search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223986"

    • சந்திரன் (வயது 27). இவர் லாரி கிளீனராக வேலை செய்து வந்தார். இவரது வீட்டில் மின்சார சுவற்றில் இருந்த எர்த் கம்பியில் அவரது கைப்பட்டது..இதில் எர்த் கம்பியில் இருந்து வந்த மின்சாரம் தாக்கி இவர் தூக்கி வீசப்பட்டார்.
    • பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் இறந்து விட்டதாக கூறினார்.

    கடலூர்:

    பண்ருட்டி எல்.என்.புரம் குயவர் வீதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் சந்திரன் (வயது 27). இவர் லாரி கிளீனராக வேலை செய்து வந்தார். இவரது வீட்டில் மின்சார கோளாறு உள்ளது. இதனால் வீட்டில் உள்ள எர்த் கம்பியில் ஒரு சில நேரங்களில் மின்சாரம் வரும். இந்நிலையில் லாரி கிளினரான சந்திரன் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தனது வீட்டில் கழிவறைக்கு சென்றார். அப்போது சுவற்றில் இருந்த எர்த் கம்பியில் அவரது கைப்பட்டது. 

     இதில் எர்த் கம்பியில் இருந்து வந்த மின்சாரம் தாக்கி இவர் தூக்கி வீசப்பட்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் இறந்து விட்டதாக கூறினார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்தனர். மின்சாரம் தாக்கி பலியான கிளினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாமஸ்துரைக்கும், முருகேஸ்வரிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • தாமஸ்துரை டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் கம்பியை தொட்டுள்ளார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேயன்விளை அருகே காணியாளன் தெரு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் தாமஸ்துரை (வயது25). கோழி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஆத்தூர் அருகே உள்ள வரண்டியவேல் கிராமத்தை சேர்ந்த முருகேஸ்வரி (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஏற்கனவே தாமஸ்துரைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிர வில் தாமஸ்துரை குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரை முருகேஸ்வரி கண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த தாமஸ்துரை வீட்டின் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி உயர் மின் அழுத்த கம்பியை தொட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்துள்ளார்.

    இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகேஸ்வரி அக்கம் பக்கத்தினர் துணையுடன் அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு தாமஸ்துரையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 4-ந்தேதி அதிகபட்ச மின்சார நுகர்வு 17 ஆயிரத்து 584 மெகாவாட்டாக இருந்தது.
    • தமிழ்நாட்டின் தற்போதைய மின்சார தேவை 16 ஆயிரத்து 500 மெகாவாட்டிலிருந்து 17 ஆயிரத்து 500 மெகாவாட் வரை உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வரும் கோடை காலத்தில் பொதுமக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடந்த 4-ந்தேதி அதிகபட்ச மின்சார நுகர்வு 17 ஆயிரத்து 584 மெகாவாட்டாக இருந்தது. இந்த அளவு கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ந்தேதி அன்று பதிவான 17 ஆயிரத்து 563 மெகாவாட்டை விட 21 மெகாவாட் கூடுதலாகும். இந்த கூடுதலான மின் நுகர்வு எவ்வித தடங்கலுமின்றி எதிர்கொள்ளப்பட்டது. வரக்கூடிய நாட்களில் மின்சார நுகர்வு இன்னும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் தற்போதைய மின்சார தேவை 16 ஆயிரத்து 500 மெகாவாட்டிலிருந்து 17 ஆயிரத்து 500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17 ஆயிரம் மெகாவாட்டிலிருந்து 18 ஆயிரத்து 500 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு யூனிட்டிற்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டு இருப்பதால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • ஜவுளித்தொழிலில் நெருக்கடி குறைந்து விரைவில் நல்ல நிலைக்கு வரும் .

