search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224121"

    • பவுர்ணமி இன்று காலை 10.57 மணி வரை இருக்கிறது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை சுமார் 10.17 மணியளவில் தொடங்கியது. பங்குனி உத்திரம் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்தவாறே இருந்தது.

    கோவிலுக்கு வந்த பக்தர்கள் நேற்று அதிகாலையில் இருந்தே கிரிவலம் செல்ல தொடங்கினர். வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. பக்தர்கள் தரை சூட்டினால் ஓட்டமும், நடையுமாக சென்றனர்.

    கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வெயிலின் தாக்கத்தை தணிக்க பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது. கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதனிடையே மாலையில் கிரிவலம் சென்ற பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.

    திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய இணைப்பு சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத படி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) காலை 10.57 மணி வரை இருந்ததால் இன்று காலை வரை விடிய, விடிய ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் போலீசார் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

    • திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தாிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 6-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.56 மணிக்கு நிறைவடைகிறது.

    இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • பவுர்ணமி இன்று இரவு 7.14 மணி வரை உள்ளது.
    • போலீசார் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 5.39 மணி அளவில் தொடங்கியது. இதனால் நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். அதன் பின்னர் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.

    திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய இணைப்பு சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத படி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பவுர்ணமி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.14 மணி வரை இருந்ததால் இன்று காலை வரை விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    மேலும் போலீசார் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • பவுர்ணமி இன்று காலை 5.08 மணிக்கு தொடங்கி நாளை காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது.
    • 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில், மாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று (திங்கட்கிழமை) காலை 5.08 மணிக்கு தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • 6-ந்தேதி, 7-ந்தேதி அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • நாளை மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை 6-ந்தேதி காலை 5.08 மணிக்கு தொடங்கி 7-ந்தேதி காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 6-ந்தேதி பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும், பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 6-ந்தேதி, 7-ந்தேதி அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதோடு, பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய வசதியாக அதிகாலை தொடங்கி இரவு வரை நடை அடைப்பு இல்லாமல் தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வரும் 6-ந்தேதி (நாளை) மாசி மகத்தை முன்னிட்டு பள்ளி கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமி நதியில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 10.41 மணி அளவில் தொடங்கியது.
    • இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 10.41 மணி அளவில் தொடங்கியது. இதனால் நேற்று இரவு 9 மணி வரை சிலர் கிரிவலம் செல்ல தொடங்கினர். அதன் பின்னர் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் செல்லும் கிரிவலப்பா தையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.48 வரை இருப்பதால் இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    • பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
    • இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) இரவு 10.41 மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.48 மணிக்கு நிறைவடைகின்றது.

    இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • அண்ணாமலையார் ஆண்டிற்கு 2 முறை கிரிவலம் வருகிறார் என்பது ஐதீகம்.
    • அதிகாலையில் அபிஷேகம் முடிந்ததும் அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுகிறார்.

    ஒவ்வொரு தினத்தன்றும் இரவில் பக்தர்கள் கிரிவலம் வருவது போல் லிங்க வடிவாக வீற்றிருக்கும் அண்ணாமலை யாரும் திருவீதி உலாவாக ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார்.

    அந்த நன்னாள் கார்த்திகை தீப திருநாளின் மறுநாள் மற்றும் தை மாதம் மாட்டு பொங்கல் ஆகிய இந்த 2 நாட்களிலும் அதிகாலையில் அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார். திருமஞ்சன கோபுர வீதியின் கடைசியில் உள்ள குமரகோவிலில் இந்த இரண்டு நாட்களும் இரவு தங்குகிறார்.

    அதிகாலையில் அபிஷேகம் முடிந்ததும் அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுகிறார். 25 முதல் 30 இடங்களில் மண்டகபடி நடைபெறும். அஷ்டலிங்கம் மற்றும் அடி அண்ணாமலை ஆகிய கோவில்களில் அண்ணாமலையார் கிரிவலம் செல்லும் போது தீபாராதனைகள் நடைபெறும்.

    கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் துஷ்ட தேவதைகள் அண்டாமல் இருப்பதற்காகவும் அவைகளை விரட்டுவதற்காகவும் அண்ணாமலையார் இவ்வாறு ஆண்டிற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார் என்பது ஐதீகம்.

    ஒளி கண்டு ஓடும் இருள் போல் திருவண்ணாமலை தீபம் கண்டவுடன் மாந்தர்களின் பாவங்கள் தீரும் என்பது திண்ணம்.

    ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி!

    இருள் ஒழிந்து இன்பம் ஈவாய் போற்றி!

    நாமும் கிரிவலம் செல்வோம், மலையில் ஜோதியாய் தோன்றும் ஈசனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.

    • 5-ந்தேதி பவுர்ணமி வருகிறது.
    • பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வருகிற 5-ந்தேதி பவுர்ணமி கிரிவலத்திருவிழா நடைபெறுகிறது.

    இவ்விழாவை முன்னிட்டு அன்று மாலை 5 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் திரளான பக்தர்கள் தீப விளக்கு ஏற்றி மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

    பின்னர் பக்தர்கள் கோவிலை வந்தடைந்த உடன் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • தமிழ்நாட்டில் கிரிவலத்துக்கு புகழ் பெற்றது திருவண்ணாமலை.
    • சென்னிமலையில் பவுர்ணமி கிரிவலம் சுமார் 25 ஆண்டுகளாக நடக்கிறது.

    முருகபெருமானை தரிசிக்க, இரட்டை மாடுகள் ஆயிரம் படிக்கட்டுகளுக்கு மேல் உள்ள மலையில் படிக்கட்டுகள் வழியாக வண்டி இழுத்த அதிசயம் சென்னிமலையில் நடந்தது. ஆண்டுகள் பல கடந்தாலும் இந்த அதிசயத்தை கூறி சிலாகிக்கும் பக்தர்கள் ஒருபுறம். மாடுகளே ஏறிச்சென்ற படிகள் வழியாக சென்று பெருமானை தரிசித்து அவர் ஆசி பெற துடிக்கும் பக்தர்கள் இன்னொருபுறம். செவ்வாய்க்கிழமை அதிகாலையிலேயே முருகபெருமானை தரிசிக்க, கார்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் மலைப்பாதையில் வட்டமிடும் பக்தர்கள் ஒருபுறம் என்று ஈரோடு மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத்தலமாக சென்னிமலை விளங்குகிறது.

    கடல் மட்டத்தில் இருந்து 1,749 அடி உயரத்தில் அமைந்து உள்ள சென்னிமலை 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு சுப்பிரமணியசாமியாக எழுந்தருளி இருக்கிறார் முருகபெருமான். 18 பெரும் சித்தர்களில் ஒருவராக விளங்கும் பின்நாக்கு சித்தர் (புண்ணாக்கு சித்தர்) வாழ்ந்த குகை இங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. சித்தர்கள் இன்னும் இந்த மலையில் கண்ணுக்கு மறைவாக வாழ்ந்து வருவதாகவும், அதிசய மூலிகைகள் பல இங்கு இருப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. எனவே சென்னிமலையில் வீசும் காற்றை சுவாசிப்பது உடலுக்கும், இங்கு பக்தியுடன் இறைவேண்டல் செய்வதும் மனதுக்கு நிம்மதி அளிப்பதாக இருக்கிறது.

