search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223986"

    • எதிர்பாராத விதமாக அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பியின் மீது அவரது கைபட்டதில் மின்சாரம் தாக்கி மரத்திலேயே இறந்தார்.
    • தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் உள்ள ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் சின்னதம்பி(வயது42) .

    இவர் சம்பவத்தன்று ் அருகில் இருந்த முருங்கை மரத்தில் ஏறி கிளைகளை வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பியின் மீது அவரது கைபட்டதில் மின்சாரம் தாக்கி மரத்திலேயே இறந்து கிடந்தார்.

    இதுபற்றி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் கம்பத்தின் உச்சியில் முற்றிலுமாக சிமெண்ட் காரைகள் இல்லாமல் கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கம்பியின் மேல் பகுதியில் மின் கம்பிகள் செல்கிறது.
    • காலம் தாழ்த்து வருவதாக புகார் தெரிவிக்கும் மக்கள் உடனடியாக மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் தெரு விளக்கு சிமெண்டில் ஆன மின் கம்பங்கள் காரைகள் பெயர்ந்து கம்பிகளில் தாங்கிப் பிடித்துள்ளது. இதேபோல பல பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்தும் உள்ளது என புகார் எழுந்துள்ளது.

    குறிப்பாக நாகை அருகே பழைய நாகூர் ரோட்டில் தனியார் கல்லூரி உள்ளது இங்கு நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் மின் கம்பத்தின் உச்சியில் முற்றிலுமாக சிமெண்ட் காரைகள் இல்லாமல் கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கம்பியின் மேல் பகுதியில் மின் கம்பிகள் செல்கிறது, அதிவேக காற்று அல்லது ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் மின்கம்பத்தை போர்க்கால அடிப்படையில் மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல வெளிப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் வாசலில் ஒரு மின் கம்பம், மேலும் இளஞ்சேரன் நகர் பகுதியில் தெரு விளக்கு மின் கம்பம் சாய்ந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வீடுகளின் மேல் விழும் அபாயத்தில் உள்ளது

    இப்பகுதியில் மின் பழுது ஏற்பட்டால் மின்கம்பத்தில் மின்வாரிய ஊழியர்களே ஏறமறுக்கும் அவல நிலை உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் கொடுத்தும் 2 நாட்கள், ஒரு வாரம், இதோ, அதோ என காலம் தாழ்த்து வருவதாக புகார் தெரிவிக்கும் மக்கள் உடனடியாக மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    அதற்கு முன் விபத்து ஏற்பட்டால் முழு பொறுப்பையும் மின்வாரிய அதிகாரிகள் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • மக்கும் குப்பைகளாக இருக்கக்கூடிய காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள் உள்ளிட்டவற்றை வைத்து மின்சாரம் தயாரித்து வருகிறார்கள்.
    • உயிரிவழி மீத்தேனாக்கல் முறையில் மின்சாரமாக மாற்றப்பட்டு அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரிய வைக்கப்படுவதாக தெரிவித்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா பகுதி ஆகும். ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை காண்பதற்காக கொடைக்கானலுக்கு வருகிறார்கள்.

    கடந்த சில வருடங்களாகவே கொடைக்கானலில் வீடுகள் மற்றும் விடுதிகளின் எண்ணிக்கை அதிகமானதால் இங்கு கொட்டப்படும் குப்பைகளின் அளவும் அதிகமாகவே உள்ளது.

    குறிப்பாக கொடைக்கானல் நகர் பகுதிகளில் மட்டும் நாள் ஒன்றுக்கு 17 மெட்ரிக் டன் குப்பைகள் வரை கொட்டப்படுவதாகவும் இதில் 11 மெட்ரிக் டன் மக்கும் குப்பையாகவும் ஆறு மெட்ரிக் டன் மக்காத குப்பைகளாகவும் இருந்து வருகிறது.

    நகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கொட்டப்படும் குப்பைகளை ஒன்றாக சேர்த்து செண்பகனூர் பகுதியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்தெடுக்கப்படுகிறது.

    தற்போது புது திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது கொடைக்கானல் நகராட்சி. இதில் மக்கும் குப்பைகளாக இருக்கக்கூடிய காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள் உள்ளிட்டவற்றை வைத்து மின்சாரம் தயாரித்து வருகிறார்கள். மேலும் உயிரி வழி மீத்தேனாக்கல் முறையில் மக்கும் கழிவுகளை இங்கு அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய உயிரி வாயு மற்றும் இயற்கை உர ஆலை பகுதியில் கொட்டப்படுகிறது. ரூ.70 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த பகுதியில் மக்கும் கழிவுகள் மூலம் ஒரு வாயு உருவாக்கப்படுகிறது.