    மங்கலம் :

    விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 750 யூனிட்டாக இருந்த நிலையில் 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்-அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

    இந்த அறிவிப்பு குறித்து மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க துணைத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால் -கூறுகையில்

    தமிழகத்தில் மார்ச்1-ந்தேதி முதல் விசைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அந்த வகையில் விசைத்தறிக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட 3 நிலையிலான மின் கட்டணம் ஒரே நிலையாக மாற்றப்பட்டு ஒரு யூனிட்டிற்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டு இருப்பதால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்/ மேலும் விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 750 யூனிட்டாக இருந்த நிலையில் 1000 யூனிட்டாக உயர்த்தியும் ,கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பதை 300 ஆக உயர்த்தியும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் ஜவுளித்தொழிலில் நெருக்கடி குறைந்து விரைவில் நல்ல நிலைக்கு வரும் என கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் குறைப்பு மற்றும் விசைத்தறிக்கான 1000 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் , மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி , செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும்திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் மா.சிவசாமி கூறுகையில்,இதன் மூலம் விசைத்தறித் தொழில் நல்ல நிலையில் சீரடைந்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் கூலி உயர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.

    • இரும்பு கொக்கியை எடுத்து தேங்காய் பறிக்க முயன்றுள்ளார்.
    • அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கொடுவாய் வெள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 50 ).இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் (45 ) என்பவர் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக இரும்பு கொக்கியை எடுத்து தேங்காய் பறிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் இரும்பு கம்பி பட்டதில் குமார் மீது மின்சாரம் தாக்கியது.

    இதில் அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

    தஞ்சாவூர் பூதலூர் காங்கேயர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 70). இவர், வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயமடைந்த அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து முத்துகிருஷ்ணனின் மகன் செந்தில்குமார் (43) பூதலூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • செல்போனுக்கு சார்ஜ் போட்டிருந்தபோது பரிதாபம்
    • கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள ஜவுளி கடைகள் மற்றும் மீன் வலை நிறுவனங்கள் ஆக்கர் கடைகளில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

    ஒரிசாவை சேர்ந்த தீபெக் (வயது 27) என்பவர் நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை சானல் கரை பகுதியிலுள்ள ஆக்கர் கடை ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவருடன் ஒரிசாவைச் சேர்ந்த மேலும் 3 பேரும் தங்கி இருந்தனர். நேற்று இரவு தீபெக் வேலை முடிந்து ஆக்கர் கடையில் இருந்தார்.

    அப்போது அவர் தனது செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்கு முயன்றார்.இதையடுத்து அந்த பகுதியில் இருந்த மின்பெட்டியில் இருந்து தான் பக்கத்தில் படுத்து இருந்த கட்டில் வரை மின் இணைப்பை நீடித்து செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்பெட்டியில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்வயரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டது. இதில் அவர் மீது மின்சாரம் தாக்கியது. உடனே தீபெக் தூக்கி வீசப்பட்டார்.

    உடனே சக தொழிலாளர்கள் தீபெக்கை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீபெக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபெக் பலியான தகவல் ஒரிசாவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பலியான தீபெக்கின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    • திருப்பூா் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.
    • ராதா நகா் 3 வது வீதியில் உள்ள மின்சார கம்பத்தில் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் நெருப்பெரிச்சலை அடுத்த குருவாயூரப்பன் பகுதியைச் சோ்ந்தவா் கே.மகேஷ்குமாா் (வயது 32), இவா் திருப்பூா் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், போயம்பாளையம் பகுதியில் உள்ள ஆா்.கே.நகா் மின்வாரிய பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட ராதா நகா் 3 வது வீதியில் உள்ள மின்சார கம்பத்தில் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் மகேஷ்வரன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அருகில் இருந்த சக தொழிலாளா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஷ்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.இச்சம்பவம் குறித்து திருப்பூா் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். 

    • உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி ஆதாரத்தை வைத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.
    • உத்தரங்குடி மயானத்தில் சாலை மற்றும் மயாண கொட்கை அமைத்து தர வேண்டும்.