    பல ஆண்டுகளாக சென்னிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இங்கு கிரிவலம் செல்லும் நிகழ்வும் பிரபலம் அடைந்து வருகிறது. புவுர்ணமி தோறும் பக்தர்கள் சென்னிமலையை சுற்றி வந்து முருகபெருமானை தரிசிக்கிறார்கள். இதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சியும், வாழ்வில் முன்னேற்றமும் கிடைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

    மாதம் தோறும் பவுர்ணமி அன்று மாலை 5.30 மணிக்கு கிரிவலக்குழுவினர் சென்னிமலை அடிவாரத்தில் உள்ள சித்திவிநாயகர் கோவில் முன்பு இருந்து தங்கள் கிரிவலத்தை தொடங்குகிறார்கள். அங்கிருந்து தட்டாங்காட்டுபுதூர், நல்லபாளி, வெப்பிலி, சில்லாங்காட்டுவலசு, அய்யம்பாளையம், தோப்புப்பாளையம், எம்.பி.என்.காலனி, தொட்டம்பட்டி, பள்ளக்காட்டுப்புதூர் மற்றும் மேலப்பாளையம் ஆகிய கிராமங்கள் வழியாக சுமார் 18 கி.மீ தூரம் சுற்றி வருகிறார்கள். கிரிவலம் இரவு 10 மணியளவில் மலையடிவாரத்திலேயே முடிகிறது. இது ஒரு வேண்டுதல் நிகழ்வாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் உயிர்பயத்துடனே கிரிவலம் செல்ல வேண்டியது இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அது ஏன்?.

    இதுகுறித்து சென்னிமலை, குமராபுரியை சேர்ந்த சவுமியா ரமேஷ் கூறியதாவது:- நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னிமலையில் கிரிவலம் சுற்றி வருகிறேன். இங்குள்ள வனப்பகுதியில் வெண்சாலை, வெண்தவளை, கானாச்சுனை, கரநொச்சி உள்ளிட்ட 16 வகையான சஞ்சீவி மூலிகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம் என 24 தீர்த்தங்கள் அமைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே சென்னிமலையில் கிரிவலம் செல்வது உண்மையிலேயே ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் நமக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது. கிரிவலம் செல்பவர்கள் மூலிகை, தீர்தங்களை மட்டும் சுற்றி வருவது நல்லது. ஆனால், இங்கு அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைப்பதில்லை. மலைக்கு தொடர்பு இல்லாமல் கிரிவலம் செல்வது இங்குதான். ஆனால் பக்தி காரணமாக, முருக பெருமானின் அருள் கிடைக்குமே என்று நாங்கள் சுற்றுகிறோம். பக்தர்களின் வேதனை தீர மலையை ஒட்டி கிரிவலப்பாதை அமைக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் கிரிவலத்துக்கு புகழ் பெற்றது திருவண்ணாமலை. அங்கு கிரிவலப்பாதை 10 கிலோ மீட்டர் மட்டும்தான். ஆனால், சென்னிமலையில் பல ஊர்களையும் சுற்றிக்கொண்டு 18 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறோம். இப்படி ஊர்களை கடக்கும்போது சாலையில் வேகமாக வரும் வாகனங்களை பார்த்து உயிர்பயத்துடனே கடக்க வேண்டியது இருக்கிறது. எனவே மலையை ஒட்டி கிரிவலப்பாதை அமைக்க வேண்டும்.

    சென்னிமலை அருகே சொக்கநாதபாளையத்தை சேர்ந்த கலைவாணி பாஸ்கர் கூறியதாவது:- சென்னிமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் சாலைகள், சுடுகாடு, இடுகாடு என பல பகுதிகளை கடந்து செல்கின்றனர். சில நேரம் உயிரை கையில் பிடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. வெப்பிலி - அய்யம்பாளையம் ரோட்டில் கிரிவலம் செல்லும் போது குறுகலான ரோட்டில் அதிக வாகனங்கள் வரும்போது பக்தர்கள் கடுமையாக சிரமப்படுகிறார்கள். சில்லாங்காட்டுவலசு பிரிவில் பக்தர்கள் நடந்து செல்லும்பாதையிலேயே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மது குடித்தவர்கள் போதையில் 2 சக்கர வாகனங்களில் வேகமாக செல்வதால் பெண்களும், குழந்தைகளும் பயந்தபடியே கிரிவலம் செல்கின்றனர். எனவே மலையை ஒட்டி கிரிவலப்பாதைக்காக ரோடு அமைக்க வேண்டும்.

