை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அளிக்கப்பட்டு வருகிறது.

    மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) செந்தில்குமாரி தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் முன்னிலையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தாசில்தார் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ரேஷன்க டைகளில் பயனாளர்களுக்கு வழங்க ப்படும் விண்ணப்ப ங்களை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.இதற்காக தன்னா ர்வலர்களுக்கு தனியாக செயலியும் அளிக்கப்பட்டு பதிவு செய்யப்பட உள்ளது. இந்த பயிற்சி கடந்த 3 நாட்களாக அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலையில் 100 தன்னார்வலர்களுக்கும், மாலையில் 100 தன்னார்வலர்களுக்கும் என 200 பேருக்கு தினமும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.வருகிற 24-ந்தேதி முதல் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடைபெறுகிறது.

    • விழுப்புரம்மாவட்டத்தில் இதுவரை 100 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
    • முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- –

    மாவட்டக் கலை மன்றங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்ட த்திலும் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம்மாவட்டத்தில் இதுவரை 100 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. 2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய ஆண்டுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இயல், இசை நாடகம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலை புலமை அடிப்படையில் விருதுகள் வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர்வாளர்குழு விரைவில் கூட்டப்படவுள்ளது.

    ஆகவே விழுப்புரம் மாவ ட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மிக் கோலாட்டம், மயிலாட்டம், பாவை க்கூத்து, தோல்பாவை, நையாண்டிமேளம், கரகா ட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை யாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மாவட்டக் கலை விருதுகள் 18 வயதும் அதற்குற்பட்ட கலைஞர்களுக்கு "கலை இளமணி" விருதும், 19 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு "கலை வளர்மணி" விருதும், 36 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு "கலைச் சுடர்மணி" விருதும், 51 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு "கலை நன்மணி" விருதும், 66 வயதிற்குமேற்பட்ட கலைஞர்களுக்கு "கலை முதுமணி" விருது வழங்கப்படவுள்ளது.

    எனவே, விழுப்புரம் மாவ ட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் விண்ணப்பத்துடன் வயதுச் சான்று மற்றும் கலைத் தொடர்பான சான்றி தழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்டக் கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்ய க்கூடாது. இம்மா வட்ட விருது பெறத் தகுதியவாய்ந்த கலைஞர்களிடமிருந்து வருகிற 25-ந் தேதிக்குள் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், மண்டல கயிறு வாரியம் அருகில், வல்லம் சாலை, பிள்ளையார்ப்பட்டி, தஞ்சாவூர் – என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மகளிர் உரிமைத் திட்டத்தினை தொய்வின்றி செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
    • எவ்வித புகாருக்கும் இடமின்றி இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வீடு வீடாக வழங்கும் பணியில் ரேசன் கடைகளுக்கு தொடர்பு இல்லாத நபர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று கூட்டுறவுதுறை பதிவாளர் எச்சரித்துள்ளார். எக்காரணத்தை கொண்டும் வெளிநபர்களால் விண்ணப்பம் வழங்கப்படுவதற்கு அனுமதி இல்லை.

    மகளிர் உரிமைத் திட்டத்தினை தொய்வின்றி செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எவ்வித புகாருக்கும் இடமின்றி இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×