    இந்த வாயு உயிரிவழி மீத்தேனாக்கல் முறையில் மின்சாரமாக மாற்றப்படுகிறது. இதனை அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய தெரு விளக்குகள் எரிய பயன்படுத்துகிறது. இந்த மக்கும் குப்பைகள் மூலமாக இதுவரை 200-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் எரிந்து வருவதாகவும் தற்போது இந்த திட்டம் வெற்றிகரமாக இருப்பதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

    மேலும் இருக்கக் கூடிய 6 மெட்ரிக் டன் மக்காத குப்பைகளை தரம் பிரித்து அவற்றிலிருந்து இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த இயற்கை உரங்களை கொடைக்கானலில் இருக்கக்கூடிய மலைப்பகுதி விவசாயிகளுக்கு கொடுத்து வருவதாகவும் இந்த உரங்கள் தற்போது மழை காய்கறிகளுக்கு சத்தான உரமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மின் இணைப்பு வயர் செல்லும் இரும்பு தூணை எதிர்பாராத விதமாக பிடித்ததால் மின்சாரம் தாக்கியது.
    • உடல் பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள வெட்டிக்கோணம் நொண்டி மாமூட்டுவிளையை சேர்ந்த சரளாபாய். சம்பவத்தன்று வீட்டின் வெளியே மின் இணைப்பு வயர் செல்லும் இரும்பு தூணை எதிர்பாராத விதமாக பிடித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்க தூக்கி வீசி எறியப்பட்டார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சரளாபாய் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    சம்பவம் குறித்து அவரது மகன் முருகன் தக்கலை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் பயிற்சி எஸ்பி விவேகனந்த சுக்லா விசாரணை நடத்தினார். பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் கோவிலுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
    • ஓய்வூதியம் பெறும் பூசாரி மறைவுக்குப்பின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வாய்மேடு பின்னையடி மாரியம்மன் கோவிலில் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஒன்றியம் பூசாரிகள் பேரமைப்பு ஒன்றிய கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஒன்றிய பொருளாளர் காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட பூசாரிகள் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.

    ஒன்றிய துணைத்தலைவர் சிங்காரவேல், நகர தலைவர் ரத்தினம், நகரச் செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் செய்தி தொடர்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார். கூட்டத்தில் தமிழகத்தில் மதுவை முற்றிலும் ஒழிக்க பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் கோவிலுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரி மறைவுக்குப்பின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பூஜை செய்யும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் ரூ.10,000 வழங்கிட வேண்டும். வருகிற 3-ம் தேதி வேலூரில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு நமது பகுதியில் இருந்து அதிக நபர்கள் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மதுரை மாவட்டத்தில் மின்சாரம் திருட்டு; ரூ.32.19 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
    • அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மதுரை

    மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படை யில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அம லாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மீமிசல், கோட்டைப்பட்டினம், கொடிக்குளம், மணல்மேல்குடி, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் தம்பிக்கோட்டை ஆகிய பகுதிகளில் 9 இடங்களில் மின் திருட்டு கண்டறி யப்பட்டது.

    எனவே மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.29 லட்சத்து 55 ஆயிரத்து 332 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    மேலும் மின்சாரம் திருடிய நுகர்வோர்களுக்கு ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்டதாக நுகர்வோர்களிடம் மொத்தம் ரூ.32 லட்சத்து 19 ஆயிரத்து 332 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் எதுவும் தெரிய வந்தால் மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன் எண்: 94430-37508 தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடைக்கு சென்ற கஜேந்திரன் அங்கு இருந்த‌ மின்சார எர்த் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்து‌ள்ளார்.
    • கஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள நாகப்ப‌உடையான்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் என்பவரின் மகன் கஜேந்திரன் (வயது 13). இவர் மருங்குளம் அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கஜேந்திரனின் வீட்டின் அருகே அவருடைய உறவினர் பால் கடை வைத்துள்ளார். அந்த கடைக்கு சென்ற கஜேந்திரன் அங்கு இருந்த‌ மின்சார எர்த் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்து‌ள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து கஜேந்திரன் மயங்கி விழுந்தார்.

    தகவலின்பேரில் வந்த 108 ஆம்புலன்ஸில் வந்த‌ மருத்துவ பணியாளர்கள் மயங்கி கிடந்த கஜேந்திரனை சோதனை செய்தனர். பின்னர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ‌ இடத்திற்கு வந்து மாணவர் கஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் ேபரில் வல்லம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மின் கம்பி மீது உரசியதில் மின்சாரம்தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
    • உயிரிழந்தது 1½ வயது மதிக்கதக்க மயில்/

    திருப்பூர்,

    திருப்பூர் குமரன் சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றின் மீது நின்றிருந்த மயிலானது, பறந்து செல்ல முற்பட்டபோது அங்கிருந்த மின் கம்பி மீது உரசியதில் மின்சாரம்தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த மயிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து பின்னர் புதைத்தனர். இதனிடையே மின்சாரம் தாக்கி உயிரிழந்தது 1½ வயது மதிக்கதக்க மயில் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, உப்புக்குளம் பகுதியில் வசித்து வந்தவர் பிரகாஷ்(வயது 22). இவர் தனியார் கல்லூரியில் பி.ஈ., இறுதியாண்டு படித்து வந்தார்.

    இவரது உறவினர் வீட்டு கிரஹபிரவேச நிகழ்ச்சிக்காக வீட்டில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.எஸ்.ஐ. தன்ராஜ் வழக்குபப்திவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    திருப்பூர்,

    திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் (29). அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வினோத் வீட்டின் குளியலறையில் உள்ள வாட்டர் ஹீட்டரை ஆன் செய்ய முற்பட்டார். அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.

    மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×