    சென்னிமலையை சேர்ந்த சந்தியா மனோஜ் கூறியதாவது:- சென்னிமலையில் அதிக அளவில் பெண்களும், குழந்தைகளும் கிரிவலம் செல்கிறோம். கிரிவலம் செல்லும் போது மலையை மட்டும் சுற்றி வந்தால் மனதுக்கு மட்டுமின்றி உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். ஆனால் பல ஊர்களை சுற்றி செல்வதால் போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் மன அமைதி குறைந்து விடுகிறது. சென்னிமலையில் சரியான கிரிவல பாதை இல்லை என்பதே முருக பக்தர்களின் வேதனையாக இருக்கிறது. அய்யம்பாளையத்தில் இருந்து தோப்புப்பாளையம் வரை 2 கி.மீ தூரத்திற்கு தெரு விளக்குகள் இல்லை. பெண்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். கிரிவலப்பாதை என்று தனியாக ஒரு சாலை அமைக்கப்பட்டால், பவுர்ணமி நிலவு ஒளியில் கூட நடக்க முடியும். ஆனால் தற்போதைய சாலை அச்சத்தை அளிப்பதாக இருப்பதால் இங்கு மின் விளக்குகள் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    20 ஆண்டுகளுக்கு முன்பு

    சென்னிமலையில் பவுர்ணமி கிரிவலம் சுமார் 25 ஆண்டுகளாக நடக்கிறது. இந்த வழக்கம் தொடங்கப்பட்ட போதே கிரிவலப்பாதை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எனவே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னிமலையை சேர்ந்த சில அமைப்புகள் ஒருங்கிணைந்து கிரிவலப்பாதை அமைக்க முன்வந்தனர். இதற்காக மலை அடிவாரத்தில் பூஜையும் போடப்பட்டது. ஆனால் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் கிரிவலப்பாதை அமைப்பதற்கான பணிகள் சென்னிமலையின் தெற்கு வன பகுதியான தட்டாங்காட்டுபுதூர் அருகே தொடங்கப்பட்டது. தொடங்கிய 2 நாட்களிலேயே பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் கிரிவலப்பாதை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் தொடர்ந்து சிரமத்துடன் கிரிவலம் சுற்றுகிறார்கள்.

    எதிர்பார்ப்பு

    இதுகுறித்து சென்னிமலை கோவில் அதிகாரிகள் கூறும்போது, 'சென்னிமலை வனப்பகுதி முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் இங்கு கிரிவல பாதை அமைக்க எந்தவித சாத்தியக்கூறுகளும் இல்லை. சென்னிமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன' என்றனர். வனத்துறைக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் உள்ள பிரச்சினையாக இதை பார்க்காமல் பக்தர்களின் ஆன்மிக உணர்வு மற்றும் பாதுகாப்பு என்ற வகையில் கிரிவலப்பாதை அமைக்க தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும், வனத்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.
    • மகாதீப தரிசனம் கண்டால் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.

    நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

    கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.

    கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

    மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.

    • மூன்றாவது பவுர்ணமிக்கு அண்ணாமலையார் சில பக்தர்களை சோதிப்பார்
    • அண்ணாமலையாரை இன்றே நினையுங்கள். நினைத்த காரியம் யாவும் நிறைவேறக் காண்பீர்கள்.
    • பக்தர்கள் கிரிவலம் வரும் போது சுற்றியுள்ள லிங்கங்களை தவறாது வழிபட வேண்டும்.

    திருப்பதிக்கும், திருவண்ணாமலைக்கும் லட்சக்கணக்கில் கூட்டம் திரண்டு வரக்காரணம் இரண்டு தெய்வங்களுமே அதிசயிக்கத்தக்க வகையில் பக்தர்களுக்கு ஒரு நாள் 'விசேஷ அழைப்பு விடுப்பார்கள்' என்பது தான்!

    திருப்பதிக்கோ, திருவண்ணாமலைக்கோ உடனே புறப்பட்டுச் சென்று, வரம் வாங்கித்திரும்ப வேண்டும் என்று நினைக்கிற எல்லோருக்குமே அந்தப்பாக்கியம் கிடைத்து விடாது?