    திருவாரூர்:

    கொரடாச்சேரி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் உமாப்பிரியா தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் துணைத்தலைவர் பாலச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன், முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தீர்மானங்களை உதவியாளர் மகேந்திரன் வாசித்தார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது. நாகூரான் (அதிமுக): மேல மற்றும் கீழ உத்தரங்குடி மயானத்தில் சாலை மற்றும் மயாண கொட்கை அமைத்து தர வேண்டும்.

    சத்தியேந்திரன் (திமுக): எண்கண் ஊராட்சியில் ஈமகிரியை கட்டிடம் வேண்டும்.

    ஏசுராஜ் (அதிமுக): தியாகராஜபுரம் ஆதி திராவிடர் தெரு சாலை, நீலக்குடி சுடுகாடு மயான கொட்டகை, மயானம் செல்லும் சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

    உமாமகேஸ்வரி (திமுக): தியாகராஜபுரம் ஊராட்சி சிராய்குடி மயான சாலை அமைக்க வேண்டும். இங்குள்ள குடிநீர் தொட்டிக்கு மூடி இல்லாமல் உள்ளது உடனே சீரமைக்க வேண்டும்.

    ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் பாலச்சந்திரன்: உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி ஆதாரத்தை வைத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் மற்ற பணிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

    இதைத்தொடர்ந்து தலைவர் உமாப்பிரியா உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில், கோடை காலம் வருவதால் மக்களின் அடிப்படையாக குடி நீர், மின்சாரம், தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். படித்துறை மற்றும் வாய்க்கால் மதகுகளை ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதத்தில் முடித்து விட வேண்டும்.

    மேலும் படித்துறை, கல்வெட்டு, தேவைப்படும் உறுப்பினர்கள் உடனே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தன் நன்றி கூறினார்.

    • திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.
    • நேற்று இரவு இவர் மின்விசிறி போடுவதற்காக வயரை சொருகியுள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கூடக்கோவில் போலீஸ் சரகம் சின்னஉலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகள் கார்த்திகைசெல்வி(வயது 12). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார்.

    காளிமுத்து சின்ன உலகாணி கிரா மத்தில் தோட்டத்தில் புதிதாக வீடுகட்டி உள்ளார். கட்டிட பணி முழுமை பெறாத நிலையில் அந்த வீட்டில் நேற்று இரவு கார்த்திகை செல்வி மின்விசிறி போடுவதற்காக வயரை சொருகியுள்ளார்.

    அப்ேபாது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகை செல்வி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதையடுத்து மாணவி கார்த்திகை செல்வியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்தில் வைக்கப்பட்டது. இது குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் அருகே உள்ள மின்சார மீட்டா் பெட்டியின் கம்பியை எதிா்பாராத விதமாக தொட்டுள்ளாா்.
    • விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனா்.

    காங்கயம் : 

    மூலனூரை அடுத்த நத்தப்பாளையம் பகுதியை சோ்ந்த பாலமுருகன் மகன் செல்வகுமாா் (வயது 14). இவா் நத்தப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் 8- ம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது பள்ளிக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் காங்கயம் சக்தி நகா் அருகே உள்ள தனது உறவினா் வீட்டுக்கு அவா் வந்துள்ளாா்.

    இவா் தன் நண்பா்களுடன் விளையாடி கொண்டிருந்தாா். அப்போது வீட்டின் அருகே உள்ள மின்சார மீட்டா் பெட்டியின் கம்பியை எதிா்பாராத விதமாக தொட்டுள்ளாா். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாா்.அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவா்கள் செல்வகுமாா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனா். 

    • வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சீர்காழி:

    சீர்காழி மின்சார வாரிய செயற்பொ றியாளர் லதா மகேஸ்வரி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, புங்கனூர், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடம் முக்கூட்டு, விளந்திட சமுத்திரம், புளிச்சகாடு, கற்பகம் நகர், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை வியாழக்கிழமை 29-ம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×