    பெரும்பாலான பக்தர்களை அவரே 'வா' என்று அழைத்து விடுவார். 14 கி.மீ கிரிவலப்பாதையை எளிதாக நடக்க வைத்து விடுவார்.

    இந்த முதல் பயணத்திலேயே உங்கள் உள்ளத்தில் புதிய உணர்வுகளை காண்பீர்கள். "இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று நினைக்க ஆரம்பிப்பீர்கள். உற்சாகமான பல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். உங்களையும் அறியாமல் தினமும்' நமச்சிவாயா' என்று உச்சரிக்க தொடங்குவீர்கள்.

    அடுத்து, இரண்டாவது பவுர்ணமிக்கு நம்மால் போக முடியுமா? என்ற சிந்தனை உங்கள் சூழ்நிலை நிமித்தமாக தலை தூக்க ஆரம்பிக்கும். ஆனால் என்ன ஆச்சரியம்! மிகச் சரியாக அடுத்த பவுர்ணமி தினத்தன்று நீங்கள் அங்கு இருப்பீர்கள். இது அண்ணாமலையார் நடத்தும் அற்புதம் தான்!

    இந்த இரண்டாவது பயணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் நடக்கத் துவங்கும். நீங்கள் எதை நினைத்தீர்களோ அது நிறைவேறும். வெற்றிப்பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். மனச்சஞ்சலங்களில் இருந்து முற்றிலுமாக விடுபடத் தொடங்கி இருப்பீர்கள்!

    மூன்றாவது பவுர்ணமிக்கு அண்ணாமலையார் சில பக்தர்களை சோதிப்பார், " இவன் தானாக முயற்சி எடுத்து வருகிறானா? பார்ப்போம்' என்று வேடிக்கை பார்ப்பார்.

    மிகுந்த இறை பக்தி கொண்டு பக்தர்கள் இந்த சோதனையை கடக்க வேண்டும். பெரும் முயற்சி எடுத்து செல்ல வேண்டியது இருக்கும்.

    சோதனைகளை கடந்து மூன்றாவது பவுர்ணமிக்கு போய் விட்டு திரும்புபவர்களுக்கு அருணாச்சலேஸ்வரர் அருள் மள, மளவென வரிசையாகத்தேடி வரும். இரண்டாண்டு காலமாக மனதுக்குள் அழுது. புழுங்கி, புலம்பிக் கொண்டிருந்த விஷயங்கள், மகிழ்ச்சி தரும் படியாக மாறும்.

    சில பக்தர்கள் சோதனையை கடக்க முடியாமல் மூன்றாவது பவுர்ணமியை கோட்டை விட்டு விடுவார்கள். அவர்கள் அண்ணாமலையாரை தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க, நாலாவது பவுர்ணமிக்கு அவரே வரும்படிச்செய்து அருள்பாலித்து விடுவார்.

    பக்தர்கள் கிரிவலம் வரும் போது சுற்றியுள்ள லிங்கங்களை தவறாது வழிபட வேண்டும். அவ்வப்போது மலைப்பகுதியை பார்த்து' நமச்சிவாயா நமஹ' அருணாச்சலேஸ்வரா நமஹ' என்ற மந்திரத்தை உச்சரித்தபடி செல்ல வேண்டும்.

    முழுமையான பக்தி உணர்வுடன் வலம் வருபவர்களுக்கு நினைத்தது கை கூடும். இதை தொடர்ந்து ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் சென்று வருபவர்கள் மிகவும் யோகம் உடையவர்கள். அவர்களின் வாழ்க்கை அமைதியான நீரோடை போல அமையும். மிகுந்த மனவலிமை பெறுவார்கள். எதையும் எளிதாக வெல்வார்கள். அவர்களது 'சொல்வாக்கு' பலிக்கும் அளவுக்கு உயர்வார்கள்.

    அண்ணாமலையாரை இன்றே நினையுங்கள். நினைத்த காரியம் யாவும் நிறைவேறக் காண்பீர்கள்.

    ×